கார்திக் சுவாமி கோவில். (தரிசனம்-11.10.2024).
அமைவிடம்.
உத்ரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டம், கனக்சௌரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில். 3 கி;.மீ. மலைஏற்றத்தை தொடர்ந்து, 500க்கு மேற்பட்ட படிகளை கொண்டுள்ளது.
வரலாறு.
இந்த உலகத்தை ஏழு முறை சுற்றிவருபவர்கள் முழுமுதற்கடவுளாக வணங்கப்படும் பெருமையை பெறுவர் என்று சிவபெருமான் கூறுகிறார். கார்திக் (நம் தமிழகத்தில் முருகன் என்று அழைக்கிறோம்) மயில் வாகனத்தை கொண்டு உலகை சுற்ற கிளம்புகிறார். விநாயகர், ஏழுமுறை பெற்றோர்களை சுற்றி வந்து வணங்கி உலகை சுற்றியதற்கான சிறப்பை பெறுகிறார். கார்திக் தனது பெற்றோர் மீது கொண்டுள்ள பயபக்தியை வெளிபடுத்தி. எலும்பையும் சதையையும் தியாகம் செய்கிறார். அதன் காரணமாக முதுஎலும்பே பிரதனமாக (மூலவராக) உள்ளது.
பிற சிறப்புகள்.
இமயமலையின் ஒன்பது சிகரங்கள் தெரிவதாக கூறப்பட்டு, அதற்கான பதாகை இங்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்சியாக உள்ள மணியின் ஓசை சுமார் 800 மீட்டர் தொலைவு வரை கேட்பதாக அறியப்படுகிறது.
உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரே முருகன் கோவில்.








































