திருவஞ்சிக்களம் (கேரளயாத்திரை 8.2.2024–15.2.2024)

 திருவஞ்சிக்களம் (கேரளயாத்திரை 8.2.2024–15.2.2024)

தலபுராணம்.











சேரமான் என்ற அரசர் தினமும் சிவபூஜை செய்வார். இவர் பூஜையை ஏற்றுகொள்ளும் விதமாக சிதம்பர நடராஜரின் சிலம்பொலி இவருக்கு கேட்டகச்செய்வார் சிவன். இதன்பிறகே சேரமான் உணவருந்துவார். இவ்வாறு செல்கையில் ஒருநாள் இறைவனின் சிலம்பொலி சேரமானுக்கு கேட்கவில்லை. உடனே அவர் மனம் வருந்தி அழுது தன்னை மாய்த்துக்கொள்ள முயல்கிறார். இறைவன் அவரை தடுத்து, காலதாமதத்திற்கான காரணத்தை கூறுகிறார். சுந்தரரின் பாட்டில் மயங்கி உன்னை மறந்துவிட்டேன், என்று கூறுகிறார். சேரமான் சுந்தரரை பற்றி அறிந்து கொண்டு அவருடன் நட்பு கொள்கிறார். நட்பின் காரணமாக சுந்தரர் திருவஞ்சிக்களம் வந்து இறைவனை வழிபட்டுவிட்டு, சேரமான் நண்பரையும் பார்கிறார். சுந்தரர் தழிழகத்திலுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டுவிட்டு , மீண்டும் திருவங்சிக்களம் சென்று பூவுலக வாழ்வை, அகற்ற “தலைக்கு தலைமாலை” என்ற பதிகம் பாடுகிறார். சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி, வெள்ளையானையில் சுந்தரரை அழைத்துவர செய்கிறார். சுந்தரர் உடனே நண்பன் சேரமானை நினைக்கிறார்.  சேரமானும், வெள்ளை குதிரையில் கைலாயம் கிளம்புகிறார். கைலாயம் செல்ல பயன் படுத்திய யானை, குதிரை நின்ற மேடை உள்ளது. சுந்தரர் எழுதிய பதிகம் “ஞானவுலா” என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நாயனாருக்கும், ஆடி சுவாதி அன்று குருபூஜை கொண்டாடப்படுகிறது. கேரளமாநிலத்தில் உள்ள ஒரே திருமுறை பாடல்பெற்ற தலம் இந்த திருவஞ்சிக்களம். 


வடக்குநாதர் கோவில் (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

 வடக்குநாதர் கோவில் (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

அமைவிடம்

கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டம் திருச்சூர் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோவில். பலாயிரமாண்டுகள் பழமைவாய்ந்தது இந்த கோவில். மலையாள வரலாற்று ஆசிரியர் வி.வி.கே. வலதம் என்பவர் புத்தம், சமணம், வைஷ்ணவம் இவற்றின் பாதிப்பை இக்கோவில் அமைப்பு கொண்டுள்ளது என்று தெரிவிக்கிறார்.

ஆதிசங்கரரை அருளிய வடக்குநாதர்.

சிவகுரு ஆரியாம்பாள் என்ற தம்பதிகளுக்கு நீண்டநாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இவர்கள் திருச்சூர் வடக்குநாதரை வேண்டி அவரின் அருளால் அவர்களுக்கு குழந்தையாகவும், நமக்கு  ஆதிசங்கரர் என்ற மகானையும், அருள்புரிந்தார். குழந்தைவரம் கேட்கும் பிரார்தனை இந்த கோவிலில் அதிகமாக உள்ளது.

நான்கு பெரிய கோபுரங்களுடன், நான்கு வாயில்களை கொண்டது, இந்த வடக்குநாதர் கோவில். இக்கோவிலில், இறைவன் பிரும்மாண்டமாக நெய்யாலான லிங்கமாக அருள்புரிகிறார். இக்கோவிலில் நந்தி சற்றே விலகியுள்ளது. பிரதோஷ காலத்தில் மட்டும் சிவன் மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் அருள்பாலிக்கிறார். சிவன் மேற்கு நோக்கியும், சிவன் சன்னதி பின்புறம் பார்வதி சன்னதியுமுள்ளது. ராமர், சங்கரநாராயணனர், கணபதி,







இவர்களின் சன்னதி ஆதிசங்கரரரால் தோற்றுவிக்கப்பட்டது. பூரம் திருவிழா மிகவும் புகழ்வாய்ததாக  உள்ளது.


