நர்மதாபரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-1.

 நர்மதாபரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-1.

நர்மதா பரிக்ரமா என்றால் என்ன?


 நர்மதா என்ற நதி மத்யப்பிரதேச மாநிலம் அமர்கண்டக் என்ற இடத்தில் உற்பத்தியாகி, மத்யப்பிரதேசம், மகாராஷ்ரா, குஜராத் மாநிலம் வழியாக பாயந்தோடி, குஜராத் மாநிலம் கம்பத் வளைகுடாவில், அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நதியை வலம் (சுற்றி) வருவதே நர்மதாபரிக்ரமா என்று அழைக்கப்படுகிறது. 

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.

தென்இந்தியாவில் கிரி (மலை) வலம் வருவது போன்று, வட இந்தியாவில் நர்மதை ஆற்றை வலம் வருவது சிறப்பானதாக உள்ளது.  ஆடம்பரங்களை பின்பற்றாமல் உணவை யாசகமாக பெற்று,  காலணி அணியாமல் வலம் வர வேண்டும். 

வரலாறு.

புராணத்தின் படி நர்மதை சிவன் உடலில் இருந்து தோன்றியது என்று நம்பப்படுகிறது. இதனால் நர்மதை ஜடாசங்கரி என்று அழைக்கப்படுகிறார். நர்மதாபரிக்ரமாவை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் மாகண்டேய மகரிஷி. சிரஞ்சீவிகளான அஷ்வத்தாமர், பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், மகாபலி, கிருபர், வியாசர் ஆகியோர் பரிக்கிரமா செய்பவர்களை பாதுகாக்கிறார்கள் என்பது ஐதீகம். தொன்று தொட்டு பலராலும் இந்த பரிக்ரமா செய்யப்படுகிறது. குறிப்பாக மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் மாநில மக்கள் இந்த நதி வலம் வருவதை வாழ்வின் ஆன்மீக கடமையாக கருதுகிறார்கள். 3வருடம், 3மாதம், 13 நாட்களில் நிறைவு செய்ய வேண்டும் என்பது மரபு. இன்றளவும் பலரும் குறிப்பாக 60 வயது மேற்பட்டவர்களும், குழந்தைகளும் இந்த வலம் வரும் நிகழ்வை பாதயாத்திரையாக செய்கின்றனர். நாங்கள் காலத்தின் கட்டாயத்தாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு 12 நாட்கள் பேருந்தில் வலம் வந்தோம். நர்மதை நதிக்கரையில் ஓம்காரேஸ்வர், மமலேஸ்வர், மஹேஸ்வர், கருடேஷ்வர், விமலேஸ்வர், சித்தேஷ்வர் என்று சிவாலயங்கள்  பல உள்ளன. பர்வானியில் சமணர்களுக்கான கோவிலும் அமைந்துள்ளது உள்ளது. இதில் மமலேஷ்வர் மற்றும் ஓம்கோரேஷ்வர் கோவில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக உள்ளது.

12.3.2024 (நாள் ஒன்று). நர்மதாபுரம்



இந்த நதியை வலம் வரும் யாத்திரை அமர்கண்டக் (அ) ஓம்காரேஷ்வர் (அ) நர்மதாபுரம் என்ற மூன்று இடத்தில் இருந்து துவங்குகின்றனர். நாங்கள் நர்மதாபுரம் (ஓஷங்காபாத்) என்ற இடத்தில் துவங்கி, நர்மதாபுரம் என்ற இடத்திலேயே நிறைவு செய்தோம். மார்கண்டேய மகரிஷி இந்த பரிக்ரமாவை இங்கிருந்துதான் துவங்கி நிறைவுசெய்தாராம். நர்மதை நதியில் இருந்து பாணலிங்கத்தை (பாணலிங்கம் என்பது நதியில் உள்ள கூழாங்கல்) எடுத்து, சிவனாகவும், ஆற்று நீரை ஒரு தாமிரக்குப்பியில் எடுத்து அம்மானகவும் பாவித்து வழிபடவேண்டும். இவ்வாறாக நாங்கள் 12 நட்களும் காலை, மாலை என்று இரண்டு முறையும் 12 நாட்களும் 12 நர்மதை படித்துறைகளில் குளித்து இறைவனை வழிபட்டோம். இந்த வழி பாட்டின் போது, சில விதி முறைகளுக்கு உட்பட்டிருந்தோம். மொத்தம் 168 படிதுறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், ஆன்மீக முக்கியத்துவம், வரலாற்று முக்கியத்துவம்,  என்று பல சிறப்புகளை கொண்டு விளங்குகிறது. நாங்கள் 12 படித்துறைகளுக்கு சென்று குளித்து பூஜை செய்து, சிவபெருமானை வணங்கினோம்.




No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...