Mount Abu. (மவுண்ட் அபு.)

  Mount Abu. (மவுண்ட் அபு.) (பார்வையுற்றநாள்-17,18.7.2022).

ராஜஸ்தான் மாநிலத்தின் மலைபகுதி மற்றும் கோடைவாசஸ்தலம் தான் "மவுண்ட் அபு" என்ற ஊர். குஜராத் மற்றம் ராஜஸ்தான் மாநில மக்கள் அவர்களின் கோடை நாட்களில் இங்கு வருகின்றனர்.

நக்கி லேக். (Nakki Lake).


மலையின் மைய பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி. படகு சவாரி மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது.

டோட் ராக்.(Toad Rock).


This Photo Source from google.

இந்த பாறை காட்சியை அனைத்து மக்களும் விரும்பி பார்க்கும் இடமாக உள்ளது. காட்டு விலங்குகள் பற்றிய படங்களிலும், குழந்தைகள் வரையும் படங்களிலும் (இந்த பாறை காட்சியை தான் பயன் படுத்துகின்றனர். சிங்கம் நிற்கும் காட்சியை நான் கற்பனை என்றே நினைத்து இருந்தேன். இந்த பாறை அமைப்பு உள்ள இடம் மவுண்ட் அபு. புகைபடத்தை பார்தால் உங்களுக்கும் புரியும். 

பிரும்ம குமாரிகளின் ஆன்மீக பல்கலைகழகம். ( Peace Spiritual University).




பிரும்ம குமாரிகள் ஆன்மீக அமைப்பு தமிழ்நாட்டிலும் பல ஊர்களில் உள்ளது. உலக அளவிலான அரசு சாரா, ஆன்மீக பல்கலைகழகம். இந்த  பல்கலைகழகம் 1930-ல், தாதா லேக்ராஜ் கிருபாலனி என்பவரால் உருவாக்கப்பட்டது. 1000 கணக்கான மனிதர்கள் அமரும் வண்ணம் பெரிய கூடம் அமைத்திருந்தனர். நாம் விரும்பினால் ஆன்மீக விளக்கஉரை கேட்கலாம். பேராசிரியர்கள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் விளக்கம் அளிக்கின்றனர். 

ரகுநாத் ஆலையம்.




ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோவில்.

ஆதார் தேவி கோவில்.



ஆரவல்லி மலையில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவில். 500 மேற்பட்ட படிகளை கொண்டது. சக்தி பீடங்களில் ஒன்று.

அச்சலேஸ்வர் மகாதேவ் கோவில். 


சிவபெருமானின் கால் அச்சு பதித்த இடத்தை சுற்றி கட்டப்பட்து என்ற நம்பிக்கை உள்ளது. சிவலிங்கமானது காலையில் சிவப்பு நிறத்திலும், மதியம் குங்குமபூ நிறத்திலும், மாலை வெண்மையாகவும் காட்சி அளிக்கிறது.

தில்வாரா கோவில்  (Dilwara Temple).


 மவுண்ட் அபுவில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. 11ஆம் நூற்றாண்டுக்கும் 13ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. இது ஒரு சமண மத கோவிலாகும். Marble கட்டிட கலையாகும். கதவு, தூன், உத்திரம் போன்ற வற்றில் மிகவும் நுனுக்கமான வடிவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமண மதத்தினருக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும். பிற மதத்தினருக்கு மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கான நேரமாகும். 










UDAIPUR FLIGHT JOURNEY.



உதய்பூர் ஒருநாள் பயணம்.

 உதய்பூர் ஒருநாள் பயணம். (பணயன நாள் 21.7.2022).

நகர அரண்மனை. (City Palace).


ராஜஸ்தான் மாநிலத்தில் பல அரண்மனைகள் உள்ளன. உதய்பூர் அரண்மனை, பிச்சோலா என்ற ஏரியின் கரையில் அமைந்துள்ள, கட்டிட கலைக்கு முத்தாய்பாய் அமைந்த அரண்மனையில் ஒன்றாகும். 1559-ல் மகா ரானா உதைசிங் என்ற அரசர் இந்த அரண்மனையை கட்டி வசித்து உதய்பூரை ஆட்சி செய்து வந்தார். முற்றம், கூடாரம், தாழ்வாரம், மொட்டைமாடி என்று அனைத்தும் அடங்கியவாறு கட்டியுள்ளனர். ஆரண்மனையின் பல பகுதிகள் தனியார், நட்சத்திர ஹோட்டல்களாக இயங்கி வருகின்றன.



பிச்சோலா ஏரி. (Picholo Lake)


1362 ல் பிச்சோலி என்ற கிராமத்திற்கு அருகில், சுத்தமான தூய்மையான தண்ணீர் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் காரணமாகவே பிச்சோலா  ஏரி என்ற பெயர் பெற்றது. இதை தொடர்ந்து பல ஏரிகள் உருவாகியதன் காரணமாக ஏரிகள் நகரம் என்ற பெயரை உதய்பூர் பெற்றது. 

கர்னிமாதா கோவில். (Karnimath Temple)


ஏரிக்கு மிக அருகிலேயே உள்ளது, இந்த கோவில், Winch  மூலமாகதான் செல்ல வேண்டும். ராஜகுலத்தவர்களும், மன்னர்களும் போருக்கு செல்லும் போதும், முக்கிய செயல்கள், முடிவுகள் எடுக்கும் முன்பு இந்த அம்மனை வழிசெய்த பிறகுதான் செயலை தொடங்குவார்களாம். தற்பொழுதும் ராணுவவீரர்கள் அவர்களின் வெற்றிக்கும், பாதுகாப்புக்கும் இந்த மாதாவை வணங்குகின்றனர்.



Bagore ki Haveli.


 அரண்மனை போன்ற ஒரு கட்டிடம். உதய்பூர் Gangaur Ghat Marg  என்ற இடத்தின் அருகில் உள்ளது. கண்ணாடி வேலைப்பாட்டுடனும், 100 மேற்பட்ட அறைகளையும் கொண்ட இந்த இடம் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுவற்றில் வண்ண ஓவியங்களும், பழமையான பொருட்களும் அதன் சிறப்புகளை எடுத்து கூறும் படங்களும், செயற்கையாக உருவாக்கப்பட்ட உருவங்களை கொண்டு காட்சி படுத்தப்பட்ட ஒரு அருங்காட்சியகம். 

Ganguar Ghat Marg.



 


















ஸ்ரீநாத் துவாரகா என்ற நத்துவாரா.

 ஸ்ரீநாத் துவாரகா என்ற நத்துவாரா. (தரிசன நாள் 15.7.2022)


ஸ்ரீநாத் என்ற இந்த கிருஷ்ணர் கோவில் பஞ்சதுவாரகையில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 5 முறை 5 வகையான அலங்காரத்துடன் மக்களுக்கு தரிசனம் தருகிறார் பால கிருஷ்ணர். ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் என்ற இடத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது நத்துவாரா என்ற இடம். நாங்கள காலை 7.15 மணிக்கு நடை பெறும் முதல் தரிசனத்திற்கு சென்று இறைவனை வழிப்பட்டோம். அதனால் குறைந்த எண்ணிக்கை கொண்ட பக்தர்களிடையே எங்களால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. இரவு 7 மணி தரிசனம் சமயம் கூட்டம் அலைமோதுமாம். இந்த நேரத்தில் பகவானுக்கு ஆரத்தி எடுக்கும் நேரம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.


17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். பிருந்தாவனத்தில் இருந்து ஆக்ராவுக்கு இக்கோவிலை மாற்ற உத்திரவிட்டாராம் ஓளரங்கசீப். செல்லும் வழியில் தங்கிவிட்டாராம் பால கிருஷ்ணர்  என்று வரலாறு கூறுகிறது. 

துவாரகதீஸ்வரர்.


நத்துவாராவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான கிருஷ்ணர் கோவில். மிகவும் சிறிய உருவில் எளிமையாகவே தரிசனம் தந்தார் கிருஷ்ணர். கோவில் உட் பகுதியில் அமைந்த Rajsamand ஏரி மிகுந்த எழிலுடன் காணப்பட்டது.   

