முறப்பநாடு. (நவகைலாயம்.) தரிசனநாள்.-13.7.2023
அருள் மிகு சிவகாமி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் நவகைலாயத்தில் ஐந்தாவது கோவிலாகவும், நவகிரகங்களில் வியாழன் என்ற குருஸ்தலமாக உள்ளது.
நவகைலாயம் அறிவோம்.
திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்;குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.
நவகைலாயவரலாறு.
அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.
தலவரலாறு.
குதிரை முகத்துடன் பிறந்த குழந்தைக்காக மிகவும் வருந்தி சிவபெருமானை வழிப்பட்டான் ஒரு சோழ அரசன். ஈசன் தாமிரபரணி தீர்த்த கட்டத்தில் நீராட பணித்தார். தாமிரபரணியாற்றில் நீராடி இறைவக் அருள் பெற்று மன்னனின் மகள் மனித முகம் பெற்றாள். உரோசமுனிவர் வழிபட்ட இந்த ஈசனுக்கு, மன்னன் கட்டிய இந்த கோவிலே முறப்பநாடு தலமாகும்.
சிறப்பு.
இயற்கை எழிநிறைந்த இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். நந்தி குதிரை முகத்துடன் காணப்படுகிறது. தாமிரபரணியாறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால் “தட்சிணகங்கை” என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment