திருமூழிக்களம் (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 25.2.2024)

 திருமூழிக்களம் (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 25.2.2024)

அமைவிடம்.

கேரளமாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் என்ற இடத்தில் உள்ளது இந்த லெஷ்மணபெருமாள் ஆலயம்.

லெஷ்மணன், பரதன் வழிபட்ட தலம். நம்மாழ்வார் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்.

நம்மாழ்வார் பாசுரம்.

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு

ஏந்துநீர் இளம்குருகே திருழூழிக்களத்தார்க்கு

ஏந்துபூண் முலை பயந்து என் இணை மலர்க்கண் நீர் ததும்ப

தூம்தம்மை கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே.

தல புராணம்.

கிருஷ்ணர், துவாரகையில், ராமர், லெஷ்மணர், பரதர், சத்துருக்கனர் ஆகியோர் விக்ரகம் வைத்து வழிபட்டுவந்தார். துவாரகை நீரில் ழூழ்கிய சமயம் ஒருமுனிவரிடம் இந்த விக்ரகங்கள் கிடைத்தன. திருமால், பாரதப்புழா ஆற்றங்கரையோரம் இந்த விக்ரகங்களை பிரதிஷ்டை செய்ய பணித்தார். இதன் அடிப்படையில் திருப்பரையாற்றில் ராமர் கோவிலும், இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோவிலும், பாயமல் என்ற இடத்தில் சத்ருக்கனன் கோவிலும், திருழூழிக்களத்தில் லெஷ்மணபொருமாள் கோவிலும் முனிவர் அமைத்தார். 

ஹரிதமகரிஷி.








உலக மக்கள் அனைவரும் திருமால் திருவடியடைய இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். உடனே திருமால் ஸ்ரீசுக்தியை அவருக்கு அருளினார்.

சிறப்பு.

நான்கு திருக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார் திருழூழிக்களத்தான். மேல் இரண்டுகையில் சங்கு சக்கரமும், கீழ் கரத்தில் கதை மற்றும் தாமரையுடன் காட்சி தருகிறார். 

சிவபெருமானுக்கு தனி சன்னதி என்றில்லாமல் சிவன், பெருமாள் சன்னதிகளும் இரட்டை கோவில் போன்று காட்சி தருகிறது. 


திருப்புலியூர் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

 திருப்புலியூர் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

அமைவிடம்.

கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் திருப்புலியூரில் அமைந்துள்ளது மாயபிரான் திருக்கோவில். 

பஞ்சபாண்டவர்களில் பீமனால் புனரமைக்கப்பட்டது இந்த தலம். இதன் காரணமாக இந்த ஷேத்ரம் பீமஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்ட்டது, இந்த திவ்யதேசம்.


நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி).

அன்றி மற்றோர் உபாயமென் இவளந்தண் துழாய் கமழ்தல்

குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழரங்கல் மல்கி

தேன் திசைத் திலதம் புழர குட்டநாட்டுத் திருப்புலியூர்

நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே 

தலவரலாறு.


 சிபிசக்ரவர்தியின் மகன் விருஷாதர்பி குட்டநாட்டை (திருப்புலியூரை) ஆண்டுவந்த சமயம், மன்னனுக்கு நோய் ஏற்பட்டு, வறுமையும் உண்டானது. அந்த நேரத்தில் சப்த ரிஷிகள் அங்கு வருகை புரிந்தனர். அவர்களிடம் தன்நிலை கூறி காப்பாற்றுங்கள் என்று வேண்டினான். ரிஷிகளுக்கும் தானம் கொடுக்க இயலும் என்று கூறியதை கேட்டு ரிஷிகள் கோபமுற்று அரசன் கொடுத்த பொருட்கனை புறக்கனித்தனர். இதன் காரணமாக மன்னன் யாகம் நடத்தி முனிவர்களை கொல்ல துணிந்தான் முனிவர்கள் இந்த மாயபிரானை சரணடைந்தனர்.


