கார்திகை மாத நரசிம்மர் தரிசனம். Part - 1

 கார்திகை மாத நரசிம்மர் தரிசனம். Part - 1 (தரிசனநாள் - 24.11.2024)


முன்னுரை 

பாலாறு வடகரை தென்கரை தலங்கள் சென்ற போது, சக பயணியர் ஒருவர் மூலம் 42 நரசிம்ம தலங்களை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த அனைத்து தலங்களும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அமைந்துள்ள கோவில்கள். இதில் அகோபிலமும் ஒன்று. இந்தகோவில்பற்றி அனைவரும் நன்கு அறிவர். ( “அகோபிலம்” -  என்றுடைய தரிசன பிளாகும் உள்ளது). நாங்கள் இக்கோவில்களை தேடி சென்று தரிசனம் செய்ய முடிவெடுத்து முதல் கட்டமாக ஓசூரில் உள்ள நான்கு தலங்களை நேற்று தரிசனம் செய்தோம். மிகவும் புகழ் அடையாத சிறய கோவில்கள், தேடி சென்று தரிசனம் செய்வது சற்று கடினமாகதான் இருந்தது.(இருக்கும் என்பதும்  நாங்கள் அறிந்ததே)

 கார்திகை மாதம் நரசிம்மர் தரிசனத்திற்கு மிகவும் உகந்த மாதம். இதன் காரணமாக இன்று தொடங்கிய (24.11.2024),எங்களனின் நரசிங்கபெருமாள் தரிசனம், என்று முடிவடையும் என்பது எங்களுக்கே தெரியாது.

1. ராயக்கோட்டா லெஷ்மி நரசிம்மர்.




இந்த ஆலயம் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் சிறிய கோவில். இங்கு வீபூதி பிரசாதம் கொடுத்தது என்னை வியப்பில் ஆழ்தியது. 

2. லெஷ்மி நரசிம்மர்.





ராயக்கோட்டா கோவிலில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள், நேதாஜி நகர் ராமர் கோவில் என்று கேட்டு செல்லவேண்டும். இந்த ராமர் கோவிலில், நரசிம்மர் ஒரு சன்னதியில்; நமக்கு அருள் பாலிக்கிறாரர். இக்கோவில் பட்டாச்சாரியார் பிற கோவில்களுக்குசெல்ல  எங்களுக்கு வழிகாட்டினார்.

3. வராகநரசிம்மர்.





 ஓசூர் டி.வி.எஸ். நகர் ஆஞ்சநேயர் கோவில் என்று கேட்டு செல்ல வேண்டும்,  இந்த நரசிம்மரை தரிசனம்செய்ய. இக்கோவிலில், ஆஞ்சநேயர்,  நரசிம்மர்  சக்கரத்தாழ்வார் இவர்களுக்கு தனி தனி சன்னதிகள் இருந்தன.

4. மடிவாலம் நரசிம்மர்.




ஓசூரில் இருந்து 22கி.மீ. தொலைவில் மடிவாலநல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். மிகவும் சிறிய கிராமத்தில் இயற்கைசூழலில் அமைந்துள்ளது. நாங்கள் காலை 10.30 மணிக்கு சென்றதால் கோவில் மூடப்பட்டிருந்தது. 10 மணிக்கே நடை சாற்றிவிடுவார்கள் என்று கிராமத்துமக்கள் தெரிவித்து, பட்டாசாரியாரின் கைபேசி எண்ணையும் எங்களுக்கு கொடுத்தனர். மாலை 5மணிக்குதான் கோவில் திறப்பதாக அவர் தெரிவித்தார். “படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே” என்று 5, 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நாங்கள், எங்கள் சூழ்நிலை காரணமாக உடனே வீடு திரும்பினோம். மீண்டும் மடிவாலம் நரசிம்மரில் இருந்து துவங்குவோம் எங்களின் நரசிம்ம ஆலய தரிசனத்தை.


(

( 2019 Bhahavathamela Malattur,  Pragalatha Charithram Drama Cheracters  1. Bhatha Prahallathan, 2. .Hiranyakasubu )

முடிவுரை.

1.தெலுங்கானா, மட்டப்பள்ளி, யோகநரசிம்மர்

2. தெலுங்கானா, வடபள்ளி, ஸ்ரீலெஷ்மி நரசிம்மர்.

3. ஆந்திரா, கேதாவரம், ஸ்ரீவஜ்ரநரசிம்மர்

4.ஆந்திரா, வேதாத்ரி ஸ்ரீயோகானந்தநரசிம்மர்

5.ஆந்திரா மங்களகிரி, ஸ்ரீபனகாலநரசிம்மர்.

இந்த பஞ்ச ஷேத்ரங்களும், கிருஷ்ணா நதிகரையோர மலை காடுகளில் அமைந்துள்ள, சுயம்பு நரசிம்ம ஷேத்ரங்கள். இவை நான் மேலே குறிப்பிட்டுள்ள 42 நரசிம்ம ஷேத்திரத்தில் கிடையாது. ( தமிழ்நாட்டில் நாங்கள் தரிசனம் செய்த பல நரசிம்மர் கோவில்கள்கூட, இந்த அட்டவணையில் இல்லை).  நாங்கள் அகோபிலம் சென்ற போது இந்த பஞ்சநரசிம்ம ஷேத்ரங்களை, அறிந்தோம். 2023 டிசம்பர் மாதம் தரிசனத்திற்காக, இறைவனிடம் போட்ட விண்ணப்பம், இன்றுவரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.


