குட்ரோலி கோகர்ணாதேஷ்வர். (தரிசனநாள்-20.1.24)
மங்களுரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோவிலாகும். 1912 ஆம் ஆண்டு “அதிஷாஹோயகேபஜார்கோரப்பா” என்பவரால் கட்டப்பட்ட கோவிலாகும்.
இந்தியாவின் மேற்கு கடற்டகரை மற்றும் மேற்கு தொடச்சிமலை பகுதியில் வாழ்ந்த வில்லவர்(எ)பில்லவர் என்று அழைக்கப்பட்டவர்களே ஆரம்பகால சேர பேரரசை உருவாக்கியவர்கள். அவர்கள் சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்ட காரணத்தால் ஒரு கோவில்கட்டி வழிபட நினைத்;து உருவாக்கியதே இந்த ஆலயமாகும்.
கோவில் உருவாக காரணமாக இருந்த கோரப்பா என்பவர் “நாராயணகுரு” என்பவரை ஆன்மீக குருவாக கொண்டு, அவரின் வழிகாட்டுதல்படி இந்த கோவிலை அமைத்தார். 1912 ஆம் ஆண்டு நிலம் மற்றும் நிதியை கோரப்பா என்பவரே வழங்கினார். சிவலிங்கம் நாராயணகுரு என்பவரால் கொண்டுவரப்பட்டது.
1991-ல், 60 அடி கோபுரமும் கோவிலும் புதுபிக்கப்பட்டது. நாராயகுருவின் பளிங்கு சிலையும் நிறுவப்பட்டது. 2007-ல் ஹனுமானுக்கு தனி சன்னதியும், அதன் பிறகு சாய்பாபாவிற்கு தனிசன்னதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் மிகவும் ரம்யமாக உள்ளது. புகைப்படமும், கானொளியும் இதை பறைசாற்றும்.
No comments:
Post a Comment