திருகாக்கரா (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

 திருகாக்கரா (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் காக்கரா என்ற இடத்தில் இந்த திவ்யதேசம் அமைந்துள்ளது. ஓணம் பண்டிகைக்கு அடித்தளம் இட்ட இடம் இந்த இடம். அசுரகுலத்தை சேர்ந்தவன் என்றாலும் மகாபலி திறந்த பக்திமானாகவும் சிறப்பான ஆட்சியும் செய்து வந்தான்.






தலபுராணம்

வாமனஅவதாரத்தில் மூன்றடி மண் கேட்ட இடம் தான் இந்த திருகாக்கரா. வாழைமர தோட்ட வியாபாரிக்கு இந்த பெருமாள் அருளால்தான் நல்ல பழங்கள் கிடைத்ததாம் இதன் காரணமாக இறைவனுக்கு தங்கத்தால் வாழைத்தாரு செய்து கொடுத்ததாக ஒரு வரலாறும் உண்டு. 

நேந்தர பழம்.

பெருமாளின் கண்கள் நேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. இவரருளால் கிடைத்த பழமாதலால் நேத்ரபழம் என்றானது. இதுவே மருவி நேந்தரபழம் என்று அழைக்கப்படுகிறது.

திருகாரயப்பன் வாமனராக அருள்பாலிக்கிறார். தாயார் பெருஞ்செல்வநாயகி.


திருவனந்தபுரம் (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

 திருவனந்தபுரம் (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)


 திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமி அனைவராலும் நன்கு அறிபட்ட தலம். இது மலைநாட்டு  திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.

கோவில் சிறப்பு

தமிழ்நாட்டு கோவில் போன்று நீண்ட நெடிய கோபுரம் கொண்ட ஒரே மலைநாட்டு திவ்யதேச கோவில் (100 அடி உயரம் 7நிலை ராஜகோபுரம்)  12 ஆயிரம் சாளகிராம கற்களால், 18 அடி நீளம் கொண்ட பள்ளிகொண்ட பெருமாள். 

நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி)

கெடும் இடராய எல்லாம் கேசவா என்னும் நாளும்

கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்

தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே

ஆதி தலவரலாறு.

வில்வமங்கலத்து முதியவர் ஸ்ரீமன்நாராயணனை எப்போதும் பூஜித்து வந்தார். இவரது பொறுமையை சோதிப்பதற்காக இறைவன் சிறு குழந்தையாக வந்து இவரை தொந்தரவு செய்கொண்டே இருந்தார். ஒருநாள் முதியவர் பொறுமை இழந்து அந்த குழந்தையை கடிந்துகொண்டு, தள்ளிவிடுகிறார். உடனே இறைவன் இவர்முன் தோன்றி பகதிக்கும் பொறுமை மிக அவசியம் என்று சொல்லி, என்னை மீண்டும் பார்க்க வேண்டுமானால் "அனந்த காட்டிற்கு வா" என்று சொல்லி மறைந்து விடுகிறார். இந்த முதியவருக்கு இந்த காடு எங்குள்ளது என்றே தெரியவில்லை பலரை கேட்டும் பயனில்லை. ஒருநாள் ஒரு தம்பதியினர் சண்டை போட்டுகொள்வதை கேட்க நேரிடுகிறது. கோபத்தில் அந்த கணவன் மனைவியை நான் உன்னை அனந்த காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவேன் என்று சொன்னதை கேட்டு அந்த முதயவர் அந்த கணவனின் உதவியுடன் அந்த காட்டிற்கு சென்று விடுகிறார்.  காட்டுப்பாதை மிக கடினமாகவும் மிகுந்த ஆபத்து நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இந்த காட்டில் ஸ்ரீமன் நாராயணன் நீண்ட நெடிய கிடந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சிதருகிறார். அதிர்ந்து, பயந்து, பின் மகிழ்ந்து வணங்கினார். இதை மன்னனிடம் தெரிவிக்கிறார். படைசூழ மன்னன் அனந்த காட்டுக்குள் நுழைந்தான். ஆனால் இறைவன் இல்லை. முதியவர் இறைவனை வர்ணனை செய்ததன் அடிப்படையில் இந்த அனந்தபத்தநாபஸ்வாமி கோவிலை உருவாக்கினான் மன்னன்.

