திருவக்கரை

 திருவக்கரை. (தரிசனநாள்-4.8.2023)


வரலாற்று சான்று.

வராக நதி என்ற சங்கராபரணியாற்றங்கரையில் வடக்குபக்கமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த சோழனால் கட்டப்பட்டதாக, இந்த கோவில் மக்களால்  அறியப்படுகிறது. பராந்தக சோழனின் மகன் ராஜாதித்த சோழன், இக்கோவிலுக்கு நிதிஅளித்ததாக வரலாறு கூறுகிறது. ராஜாதித்த சோழனின் தம்பி கண்டராதித்த சோழன் இக்கோவிலின் கோபுரத்தை கட்டியதால், கண்டராதித்த கோபுரம் என்று இக் கோவில் கோபுரம் அழைக்கப்படுகிறது.

மூன்று தெய்வங்கள்.


சிவன், சக்தி, நாராயணன் என்று மூன்று தெங்வங்களும் சிறப்புடன் வளங்குகின்றனர். அமிர்தாம்பிகை (எ) வடிவாம்பிகை, சமேத சந்திரமௌலீஸ்வரர், வக்ரகாளி, வரதராஜபெருமாள். என்று, ஒருசேர அனைவரும் சிறப்புற்றுறிருக்கின்றனர்.

வக்ராசுரன்.


வக்ராசுரன் சிவபெருமானை அவனின் கண்டத்தில் (தொன்டை பகுதி) வைத்து கடுமையான தவம் புரிந்தான். இவன் மேல்  இரங்கி இவனுக்கு சாகாவரம் அளித்தார். ஆணவம் தலைக்கேற கொடுமைகள் செய்ய தொடங்கினான். இவனை அழிக்க சிவன் நாராயணிடம் அன்பு கட்டளை இடுகிறார். 

வரதராஜபெருமாள்.

சக்ராயுதத்தால் அசுரனை அழித்த பெருமாள் வரதராஜன் என்ற பெயரில் காஞ்சி வரதராஜர் போன்றே மேற்கு முகமாக சங்கு சக்ர கதாதாரியாக   தனி சன்னதியில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வக்ரகாளி.


அசுரனின் தங்கை துன்முகி என்பவள் அண்ணனுக்கு நிகராக அட்டகாசம் புரிகிறாள். இவளை வதம் செய்ய ஈசன் அம்பிகைக்கு கட்டளையிடுகிறார். பூலோகத்துக்கு வந்த தேவி துன்முகி கர்பமாக இருப்பதை பார்த்து சற்று தயங்கி, பின் அந்த கருவை எடுத்து வலது காதிற்;கு குண்டலமாக அணிந்துகொண்டு, பின் வதம்செய்கிறார். சிவபெருமான் கோவிலாக இருந்தாலும், இக்கோவிலின் நாயகியாக இந்த வக்கரகாளி உள்ளார். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சந்தன காப்பும், இரவு 12 மணிக்கு ஜோதி தரிசனமும் நடைபெருகிறது. ஒவ்வொரு அம்மாவாசையன்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெருகிறது. பக்தர்கள் இந்த இரண்டு நாளும் திரளாக வருகின்றனர்.

சந்திரமௌலீஸ்வரர்.

ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, மும்முகலிங்கமாக காட்சி தருகிறார். திருமூலர் திருமந்திரத்தில் பூஜைக்குரிய லிங்கமாக ஆறு லிங்கத்தை குறிப்பிடுகிறார். 1. அண்டலிங்கம், 2. பிண்டலிங்கம், 3. சதாசிவலிங்கம், 4. ஞானலிங்கம், 5. ஆத்மலிங்கம், 6. சிவலிங்கம். இவற்றில் சந்திரமௌலீஸ்வரர் ஞானலிங்கமாக தோன்றுகிறார்.

சுந்தரவிநாயகர்.

பெருமாளும், அம்பிகையும் அசுரனை வதம் செய்வதற்கு முன்பு இந்த சுந்தர விநாயகரை வழிபட்டு பின் சம்காரம் செய்கின்றனர். இந்த விநாயகர் கோவில் நேர் எதிர் வீதியில் உள்ளது. 10 அடி உயரத்தில் மிக கம்பீரமாக உள்ளார்.

பாடல்கள் பாடியவர்கள்.


கைலைநாதனே இந்த சந்திர மௌலீஸ்வரர் என்று அப்பரும், வடலூர் ராமலிங்க அடிகளார், திருஞானசம்மந்தர், அருணகிரிநாதர், சேக்கிழார் ஆகியோரும் இறைவன் புகழ்பாடி பரவசம் அடைந்துள்ளனர்.

குண்டலினிசித்தர்.

 இந்த ஆலயத்திலேயே வாழ்ந்து, தவம்இயற்றி  சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி சமாதியானவர். தெற்கு பகுதியில் சமாதியடைந்த இடத்தில் லிங்கம் அமைக்கப்பட்டு, தனி சன்னதி உள்ளது. எதிரில் தியான மண்டபம் உள்ளது. 

வக்ர நடராஜர்.

இடது கால் இல்லாமல் வழக்கத்திற்க்கு மாறாக வலது காலை தூக்கி நின்றாடும், விலைமதிப்புள்ள நடராஜர் விக்ரகம் இக்கோவிலில் உள்ளதாம். இதை நாம் யாரும் காண இயலாது. இந்த அறிய தகவல். விகடன் புத்தகம் வெளியிட்ட “நிம்மதி தரும் சந்நிதி பாகம்-1” புத்தகத்தில்" கிருஷ்ணானந்த சுந்தர்ஜி "அவர்களின் இக் கோவில் பற்றிய கட்டுரையில் உள்ளது. அதன் பொருள் மதிப்பு கருதி பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாம்.

மதுரை சுந்தரேஸ்வரர் சன்னதி.

64 கலைகளிலும் வல்லவனான ராஜசேரபாண்டியன், ஒருநாள் பரதம்ஆடி ஏற்பட்ட கால்வலியில், எப்பொழுதும் காலை தூக்கி கொண்டடிருக்கும் நடராஜ தெய்வத்தை நினைவுகூறுகிறான். ஆட்டத்தை நிறுத்திவிட்டால் இந்த உலகத்தின் இயக்கமே நின்றுவிடுமே, ஈசனின் மேல் அதிக பக்கதி கொண்ட மன்னன், இறைவனின் கால்வலியை நினைத்து மிகவும் வருந்துகிறான். நீங்கள் கால் மாற்றி ஆடவில்லை என்றால் வாள் கொண்டு என் உயிரை மாய்த்துகொள்வேன் என்கிறான். மன்னனின், பக்திக்காக நடராஜர் வலது கால் தூக்கி நடனம் ஆடுகிறார்.  இது திருவளையாடல் புராணத்தில் 24வது படலமாக உள்ளது. 

வக்ரம் விளக்கம்.


வக்ராசுரன் வதம் செய்த இடமாதலால், அனைத்து இடத்திலும் வக்ரம் உள்ளது. ஒழுங்கில்லாமலும், மாறி இருப்பது வக்ரம் என்று அழைக்கப்படும். உதாரணம்.  கர்நாடக சங்கீதத்தில் ச ரி க ம ப த நி ஸா என்று தொடர்ந்து வராமல், ஸ ம க ம ப த நி ஸா என்று ஒழுங்கு இல்லாமல் சுரம் வரும் ராகத்தை வக்ரராகம் என்று அழைப்பர். (Not by order).. 

காளிக்கு அருகில் இருக்கும் லிங்கம் வக்ரலிங்கம், நந்தி ஈசனுக்குநேரே இல்லாமல் சற்று தள்ளி வக்ரமாக உள்ளது. நவகிரகத்தில் சனியும் வக்ர சனி. ஒழுங்காகசெல்லும் வாழ்கையின் இடையில் வக்ரம் ஏற்பட்டால் (பிரச்சனை, குழப்பம்) இத்தலத்திற்க்கு வந்து இறைவனை வழிபடுவது சிறப்பு. 

வழி.


திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாகவும், விழுப்புரத்தில் இருந்தும் இந்த தலத்தைஅடையலாம்.


மைலம் (முருகன்).

 மைலம் (முருகன்). தரிசனநாள்-4.8.23.


தலபுராணம்.

ஒரு அரசன் வேட்டையாடும் நேரத்தில் மான் மீது எய்திய அம்பானது, தவறுதலாக அருகில் அமர்ந்திருந்த முனிவர் மீது பட்டு அவர் உயிர்துறக்கிறார். அறியாமல் செய்த இந்தபாவத்தை எப்படி போக்கி கொள்வது என்று அந்த மன்னன் வருந்தி, ஒரு முனிவரை தஞ்சம் அடைகிறார்.

