மலர்கண்காட்சி லால்பாக். (22.1.2025)
ராமாயணத்தை கருவாக கொண்ட மலர்கண்காட்சி.
வரலாறு
18 ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்டு வந்த ஹைதர்அலி என்ற அரசரால் 240 ஏக்கர் நிலபரப்பில், 1800 வகையான தாவரங்கள் நடப்பட்டு தாவரவியல் பூங்காவானது. 1760ல் ஹைதர்அலியால் தொடங்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்கா இவரின் மகன் திப்புசுல்தானால், நிறைவு செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களாலேயே பராமரிக்கப்பட்டு வந்தது.
Lalbagh சிறப்பு
ஏரி, திருவக்கரை கல்மரம், மீன்தொட்டி, கெம்பகௌடா கோபுரம். போன்றவைகளை உள்அடக்கிய தாவரவியல் பூங்கா,ஆண்டுதோறும், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை அடிப்படையா கொண்டு 10 நாட்கள் மலர் கண்காட்சி நடத்துகின்றனர்.
கருப்பொருள் மலர்கண்காட்சி
ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருளை கருவாக கொண்டு மலர்கள் காட்சி படுத்துகின்றனர். ராமாயணத்தை ஒரு கருவாக கொண்ட காட்சி சிறப்பித்தது இந்த ஜனவரி ( 2025)மாத கண்காட்சியாக.
No comments:
Post a Comment