17ஆம் நூற்றாண்டு வரலாறு.

1688 ஆம் ஆண்டு கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக இலுப்பை மரத்தலான விக்ரகம் சேதம் அடைந்தது. 1729 ஆம் ஆண்டு “ராஜா மார்தாண்டவர்மன்” 12008 சாளகிராமத்தாலும், ஒரு வகையான அஷ்டபந்தன கலவையதலும் 18 அடி நீள அனந்தசயன முர்த்தியை உருவாக்கினான். 1750-ல் அந்த அரசன்  அனைத்து சொத்து மட்டும் ராஜ்யத்தையும் பத்மநாபஸ்வாமிக்கு பட்டயம் எழுதி வைத்துவிட்டு, உடைவாளை பாதத்தில் வைத்து சரணாகதியடைந்தார்.


திருக்கடிதானம் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

 திருக்கடிதானம் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

“கடி” என்ற சொல் கொண்டு மூன்று திவ்யதேசங்கள் உள்ளன.

1. திருக்கடிகை – சோளிங்கர். (நரசிம்மர்)

2. திருக்கடிதானம் - கேரளதிவ்யதேசத்தில் ஒன்று)

3.தேவப்பிரயாகை – (அலகானந்தா-பாகீரதி நதி கூடும் இடம்

திருகண்டமென்னும் கடிநகர்)

ஒரு கடிகை நேரம் (நாழிகை-24நிமிடம்) இத்தலத்தில் தவம் மேற்கொண்டால் செயல்களில் வெற்றியும், வீடுபேறும் கிடைக்கும். 

நம்மாழ்வார் பாசுரம்.

கோவில் கொண்டான் திருக்கடிதானத்தை

கோவில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்

கோவில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்

கோவில் கொண்ட குடக் கூத்த அம்மானே

தலவரலாறு மற்றும் பெயர் காரணம்.








சூரியவம்ச அரசன் ருக்மாந்தகன் திருக்கொடிதான பகுதியை ஆண்டுவந்தான், இந்தபகுதி நந்தவன பூக்கள் காணமால் போனது, அரசர் மலர்கள் பறிப்பவர்களை, கைது செய்ய உத்தரவிட்டார். கைதானவர்கள் தேவர்கள் என்பதை அறிந்து அரசன் அவர்கனை விடுவித்தான் ஆனால் அவர்களால் வானுலகம் செல்ல முடியாமல் போனது. ருக்மாந்தகனின் ஏகாதசி விரத பலனை பெருமாள் முன் இவர்களுக்கு தானமாக கொடுத்தான் பின் தேவர்கள் வானுலகம் சென்றனர். இவை அனைத்தும் ஒரு கடிகை நேரத்திற்குள் நடந்ததால், திருக்கடிதானம் என்ற பெயர் பெற்றது இந்த தலம்.

அற்புத நாராயணன்.

பாண்டவர்களுள் ஒருவரான சகாதேவன் பெருமாளைவடிக்க கல் கிடைக்காமல் போன காரணத்தால், சகாதேவன் வருத்தமுற்று உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான், இறைவன் தடுத்து இயற்கையாகவே இங்கு பெருமாள் தோன்றினார், இதன் காரணமாக பெருமாள் அற்புநாராயணன் என்று அழைக்கப்படுகிறார். நாச்சியார், கற்பகவல்லி.  