இந்த முனிவர் ஒரு முருக பக்தர். சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில், சிறப்பு தியானம் செய்து, புகழ்பெற்ற முருக பக்தராக விளங்கியவர். இவர் வீட்டில்லில்லாத நேரத்தில் சென்று விடுகிறான் மன்னன். முனிவரின் மகன் காரணம் கேட்க மன்னன் தான் செய்த தவறை எடுத்துறைக்கிறார். உடனே இந்த இளைஞன், மனமுருக மூன்று முறை, முருகா என்று சொன்னாலே பாவம் நீங்கபெருவாய் என்று கூறுகிறார் முனிவரின் மகன். 

இதை தன் தந்தையிடம் கூற, முனிவரோ ஒருமுறை முருகா என்றே சொன்னாலே நம் அனைவரின் பாபத்தையும் போக்குமே. நீ ஏன் மூன்று முறை என்று சொன்னாய், இது இறைவனின் கருணை தன்மையை குறைக்கிறது. இறைவனின் கருணையை மக்களிடையே கொண்டு செல்வது நம் கடமை.  அதை நீ சரிவரசெய்யாத காரணத்தால், கங்கை கரையில் பிறந்து குகன் என்ற பெயரில் வளர்ந்து பின் இறைவனடி சேருவாய் என்று கூறுகிறார்.  முனிவர் தவம் செய்த இந்த இடமே மயிலம். மற்றும் இறைவன் “முருகன்” என்ற பெயரிலேயே அருள் பாலிக்கறார்.

மயில் பூஜித்த தலம்.


1. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கற்பகாம்பாள் மயிலுருவில் ஈசனை பூஜித்த இடம். 

2. சூரபத்மன் மயில் போன்று குன்றாக மாறி முருகனை துதித்த தலம் மயிலம்.

மயில்வாகனம்.

சூரபத்மனை போரில் உயிரை மாய்க்காமல்,  கருணை காட்டியதால், மயில் வாகனமாக வரம் கேட்டான். மயூராசலமாக தவம் இருந்து, மயில்வாகனமாக அருள்பெற்றான் சூரபத்மன். 


பாலசித்தர். 

சிவகணத்தில் ஒருவர் “சங்குன்னர்” இவர் நாரதர் வழிகாட்டலின்படி “பாலசித்தராக” மயிலம் வந்து கடும் தவம் செய்தார். அவர் தவத்திற்க்கு மனமிறங்கி  “சித்த கன்னியர்”; வடிவில வந்தனர் வள்ளியும், தெய்வானையும்.  இவர்களிடத்தில் விளையாட நினைத்த முருகன் வேடன் வடிவில் வந்து போரிடுகிறார். வேடன்வடிவில் வந்திருப்பது முருகன் என்று தெரிந்து பால சித்தர் வணங்குகிறார். சித்தரின் விருப்பப்படி வள்ளி தேவசேனா சமேத முருகராக திருமணகோலத்துடனும், மயில் வாகனத்துடன் (சூரபத்மன்) காட்சி தருகிறார் முருகன் இந்த மயிலம் தலத்தில்.

பாலசித்தர் சன்னதி.

இந்த சித்தருக்கு தனி சன்னதியுள்ளது. இவரின் வழி தோன்றலே, “சிவஞான பாலதேசிகன்” என்று இறை பணி செய்துவருகின்றனர். இந்த கோவிலில்.

கிழக்குவாசல் சிறப்பு.

மார்கழி மாதம் திருவாதிரைநட்சச்திரம் (ஆருத்ரா தரிசனம்) அன்றும், ஆனி திருமஞ்சனம் அன்று கிழக்குவாயிலில் பஞ்சமூர்த்தி ஆரத்தியும் சிறப்பாக நடைபெறுகிறது. கைலாய காட்சிக்கு சமமானது என்று மக்கள் நினைத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

ஆன்மீகத்தில் மூன்று மயில் அறிவோம்.

அ. அசுர மயில். சூரபத்மன் மயிலாக உள்ளதால்.

ஆ. தேவமயில். திருப்பரங்குன்றம் தெய்வானை திருமணத்தில் பிறந்த வீட்டு சீதனமாக கொண்டுவந்தது.

இ. தேவேந்திர மயில். சூரசம்காரம் முடிந்தஉடன், தேவேந்திரன் முருகனுக்கு அளித்தது.

இந்த மயூராசலத்தில், எட்டரை அடி உயரத்தில் தங்கத்தில் மயில் வாகனம் உள்ளது.

"நாளென் செய்யும் வினை தானென் செய்யும் எனை நாடி வந்த கோளென் செய்யும் கொடுங்கூற்றென் செய்யும் குமரேசரிருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமுன் தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே."

