கோகுலம். (108 திவ்யதேசங்களில் இது 72 ஆவது திவ்யதேசமாகும்.)

 கோகுலம்.

உத்ரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நந்தகோபர், எசோதை தம்பதியருக்கு கிருஷ்ணர் மகனாக இங்குதான் வளந்தார் என்று புராணம் கூறுகிறது

108 திவ்யதேசங்களில் இது 72 ஆவது திவ்யதேசமாகும். 

நாங்கள் தரிசித்த இடங்களின் புகைப்படங்கள்.

1. கோகுலம் வாயில்.




2.நந்தகோபர் சிலை.



3.செல்லும்வழி.














.

ரிஷிகேஷ்

 ரிஷிகேஷ்.

கங்கையாற்றங்கரையில் அமைந்துள்ள ரிஷிகேஷ் தேவபூமி, புண்னிய பூமி என்று அழைக்கப்படுகிறது. ரிஷிகேஷ் பல ஆசிரமங்களுக்கும், யோகவகுப்புகளுக்கும், மலையேற்றத்திறக்கும், படகுசவாரிமையங்களுக்கும், புகழ் பெற்று விளங்குகிறது. 

லஷ்மண் ஜுலா.

ராமயணத்தில் ராமர் ராவணன் வதம் செய்தபிறகு இங்கு நீராடியதாக கூறப்படுகிறது. இலக்குவன், கயிற்றால் பாலம் அமைத்து இந்த கங்கை நதியை கடந்தார் என்று ராமாயணம் கூறுகிறது. 1889-ல் மரத்தினால்ஆன பாலம் கட்டினர். 1924 ஆம் ஆண்டு, இரும்பினால் 450 அடி உயரத்தில் தொங்குபாலம் அமைக்கப்பட்டது.

பயண அனுபவம். 

டிராவலர்களுடன் (Travels) சென்றதால் சுற்றிபார்க 6 மணிநேரம் தான் வழங்கினர். குறைந்தது மூன்று நாட்கள் தேவை. 1967-ல் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஓம்காரணந்தா ஆசிரமம் நாங்கள் உள்ளே செல்லவும் பார்வையாளர்கள் நேரம் முடிந்து விட்டது என்று கதவடைத்துவிட்டனர். 

 நாங்கள பார்த்த இடங்களின் புகைபடம் மற்றும் காணொளி. (தரிசனநாள் 29.9.2022) 




 பார்க்கவேண்டிய இடங்கள்.

1.ராம் ஜுலா

2. லஷ்மண் ஜுலா.

3.திரிவேணிமலை.

4.ராஜாஜி தேசிய பூங்கா.

4.நீல்கந்த் மகாதேவ் கோவில்.




பத்ரிநாத் (ஸ்ரீபத்ரி நாராயணன்.)

 பத்ரிநாத் (ஸ்ரீபத்ரி நாராயணன்.) (sep2022)




பத்ரிநாத் என்பது பஞ்சபத்ரி என்று ஐந்து ஷேத்திரங்களை குறிப்பிடுகிறது. விஷால் பத்ரியையே நாம் பத்ரிநாத் என்று அழைக்கிறோம்.

1.விஷால்பத்ரி.

2.ஆதிபத்ரி.

3.விருத்தபத்ரி.

4.பவிஷ்யபத்ரி.

5.யோகதியான்பத்ரி.

1.விஷால்பத்ரி.

108 திவ்யஷேத்ரங்களில் ஒன்றான இந்தபத்ரிநாத் பிரதான பத்ரிநாத் ஆகும். இமயமலை கடும் பனிபொழிவு காரணமாக 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். பனிபொழிவுகாலத்தில் அருகில் உள்ள ஜோஷிமட் என்ற இடத்தில் பெருமாளை வைத்து பூஜிக்கின்றனர்.

2.ஆதிபத்ரி.


