பாலக்காடு கோட்டை (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024).
காலம் அறியப்படாத மிக பழைய கோட்டை இந்த பாலக்காடு கோட்டை. 1766ல் ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. பின் 1790 வரை மைசூர் சுல்தான் மற்றும் ஆங்கிலேயர் வசம் இருந்தது.
1900 பிறகு இது ஒரு தாலுக்கா அலுவலகமாக மாற்றப்பட்டது. கோட்டையை தொடர்ந்துள்ள மைதானம் கோட்டை மைதானம் என்று அழைக்கப்படுகிறது. தற்பொழுது தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ள இந்த இடம் போட்டி, கண்காட்சி, பொதுகூட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது கோட்டைக்குள் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோடட்டைக்குள் சிறை மற்றும் வருவாய்துறை அலுவலகம் இயங்கிவருகிறது. இந்திய தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட சின்னமாக இந்த கோட்டை விளங்குகிறது.
No comments:
Post a Comment