என்ற அருணகிரிநாதரின், கந்தரலங்கார பாடல் நினைவுடன் வீடு திரும்பினோம். 


(17.3.2020)

தீவனூர். (பொய்யாமொழி விநாயகர்)

 தீவனூர். (பொய்யாமொழி விநாயகர்) தரிசனநாள் 4..8.2023.


அமைவிடம்.

திண்டிவனத்தில் இருந்து செஞ்சி  செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை, நாங்கள் பாண்டியில் வசிக்கும் காலத்தில்,  மாசிமகம் தீர்த்தவாரிக்கு வரும், இறைவனில்  ஒன்றாக இந்த விநாயகர் இருந்ததால்,  நாங்கள் இந்த விநாயகரை அறிந்து கொண்டோம். 

நெல்குத்தி சாமி.


மாடு மேய்க்கும் சிறுவர்கள் மரத்தடியில் அமர்ந்து  இருக்கும் நேரத்தில் நெல்மணிகளை கல் வைத்து உடைத்து வந்தனர். ஒருநாள் கல்லொன்று கிடைக்கிறது. அந்த கல் நெல்குத்துவதற்க்கு மிகவும் வசதியாக இருந்தது. நெல்லை இந்த கல் அருகில் வைத்து விட்டு செல்லும் நேரத்தில் எல்லாம், மீண்டும் வந்து பார்க்கும் சமயத்தில், நெல்மணிகள் குத்தி அரிசியாக இருந்ததை பார்த்த இந்த சிறுவர்கள் இந்த கல்லிற்க்கு “நெல் குத்தி சாமி” என்று பெயரிட்டனர். இதை அறிந்தவகள் இந்த கல்லை தூக்கி அருகில் உள்ள குளத்தில் எரிந்தனர். அந்த கல் இருந்த இடம், நீர் குமிழியை உண்டு செய்து, தான் இருக்கும் இடத்தை மக்களுக்கு உணர்த்தியது. இதை அறிந்த இந்த கிராமத்தலைவர் இந்த கல்லை இறைவனாக பிரதிஷ்டை செய்து கோவிலாக உருவாக்க அனுமதித்தார்.

பொய்ய மொழி விநாயகர்.

ஒரு மிளகு வியாபாரி இந்த கோவிலில் தங்கிய சமயத்தில், இறைவனுக்கு செய்யும் நிவேதனத்திற்க்கு மிளகு தேவைப்படுகிறது.  அவர்கள் இந்த மிளகு வியாபாரியை மிளகு கேட்க அந்த வியாபாரி, இந்த மூட்டையில் உளுந்துதான் உள்ளது என்கிறார். மறுநாள் வியாபாரி வியாபார நிமித்தமாக செல்ல வேண்டிய இடத்திற்;கு சென்று, விலை பேசி முடித்து பொருளை கொடுத்தவுடன், வாங்கியவர் சரிபார்க்கும் சமயத்தில் மூட்டையில் உள்ளது ஊளுந்து என்று தெரிந்து, வியாபாரியை கடிந்து கொள்கிறார். வியாபாரி தன் தவறை உணர்ந்து நெல் குத்தி சாமியை வேண்ட, உளுந்து அனைத்தும், மீண்டும் மிளகாக மாறியது.  வியாபாரி சொன்ன பொய்யை உண்மையாக மாற்றியதால், “பொய்யாமொழி” என்ற பெயர் பெற்றார்.

ஆலைய சிறப்பு.

2019 ஆம் ஆண்டு தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.


1. சுயம்பு மூர்தியான இவர் லிங்கவடிவிலேயே உள்ளார். பாலபிஷேகம் செய்யும் நேரத்தில், லிங்கத்தில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.


2. மூன்று ஆலமரங்கள் உள்ளன. இவை விழுதில்லாமல் இருக்கிறது. இந்த மூன்று ஆலமரங்களும் மும்மூர்திகளாக மக்களால் வணங்கப்படுகிறது.


வானமாமலை. (திவ்யதேசம்)

 வானமாமலை. (திவ்யதேசம்) தரிசனநாள்-12.7.2023.


அமைவிடம்.

பல பெயர்களை கொண்டது இந்த புனிதஸ்தலம், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 31கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

திருவரமங்கை.


இவ்விடத்தில் பிறந்து வளர்ந்து திருமாலை தாயார் அடைந்தார். இதன் காரணமாக திருவரமங்கை என்ற பெயர் பெற்றது இந்த ஊர்.

நாகணைசேரி.

