தொலைவில்லிமங்களம். (இரட்டை திருப்பதி)

 தொலைவில்லிமங்களம். (இரட்டை திருப்பதி) (12.7.2023). 

அருகருகே அமைந்துள்ள இந்தயிரண்டு கோவில்களும் திவ்யதேசமாகவும், நவதிருப்பதிகளில் ஒன்றாகவும், நவகிரகங்களில் ராகு, கேது ஸ்தலமாகவும் உள்ளது.

அரவிந்தலோசனர்.


சுப்ரபர் என்ற முனிவர் தாமரை மலர்களை குளத்திலிருந்து கொண்டுவந்து இறைவனுக்கு சமர்பிப்பதை கைங்கர்யமாக கொண்டுள்ளார். விஷ்ணு இவரை பின் தொடந்து வருவதை பக்தியால் உணர்ந்த முனிவர், அரவிந்தலோசன் (தாமரைக்கண்ணன்) என்ற பெயரில் இங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு வேண்டுகிறார். 

தேவர்பிரான் திருக்கோவில்.


மற்றொரு கோவில் பெருமாள், தேவர் பிரான் என்றும் ஸ்ரீநிவாசன் என்றும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தலவரலாறு.

சுப்ரபர் என்ற முனிவர் யாகம் செய்வதற்காக பூமியை உழும் நேரத்தில், தராசும் வில்லும் கிடைக்கிறது. முனிவர் கைபட்டவுடன் சாபவிமோசனம் பெற்று ஆணாகவும் பெண்னாகவும் மாறுகின்றனர். துலா என்றால், தராசு என்று பொருள், இதன் காரணமாகவே இந்த இடம் “துலாவில்மங்களம்” என்ற பெயர் பெற்றது.,

“துவளில் மாமணி மாடம் ஓங்கு தொல்வில்லி மங்கலம் தொழும்

இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசைஇல்லi விடுமினோ

துவள ஊஞ்சங்கு சக்கரம் என்றும் தாமரை தடங்கண் என்றும்

குவளை உண் மலர் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுருமே.”

நம்மாழ்வார் (திருவாய்மொழி)

1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், இடிந்து விழும் அபாயத்திறக்கு உட்பட்டு, பெருமானின் பாதம் வரை, வெள்ளம் பெருக்கெடுத்தது. பின் புனரமைப்பு செய்யப்பட்டது.

“சிந்தையாளும்  சொல்லாலும் செய்கினாலும் தேவபிரானையே

தந்தை தாய் என்றடைந்து வணி குரு கூருவர் சடகோபன் சொல்

முந்தை ஆயிரமள்ளி இவை தொலைமங்கலத்தைச் சொன்ன

செந்தழிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே”

(நம்மாழ்வார் திருவாய்மொழி).


தென்திருப்பேரை (மகரநெடுங்குழைக்காதர்).

 தென்திருப்பேரை (மகரநெடுங்குழைக்காதர்). 12.7.2023


திவ்யதேசங்களில் ஒன்று, நவதிருப்பதிகளில் 7வது ஸ்தலம், நவகிரகங்களில் சுக்ரன் ஸ்தலம்.

மகரநெடுங்குழைநாதர், நிகரில் முகில் வண்ணன். திருப்பேரை நாச்சியார், குழைக்காது நாச்சியார். என்ற பெயர்களில் நமக்கு அருள்பாலிக்கின்றனர். தேவியர் இருவரும், பிருகு முனிவர் மற்றும் மார்கண்டேயர் இவர்களும் பெருமாளுக்கு இருமருங்கிலும் உள்ளனர்.


கருடன் சன்னதி.

வேதசப்தம், விழாக்கள், குழந்தைகளின் விளையாட்டு இவற்றை நம்பெருமான் கண்டுகளிப்தற்காக கருடன் சற்று விலகியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.


ஸ்தலபுராணம்.

பூமாதேவியடமே பார்கடல் வாசன் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாக மிக மனம் வருந்தி துர்வாச முனிவரிடம் தன் மன வேதனையை பகிர்கிறார் ஸ்ரீதேவி தாயார். இதை தெரிவிக்க வைகுண்ட வாசனிடம் சென்ற போது, பூதேவி நாச்சியார் துர்வாச முனிவரை மதியாத காரணத்தால முனிவர் சாபமிடுகிறார். இந்த தல பெருமானை வழிபட்டு, தாமிரபரணியாற்றில் நீராடி, பங்குனிஉத்திரம் அன்று தாமிரபரணியாற்றில் கிடைத்த மீன்வடிவ பொன் குண்டலத்தை பெருமாளுக்கு அணிவித்து சாபவிமோசனம் பெற்றார் என்பது இத்தல வரலாறு. 