கர்ணபிரயாகையில் இருந்து ராணிகேத் மார்கத்தில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆதிபத்ரி கோவில் 6 முதல் 12 ஆம் நூற்றாண்டுவரை பல அந்நிய சக்திகளால் பாதிப்புகளுக்குயுள்ளாகின. ரிஷி நாராயணன் அவர்களால்  உருவாக்கப்பட்ட கோவில் குப்தர்களால் புனரமைப்பு செய்யப்பட்டது. 2000 ஆண்டுகள் பழமையானது. பஞ்சபாண்டவர் மற்றும் ஆதிசங்கரர்; வழிபட்ட ஆலையம்.


350 சதுரமீட்டர் பரப்பளவில் 14 சிறிய கோவில்களை கொண்டது. அதில் பிரதான மூலவர் ஆதிநாராயணர்.

விருத்தபத்ரி.




பிரதான சாலையில் இருந்து முறையாக இல்லாத பாதையில் 2கி.மீ. பயணம் செய்து இந்த நாராயணனை தரிசிக்க வேண்டும். இந்த வழி புகைபடத்தை உங்களுடன் பகிர்கின்றேன். அலகநந்தாவின் அழகான இந்த பள்ளத்தாகில் நாரதமுனிவருக்கு ஸ்ரீமன் நாராயணன் காட்சி கொடுத்த இடம். நாரதரால் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு, ஆதிசங்கரரால் பூஜிக்கப்பட்ட இடம் என்று வரலாறு கூறுகிறது.

பவிஷ்யபத்ரி.

நாங்கள் இங்கு செல்லவில்லை. கடினமான இடம் என்றும், சக பயணனிகளில் பலர், ஆர்வம் இன்மையாலும். பலர் மிக சோர்வாக இருந்ததாலும். நாங்கள் இந்த பெருமாளை தரிசனம் செய்யவில்லை. 5அடி உயரம் உள்ள ஒரு கருப்புபாராங்கல்லில், பெருமாளின் உருவம் தானாக தோன்றி வருகிறது என்றும், பெருமாள் உருவம் முழுமையாக தெரியும் காலத்தில், பத்ரிநாராயணனை தரிசிக்கமுடியாது என்றும், இந்த பவிஷ்யபத்ரியே பத்ரிநாத் கோவிலாக மக்கள் தரிசிப்பர் என்று கூறப்படுகிறது.

யோகபத்ரி.



இதுவே யோகபத்ரி என்று அழைக்கப்படுகிறது. கர்ணனன் பிறப்பு, பாண்டவர்கள் பிறப்பு, குந்தி,பாண்டு திருமணம் என்று பல வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடம் என்று கூறப்படுகிறது. சாலையில் இருநது 200 படிகள் கிழே இறங்கவேண்டும். வாசுதேவராக ஒருசன்னதியும், சாளகிராம மூரத்;தி வெங்கலச்சிலையிலும் உள்ளது. மகாபாரத கதாபாத்திரம், பாண்டு அவர்களால் நிர்மானிக்கப்பட்ட கோவிலாகும்.

பயணஅனுபவம்.

அற்புதமான வானிலை காரணமாக தரிசனம் சிறப்புற்றது. (தரிசனநாள் செப்டம்பர் 28-2022).




பத்ரிநாத் (விஷால் பத்ரி) தரிசனம்-10.10.2024.









இந்த முறை நாங்கள் இரவே பத்ரிநாத் சென்று தங்கிவிட்டோம். குளிர் மிக அதிகமாக இருந்தது. அதிகாலை 5 மணிக்கே  நாங்கள் கோவில் சென்றுவிட்டோம். மிக குறைவான பக்தர்களுக்கு மத்தியில் பெருமாளின் திருமஞ்சன தரிசனம் கிடைத்தது. 

விருத்தபத்ரி தரிசனமும் கிடைக்கப்பெற்றோம்.






3 கி.மீட்டர் மலையேற்றம் உள்ள பவிஷ்யபத்திரியையும் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணமும் உதிக்கப்பெற்றோம். 