ஆதிசேஷன் தவம் செய்து திருமாலுக்கு அணையாக இருந்ததால் இந்த பெயர்.

நான்குநேரி.

மிக பெரிய நீர்நிலையை நான்கு ஏரியாக பிரித்தனர். நடு பகுதி கூர்மையாக அமைந்தது. நான்கு+ கூர்+ ஏரி = நாங்குநேரியானது.

உரோசமஷேத்ரம்.

உரோசம முனிவர் தவம் இருந்து, திருமாலை தரிசித்த தலம்.

வைஷ்ணவத்தில் ஒன்பது திருதலங்களில் பெருமாள் சிலாரூபமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவையாவன “1. ஸ்ரீரங்கம், 2.ஸ்ரீமுஷ்னம், 3. முக்திநாத் (நேபாளம்), 4, நைமிசாரண்யம், 5.பத்ரிநாத், 6.திருப்பதி, 7. புஷ்கரம். 8. வானமாமலை.

தலவரலாறு


ஆழ்வார் திருநகரி மன்னன் காரி, குழந்தை வரம் வேண்டி, திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்திற்கு சென்றான். நம்பிராயர் (திருக்குறுங்குடி பெருமாள் பெயர் நம்பிராயர்) எப்படி பட்ட குழந்தை வேண்டும் என்று கேட்கிறார். உங்களை போன்று என்கிறான் அரசன். இங்கிருந்து கிழக்கே நான்கு ஏரிகள் சூழும் இடத்தின் நடுவில் கூர்மையாக உள்ள பகுதியை அகழ்ந்தால் வானமாலை (நாங்குநேரி பெருமாள், பெயர் வானமாமலை(எ)தோத்ரிநாதன்) தென்படுவார். அவரிடம் உன் வேண்டுதலை கூறு என்றார். இவரே வானமாமலை பெருமாள். 

கருவறை சிறப்பு.


ஆதிஷேன் குடைபிடிக்க வைகுண்டபதியான வானமாமலை பெருமான் அமர்ந்த கோலத்தில, ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவியுடனும் வீற்றிருக்கிறார். ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு, மார்கண்டேய, முனிவர்கள் மற்றும் சூரியன் போன்றோர் திருமாலை சேவித்தப்படி கருவறையில் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் உள்ளனர். இந்த 13 பேரும் சிலாருபமாக உள்ளனர். (சுயம்புமூர்திகள்.)

பிற சன்னதிகள்.

ஞானபிரான், லட்சுமி, நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்திகள், ராமர், கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

குலசேகரமண்டபம்.

நம்மாழ்வாரை தவிர 11 ஆழ்வார்கள் வீற்றிருக்கின்றனர். கருவறை பிரகாரத்தில் 32 ரிஷிகள் உள்ளனர். சேற்றுதாமரை தீர்த்தம், திருப்பார்கடலுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. சாபம் மற்றும் நம்முடைய பாபம் தீர்ககூடியதாகவும்  நம்பப்படுகிறது. 

தைலகாப்பு.

7நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவில் வானமாமலை பெருமாளுக்கு, தைலாபிஷேகம்(எண்ணெய்) செய்யப்பகிறது. இந்த எண்ணெய் ஒரு கிணற்றில் சேகரிகப்படுகிறது. உடல் உபாதை தீர்க்கும் மருந்தாக எண்ணி பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். 

நம்மாழ்வார்.

தலமைபீடமாக உள்ள இந்த ஆலயத்தில், 11 பாடல்களை பாடியுள்ளார் (மங்களாசாசனம்) நம்மாழ்வார். சடாரியில் நம்மாழ்வார் உருவம் உள்ளது. மாலை 5 மணியளவில் கூட்டமே இல்லாத நேரத்தில் இவ்வூரில் வசிக்கும் ஒரு வைணவர் எங்கள் கூடவே வந்து கோவிலின் சிறப்பை எடுத்துரைத்தார். ஒருமணிநேரம் வழிபட்டு, மனநிறைவுடன் திரும்பினோம்.  


புளியறை (தட்சிணாமூர்த்தி)

 புளியறை (தட்சிணாமூர்த்தி). தரிசனநாள்-14.7.2023.


 அமைவிடம்.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 8கி.மீ. தொலைவிலும், குற்றாலத்தில்; இருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மிகவும் ரம்யமான மலைதொடர் அருகில் அமைந்துள்ளது.

தென்காசி தரிசனத்தின் போது ஒருவர், இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள் புளியறையை தரிசித்து விட்டு செல்லுங்கள் என்றார். இப்படி நாங்கள் அறிந்து கொண்டதே இந்த தலம்.


