துபாய், அபுதாபி பயணம் (5.10.2025 -9.10.2025)
யு. ஏ.இ. (United Arab Emirates)
1971 ஆம் ஆண்டுமுதல் அஜ்மான், துபாய், ரஃஸ்அல்-கைமா, ஷார்ஜா, உம்அல்-குவைன் இவைகளின் தலை நகரமான அபுதாபி இந்த 7 இடங்களும், ஐக்கிய எமிரேட்ஸ் என்ற அழைக்கப்படுகிறது. இந்த ஏழு எமிரேட்களுக்கும் ஒரு ஜனாதிபதி இருக்கிறார். இவர்களின் அதிகாரபூர்வமான மதம் இஸ்லாம். இவர்களின் ஆட்சி மொழி அரபு. ஆனால் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த துபாயில் உள்ள மக்கள் தொகையில் 20 சதவிதம் தான் இந்த நாட்டு மக்கள். மீதம் உள்ள 80 சதவீகிதம் உலகளாவிய மக்கள். இதில் 60 சதவிகிதம் நம் இந்தியர்கள். மீதம் உள்ள 20 சதவிதம் வெளிநாட்டினர். ஹிந்தி மொழியும் மிக அதிகமாக பேசுகின்றனர்.
விமானகட்டணம்; மற்றும் வீசா.
டூரிட்ஸ்விசா இந்த விசா என்பது முன்று வகையில் செயல் படுகிறது. 1. நட்புநாடு மற்றும் சுற்றுலாதுறை வளர்சியை அடிப்படையாக கொண்டு விசா கட்டணம் இல்லாமல் செயல்படுவது. 2. நாட்டிற்கு சென்றவுடன் விமானநிலையத்திலேயே விசா கட்டணம் செலுத்தும் முறை. (Arrival on Visa) 3. வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பே கட்டணம் செலுத்தி விசா வாங்கி கொள்வது என்று மூன்று முறைகள். துபாய்க்கு விசா கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ8,000 செலுத்தி, பயணத்திற்கு முன்பே விசா என்ற பயண அனுமதி பெற்பெற்றுவிட்டோம். இதன் செல்லுபடி காலம் ஒரு மாதம்.
நாங்கள் இண்டிகோ விமானத்தில் பயணித்தோம். அரபிக் எமிரேட்ஸ் விமானகட்டணத்திற்;கும், இண்டிகோகட்டணத்திற்கும் ரூ5000 மேல் கட்டண வித்யாசமிருந்தது. இதனால் நாங்கள் இண்டிகோவை தேர்வு செய்தோம்.
துபாய் பணம் - திராம்;. ஒரு திராம் 24ரூ முதல் 25ரூ வரை. (கூடுதல்;தகவல் - 1966 ஆம் ஆண்டு வரை நமது நாட்டு ரூபாய் தான் பயன்படுத்திவந்தனர்.)
நேரம் - இந்திய நேரத்திலிருந்து ஒன்றரை மணிநேரம்., பின்னே உள்ளது. உதாரணம் – காலை 9 மணி இந்தியா துபாய் -காலை 7.30 மணி. International Pack போட்டால் Land ஆனவுடன். நம் கைபேசியில், Home என்று நம்முடைய நாட்டு நேரமும். அருகிலேயே துபாய் நேரமும் பார்க்க முடியும்.
பயணதகவல். (நாள் ஒன்று)
| Air Way Chennai to Dubai. |
5ஆம் தேதி காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து, விஜயலெஷ்மி என்ற டிராவலருடன் 33 நபர்கள் சுற்றுலாவாக துபாய் மற்றும் அபுதாபி பயணித்தோம். நான்கு மணிநேரம் பயணம். ஆனால், fog காரணமாக எங்களுடைய விமானம் ஷார்ஜாவில் இறங்கிவிட்டது. ஒரு மணிநேரம் நாங்கள் ஷார்ஜா ஏர்போட்டிலிருந்துவிட்டு, பின் துபாய் சென்றடைந்தோம்.
குருஸ் இரவுச்சாப்பாடு.
பயணதிட்டத்தில் எதாவது போட வேண்டும் என்பதற்காகவே போட்டது போல் ஒரு குருஸ் இரவு சாப்பாடு. குருஸ் மற்றும் சாப்பாடு இரண்டுமே சிறப்பாக இல்லை. சற்று மத்யமமே. Bangkok-ல் இருந்த குருஸ் இரவு சாப்பாடு மிக நன்றாகயிருந்தது.