நீலகண்டபர்வதம். (பர்வதம்-மலை)



கைலாஷ் மலை ஒரு தேவாரவைப்புத்தலம், இதுபோன்றே, நீலகண்ட மலையும் ஒரு வைப்புதலம் என்பதை  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அறிந்திருக்கவில்லை. அதனால் இரவே பத்ரிநாத்தில் தங்கி காலை சூரியோதத்தில் மலையை தரிசிக்க வேண்டும்; என்பதற்காகவும் அதிகாலையே நாராயணரை தரிசனம் செய்தோம். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியோதயம் சரியாக இல்லை. நல்ல உதயத்தில் சூரியனின் ஒளிகதிர்கள் மலையின் மீதுப்பட்டு தங்கநிறமாக (பென்னார்மேனியனாக) ஜொலிக்கும். சூரியோதத்திற்காக நானும் என்கணவரும் ஒன்றறை மணி நேரம் காத்திருந்தோம். இந்த தரிசனம் மிக அபூர்வமான ஒன்றாகும்.

தேவப்பிரயாகை.

 தேவப்பிரயாகை. (Sep-2022)


1.அலகாநந்தா, பாகீரதி இந்த இரண்டு நதிகள் கூடும் இடம், தேவப்பிரயாகை. 

2.ரகுநாத்மந்திரம் என்ற புகழ்பெற்ற ராமர் கோவில்உள்ளது. 

3.108 திவ்யதேசத்தில் ஒன்றாகும். 

4;.பெரியாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

5. திருகண்டமெனும் கடிநகர்  என்று அழைக்கப்படுகிறது. 

6.புண்டரீகவல்லீ சமேத புருஷோத்தம பெருமாள்.

7. கடல் மட்டத்தில் இருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

8. கடி என்றால் ஒரு நொடிப்பொழுது என்றும், இந்த இடத்தில் ஒருநொடிபொழுது இருந்தாலே நமது பாவம் அனைத்தும் விலகும் என்பது மக்களின் நம்பிக்கை.

9. 99வது திவ்யஷேத்ரம்.

நாங்கள் தரிசித்த இடங்களின் புகைப்படம் மற்றும் காணொளி. (செப்டம்பர்29 -2022).




All below photos had taken on our travelling time in Utharakant.











தேவப்பிரயாகை. (Second Time Dharsan on 30.9.2024)








ஜோசிமட்

 ஜோசிமட்.





உத்ரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள, ஒரு நரசிங்கர் கோவில். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பத்ரிநாராணன் பனி படர்ந்த ஆறு மாதத்திற்க்கு இங்கு தங்கிதான் மக்களுக்கு அருள்புரிகிறார். பனிபடர்ந்த 6 மாதங்களுக்கு, பத்ரிநாராயணனை இங்குவைத்து, பின்பு பத்ரிநாத்துக்கு கொண்டு செல்வதை ஒரு திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.


ஆதிசங்கரர்  8 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்த நான்கு மடங்களில் இதுவும் ஒன்றாகும். தௌலிகங்கா மற்றும் அலகநந்தா சங்கமத்தில்  இந்த ஜோசிமட் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான கல்பவிருட்ச மரம் உள்ளது. இதன் கீழ் அமர்ந்தே ஆதிசங்கரர் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. 

பார்கவேண்டிய பிறஇடங்கள்.

நந்தாதேவி நேஷனல் பார்க். (இணையத்தில் சென்று பாருங்கள் அற்புதமான பூ பூங்கா).  கல்பவிருட்ஷா   ஆன்மீக சுற்றுலா என்பதால் நாங்கள் கோவிலுக்கு மட்டுமே சென்றோம். 

பயணஅனுபவம்.


அற்புதமான வானிலை காரணமாக எங்கள் தரிசனம் சிறப்புற்றது. எங்கள் தரிசனத்தின்போது 50க்கு மேற்பட்ட ரஷ்ய நாட்டு மக்கள் வந்திருந்தனர். அவர்கள் மிக அற்புதமாக சமஸ்கிருத ஸ்லோகங்களை ஓதினர்.

தரிசனநாள் - செப்டம்பர் 28- 2022.


Our Second time worship Photos   (9.10.2024)








Sankarachariyar Temple.



சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...