பெங்களுர் அரண்மனை. (நாள் -20.11.2024)
பெங்களுரில் அமைந்துள்ள அரண்மனை ஒரு தனியாருக்கு சொந்தமானது. நன்கு பரந்து விரிந்த இந்த இடத்தில், வியார நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவை இயங்கி வருகின்றன. நாங்கள் சென்றன்றும், ஒரு வணிக கண்காட்சி நடைபெற்றுகொண்டிருந்தது. நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ரூ.260 நிர்ணயம்செய்துள்ளனர். புகைபடம் எடுக்க அனுமதி இல்லை. அரண்மனை வரலாறு மற்றும் அங்குள்ள பொருட்கள், இடங்கள் பற்றிய ஒரு ஒலிவடிவ பதிவை நாம் தனித்தனியாக காது ஒலிபெருக்கி மூலம் கேட்கும்படியான வசதி ஏற்படுத்தி இருந்தனர். (ஒலி பதிவு தென்னிஇந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் உள்ளது)
உடையார் அரச குடும்பத்தை பற்றி செய்திகள் மற்றும், அங்குள்ள ஓவியங்களின் விளக்கங்கள், குடும்பத்தினர்பற்றிய புகைபட விளங்கங்களே இருந்தன. பூங்கா ஒன்றும் இருந்தது.
சாங்கி தொட்டி.
1882 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஹ_ராம் சாங்கி என்பவரால், மக்களின் நீர் பயன்பாட்டிற்காக, கட்டப்பட்டது.
இந்த நீர்நிலையின் பரப்பளவு – 15ஹெக்டேர். ஆழம் 30.4 அடி, நீளம் 1.26 கி.மீ.
இந்த அழகான சூழலில் 1 மணிநேரம் நடைபயின்றோம்.
No comments:
Post a Comment