கோவில் புராணம் - 1.

தில்லை நடராஜருக்கு சைவசமயம் நலிவுற்றால் தொல்லை ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்கள் மூலவர் நடராஜரை தூக்கிக்கொண்டு தென்திசை நோக்கி சென்றனர். பொதிகைமலையையும் தாண்டி சேரநாட்டை அடைந்தனர். புளியமரகாட்டில் ஒரு மரப்பொந்தில் நடராஜரை மறைத்து வைத்தனர். பகலிலும் இருள் சூழ்ந்த காடு அது. பின் அவர்கள் தில்லை திரும்பி விட்டனர். இதற்கிடையில் இந்த புளியமர காடு ஒருவனுக்கு செந்தமானது. அந்த மனிதன் ஒரு மர பொந்தில் நடராஜரை கண்டு மகிழ்ச்சியுற்றார். ஆனால் ஒருவரிடமும் இதை சொல்லவில்லை. 

சிறிது காலம் கழித்து தில்லை வாழ் அந்தனர்கள் பெருமான் வைத்தஇடத்தை கண்டு பிடித்து சிலையை சிதம்பரத்திறக்கு கொண்டு சென்றனர். 

புளியமர உடமையாளர் நடராஜர் அங்கில்லாததை கண்டு மிகவும் வருந்தினார். தாம் யாருக்கும் தெரிவிக்காத காரணத்தால் இறைவன் மறைந்து விட்டாரோ என்று வருந்தி இறைவனை வேண்டினார். சிறிது நேரத்தில் ஒரு சப்தத்துடன் ஒரு லிங்கம் (சுயம்புமூர்தியாக) தோன்றியது.


கோவில் புராணம் -2.

குழந்தையில்லாத அச்சன் கோவில் அரசன் சிவபெருமானை வேண்டியதாகவும். தான் சுயம்புவாக இருக்கும் இடத்தை தெரிவித்து, கோவில் கட்ட பணித்து குழந்தை வரம் தந்ததாகவும் ஒரு கதை உள்ளது.


கோவில் சிறப்பு.

சிவாலயங்களில் பிராகாரத்தில், தெற்கு நோக்கி, தட்சிணாமூர்ததி சன்னதி இருக்கும். ஆனால் இக்கோவிலி;ல் சிவனுக்கும் நத்திக்கும் இடையில் தட்சிணாமூர்த்தி உள்ளார். அதாவது, சிவன், தட்சிணாமூர்த்தி, நந்தி மூவரும் ஒரே நேர் கோட்டில் காட்சி தருகின்றனர்.


27 படிகட்டுகள் ஏறி நாம் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு படிகட்டும் ஒவ்வொரு நட்சத்திரத்தை குறிக்கிறது.  

ஏழில் நிறைந்த கானொளி, மற்றும் புகைப்படங்கள். 


 



தென்காசி விஸ்வநாதர்

 தென்காசி விஸ்வநாதர். (தரிசனநாள்-14.7.2023).


வாரணாசி என்ற உத்ரபிரதேச மாநில காசிக்கிணையான காசிகள்.

உத்ரகாசி- உத்ரகாண்ட் மாநிலம்

குப்தகாசி- உத்ரகாண்ட் மாநிலம்.

தென்காசி- தமிழ்நாடு.

சிவகாசி- தமிழ்நாடு.

இந்த ஐந்து காசிகளுமே சிறப்புடையது. ஒன்றுக்கு ஒன்று இணையான தலங்கள்.


அமைவிடம்.

தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தின்தலைநகராக உள்ளது இந்த நகரம். இந்த தென்காசியில், அருள்மிகு உலகம்மை சமேத காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது.


கோவில் வரலாறு.

பராக்ரம பாண்டியனால் கட்டப்பட்ட இந்த கோவிலில், உள்ள லிங்கம், மன்னனின் முன்னோர்கள் வழிபட்டதாகும். வடதிசையில்  உள்ள  வாரணாசி என்ற காசிக்கு பக்கதர்கள் நடந்தே சென்றனர்;. இதன்காரணமாக உடல்நலிவுற்று பலர் இறந்தனர்.  இதனால் இறைவன் மன்னனின் கனவில் வந்து எறும்பு ஊர்ந்து செல்லும் பாதையை அடையாளமாக கொண்டு அதன்பின் செல், கோவில் அமைக்கும் இடம் உனக்கு புலப்படும் என்று கனவில் தெரிவித்தார். மறுநாள் அவ்வாறே மன்னன் சென்றான். சிவலிங்கத்தை கண்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். உடனே பிரம்மான்டமான கோவிலை மகேசனுக்கு அர்பணித்தாதன் பாண்டியன்.