நாள் இரண்டு
1.மிராக்கிள் பூந்தோட்டம். (Miracle Garden)
துபாய் என்பதே பாலைவனத்தில் உருவாக்கப்பட்ட நகரம். அதில் இவ்வளவு செழுமையாக பூந்தோட்டம் அமைத்திருப்பது மிராக்கிள்தான்.
2013 ஆம் ஆண்டு காதலர்கள் தினத்தன்று இந்த பூந்தோட்டம் நிறுவப்பட்டது. 780000 சதுர அடியில் உருவாக்கப்பட்ட இந்த பூந்தோட்டம், 50 மில்லியன் பூக்களையும், 250 மில்லியன் பூ செடிகளையும் கொண்டது. இந்த பூந்தோட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை செயல்படுகிறது. மே முதல் செப்டம்பர் மாதம் வரை அதிக வெட்பநிலை காரணமாக மூடப்படுகிறது. 40 டிகிரி சென்சியஸ் வரை வெப்பம்மிருக்குமாம். இந்த பூந்தோட்டம் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையும். வாரஇறுதிநாட்களான சனியும் ஞாயிரும் காலை 9 மணிமுதல் இரவு 11மணிவரை செயல்படுமாம். பொது விடுமுறை நாட்கள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை சொட்டுநீர் பாசனம் முறையை பயன்படுத்தி இந்த தோட்டத்தை பராமரித்து வருகின்றனர்.
2.குளோபல் வில்லேஜ்
நாள் மூன்று. (அபுதாபி)
இந்த கோவில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அந்த, ஆண்டே, 2.2 மில்லியன் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். Sheikh Mohamed bin Zayed Al Nahyan என்ற துபாய் அரசர் 27 ஏக்கர் நிலத்தை இந்தகோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ரோஸ்நிற மனற்கல்லும், இத்தாலியிலிருந்து மார்புளும் கொண்டுவரப்பட்டு இந்த கோவில் எழுப்பப்பட்டது. 108 அடி உயரம் மற்றும் 262 அடி அகலம், 180 அடி வித் கொண்டு கட்டப்பட்டுள்ளது. யுனைடட் அரபு, UAE யுனைட்ட கிங்டம் UK, யுனைட்ட ஸ்டேட் ஆப் அமெரிக்கா USA, இந்தியா, ஆப்ரிக்கா, கல்இப் Gulf போன்ற நாட்டில் உள்ள 200 தன்ஆர்வலர்கள் அவர்களின் 690000 மணிநேரங்கள் செலவழித்துள்ளனர்.
ராதாகிருஷ்ணர், ராமர், லெஷ்மணர், சீதை, அனுமான், சிவபார்வதி, கணேஷ், கார்திகேயன் (முருகன்) ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன்.
திருப்பதி பாலாஜி பத்மாவதியுடனும், பூரிஜகன்நாதர் ஆகியோர் கருப்பு நிற கிரானைட்டில் உருவாக்கப்பட்டுள்ளனர்.
ஐயப்பன் கேரள மாநிலத்திலிருந்து பஞ்சலோக சிலையாக பதினெட்டு படிகளுடன் அமைத்துள்ளனர்.
2. அபுதாபி பள்ளிவாசல்
இந்த பள்ளிவாசல் இந்தோனேசியாவில் அமைந்துள்ள பள்ளி வாசலின் சிறிய பிம்பமாகவே அமைத்துள்ளனர். டிசம்பர் மாதம் 2007 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் திறக்கப்பட்டது. 12 ஹெக்டேர் நிலப்பரப்பளவிற்கு மேல் இதன் அளவு அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் அமைப்பதற்கான திட்டத்தை ஷெயிக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் என்பவர் உருவாக்கினார். 2004 ஆம் ஆண்டு இவர் மறைந்ததன் காரணமாக இவரது உடல் இந்த பள்ளிவாசல் முற்றத்தில் புதைக்கப்பட்டது
. எலிசபத் ராணி, US Vice President ஜோபைடன், நம் பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி ஆகியோர் இந்த பள்ளிவாசலுக்கு வருகைபுரிந்துள்ளனர்.