கோவில் நடை சாற்றிய பிறகு அரசனிடம் இருந்து கையூட்டு வாங்கி கொண்டு தரிசனம் செய்ய வைத்ததால் மெய்காபாளரருக்கு கொடுக்கப்பட்டதண்டனை என்று கூறப்படுகிறது.  (see this photograph)


திருவல்லா (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024).

 திருவல்லா (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024).

அமைவிடம் 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா என்ற ஊரில் திருவாழ்மார்பன், கோலப்பிரான், திருகொழுந்துநாச்சியாருடன் அருள்பாலிக்கிறார். 

தலபுராணம்.

சங்கரமங்கலத்தம்மையார் என்பவர் ஏகாதசி விரதம் மேற்கொண்டுவந்தார். இதை செய்யவிடாமல் ஒருஅசுரன் தடுத்தும் அச்சுறுத்தியும் வந்தான். பெருமாளே இந்த அசுரனை வதம் செய்து காத்தார் என்று புராணம் கூறுகிறது. பெருமாளை மார்பில் இருக்கும் லெஷ்மியுடன் தரிசிக்கும் பாக்கியம் இந்த அம்மையாருக்கு கிடைத்தது.  இதன் காரணமாகவே திருவாழ்மார்பன் என்ற பெயருடன் பெருமாள் விளங்குகிறார்.

கருடன்.








சன்னதிக்கு எதிரே 50அடி உயரத்தில் ஒருதூணில் கருடன் உள்ளார். பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற கருடன் தயார் நிலையில் உள்ளதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

மார்பில் இருக்கும் திருமகளுடன் பெருமாளை தரிசிப்பதே இக்கோவில் சிறப்பாகும்.

நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோவிலாகும்


திருவாறன்விளை (எ)ஆரமுளா (கேரளதிவ்யதேசம்8.2.2024 – 15.2.2024).



 திருவாறன்விளை (எ)ஆரமுளா (கேரளதிவ்யதேசம்8.2.2024 – 15.2.2024).

அமைவிடம்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ஆரன்முளா என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த பார்த்தசாரதி பெருமாள்(எ),திருக்குறளப்பன் திவ்யதேசம்.








நம்மாழ்வார் பாசுரம். 

ஆங்குகொல் ஐயமென்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே

ஆகும் பரிசு பெயர்காரணம்நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்மாகம்

திகழ் கொடிமாடங்கள் நீடு மதிற் திருவாறன்விளை மாகந்த

நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ

தலபுராணம்.

மகாபாரத போரில் தர்மத்தை மீறி கர்ணனை கொன்றமையால் அர்ஜுனன் இத்தல பெருமாளை புதுபித்து வழிபட்டான் என்கிறது வரலாறு.

.

6 முங்கில் துண்டுகளால் ஆன மிதவையில் பெருமாள் விக்ரகத்தை அர்ஜுனன் கொண்டு வந்தமையால் திரு ஆறன்விளை என்று அழைக்கப்படுகிறது.


கோவில் சிறப்பு.

திருக்குறளப்பன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோவில் மதிலை ஒட்டி பம்பா நதி ஓடுகிறது. பரசுராமருக்கு தனி சன்னதியுள்ளது. வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டுகொடுத்தமைக்காக, பிரும்மா இந்த தலத்தில் வாமன அவதாரத்தை காண தவம் மேற்கொண்டார். ஐயப்பசுவாமியின் அணிகலன்கள் இந்த கோவிலில் தான் பாதுகாக்கப்படுகிறது.


திருவண்வண்டூர் (கேரளதிவ்யதேசம் - 8.2.2024 – 15.2.2024).

 திருவண்வண்டூர் (கேரளதிவ்யதேசம் - 8.2.2024 – 15.2.2024).

அமைவிடம்

கேரளமாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில், திருவண்வண்டூர் என்ற ஊரில் பாம்பணையப்பன், அருள்பாலிக்கிறார். 