கோவில் பற்றிய செய்தி.

கி;.பி; 1445 ஆம் ஆண்டு கோவில் கட்ட துவங்கினான் அரசன். கிழக்கில் இருந்து மேற்கே நீளம் -554 அடி. தெற்கில் இருந்து வடக்கே அகலம் -318 அடி.  கோவில் கோபுரம் இடிதாக்கி, சிதலம் அடைந்தது. இதன்காரணமாக 1990- ஆம் ஆண்டு 180 அடி உயர, 7-நிலை ராஜகோபுரம் மிகபிரம்மாண்டமாக கட்டப்பட்டது. 

விஸ்வநாதர்.

சுயம்புலிங்கம், கிழக்குமுகமாக , சற்றே பிரம்மாண்டமாக, நாகாபரணம் அணிந்து சிறப்பு அலங்காரத்துடன் காட்சி தருகிறார்.


உலகம்மை.

கிழக்கு நோக்கி இரண்டுகரங்களுடன், ஒரு கையில் தாமரை மலருடன் காட்சி தருகிறார்.  கையில் இருக்கும் தாமரை முகத்திலும் மலர்ந்துஇருந்தது. சன்னதி சுவற்றில் அபிராமி அந்தாதி சில பாடல்கள் எழுதப்பட்டிருந்தது. அதைபார்த்து பாடி நான் மகிழ்ந்தேன்.

பராசக்தி பீடம்.

அகத்தியரால் நிர்மாணிக்;கப்பட்ட பீடமே சக்தி பீடம். பீடம் எதிரே சிவலிங்கம் அமைந்துள்ளது.

விழாக்கள்.

பலவிழாக்கள் சிறப்பாக கொண்டாடினாலும், மாசி மகம், தேர், தீர்த்தவாரி மற்றும் ஐப்பசி உத்திரம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

கோவில் வாயில் சிறப்பு.


இதை நாங்களும் உணர்ந்தோம்.

;


முறப்பநாடு. (நவகைலாயம்.)

 முறப்பநாடு. (நவகைலாயம்.) தரிசனநாள்.-13.7.2023


அருள் மிகு சிவகாமி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் நவகைலாயத்தில் ஐந்தாவது கோவிலாகவும், நவகிரகங்களில் வியாழன் என்ற குருஸ்தலமாக உள்ளது.

நவகைலாயம் அறிவோம்.


திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்;குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. 

நவகைலாயவரலாறு.


அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.

தலவரலாறு.


குதிரை முகத்துடன் பிறந்த குழந்தைக்காக மிகவும் வருந்தி சிவபெருமானை வழிப்பட்டான் ஒரு சோழ அரசன். ஈசன் தாமிரபரணி தீர்த்த கட்டத்தில் நீராட பணித்தார். தாமிரபரணியாற்றில் நீராடி இறைவக் அருள் பெற்று மன்னனின் மகள் மனித முகம் பெற்றாள். உரோசமுனிவர் வழிபட்ட இந்த ஈசனுக்கு, மன்னன் கட்டிய இந்த கோவிலே முறப்பநாடு தலமாகும்.

சிறப்பு.


இயற்கை எழிநிறைந்த இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். நந்தி குதிரை முகத்துடன் காணப்படுகிறது. தாமிரபரணியாறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால் “தட்சிணகங்கை” என்று அழைக்கப்படுகிறது. 


சேர்ந்தபூமங்கலம் (நவகைலாயம்)

சேர்ந்தபூமங்கலம் (நவகைலாயம்) தரிசனநாள்-13.7.2023.


சௌந்தரநாயகி(எ) அழகியபொன்னமை சமேத கைலாசநாதர் திருக்கோவில். நவகைலாயத்தில் ஒன்பதாவது தலம். நவகிரகங்களில் சுக்கிரன் தலம். 1000 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த இந்த கோவில் இடிபாடுடன் கூடிய நிலையில் இருந்தாலும், கர்பகிரகத்தில் உள்ள லிங்கதிருமேனியை தொட இங்கு இருக்கும் அன்பர்கள் விரும்பவில்லையாம். 


நவகைலாயம் அறிவோம்.

திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்;குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. 


நவகைலாயவரலாறு.

அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.



இக்கோவிலில் எங்கள் நிலை.

