ஸ்ரீநாத் துவாரகா என்ற நத்துவாரா.

 ஸ்ரீநாத் துவாரகா என்ற நத்துவாரா. (தரிசன நாள் 15.7.2022)


ஸ்ரீநாத் என்ற இந்த கிருஷ்ணர் கோவில் பஞ்சதுவாரகையில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 5 முறை 5 வகையான அலங்காரத்துடன் மக்களுக்கு தரிசனம் தருகிறார் பால கிருஷ்ணர். ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் என்ற இடத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது நத்துவாரா என்ற இடம். நாங்கள காலை 7.15 மணிக்கு நடை பெறும் முதல் தரிசனத்திற்கு சென்று இறைவனை வழிப்பட்டோம். அதனால் குறைந்த எண்ணிக்கை கொண்ட பக்தர்களிடையே எங்களால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. இரவு 7 மணி தரிசனம் சமயம் கூட்டம் அலைமோதுமாம். இந்த நேரத்தில் பகவானுக்கு ஆரத்தி எடுக்கும் நேரம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.


17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். பிருந்தாவனத்தில் இருந்து ஆக்ராவுக்கு இக்கோவிலை மாற்ற உத்திரவிட்டாராம் ஓளரங்கசீப். செல்லும் வழியில் தங்கிவிட்டாராம் பால கிருஷ்ணர்  என்று வரலாறு கூறுகிறது. 

துவாரகதீஸ்வரர்.


நத்துவாராவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான கிருஷ்ணர் கோவில். மிகவும் சிறிய உருவில் எளிமையாகவே தரிசனம் தந்தார் கிருஷ்ணர். கோவில் உட் பகுதியில் அமைந்த Rajsamand ஏரி மிகுந்த எழிலுடன் காணப்பட்டது.   

Rajsamand Lake view.


 



2024 ஏப்ரல் மாதம் நாங்கள் பஞ்சதுவாரகா சுயமாக செல்ல திட்டமிட்டோம் அப்பொழுது தான் ஒன்பது துவாரகா தலங்கள் உள்ளதை அறிந்தோம்.
1.கோமதி துவாரகா.
2.ருக்மணிதுவாரகா.
3.பேட்துவாரகா 
4.மூலதுவாரகா.
5.சுதாமா துவாரகா
6. நாத்துவாரா துவாரகா.
7. கன்க்ரோலி துவாரகா.
8. பிரவாஸ் தீர்தம்.
9. டகோரே துவாரகா, 
 இதில் இந்த நத்வாரா, துவாரகா தலங்களில் ஒன்று என்று முன்பே அறிந்திருந்தேன். ஆனால் தர்சமயம் தான், இந்த துவாரகதீஸ்வரரும் துவாரகை கோவில் ஒன்று என்பதை அறிந்கோண்டேன். இந்த கோவில் தரிசனமே சுவாரஸ்யமான ஒன்று. நாங்கள் உதய்பூரில் (ஜுலை 2022) எங்களின் மகள் வீட்டில் இருந்து மிக அருகில் இருந்ததால் தனியாவே பொதுவாகனத்தில் பயணித்து சென்றோம், எங்களின் தரிசனம் காலை 10 மணிக்குள் முடிந்து விட்டதால் எங்களுக்கு கிடைத்த நேரத்தை பயண்படுத்தி, கோவிலிலேயே கூகுள் உதவியுடன் அருகில் இருக்கும் கோவில் என்று தேடி இங்கு சென்றோம். ஹிந்தி மொழி அதிகம் தெரியாததால் எங்களால் அதிகமான தகவல்களை அறியமுடியவில்லை. தற்சமயம் துவாரகை கோவிலில் ஒன்று என்பதை அறிந்து மகிழ்சியடைகிறோம். “ராதே கிருஷ்ணா” . துவாரகா திருத்தலங்கள் தரிசனம் செய்யாமலேயே சொந்த வேலைகாரணமாக சென்னை திரும்பினோம். விரைவில் சரிசனம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...