வைக்கம் மகாதேவர். (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

 வைக்கம் மகாதேவர். (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

கேரளமாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது.








தலபுராணம்

காரா அரக்கன் மோட்சம் வேண்டி  கடும் தவம் புரிந்தான். சிவபெருமான் அவன் முன் தோன்றி, மூன்றுலிங்கத்தை அவனுக்கு அளித்தார். இரண்டுகைகளில் இரண்டுலிங்கத்தையும், கழுத்து பகுதியில் ஒன்றை தாங்கியும் எடுத்து சென்றான். இந்த இடத்தை கடக்கும் சமயம் லிங்கம் இந்த இடத்தை விட்டு நகர்தமுடியாமல் போனது. இது சிவனின் விருப்பம் என்பதை உணர்ந்து, இந்த மூன்று (வைக்கம், ஏற்றமானூர், காடாதேத்தி) இடத்திலேயே பிரதிஷ்டை செய்தான் இவ்வாறு காரா அசுரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதே இந்த மூன்று கோவில்களும். வியாக்ரகபாதகரிடம் ஒப்படைத்தான் அசுரன் அவனின் மோட்சத்திற்கு பிறகு. இந்த மகாதேவர் காலையில் தட்சிணாமூர்தியாகவும், (ஞானத்தையும், அறிவை வழங்கியும்), மதியம், கிரீடமூர்தியாகவும், தடைநீக்கி வெற்றிபெறசெய்தும், மாலையில் சக்தி பஞ்சாட்சரியாக, சிவகுடும்பமாக, உலகஇன்பத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார். பரசுராமர் வழிபட்டதலம்.

கைலாயவலம்.

வைக்கம், எட்டமானூர் (ஏற்றுமானூர்), கடுந்துருத்தி (காடாந்தேத்தி) இந்த மூன்று சிவன் கோவிலையும், உச்சி பூஜைக்கு முன் தரிசனம் செய்தால், கைலாயத்தை வலம் வந்த பலன் உண்டாகும் என்று எங்களின் Tour Guide தெரிவித்தார். நாங்கள் 2019 ஆம் ஆண்டும் இந்த மூன்று கோவிலையும் தரிசித்து, பேறுபெற்றோம்.


கல்பாதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

 கல்பாதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

அமைவிடம்.








கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காட்டில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில்அமைந்துள்ள ஒரு சிவன் கோவிலாகும்.

வரலாறு

கொல்லங்கோடு என்ற இடத்தில் லெஷ்மி என்பவர் வசித்து வந்தார். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதசுவாமி கோயில் போன்று ஒரு சிவன் கோவில்கட்ட விருப்பபட்டு;, காசியாத்திரை முடித்து காசியில் இருந்து பாணலிங்கத்தை கொண்டுவந்தார் கோவில் கட்டுவதற்காக. நீர் நிலை எங்கெல்லாம் உள்ளதோ அந்த இடத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுவந்தார். இந்த நிலையில் கல்பாதிக்கு வந்த உடன் நிலா ஆற்றங்கரையில் நீராடி சிவவழிபாடு செய்தபின்  பாணலிங்கத்தை அவரால் இந்தயிடத்தைவிட்டு அகற்றமுடியாமல் போனது. இறைவனின் ஆணைப்படி இந்த கல்பாதியிலேயே கோவில் கட்ட முடிவுசெய்தார்.  “இட்டி கோம்பி அச்சன்” என்ற அரசரை சந்தித்து, தன் விருப்பத்தைபற்றியும், பாணலிங்கத்தின் நிலைபற்றியும் கூறினார். அரசன் கோவில் கட்டுமானத்திற்கான நிலத்தையும், ஆட்களையும் வேலைக்கு பணிக்கிறார். அம்மையாரும், தான் சேமித்துவைத்திருந்த தங்க காசுகளை மன்னனிடம் தருகிறார். காசியில் இருந்து,  கொண்டுவரப்பட்ட லிங்கம் என்பதால், விஸ்வநாதர் என்ற  பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.