நாள் - நான்கு. BURJ KHALIFA
2716.5 அடி உயரம் கொண்ட, உலகிலேயே மிக உயரமான இந்த கட்டிடத்தின் பெயர்தான், புர்ஜ்கலிபா. 163 மாடிகளை கொண்டது. 2004 செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு 2010 ஜனவரியில் இந்த கட்டுமானம் முடிவடைந்தது. சிக்காகோவில் உள்ள "ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெர்லிஸ்" என்ற கட்டடி கலைநிறுவனத்தின், "ஆட்ரியான் சிமித்" என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டது. உயராமன இந்த இடத்திலிருந்து நீங்கள் இந்த துபாயை கண்டு ரசிக்கலாம். இந்த கட்டிடத்தின் முன்பகுதியே துபாய் மால், உலகளவில் மிக புகழ்பெற்ற மால்.
துபாய்மால் புகைப்படம் மற்றும் காணொளி.
2. பாலைவனத்தில் பயணம்.
வாந்தி வருவதற்கு, மலம் மற்றும் சிறுநீர்கழிக்பதற்கான உணர்வை அதிகமாக உண்டாக்கக்கூடியது. அப்படி உங்களை அறியாமல் நீங்கள் இந்த செயலை செய்து விட்டால், சுத்தம் செய்வதற்கான கட்டணம் மிக அதிகம். ஒட்டக பயணம் என்பது எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் யாக் சவாரி, ஒட்டகசவாரி, குதிரைசவாரி, யானை சவாரி; என்று பலகையான சவாரிகள் செய்துள்ளோம்.
நாள் ஐந்து.
1.துபாய் நகர சுற்று.
கடற்கரை மற்றும் சில அரசு கட்டிடங்கள், பார்லிமென்ட், அரண்மனைகள் மற்றும் மிக பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் என்று நாங்கள் சுற்றிப்பார்தோம்.
2.கோல்ட் சௌக்
துபாய் பயணமும், நகை வாங்குதலும் இணைபிரியாத செயல்களாக மக்களிடத்தில் உள்ளன. இங்கு நகைவாங்குதல் என்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை லாபகரமானதாகயிருந்திருக்கலாம். ஆனால் தற்சமயம் இந்திய அரசு ஆண்களுக்கு 50ஆயிரம் மதிபிலான தங்கமும், பெண்களுக்கு 1லட்சம் மதிப்பிலான தங்கமும் வாங்க அனுமதிக்கிறது. இங்குவிற்பனை செய்யும் தங்கம் மிகதூய்மையானதாம். அதற்குமேல் நீங்கள் வாங்கினால், அதற்கான வரி மிக அதிகம் என்று எங்களின் துபாய் Guide விளக்கம் கொடுத்தார். பெரும்பாலான பயணிகள் தங்க நகை வாங்கினர். நாங்கள் சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று என்று, இங்கு சென்று சில புகைபடங்கள் எடுத்தும், இடத்தை சுற்றிபாரத்து மகிழந்தோம்.
துபாய் பிரேம்
உயரமாக கட்டிய பெரிய நுழைவாயில். இதன் மேல் சென்று இந்த நகரத்தை பார்கலாம். கண்ணாடி பிரிட்ஜ் போன்றுள்ளது.
பயண அனுபவம்.
எப்பொழுதும் போல் நம் நாட்டு பயணம் போன்று எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுக்கவில்லை. பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது பாராட்டுதலுக்குரியது. இங்கு அதிகமாக நான் வேப்பமரத்தை கண்டு அதிசயித்தேன். 80களில் சிறியம்மையால் இந்த நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றும். அதன் பிறகே வேப்பமரத்தின் பயன்கருதி வளர்பதாக கைடு தெரிவித்தார். நகரம் பச்சை பசேல் என்றுள்ளது. சுத்தரிக்கப்பட்ட நீரை பயன் படுத்தும் அவர்களின் திறமை என்னை மிகவும் கவர்ந்தது. நகரில் கடலில் பின்தங்கிய தண்ணீரை வைத்து, ஏரிகளும் ஆறுகளும் மிக தூய்மையாக பராமரித்து அழகுசெய்துள்ளது, அவர்களின் கட்டுப்பாட்டிற்கு ஒரு ஜே போடவைத்தது. அனைத்து வளங்களும் நிறைந்த நம் பாரதத்தை நினைத்து ஏக்க பெருமூச்சை வரவழைத்தது. 10ஆம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.
No comments:
Post a Comment