சிறுவாபுரி.

 சிறுவாபுரி. (தரிசனநாள்-17.6.2024)

அமைவிடம்






சென்னை கும்முடிபூண்டி வழித்தடத்தில்(சென்னை –கல்கத்தா நெடுஞ்சாலையில்), திருவள்ளுர் மாவட்டத்தில், சின்னபேடு என்ற பகுதியில்அமைந்துள்ளது. பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்தும் இந்த தலம் செல்லலாம். இந்த பகுதி சிறுவாபுரி என்றும்அழைக்கப்படுகிறது.

நான்கரைஅடி உயரத்தில், நின்ற கோலத்தில் பாலசுப்ரமணிய சுவாமி நமக்குஅருள்பாலிக்கிறார்.





தலபுராணம்.

லவனும் குசனும் ராமருடன் போரிட்ட இடம் இந்த சின்னப்பேடு என்று அருணகிரிநாதரின் இத்தல திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இறைவன் முருகன் மீது பக்தி கொண்ட முருகம்மை என்ற பெண் தியானத்தில் இருந்த சமயம், இவரின் கணவன் இவர் மீது கோபம் கொண்டு இவரின் கையை வெட்டினார், முருகன் அருளால் மீண்டும் கை கிடைக்கப்பெற்றதாக ஒரு வரலாறும் உள்ளது இக்கோவிலுக்கு. இத்தலத்தில் அருணகிரிநாதர் 4 திருப்புகழ் பாடியுள்ளார்.

1.அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற…வருளாலே.

மற்ற திருப்புகழ்களை என்னால் கண்டறிய முடியவில்லை. 

பிற சிறப்புகள்

ஐந்து நிலை ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரத்தை தொடர்ந்து மரகதகல்லில் செய்யப்பட்ட மயில்,  விநாயகர் சன்னதி, ஆதிசுப்ரமணியர் சன்னதி, துலாபாரம் கொடுக்கும் தராசு, முடிகாணிக்கை குடுக்க தனியிடம், சண்டிகேஸ்வரர்  சன்னதி.

எங்கள் அனுபவம்.

(9.4.2024) இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலுங்கு வருடப்பிறப்பு அன்று சென்றோம் செவ்வாய்கிழமையாதலால், கூட்டம் மிக அதிகம். தேசிய நெடுஞ்சாலையிலேயே கோவிலுக்கு செல்ல ஒரு பெரிய வளைவு வைத்துள்ளார்கள். இது சேவை சாலையில் உள்ளது. செவ்வாய்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் இந்த சேவைசாலையுடன், பொது வாகனம், சுயவாகனம் அனைத்தையும் நிறுத்திவிடுகின்றனர். இதன் பிறகு அனைவருமே 3 கி;மீ; தொலைவுக்கு அரசு மினி பேருந்தில் தான் செல்ல வேண்டும். பின் ஒரு கி.மீ. நடந்து கோவிலை அடையவேண்டும். இரண்டுசக்கரவாகனம் செல்ல அனுமதி இருக்கிறது.  கார் நிறுத்துவதும் மிக அருகில் நிறுத்த முடியாது, காரை நிறுத்திவிட்டு குறைந்தது 500 மீ நடந்து மினி பஸ்சை பிடிக்கவேண்டும். அப்படி சென்றும் மிகுந்த கூட்டம் காரணமாக, நாங்கள் இறைவனைவழிபடாமலேயே திரும்பினோம். சிறுவாபுரியில் இருக்கும் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டு திரும்பினோம்.









17.6.2024- மீண்டும் தரிசனம்.

கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும், தரிசனம் செய்ய ஒருமணிநேரம் ஆயிற்று. பாலசுப்பிரமணியசுவாமியை 10 அடிதூரத்தில் நின்றுதான் தரிசனம் செய்ய முடிந்தது. முருகனுக்கு வலது பக்கம் உள்ள அண்ணாமலை, உண்ணாமுலை அம்மன் சன்னதியும், வள்ளியும் முருகபெருமானும், கைகோர்த்துநிற்கும் சன்னதியும். பணம் குடுத்து செல்லும் சிறப்புவழியினருக்கே தரிசனம் கிடைக்கிறது. 