ஆலயஅமைப்பு

தெற்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள நுழைவாயிலில் 18படிகள் கீழ்இறங்கி கோவிலுக்கு வரும்படியான அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், விசாலாட்சி அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மகாகணபதி, தட்சிணாமூர்தி, கங்காதரன், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், நடராஜர், சூரியன், சந்திரன் என்ற பல சன்னதிகளும், நவகிரகங்கள் அவரவர் துணைவிகளுடன் வீற்றிருக்கின்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது கும்பகோண மகாமகம் போன்று ஒரு திருவிழாவும்,  ஐப்பசி மாத கடைசியில், தேர்திருவிழாவும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தில் பாதி புண்ணியம் கிடைக்குமாம். அதனால் “காசியில் பாதி கல்பாதி” என்று இந்த ஊர் அழைக்கப்படுகிறது.


காடந்தேத்தி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

 காடந்தேத்தி (கேரளயாத்திரை  8.2.2024 – 15.2.2024)











காரதூஷண அரக்கனால் நிறுவப்பட்ட லிங்கமாகும். வடக்கூர் வம்சத்தினர் ஆளுகைக்குட்பட்டது. 300 ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில் தீக்கரையானது, அச்சமயம் இந்த கோவில் அவைக்கம் மகாதேவர். (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

கேரளமாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அர்சகர் இறைவனின் சிலையை கட்டிக்கொண்டு உயிர்துறந்தார். இவரின் சிலை வடக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பங்களுடன் கூடிய மண்டபம் தீவிபத்தின் போது காக்கப்பட்டது. வடக்கூர் மன்னர் இந்த மூன்று சிவாலயங்களையும் தொடர்ந்து தரிசனம் செய்துவந்தார். வயது முதிர்வு காலத்தில் செல்ல முடியாமையால், எட்டுமானூரப்பனுக்கும், வைக்கத்தப்பனுக்கும் தனி சன்னதியை இந்த கோவிலில், வைத்து வழிபட்டுவந்தனர். 

கைலாயவலம்.

வைக்கம், எட்டமானூர் (ஏற்றுமானூர்), கடுந்துருத்தி (காடாந்தேத்தி) இந்த மூன்று சிவன் கோவிலையும், உச்சி பூஜைக்கு முன் தரிசனம் செய்தால், கைலாயத்தை வலம் வந்த பலன் உண்டாகும் என்று எங்களின்  Tour Guide தெரிவித்தார். நாங்கள் 2019 ஆம் ஆண்டும் இந்த மூன்று கோவிலையும் தரிசித்து, பேறுபெற்றோம்.


ஏற்றுமானூர். (கேரளயாத்திரை 8.2.24 – 15.2.24).

 ஏற்றுமானூர். (கேரளயாத்திரை 8.2.24 – 15.2.24).







கேரளமாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயம் என்ற ஊரில் இருந்து, 12 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. “கரன்” என்ற அசுரனால் நிறுவப்பட்டதே இந்த சிவலிங்கம். சந்திர பாஸ்கரன் என்ற பாண்டிய மன்னன், இந்த ஆலய சிவனைவழிபட்டு அவரின் துன்ப நீங்கியதாக உணர்கிறார்.  இதன் காரணமாக இந்த ஆலயத்தை புனரமைப்பு செய்கிறார்.

கோவில் அமைப்பு.

ஏட்டமானூரப்பன் மற்றும் மகாதேவர் என்று இறைவன் அழைக்கப்படுகிறார். அம்மனுக்கு தனி சன்னதியில்லாமல், கருவறைக்கு பின் பகுதியிலேயே அம்மன் வீற்றிருக்கிறார். கணபதி, சாஸ்தா, தட்சணாமூர்திக்கு தனி தனியாக சன்னதிகள் உள்ளன. உலோகம் மற்றும் கல்லினால் ஆன இரண்டு நந்திகள் உள்ளன.

