நர்மதா பரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-8
22.3.2024 (நாள் பதினொன்று) மஹராஜ்பூர்.
மத்யபிரதேசமாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியார், என்பவர் “பர்த்ருஹரி” என்ற பெயரில் மன்னனாக இருந்த பொழுது இந்த மகராஜ்பூர் அரசராக இருந்தார். இந்த மஹராஜ்பூரில் தான் இருவரும் இருவேறு சிந்தனையுடன் சந்திக்கின்றனர்..
23.3. 2024 (நாள் பன்னிரன்டு,) மீண்டும் நர்மதாபுரம் என்ற ஓஷங்காபாத்.
மீண்டும் இதே நர்மதை நதிக்கரையில் பூஜை செய்து எங்களின் “நர்மதா பரிக்கிரமாவை” நிறைவு செய்தோம்.
எங்களது நித்யபாராயணம்.
சிவன் மற்றும் (நர்மதை) அம்மன் அஷ்டோத்ரம் (108 நாமாவளி), நர்மதாஅஷ்டகம், த்வாதஸ ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்)
சக யாத்திகர்களுடன் விடைபெற்றுக்கொண்டு, இந்தூர் வழியாக உதய்பூர் சென்றடைந்தோம்.
No comments:
Post a Comment