நீர்முகில் வண்ணன்.

வருணன் சாபம் நீங்கிய இடம், நீர் தட்டுப்பாட்டை தீர்கவல்ல தெய்வம். இதன் காரணமாக நீர்முகில் வண்ணன் என்ற பெயரும் பெருமானுக்கு வந்தது.


திருக்கோளுர். (ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்)

 திருக்கோளுர்.  (ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்) (திவ்யதேசங்களில் ஒன்று, நவதிருப்பதிகளில் செவ்வாய் ஸ்தலம்).12.7.2023.


ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் சயனகோலம், இடதுகையை பார்த்தப்படி சயனித்திருப்பார். நாம் கையில் Calculator  வைத்து பார்ப்பது போல், உள்ளங்கையில் கணக்கு வைத்து பார்கிறார்.  ஸ்ரீகுமுதவள்ளி தாயார், ஸ்ரீகோளுர்வள்ளி தாயார்.

மதுரகவியாழ்வார்.


மதுரகவியாழ்வார் அவதாரத்தலம். இவர் நம்மாழ்வாருக்கு முன் அவதரித்தவர். நம்மாழ்வாரை குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலத்திற்குப்பிறகும் வாழ்ந்தவர். பெருமானை போற்றிப்பாடாமல் ஆச்சாரியரான நம்மாழ்வாரை போற்றி பாசுரங்கள் எழுதியுள்ளார். மதுரமாக (இனிமையாக) பாசுரங்கள் பாடியமையால் இப்பெயர் பெற்றார்.

புராணக்கதை.


குபேரன் பார்வதிதேவியை தவறாக பார்த்தகாரணத்தால், தேவியின் சாபத்தை பெற்றான். குபேரனின் சம்பத்து (சொத்து)அனைத்தும் பறிபோயிற்று. நிதி, பெருமானிடம் சென்றமையால், வைத்தமாநிதிப் பொருமாள் என்ற பெயர் பெற்றார்.

திருக்கோளுர் பெண்பிள்ளை ரகசியம்


ராமானுஜர் இந்த ஸ்தலத்திற்கு வந்திருந்தபோது ஒரு பெண் இந்த ஊரை விட்டு குடி பெயருகிறார். ராமானுஜர் இதை பார்த்துவிட்டு, காரணம் கேட்கையில் தனக்கு இவ்வூரில் வாழத்தகுதியற்றவள் என்று கூறுகிறார். ராமானுஜர் காரணம் கேட்கையில் 81 காரணங்கள் கூறுகிறார்.

இந்த 81 வாக்கியங்களே பெண்பிள்ளை ரகசியம்.

உதாரணம்.

"அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியை போல."

"அவன் மேனியாளேனோ திருப்பானரை போல" 

என்பவை போன்ற 81 வாக்கியங்கள்.


(குறிப்பு—ராமாயணம், மகாபாரதம், பாகவதம் தசாவதாரம்,…. போன்ற வைகளை நன்கு படித்தவர்கள் மட்டுமே இந்த 81 சொற்றொடர்களை அறிந்து (புரிந்து) கொள்ளமுடியும். )

இந்த வாக்கியங்களை ராமானுஜர், பெருமானை பற்றிய இவ்வளவு செய்தகளை அறிந்து கொண்ட பெண்னே, நீயே இந்த ஊரில் வாழ தகுதியுடைவர். என்று, பாராட்டி இவர் கையால் உணவருந்துகிறார். 


ஆழ்வார் திருநகரி- என்ற- திருக்குருகூர்.

 ஆழ்வார் திருநகரி- என்ற- திருக்குருகூர்.


திவ்யதேசம் மற்றும் நவதிருப்திகளில் ஒன்று, நவகிரங்களில் குரு ஸ்தலம்.

பெயர்காரணம் - (திருக்குருகூர்)


“;ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம் பாடியாடிபணிந்து பல்படிகால் வழியேறிக் கண்டீர் கூடிவானவரேத்த நின்ற திருக்குரு கூரதனுள் ஆட்புட் கொடியாகி மூர்த்திக்கு அடிமை புகுவதே” (திருவாய்மொழி).

