பிருந்தாவன் (வழிபட்ட நாள் 5.8.2024)
வாய்ப்பு
ஆராய்ச்சி படிப்பிற்காக அமெரிக்கா சென்ற எங்களின் மகளை டெல்லியில் வழியனுப்பிவிட்டு, சென்னை புகைவணடிக்காக (ஒருபகல்) காத்திருந்த நேரத்தை பயன்படுத்தி, பிருந்தாவன், மற்றும் கோவர்தன் சென்று வழிபட்டு வந்தோம்.
கோகுலமும், மதுராவும் 2022-ல் தரிசனம் செய்துவிட்டதால், கோவர்தன், பிருந்தாவன் இந்த இரண்டு இடத்தையும் தேர்வு செய்தோம். மதுராவும், கோகுலமும், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது.
உத்திரபிரதேசமாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பிருந்தாவன். இந்த இடத்தை விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர். கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் இங்கு வசித்தார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மிகவும் புனித மாக கருதப்பட்ட இந்த இடம் காலத்தின் இடர்பாடுகளில் சற்று மறைந்திருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் சைத்தன்ய மஹாபிரபுவால் மீண்டும், மீட்டெடுக்கப்பட்டது. ராதாகிருஷ்ணருக்கு இங்கு பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
நாங்கள் தரிசனம் செய்த கோவில்கள்.
1. சினேக விகாரி மந்திர்.
2. ஹரிதாஸ் ஜி மகராஜ்
3.இஸ்கான் மந்திர்
4.பிரேம் மந்திர்.
No comments:
Post a Comment