குப்தகாசி தரிசனநாள் (3.10.2024).
அமைவிடம்.
உத்ரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கடல் மட்டதலிருந்து, 1319 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம்.
பஞ்சபாண்டவர்கள் சிவபெருமானை இமயமலையில் தரிசிக்க வந்த சமயம் சிவன் இந்த ஆலையத்தில்தான் உள்ளார்.; பாண்டவர்களை பார்த்தவுடன் மறைந்துவிடுகிறார். குப்த என்றால் மறைதல் என்று பொருள். அதன் காரணமாகவே இந்த ஆலயம் குப்தகாசி என்று அழைக்கப்படுகிறது.
கோமுகம் மற்றும் கஜமுகம் வழியாக வரும் நீர் கங்கையாகவும், யமுனையாகவும், வணங்கப்படுகிறது.
கேதார்நாத் யாத்ரிகர்கள் அனைவரும் வழிபடும் தலமாகவும் உள்ளது.
வாரணாசி என்ற உத்ரபிரதேச மாநில காசிக்கிணையான காசிகள்.
உத்ரகாசி- உத்ரகாண்ட் மாநிலம்
குப்தகாசி- உத்ரகாண்ட் மாநிலம்.
தென்காசி- தமிழ்நாடு.
சிவகாசி- தமிழ்நாடு.
இந்த ஐந்து காசிகளுமே சிறப்புடையது. ஒன்றுக்கு ஒன்று இணையான தலங்கள்.
No comments:
Post a Comment