பெங்களுர் அரண்மனை

 பெங்களுர் அரண்மனை. (நாள் -20.11.2024)


பெங்களுரில் அமைந்துள்ள அரண்மனை ஒரு தனியாருக்கு சொந்தமானது. நன்கு பரந்து விரிந்த இந்த இடத்தில், வியார நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவை இயங்கி வருகின்றன. நாங்கள் சென்றன்றும், ஒரு வணிக கண்காட்சி நடைபெற்றுகொண்டிருந்தது. நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ரூ.260 நிர்ணயம்செய்துள்ளனர்.  புகைபடம் எடுக்க அனுமதி இல்லை. அரண்மனை வரலாறு மற்றும் அங்குள்ள பொருட்கள், இடங்கள் பற்றிய ஒரு ஒலிவடிவ பதிவை நாம் தனித்தனியாக  காது ஒலிபெருக்கி மூலம் கேட்கும்படியான வசதி ஏற்படுத்தி இருந்தனர். (ஒலி பதிவு தென்னிஇந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் உள்ளது)






உடையார் அரச குடும்பத்தை பற்றி செய்திகள் மற்றும், அங்குள்ள ஓவியங்களின் விளக்கங்கள், குடும்பத்தினர்பற்றிய புகைபட விளங்கங்களே இருந்தன. பூங்கா ஒன்றும் இருந்தது.

சாங்கி தொட்டி.







1882 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஹ_ராம் சாங்கி என்பவரால், மக்களின் நீர் பயன்பாட்டிற்காக, கட்டப்பட்டது.

இந்த நீர்நிலையின் பரப்பளவு – 15ஹெக்டேர். ஆழம் 30.4 அடி, நீளம் 1.26 கி.மீ.

இந்த அழகான சூழலில் 1 மணிநேரம் நடைபயின்றோம்.




காப்பித்தோட்டம்

 காப்பித்தோட்டம். (16.11.2024)

அமைவிடம்


பெங்களுர், பன்னாரகட்டா என்ற இடத்திற்கு அருகில்  "CITRUS TRAIL" என்ற பெயரில் தனியார் ஒரு காப்பிதோட்டம் அமைத்துள்ளனர். காப்பி தோட்டத்தில் ஊடுபயிராக மிளகு மற்றும் பாக்கு மரங்களை வளர்கின்றனர்.





இந்த தோட்டத்தின் வருமானத்தை பெருக்க தோட்டத்தின் உட்பகுதியில் உணவகத்தை தொடங்கியது மட்டுமல்லாமல் வார இறுதிநாட்களில் இயற்கை சுற்றுலா தலமாகவும் பயன் படுத்திவருகின்றனர்.






எங்கள் பேத்தியின மூன்றாவது பிறந்தநாள் அன்று நாங்கள் இந்த தோட்டத்தை சுற்றிபார்த்து மகிழ்ந்து இந்த உணவகத்தில் உணவருந்தினோம். இளைஞர்களே, பெரும்பாலும் இங்கு பொழுதை கழிக்கவருகின்றனர். 






  


சந்திரசூடேஸ்வரர்

 சந்திரசூடேஸ்வரர் (தரிசனநாள் - 10.11.2024)


அமைவிடம்

மரகதாம்பிகை சமேத சந்ரசூடேஸ்வர் திருக்கோவில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ளது. சிறிய மலையில் இக்கோவில் அமைந்துள்ளது.

சந்ரசூடேஸ்வரர் - பிறையை சூடியவர்.

மரகதாம்பிகை – மரகதகல் பச்சை வண்ணம் (பச்சை வண்ண மேனியள்;

புராணம்







பிரம்மாண்ட புராணத்தில் இந்த ஓசூர் பகுதியும் இந்த கோவிலும் குறிப்பிடபட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த கோவிலின் பழமை நமக்கு தெரிகிறது.  ஹொய்சாளார்கள் என்ற ராஜ வம்ச அரசர்கள் இந்த கோவிலை 1260 ஆம் ஆண்டில் கட்டிஇருக்கலாம் என்ற அறியப்படுகிறது. சோழர்கள், விஜயநகரமன்னர்களால் கோவில் நன்கு விரிவடைந்துள்ளது. பெங்களுர் பகுதியில் உள்ள சோழ அரசர் கால கோவில் கல்டிவட்டுகளில் இந்த கோவிலுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய தகவல்கள குறிப்பிடபட்டுள்ளன. 




தட்சிணதிருப்பதி.

 

தட்சிணதிருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரசுவாமி கோவில், காமன்தொட்டி என்ற இடம் அருகில் கோபசந்ரா என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஓசூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் அமைந்துள்ளது. கோவில் வளைவில் இருந்து 500 மீ. தொலைவில் கோவில் அமைந்துள்ளது. 









சற்று உயரத்தில் மிகுந்த இயற்கை எழில் சூழ்நிலையில் அமைந்துள்ளது இந்த கோவில். திருப்பதி பெருமாள் போன்றே, பெருமாள் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.  கோவிலில் இருந்து தென்பண்ணையாறு பார்பதற்கு மிக அழகாக உள்ளது.


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...