Rajsamand Lake view.


 



2024 ஏப்ரல் மாதம் நாங்கள் பஞ்சதுவாரகா சுயமாக செல்ல திட்டமிட்டோம் அப்பொழுது தான் ஒன்பது துவாரகா தலங்கள் உள்ளதை அறிந்தோம்.
1.கோமதி துவாரகா.
2.ருக்மணிதுவாரகா.
3.பேட்துவாரகா 
4.மூலதுவாரகா.
5.சுதாமா துவாரகா
6. நாத்துவாரா துவாரகா.
7. கன்க்ரோலி துவாரகா.
8. பிரவாஸ் தீர்தம்.
9. டகோரே துவாரகா, 
 இதில் இந்த நத்வாரா, துவாரகா தலங்களில் ஒன்று என்று முன்பே அறிந்திருந்தேன். ஆனால் தர்சமயம் தான், இந்த துவாரகதீஸ்வரரும் துவாரகை கோவில் ஒன்று என்பதை அறிந்கோண்டேன். இந்த கோவில் தரிசனமே சுவாரஸ்யமான ஒன்று. நாங்கள் உதய்பூரில் (ஜுலை 2022) எங்களின் மகள் வீட்டில் இருந்து மிக அருகில் இருந்ததால் தனியாவே பொதுவாகனத்தில் பயணித்து சென்றோம், எங்களின் தரிசனம் காலை 10 மணிக்குள் முடிந்து விட்டதால் எங்களுக்கு கிடைத்த நேரத்தை பயண்படுத்தி, கோவிலிலேயே கூகுள் உதவியுடன் அருகில் இருக்கும் கோவில் என்று தேடி இங்கு சென்றோம். ஹிந்தி மொழி அதிகம் தெரியாததால் எங்களால் அதிகமான தகவல்களை அறியமுடியவில்லை. தற்சமயம் துவாரகை கோவிலில் ஒன்று என்பதை அறிந்து மகிழ்சியடைகிறோம். “ராதே கிருஷ்ணா” . துவாரகா திருத்தலங்கள் தரிசனம் செய்யாமலேயே சொந்த வேலைகாரணமாக சென்னை திரும்பினோம். விரைவில் சரிசனம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

ஜெய்பூர் சுற்றுப்பயணம் நாள்-2.

 ஜெய்பூர் சுற்றுப்பயணம் நாள்-2.

ஹவாமகால். ( Hawa Mahal)


1799 ஆம் ஆண்டு, சவாய் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்டது. ஹவாய் மகால் என்றால், தென்றல் வீசும் அரண்மனை என்று பெயர். 953 ஜன்னல்கள் கொண்டது. இதன் காரணமாகவே இந்த பெயர் பெற்றது. லால் சந்த் உஸ்தா என்பவர், இறைவன் “கிருஷ்ணரின் கீரிடம்” போன்று வடிவமைத்துள்ளார்.  அரண்மனை பெண்கள், நகரை பார்வையிடவே, கட்டப்பட்ட இந்த கட்டிடம்,
ஜெய்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 

ஜந்தர்-மந்தர். (நேரத்தை கணக்கிடும் கருவி உள்ள இடம்).

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் இரண்டாம் சவாய் சிங் என்ற மன்னரால் கட்டப்பட்ட, 19 வகையான வானியல் (Astronomy Instrument)  கருவிகள் உள்ள இடம். பலவகையான எந்திரங்களை பயன்படுத்தி  நேரத்தை கணக்கிட்டனர். காபாலி என்ற இயந்திரம், U.K. யில் உள்ள கிரீன்வீச் நேரத்தையும், ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச்நோட்கே, நேரத்தையும் ஒத்துள்ளதாம். 1948-ல் நமது தேசத்தின் நினைவச்சின்னமாகவும், 1968 முதல் ராஜஸ்தான் மாநிலத்தின், சின்னமாகவும் (Emblem) அறிவிக்கப்பட்டது.