வரிசையில் நின்று தர்மதரிசனம் செய்பவர்களை இடதுபுறமாக அனுப்பிவிடுதவதால், மீண்டும் பணம் கொடுத்தவர்களுக்கே இறைவனை வலம் வர முடிகிறது. வலமாக செல்ல முடியாமல் 

இடமாக(அப்பிரதட்ஷனமாக) சென்றால் தான் விநாயகர் மற்றும் ஆதிமுருகனையும் வழிபட முடிகிறது.

வழிபாட்டு நேரம் அறிந்துகொள்ளுங்கள்.

செவ்வாய்கிழமை – அதிகாலை 4 மணிமுதல்- இரவு 9 மணிவரை –தொடர்தரிசனம்.

ஞாயிற்றுகிழமை – அதிகாலை 6 மணிமுதல் - இரவு 9 மணிவரையும். 

;ஏனையநாட்களில் (காலை 6- முதல்12.30 வரை, மாலை 4.30 -8 வரை) மற்ற கோவில் நேரம் போன்றே காலையும் மாலையும் வழிபாட்டிற்காக கோவில் திறந்திருக்கும்.)


கீழப்பழுவூர்

 கீழப்பழுவூர் - (தரிசனநாள் 26.5.2024)


அரியலூர், திருவையாறு சாலையில் அமைந்துள்ளது. அரியலூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து வடக்கே 20 கி;மீ தொலைவிலும், அமைந்துள்ள, தேவாரபாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.







ஸ்தலபுராணம்.

கைலாயத்தில் பார்வதி, விளையாட்டாக சிவன் கண்களை பொத்தினார். சூரியன் மற்றும் சந்திரனாக திகழ்ந்த இரண்டு கண்களும் பொத்தியமையால், உலகமே இருண்டு ஒளியிழந்தது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பம் காரணமாக பூலோகத்தில் சென்று தவம் செய்து பின் என்னை வந்தடைவாயாக என்று கட்டளையிட்டார். பூலோகம் வந்த அம்பிகை பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து, பின், யோகவனத்திற்கு வந்து புற்றுமண்னால் சிவலிங்கம் செய்து வழிபட்டார். இந்த யோகவனமே கீழப்பழுவூர்.






ஆலந்துறையார், அருந்தவநாயகி. 

சுயம்புமூர்தியான இறைவன், வடமூலநாதர் என்றும், ஆலந்துறையார் என்றும் பக்தர்களால் வணங்கப்படுகிறார். பழு என்றால் ஆலமரம். ஆலமரம் தலவிருட்சம,; மிக பிரம்மாண்டமாக உள்ளது. இதன் காரணமாக, ஆலந்துறையார் என்ற போற்றப்படுகிறார். சிவனை நோக்கி தவம் செய்தமையால் அருந்தவநாயகி என்று பக்தர்களால் போற்றப்படுகிறார்.

பிறதகவல்கள்.

ஒருவாயிலுடன், மூன்றுநிலை ராஜகோபுரத்தை கொண்டது. புற்று லிங்கமாதலால், அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. பரசுராமர் பூஜ்pத்து சாமவிமோசனம் பெற்ற தலம். பங்குனி மாதம் 18 ஆம் தேதியன்று சூரியகதிர் இறைன்மீது விழுகிறது.

திருப்புகழ்பாட பெற்ற தலம்.

வள்ளலார் சுவாமிகள் நற்கருணைவாய்க்கும் பழுவூர் மரகதமே என்று போற்றுகிறார். ஞானசம்மந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம். 