பிரும்மாவுக்கு குருவாக இருந்து அருள்புரிந்தமையால் திருக்குருகூர் என்ற பெயர் பெற்றது.

குருகன் என்ற அரசன் ஆட்சி புரிந்தமையால் குருகாபுரி என்ற பெயர் பெற்றது.

“குருகு” என்றால் “சங்கு” என்று பொருள். சங்குக்கு மோட்சம் கிடைத்தமையால் குருகூர் என்ற பெயர் பெற்றது. 

பெயர்காரணம். (ஆழ்வார் திருநகரி) 

நம்மாழ்வார் அவதாரத்திற்கு பிறகு அவர் மகிமை காரணமாக “ஆழ்வார் திருநகரி” என்ற சிறப்பு பெயர் பெற்றது.

நம்மாழ்வார் வரலாறு.


மாறன்காரி - உடையநங்கை என்ற தம்பதியினருக்கு, மகனாக அவதரித்தார். இந்த தம்பதியினர் திருக்குருகூர் ஆதிநாராயணபெருமானிடம் வரம் வேண்டினர். நானே மகனாக உங்களுக்கு அவதிரிப்பேன் என்று கனவில் கூறினார். கனவை பகிர்ந்த கொண்ட தம்பதியினர் பேரானந்தம் கொண்டனர். ஆனால் பிறந்த குழந்தை செயலற்று இருந்தது. இதை முறையிட ஆதிநாராயணிடம் சென்றனர். இந்த குழந்தை புளியமரப்பொந்தில் அமர்ந்து தியானிக்க தொடங்கியது.


( 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இந்த மரத்தை இன்றளவும் தரிசனம் செய்யமுடிகிறது.) 16 ஆண்டுகள் உணவு மற்றும் உறக்கம் இன்றி கழிந்தது.  ஆனால் உடல்  சீராக இருந்தது.

மதுரகவியாழ்வாருக்கு தெற்கில் ஒரு பேரொளி தோன்றியது, அதை பின்தொடர்ந்து வந்து திருக்குருங்குடி ஆதிநாராயணபெருமாள் கோவில் உள்ளே உள்ள புளியமரத்தடியில் உள்ள நம்மாழ்வாரிடம் வந்து அந்த ஒளி மறைந்தது. மதுரகவியாழ்வார் இவரே நமது குருநாதர் என்று அறிந்து கொண்டார். ஆழ்வார்களில் நம்மாழ்வாரே முதன்மையானவர். ஊன் உறக்கம் இன்றி இருப்பவரிடம், “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று  எங்கே கிடக்கும்? “என்று வினா எழுப்புகிறார் மதுரகவியாழ்வார்;. “அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று விடையளிக்கிறார் நம்மாழ்வார்.

ஞானம் பெற என்ன வழி என்பது கேள்வி. பக்தி மார்கத்தில் ஈடுபட்டு இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பது  நம்மாழிவார் பதில்.

நம்மாழ்வார் சிறப்பு.


4000 திவ்யபிரபந்தத்தில் 1200க்கு மேற்பட்ட பாசுரங்கள் (பாடல்கள்) பாடியவர்.

ஆழ்வார்களில் தலமையானவர்.

நான்கு வேதங்களை அடிப்படையாக கொண்டு, திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம். என்று நான்கு தலைப்புகளில் பாசுரங்கள் வழங்கியுள்ளார்.

ஏனைய ஆழ்வார்கள், பல பெருமாள் கோவில்களுக்கு சென்று பாடல்கள் பாடினர். ஆனால் நம்மாழ்வார் பாடலை கேட்க இறைவனே வந்ததாக கூறப்படுகிறது.

மாறன் சடகோபன், பராங்குசன் என்ற பெயர்களையும் உடையவர்.

கோவில் சிறப்புகள்.

5000 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள புளியமரம்.

ஊற்சவ சேவைக்காக யாழிகள் செதுக்கி உருவாக்கிய தூண்கள் கொண்ட மண்டபம்.

நம்மாழ்வாரின் பூதஉடலுக்கு மேல் கட்டப்பட்ட நம்மாழ்வார் சன்னதி.

 நவதிருப்பதிபெருமாளும் எழுந்தருளும் கருடசேவை. (ஆழ்வார் ஜென்மநட்சத்திரத்தில்) என்று பலசிறப்புகளை உள்ளடக்கிய ஷேத்ரம் ஆழ்வார் திருநகரி.;

 


ஸ்ரீவைகுண்டம். (திவ்யஷேத்ரம், நவதிருப்பதிகளுள் ஒன்று),

 ஸ்ரீவைகுண்டம். (திவ்யஷேத்ரம், நவதிருப்பதிகளுள் ஒன்று), (தரிசனநாள்-12.7.2023).


