திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் (தரிசனம்-27.1.2026-மாலை)
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காரைக்கால் சாலையில் அமைந்துள்ளது.
சோழநாட்டு தென்கரை தலம். புராணபெயர் தென்நீலக்குடி.
சிறப்பு
லிங்கத்தின் மீது புசப்படும் அனைத்து எண்ணெயும், இறைவனால் உள்ளிழுக்கப்படுகிறது.
இரண்டு அம்மன் சன்னதியுள்ளது. ஒன்று தவக்கோலத்திலும், மற்றொன்று அழகாம்பிகை சன்னதியாகவும் உள்ளது. இரண்டு சன்னதிகள் முன்பும் பலிபீடம் மற்றும் நந்தி அமைந்துள்ளது.
நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம்.
“வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்செத்த போது செறியார் பிரிவதேநித்த நீலக் குடியரனைந்தினை சித்மாகி மாகிற் சிவகதி சேர்திரே.”
திருநீலக்குடி சப்தஸ்தானம்
இவ்வூர் சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய ஏழூர்தலங்களாகும். (திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம் தவிர நாங்கள் பிற தலங்கள் தரிசனம் செய்யவில்லை. என்னுடைய வலைபதிவும்மில்லை).
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.










No comments:
Post a Comment