திருமுல்லைவாயில் (தரிசனநாள்-23.4.2022).

 திருமுல்லைவாயில் (தரிசனநாள்-23.4.2022).






ஊர் பற்றிய செய்திகள்.

கொடிஇடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் என்ற இந்த ஆலயம் தற்போழுது திருமுல்லைவாசல் என்று அழைக்கப்டுகிறது. தேவார பாடல் பெற்ற தலங்களில் இரண்டு தலங்கள் திருமுல்லைவாசல் என்ற பெயரை கொண்டுள்ளதால் இந்த ஊர் வடதிருமுல்லைவாசல் என்றும் சீர்காழிக்கு அருகில்உள்ள தேவாரபாடல் தலம் தென்திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.

திருதாயுகத்தில்- இரத்தினபுரம்.

திரேதாயுகத்தில்- வில்வவனம்;.

துவாபரயுகத்தில்- சண்பகவனம்.

கலியுகத்தில் முல்லைவனம். என்று அழைக்கப்பட்டது.

தலவரலாறு.

ஓணன், வாணன், காந்தன் என்ற குரும்பர்கள் மீது காஞ்சி அரசன் தொண்டைமான் படை எடுத்தார், குரும்பர்கள் படையை விரட்டி அடித்தனர். சோர்வுடன் தொண்டைமான் பாசரைக்கு திரும்பினான். வரும்வழியில் யானையின் காலில் முல்லை கொடி சுற்றிக்கொண்டது. தொண்டைமான் யானையின் முதுகில் அமர்ந்திருந்தப்படியே கொடியை வெட்டினார். அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு இறங்கிப்பார்த்தார்.  இறைவனின் திருஉருவ லிங்கத்தை கண்டு கண்ணீர்பெருகியது, உடல்வியர்த்து போனது. உடனே அவரின் உடைவாளால் கழுத்தை அறுத்துக்கொள்ளும் சமயம்,இறைவன் தோன்றி “மன்னா வாளால் வெட்டுண்டாலும் மாசிலாமணியாக இருப்போம்” என்று சொல்லி “நிறுத்துக”. என்றார். நந்தியின் உதவியுடன் குரும்பர்களை வெற்றிகொண்டு, குரும்பர்களின் வெள்ளெருக்கு தூண்களை கருவறையின் வாயிலாக கொண்டு, மாசிலாமணீஸ்வரர்க்கு கோவில் அமைத்தார். மகாமண்டபம், பட்டி மண்டபம், கல்யாணமண்டபம் அமைத்து  வழிப்பட்டார்.

சிறப்புகள்.

1. வெட்டுண்டமேனியாதலால் நித்ய சந்தனகாப்பு.

2. அம்பாள், ஈஸ்வரன் இரண்டு கருவறைக்குள்ளும், கல்வெட்டுகள் உள்ளன.

3.சுந்திரமூர்த்திநாயனாரால் பதிகமும், வள்ளல் சாமிகளால் அருட்பாவும், அருணகிரிநாதரால் திருப்புகழும் பாடல் பெற்ற இடமாகும். சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் இக்கோவில் பற்றிய குறிப்புள்ளது.

4. இரண்டு வாயில்கள், 16 கால் மண்டபம்.


காளிகாம்பாள் கோவில் மற்றும் இரட்டை கோவில்கள். (தரிசன நாள்.17.4.2022).

சென்னை (St.George Fort) பாரிமுனையில் நான்கு நூற்றாண்டுகளை கடந்து. விஸ்வகர்மா என்ற சமூகத்தினரால் நிர்வகித்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் அமைக்கப்பட்ட இந்த காளி, புனித George கோட்டை வரவுக்கு பின்பு, 1678ஆம் ஆண்டு முதல் பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள கோவிலில் அருள்பாலிக்கிறார். அங்குசம், பாசம், நீலோத்பல மலர், வரதமுத்திரை இவற்றடனும், சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்களுடனும், நவரத்தின மணிமகுடம் சூடி கொண்டு, இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு கொண்டு அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அம்பிகை.

                                   

1. 1980 –ல் 10 மீட்டர் உயரம் கொண்ட ராஐகோபுரம் அமைக்கப்பட்டது.

2. 2014 –ல் புதிதாக ராஐகோபரம் நிறுவப்பட்டது.

3. 1677- ஆம் ஆண்டு மராட்டிய பேரரசர் சத்ரபதி Sivaji  இக்காளியை வழிப்பட்டார் என்று, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

4. சுதேசமித்திரன் பத்திரிக்கையில் மகாகவி சுப்ரமணியபாரதியார் பணியாற்றிய போது பாரிமுனையில் தங்கி இருந்த காலத்தில், இந்தகாளியை வழிபட்டார். “யாதுமாகி நின்றாய் காளி” என்ற பாடல் இந்த காளியை நினைந்து புனையப்பட்டதேயாகும்.

இரட்டைகோவில்.

               

சென்னி மல்லிகேஸ்வரர், சென்னி கேசவ பெருமாள் கோவில், என்ற இரண்டு கோவில்களும் பாரிமுனையில் அமைந்துள்ளது. 1757 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி அவர்களின் வணிக வசதிக்காக கோவிலை இடித்தனர். மணலி முத்துகிருஷ்ண முதலியாரின் முயற்சியில் மீண்டும் இந்த கோவில்கள் 1762 ஆம் ஆண்டு உயிர்தெழுந்தது.

மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவில். 

கோவில் நுழைவாயிலில் மணிமண்டபம் காணப்படுகிறது. கிழக்குமுகமாக மல்லீகேஸ்வரர் சன்னிதியும், தெற்கு நோக்கி பச்சைகல் திருமேனி யுடன் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அம்பிகை காட்சி தருகிறார். மஹாதேவர், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், காசிவிஸ்வநாதர், ஆதிபுரீஸ்வரர், பைரவர், நடராஐர், என்ற பலரையும் தரிசனம் செய்யலாம். இந்த சிவாலயம் பாரிமுனை லிங்கிசெட்டி தெருவில் அமைந்துள்ளது. கேசவ பெருமாள் கோவிலை பற்றி நாங்கள் தரிசித்த அன்று தெரிந்திருக்கவில்லை.     


யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...