அமைவிடம்.

திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

வரலாறு.


கோமுகாசுரன்  படைப்பின் ரகசியத்தை பிரம்மாவிடம் இருந்து அபகரித்துவிடுகிறான். பூலோகத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீவைகுண்ட பெருமாளை வணங்கி, தவம் இருந்து மீண்டும் பிறப்பின் ரகசியங்களை பெறுகிறார் பிரும்மா என்பது இத்தல வரலாறு. 

மற்றொரு வரலாறு.


காலாதூஷகன் என்ற கள்வன், பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருக்கிறான். நாட்டு அரசனிடமே இந்த கள்வன் கொள்ளை அடித்து, பிடி படும் நேரத்தில் பெருமாளிடம் சரண்அடைகிறான். அரசன் கோவிலில் திருடன் இருப்பதை அறிந்து, அங்கு செல்கிறான். ஸ்ரீவைகுண்டநாதர் அரசனுக்கு தர்மத்தை எடுத்து கூறி பொருளை ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் பொருள் உதவுதலையும் போதிக்கிறார், என்கிறது மற்றொரு வரலாறு. 

“புளியங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து, ஸ்ரீவைகுண்டம் நின்றார், காணக்கண்கோடி வேண்டும் கள்ளர்பிரான் சோரநாதரை”- நம்மாழ்வார் பாசுரம்.

நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் பீடத்தில் நின்று காட்சி தருகிறார். 

நவகிரகத்தில் இது சூரியன் தலமாக உள்ளது.


110 அடி உயர ராஜகோபுரம்.


வேங்கடமுடையான் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக உள்ளது. 


ஜெகன்நாதபெருமாள். திருமழிசை

 ஜெகன்நாதபெருமாள். திருமழிசை (தரிசனநாள்-18.6.2023)


திருவள்ளுர் மாவட்டம் திருமழிசையில் ஜெகன்நாதபெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார்திருமங்கைவல்லி. 


12 ஆழ்வர்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் பிறந்தவூராகும். திருமழிசை ஆழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இவர் அருளிய பிரபந்தங்கள் “திருச்சந்தவிருத்தம்” என்று அழைக்கப்படுகிறது. திருமழிசை ஆழ்வார் சுதர்சண சக்கரத்தின் அவதாரமாக கருதப்படுகிறார். 


ஒத்தாண்டேஸ்வரர் - திருமழிசை

 ஒத்தாண்டேஸ்வரர் - திருமழிசை. (18.6.2023)


திருவள்ளுர் மாவட்டத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.  திருமழிசை, பிரதான சாலையிலேயே உள்ள இந்த கோவில், 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஸ்ரீசீதளாம்பிகா சமேத மனோனுகூலேஸ்வர் என்ற பெயரிலும் ஈசன் அருள்பாலிக்கிறார்.

வரலாறு.


சோழ கரிகால பெருவளத்தான் என்ற மன்னன் அவ்வழியாக செல்லும் போது யானையின் கால் புதருக்குள் சிக்கியது. வாளால் புதரை வெட்டும் போது ரத்தம் பீறிட்டது, கொடியை விலக்கிவிட்டு பார்க்கும் போது சிவலிங்கம் காணப்பட்டது. இறைவனுக்கு பாவம் இழைத்துவிட்டோம் என்று அரசன் வருந்தி தனது வலக்கையை வெட்டிக் கொண்டான். ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் காட்சி கொடுத்து, மீண்டும் கை கொடுத்தார் என்பது வரலாறு. இதனால் “கைதந்தபிரான்” என்றும் அழைக்கப்படுகிறார். 

சிறப்பு.


மூலஸ்தானம் லிங்கத்திற்க்கு பின் பகுதியில் ஈசனும் அம்பிகையும் திருமணகோலத்தில் காட்சியளிக்கின்றனர்.

நடராஜரும் அம்பாளும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் உள்ளனர். 

என்னுடைய பார்வை.


 திருமழிசையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமுல்லைவாசல், மாசிலாமணீஸ்வரர் வரலாறுடன், இந்த ஒத்தாண்டேஸ்வரர் வரலாறு, ஒத்து இருக்கிறது.



சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...