மங்களுர் விநாயகர்கள் தரிசனநாள்-(20,21.1.2024)
சராவு விநாயகர்.
சுமார் 12 ஆம் நூற்றாண்டின் துளுவ அரசர் வீரபாகு என்பவரால் கட்டப்பட்டது. விநாயகர் கோவில் என்று பெயர் இருந்தாலும், மூலவர் சிவபெருமான்தான். பிராகாரத்தில் விநாயகர் சன்னதியுள்ளது. புலியை வேட்டையாட குறிவைத்த அம்பானது, பசுவை வதம் செய்தது, இதன் காரணமாக சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடமே இந்த சராவு விநாயகர் ஆலயம். மங்களுரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆனேகுட்டா விநாயகர்.
கும்பாசி என்ற இடத்தில் அமைந்துள்ளது. நல்ல இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. கர்நாடகா மாநில ஆன்மீக சுற்றுலாதலங்களில் ஒரு சிறந்த இடத்தை பிடித்துள்ள கோவிலாகும்.
இடுகுஞ்சி விநாயகர்.
கர்நாடகா மாநிலம் உத்ரகன்னடா மாவட்டம் இடுகுஞ்சி என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு ஒரு மில்லியன் பக்கர்கள் வரகூடிய கோவில் என்று கோவில் நிர்வாகம் கூறுகிறது. 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும்.
No comments:
Post a Comment