தலபுராணம்












பிரும்மாவும், நாரதரும் பேசிக்கொண்டிருக்கும் சமயம், கரு த்துவேறுபாட்டினால் இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டது, பிரும்மா மகன் என்றும் பாராமல், பிரும்ம உலகத்தை விட்டு வெளியேற்றினார். பூவுலகுக்கு வந்த நாரதருக்கு எந்த இடத்திலும் மன அமைதி  ஏற்படவில்லை. இந்த திருவண்வண்டூர், வந்த பிறகு அமைதி ஏற்படுகிறது. இந்த இடத்திலேயே அவரின் இஷ்ட தெய்வமான நாராயணனை வழிபட தொடங்குகிறார். அவரின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் நாராயணன் அவருக்கு காட்சி தருகிறார். நாரதர் உடனே உயிர் உருவாக்கதலின் தத்துவ ஞானத்தை கேட்டுப் பெறுகிறார். இந்த இடத்திலேயே இருந்து மக்களுக்கு அருள்பாலிக்குமாறு வேண்டுகிறார் நாரதர். உடனே நாரதர் நாராயணரை தான் வழிபட்ட முறை, அவரை புகழ்ந்து பாடிய பாடல்கள், பெருமாளின் கருணை போன்றவற்றை “நாரதீய புராணமாக” எழுதுகிறார். 

 காலத்திற்க்கு உட்பட்டு பராமரிப்பு இல்லாமல் இந்த கோவில் உள்ளது. அதை பஞ்சபாண்டவர்களில் ஒருவாரன “நகுலன்” புனரமைப்பு செய்து வழிபட்டதாக புராணம் கூறுகிறது.

மேற்கு நோக்கி நின்ற நிலையில் பாம்பணையப்பன் (எ) கமலநான் அருள்பாலிக்கிறார். கமலவல்லி நாச்சியார்.

கோசாலை கிருஷ்ணர்

இந்த பகுதியை தோண்டும் போது கிடைத்த கிருஷ்ணர் சிலையை இக்கோவில் வளாகத்திலேயே பிரதிஷ்டை செய்து கோசாலை கிருஷ்ணர் என்ற வழிபட்டு வருகின்றனர்.


செங்கனூர் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

 செங்கனூர் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

அமைவிடம்.

கேரளமாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கனூர் அருகே உள்ள திருசிற்றாறு என்னும் ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. 

கோவில் வரவாறு








மகாபாரத போர் முடிந்தவுடன் பாண்டவர்கள் பல ஷேத்ரங்களுக்கு சென்று வழிபட்டனர். மலைநாட்டில் அமைந்துள்ள இந்த பழமையான பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். மனம் உருகிவழிபட்ட நிலையில் ஸ்ரீமன் நாராயணன் காட்சி தருகிறார் பாண்டவர்களுக்கு. தருமர் இக் கோவிலை புதுப்பிக்கிறார். 

கோவில் சிறப்பு


இமயவரப்பன் மேற்கு நோக்கி நான்கு கரங்களுடன் நின்றநிலையில் காட்சி தருகிறார். வலதுபுறத்தில் இருக்கும் இருகரங்களில் சக்கரமும் செந்தாமரையும் வைத்துள்ளார். இடது புற கரங்களில் சங்கும் தரையில் ஊன்றிய கதையுடன் காட்சி தருகிறார். தாயார் செங்கமலவல்லி. 

நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி)

திகழ்வென் சிந்தையுள்ளிருந்தானை செழுநிலத்தேவர் நான்மறையோர்

திசை கைகூப்பி ஏத்தும் திருசெங்குன்றூரில் திருசிற்றாறங்கரையானை

புகர்கொள் வானவர்கள் புகலிடந்தன்னைஅசுரர் வன்கையர் வெங்கூற்றை

புகழுமாறறியேன் பொருத்து முவுலகும் படைப்பொடு கெடுப்புக்காப்பவனே


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...