திருவெறும்பூர் (தரிசனம்-13.3.2025)
அமைவிடம்.
திருச்சியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திருஎறும்பூர்.
இந்திரனும் தேவர்களும் எறும்புவடிவில் சென்று இத்தல இறைவனை வழிபட்டமையால், இத்தலம் திருஎறும்பூர் என்றானது. இதுவே பின்னாளில் திறுவெறம்பூர் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.
தலவரலாறு.
தாரகாசுரன் தேவர்களையும், முனிவர்களையும், தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். நாரதரின் அறிவுறைப்படி அவர்கள் எறும்பீஸ்வரரை வழிபட முடிவுசெய்தனர். அசுரன் இவர்களை அறியாவண்ணம் இவர்கள் எறும்பாக உருமாரி இத்தல ஈஸ்வரனை வழிபட்டனர்.
கோவில் சிறப்பு
திருநாவுக்கரசரால், பாடல்பெற்ற தலம். புற்றகாக இருப்பதால் நீர்புகாதவாறு கவசம் சாற்றி அபிஷேகம் செய்கின்றனர். வடபுறம் சாய்வாக உள்ள புற்று சொர சொரப்புடன்; எறும்பு ஊர்ந்த சுவட்டுடன் காணப்படுகிறது.
கோவில் புனரமைப்பு
ஆதித்தன், கண்டராதித்தன், சுந்தர சோழன், முதலாம் ராஜராஜன் ஆகியோர் செய்துள்ளனர். தென் கைலாய மகாதேவர் எனறு இத்தலம் கல்வெட்டில் குறிப்பிடபட்டுள்ளது.
மலைக்கோட்டையிலலிருந்து,திறுவெறும்பூருக்கும், திறுவெறும்பூரில் இருந்து தஞ்சை பெரியகோவிலுக்கும் சுரங்கபாதை அமைத்துள்ளனராம், சோழர்கள்.
இத்தல புகைப்படங்கள்
No comments:
Post a Comment