அர்சகர் (குருக்கள்) இருப்பது போன்று தெரியவில்லை. ஒரு காவலாளி உள்ளார் அவர் எப்பொழுதுமே கோவிலில் தான் இருப்பாராம். நாங்கள் மதியம் 12.30மணிக்கு சென்றோம். சூடத்தட்டை குடுத்து என்னை தீபாராதனை செய்ய சொன்னவுடன்  நான் அதிர்சிசியில் உறைந்து போனேன். பின் சுதாரித்துக்கொண்டு, கர்பக்கிரகத்திற்க்கு சற்று தள்ளி நின்று  தீபாராதனை செய்துவிட்டு, எனக்கு தெரிந்த ஒரு திருவருட்பா பாடினேன். 


இக்கோவில் அதிசயம்.

21.12.2020 ஆம் தேதி அன்று இரவு 6.40 மணிமுதல்-8.15 மணிவரை, இக்கோவில் லிங்கத்;தின் மீது ஒளிச்சுடர் ஏற்பட்டது. இதை இக்கோவில் அருகில் உள்ள பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வின் போது பக்தர்களின் எண்ணிக்கை சனி பிரதோஷவழி பாடு அன்று வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு இணையாக இருந்தது என்று இக்கோவில் பாதுகாவலர் தெரிவித்தார்.

பெயர்காரணம்.

ஒன்பது தாமரைகளில் இறுதியாக கரை சேர்ந்த இடம் என்பதால் சேர்ந்த பூமங்கலம் என்று பெயர் பெற்றது. சேர்ந்த +பூ+ மங்கலம். மங்கலம் என்றால் இறுதி, முடிவு என்று பொருள்.


ராஜபதி (நவகைலாயம்).

 ராஜபதி (நவகைலாயம்). தரிசனநாள்-13.7.2023.


நவகைலாயத்தில் எட்டாவது தலமாகவும், நவகிரகங்களில் கேது ஸ்தலமாகவும் உள்ளது இந்த கோவில். “தென்காளஹஸ்தி” என்று அழைக்கப்படுகிறது. “கண்ணப்பநாயனாருக்கு” தனி சன்னதியுள்ளது.


நவகைலாயம் அறிவோம்.

திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்;குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. 


நவகைலாயவரலாறு.

அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.


கோவில் பற்றிய செய்தி.

400 வருடங்களுக்கு முன் தாமிரபரணியாற்று வெள்ளத்தில் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் “கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட”; மூலமாக ராஜபதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2008 பூமி பூஜை செய்து 2010 ல்  “ஏழு நிலை ராஜகோபுரத்துடன”; கோவில் அமைத்து மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.





தென்திருப்பேரை (நவகைலாயம்)

 தென்திருப்பேரை (நவகைலாயம்). தரிசனநாள்-13.7.2023.


நவகைலாயத்தில் ஏழாவது திருத்தலமாகவும், நவகிரகங்களில் புதன் தலமாகவும் உள்ளது. அழகியபொன்னம்மை சமேத கைலாசநாதர் என்ற பெயரில் சிவபெருமான் நமக்கு அருள்பாலிக்கிறார்.


கோவில சிறப்பு.

கைலாசநாதர் தாமரை வடிவ பீடத்தின் மீது லிங்க திருமேனியடன் காட்சி தருகிறார். நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் குதிரைவாகனத்;தில் காட்சி தருகின்றனர். சிவன், அம்பாள், விநாயகர், முருகன் என்று அனைத்து சன்னதிகளும் தனித்தனியா, இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. 


நவகைலாயம் அறிவோம்.

திருநெல்Nலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. 


நவகைலாயவரலாறு.

அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி  கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.


முக்கொம்பு தேங்காய்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு துரை இந்த இடம் வந்தபோது இங்குள்ள தென்னந்தோட்டத்தில் உள்ள மரத்தில் இருந்து இளநீர் கேட்டதாகவும், அதற்க்கு தோட்டகாரன் இது கைலாசநாதருடையது அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூறினாராம். அதற்;கு அந்த துரை கைலாசநாதர் தோட்டத்து இளநீர் என்றால் “கொம்பாமுளைத்துள்ளது” என்றாராம்.  துரையின் பேச்சை மீறமுடியாமல் பரித்த தேங்காயில் உடனே இரண்டு கொம்பு முளைத்தாம். இந்த முக்கொம்பு தேங்காய் இன்றளவும் இந்த கோவிலில் உள்ளது.



சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...