அணையாதீபம்

450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் விளக்கு. இந்த விளக்கு சார்ந்து இங்கு கூறப்படும் கதை. முதியவர் ஒருவர் கையில் தூக்கு விளக்குடன் தரிசனத்திற்காக வந்தார். மிகுந்த பசி காரணமாக யாராவது இந்த விளக்கை பெற்று கொண்டு, பணம் அளிக்குமாறு கேட்கிறார். ஒருவரும் முன்வராத காரணத்தினால் சிவபெருமானேவந்து அந்த விளக்கை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இந்த முதியவர் ஏந்திய விளக்கே இத்தனை ஆண்டுகள் தொடந்து எரிவதாக ஒரு கதை உள்ளது. 

பொன்யானை 


ஒருஅரசர் பாலா மரத்தினால்ஆன யானை செய்து இந்த கோவிலுக்கு அர்பணித்துள்ளார். மற்றொரு அரசர், அந்த யானைகளுக்கு, 13 கிலோ தங்கத்தினால் தகடு (கவசம்) செய்துள்ளார். “ஆறாட்டுவிழா” காலத்தில் இந்த யானையின் மீது இறைவன் அலங்கரித்து உலாவருகிறார்.

கைலாயவலம்  

வைக்கம், எட்டமானூர் (ஏற்றுமானூர்), கடுந்துருத்தி (காடாந்தேத்தி) இந்த மூன்று சிவன் கோவிலையும், உச்சி பூஜைக்கு முன் தரிசனம் செய்தால், கைலாயத்தை வலம் வந்த பலன் உண்டாகும் என்று எங்களின் Tour Guide தெரிவித்தார். நாங்கள் 2019 ஆம் ஆண்டும் இந்த மூன்று கோவிலையும் தரிசித்து, பேறுபெற்றோம்.


திருப்பாற்கடல்

 திருப்பாற்கடல் (தரிசனநாள்-3.2.2024)






அமைவிடம்.





சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில், காவேரிபாக்கம் என்ற இடத்தில் இருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

புராணவரலாறு.

புண்டரீக மகரிஷி என்பவர், யாத்திரை செல்லும் நேரத்தில் இறைவழிபாட்டிற்காக இந்த திருபாற்கடலில் உள்ள கோவிலுக்கு, செல்கிறார்  சிவபெருமானை பார்த்தவுடன், உடனே திரும்பிவிடுகிறார். இதைகண்ட ஒருமுதியவர் ஏன்  திரும்பிவிட்டீரகள்? என்று கேட்டவுடன், பெருமாள் கோவில் எங்குள்ளது என்று எதிர் கேள்வி கேட்கிறார்.. உடனே அந்த முதியவர், உள்ளே வந்து நன்றாக பாருங்கள், பிரசன்ன வேங்கடேசர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்று கூறுகிறார்.   ஆவுடையார்மீது நின்ற கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். “ஹரியும், சிவனும் ஒன்று” என்பதை அறிவிப்பதே இக்கோவிலின் புராணம். இக்கோவிலில் சொர்கவாசல் என்று தனி வாசல் இல்லாமல் வைகுண்ட ஏகாதசி அன்றும் இந்த மூலவரையே தரிசனம் செய்கிறோம். இதனால் நித்திய சொர்கவாசல்  என்று முலவர் சன்னதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.






அத்தி ரெங்கநாதர் 

இரட்டை கோவில் போன்று இந்த ரெங்கநாதர் கோவில், பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. கிடந்த கோல பெருமாளையும் தரிசிக்க முடிகிறது. 

திருப்பாற்கடல் என்ற பெயர் கொண்டுள்ளதால், “107-வது திவ்ய தேசமான திருப்பாற்கடல்” என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. 106 திவ்யதேசங்களையும் மனித உடல்கொண்டு தரிசிக்கமுடியும். திருப்பாற்கடலும், வைகுண்டமும் இவ்வுலகியியல் வாழ்கை முடிந்தபிறகு நம் உயர்வான செயலே, வைகுண்ட பதவியடைய செய்யும் என்பதும் நமது நம்பிக்கை. 12 ஆழ்வார்களும் திருபாற்கடலைமங்களாசாசனம் (பாடியுள்ளனர்) செய்துள்ளனர்.   







 


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...