திருமழபாடி

 திருமழபாடி (தரிசனநாள் -26.5.2024)


அமைவிடம்

திருமானூர்- லால்குடி சாலையிலுள்ளது.

சுந்தராம்பிகை உடனுறை வைத்யநாதசுவாமி. அப்பர், ஞானசம்மந்தர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்ற தலம்.











சுந்தரமூர்திசுவாமிகள்.

சுந்தரர் நன்னிலம், திருவாஞ்சியம், ஆடுதுறை, நாகேஸ்வரம், கண்டியூர், திருவலாம்பொழில் போன்ற திருதலங்களுக்கு சென்று வழிபட்டுவிட்டு, ஓய்வெடுத்த சமயம் ஈசன் கனவில் தோன்றி “மழபாடிக்கு வர மறந்தாயோ” என்று வினவினார். உடனே வட கரையை அடைந்து,  திருமழபாடி ஈசனை தரிசனம் செய்தார். 

“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே! 

என்று மனஉருக பாடினார்.











நந்திகேஸ்வரர் திருமணம்.

பங்குனி மாதம் புனர்பூசம் நட்சத்திரம் அன்று நந்திதேவருக்கு திருமணவைபவம் நடைபெருகிறது. “நந்தி திருமணம் பார்தால் முந்தி திருமணம் நடக்கும்” என்று ஒரு பழமொழியும் உள்ளது. இதன் காரணமாக திருமணவயதில் இருக்கும் ஆண்களும், பெண்களும் அன்றைய தினம் வழிபாட்டிற்;கு வருகின்றனர்.

பெயர் காரணம்.

மார்கண்டேய மகரிஷி வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில், மழுவேந்திய கோலத்தில் இத்தலத்தில் காட்சி கொடுப்பதால், மழபாடி என்ற பெயர் பெற்றது.

தலபுராணம்.














சிலாதமுனிவர் என்பவர் திருவையாற்றில், வசித்துவந்தார். குழந்தை வரம் கேட்டு சிவனை வழிபடலானார். இறைவனின் கட்டளைப்படி 

புத்திரகாமேஷ்டியாகம் செய்ய நிலத்தை உழுத சமயம் ஒரு பெட்டிகிடைத்தது.  இறைவனின் ஆணைபடி பெட்டியில் உள்ள குழந்தையை ஏற்றுக்கொண்டார். பெட்டியில் இருந்த குழந்தை 3 கண்கள், 4தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் காட்சி கொடுத்தது. இதை கண்டு வியந்த முனிவர் பெட்டியை மீண்டும் திறந்து குழந்தையை எடுக்கும் சமயம் அந்த குழந்தை சாதாரணமாக காட்சி கொடுத்தது. “ஜபேசர்” என்று பெயர்வைத்து வளத்துவந்தார். இறைவன் இந்த குழந்தைக்கு 16 ஆண்டுகாலம்தான் வாழ்நாள் என்பதையும் அறிவுறுத்திருந்தார்.   14 ஆண்டுகாலம் கழிந்த உடன் ஜபேசர் பெற்றோரின் மனவருத்தத்திற்கு காரணம் அறிந்து, திருவையாற்று “அயனஅரி” என்ற தீர்த்தத்தில் ஒற்றைகாலில் தவம் செய்ய துவங்கினார். நீரில் இருக்கும் மீன்களுக்கு கால் கொஞ்சம் கொஞ்சமாக உணவாகின. இதனை ஜபேசர் பொருட்படுத்தவில்லை.  மகேஸன், காட்சி கொடுத்து, ஜபேசனின் காலை குணப்படுத்தி சுயசாம்பிகை என்ற பெண்னுடன் திருமழபாடியில் திருமணம் முடித்து வைத்தார். 

மனைவியுடன் மகேசனை பூஜித்த ஜபேசர், சிவகணங்களின் தலமைப்பதவியை பெற்று, கைலாயத்தில் முன்காவல் உரிமை உடைய நந்திதேவரானார் .


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...