நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர்

 நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (தரிசனநாள்-31.1.2026)

அமைவிடம்

தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் உள்ளது. வலைங்கைமான் - பாபநாசம் சாலை, வழித்தடம்.

ஞானசம்மந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார தலங்களில் காவிரி தென்கரை தலம். 

கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர் என்ற திருநாமங்களிலும், அம்பிகை கல்யாணசுந்தரி, திரிபுரசுந்தரி, பர்வதசுந்தரி என்ற பெயர்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

பஞ்சவர்ணேஸ்வரர்

தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருக்கியதங்கம், நவரத்தினபச்சை என்று ஒருநாளைக்கு ஐந்து நிறங்களில் காட்சி தருகிறார் சிவபெருமான் இதன் காரணமாக பஞ்சவர்ணேஸ்வரர். ஏன்ற பெயரில் பக்தர்களால் போற்றப்படுகிறார். இதேபோன்ற பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் திருச்சி மாநகரம் அருகிலும் அமைந்துள்ளது. அதுவும் தேவாரபாடல்பெற்ற தலமாக விளங்குகிறது.

சடாரிவழக்கம்

இந்த தலத்தில்தான் அப்பர் பெருமானுக்கு சிவபெருமான், திருவடி சூட்டியதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பெருமாள் கோவில் போன்றுயிங்கு பக்தர்களுக்கு  சடாரி வைக்கப்படுகிறது.

பிறசிறப்புகள்

1.அமர்நீதிநாயனாரை ஆட்கொண்டதலம்.

2. குந்திதேவி அவரின் Nதூஷம் நீங்க இத்லகுளத்தில் நீராடினார்.

3.முசுகுந்தன் தியாகராஜபெருமானை இந்திரனிடமமிருந்து பெற்று, இத்தலத்தல் வைத்து வழிபட்ட பின்னறே திருவாரூர் கொண்டு சென்றதாக புராணம் கூறுகிறது.

4. பிருங்கி முனிவர் வண்டு உருவில் வழிபட்ட தலம். 

5. செங்கோட் சோழனின் மாடக்கோவில்

6. அமர்நீதிநாயனார் மடம் அருகில்லுள்ளதாம். நாங்கள் தரிசனம் செய்யவில்லை.

7.திருஞானசம்மந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். 

கல்யாணசுந்தரேஸ்வரர்

அகத்தியருக்கு இறைவன் திருமணகாட்சியை காட்டி அருளியதால், கல்யாணசுந்தரேஸ்வரராக பக்தர்களால் வணங்கப்படுகிறார். சிவலிங்கத்திற்கு பின்புறம், சொதை வடிவில் சிவனும் பார்வதியும் கல்யாணகோலத்தில் அருள்பாலிக்கன்றனர்.

சப்தஸ்தானவிழா

திருநல்லூர், கோவிந்தகுடி,  ஆவூர், மாளிகைதிடல், மட்டியான்திடல், பா பநாசம், திருப்பாலைத்துறை, என்ற ஏழர்.













பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.


No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...