அம்பில் மாரியம்மன்.( தரிசனம்- 13.3.2025)
அமைவிடம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் அமைந்ததுள்ள ஒரு சிறிய ஊர்.
இங்கு மூன்று திருத்தலங்கள் மிக புகழ்பெற்று விளங்குகின்றன. 1. சுந்தரராஜபெருமாள் என்ற திவ்யதேசம், 2. அம்பில் ஆலந்துறையார் என்ற தேவாரபாடல்பெற்ற திருத்தலம், 3. அம்பில் மாரியம்மன்.
வரலாறு
700 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இங்குள்ள வேப்பமரத்தடியில் இந்த அம்மனை கண்டு, கோவில் கட்டி வழிபடுவதாக வரவாறு கூறுகிறது.
ஏழு மாரியம்மன்கள்.
1. சமயபுரம், 2.நார்தமலை, 3.வீரசிங்கம்பேட்டை, 4.கண்ணனூர், 5.புன்னைநல்லூர், 6.திருவேற்காடு, 7.அம்பில்
என்ற இந்த ஏழூர் மாரியம்மன்களும் தழிழ்நாட்டில் மிகவும் பிரசித்தம். தற்காலத்தில் சில இடங்களில் ஏழூர் மாரியம்மன் கோவில் என்ற கோவில் பார்துள்ளேன். (ஏழூர் அம்மனும் வீற்றிருக்கும் கோவில்) குறிப்பாக சென்னை நங்கநல்லூரில் இக் கோவில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்த அம்மன் சமயபுர மாரியம்மனின் தங்கை என்றும் மக்கள் நம்புகின்றனர். இக்கோவில் தேரோட்டம் மிகவும் புகழ் பெற்றது.
இத்தல புகைப்படத்தொகுப்பு.
No comments:
Post a Comment