ஆல்பர்ட் அருங்காட்சியகம். (Albert Hall Museum).



சமுவேல் ஜேகப் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1887-ல் அருங்காட்சியமாக திறக்கப்பட்டது. கார்பட்,  சிலை ,யானை தந்ததத்தில் உருவாக்கப்பட்ட, நகை மற்றம் கதவுகள், போர் கருவிகள், நூற்றாண்டுகளுக்கு முன் பயன் படுத்திய பொருட்கள் என்று ஒரு அருங்காட்சியத்தில் உள்ளது  போன்று வழக்கம் போல் இருந்தது. எகிப்திய மம்மி ஒன்று இருந்தது மட்டுமே சிறப்பு. 2011 மார்ச் மாதம் மம்மியை எடுத்த ஒரு எக்ஸ்ரே- படத்தை உங்களுடன் பகிர்கிறேன்.  


அக்சரதாம் கோவில். (ஜெய்பூர் கோவில்).

 அக்சரதாம் கோவில். (ஜெய்பூர் கோவில்).


ஜெய்பூர் சுற்றுபயணத்தின் போது நாங்கள் இந்த கோவிலுக்கு சென்றோம். “சுவாமி நாராயணன் இயக்கம்” பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே இந்த Blog எழுத காரணமாயிற்று. 

சுவாமி நாராயணா இயக்கம் என்றால் என்ன?

இராமானுஜரின் விசிட்டா துவைதத்தை அடிப்படையாக கொண்டு, இந்து மதத்தின் வைஷ்ணவ சம்பிரதாயத்தை, பின்பற்றி இயங்கும், இயக்கமே, சுவாமி நாராயணா இயக்கம். 

சுவாமி நாராயணன் என்பவர் யார்?

உத்திரபிரதேச மாநிலத்தில், 1781 ஆம் ஆண்டு பிறந்தார். கண்சியாம் பாண்டே என்பது இவரது இயற்பெயர். 11வது வயதில் இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கு 7 ஆண்டுகள் யாத்திரை மேற்கொண்டார்.  இவரின் குரு இவருக்கு “உத்தவ் சம்பிரதாயத்தை” கற்பித்து சுவாமி நாராயணன் என்றும் பெயரிட்டார்.  இவ்வழி


வந்தவர்கள் உருவாக்கிய கோவில்களே அக்சரதாம் கோவில்கள்.

அக்சரதாம் கோவில்கள் உள்ள இடங்கள்.

ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இந்தியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்தியாவில் டெல்லி அக்சரதாம் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இணையதளத்திற்க்கு சென்று இக்கோவிலை காணுங்கள். பிரமிப்பூட்டும்! 2002 ஆண்டு செப்டெம்பர் மாதம் பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகளின்,. தாக்குதலுக்குள்ளாகியது குறிப்பிடதக்கது. நான் செப்டம்பர் இறுதிவாரம் டெல்லிக்கு பயணிக்கிறேன். இக்கோவிலை நேரடியாக சென்று  வழிபட்டபின், இக்கோவில் கட்டிட கலை  சிறப்புகளை உங்களிடம் பகிர்கிறேன்.



ஜெய்பூர். சுற்றுப்பயணம். நாள்- 1

 ஜெய்பூர். சுற்றுப்பயணம். நாள்- 1   


ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்பூர் ஒரு சிறந்த சுற்றுலா இடமாகஉள்ளது. (பயணநாள் 10.7.2022). 

அமெர் கோட்டை. (Amer Fort).

அமெர் கோட்டை, இது ஆம்பெர் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. ஜெய்பூர் நகரில் இருந்து 11 கி.மீ தொலைவில், ஆமெர் என்ற இடத்தில், ஆரவல்லி மலை தொடரில் கட்டப்பட்ட கோட்டை மற்றும் அரண்மனையாகும். பளிங்கு மற்றம் மணற்கற்களால் கட்டப்பட்ட அந்த கோட்டை, 


1.பொது மக்கள் கூடும் மாளிகை,

2.அரண்மனை குடும்பத்தினர் கூடும் மாளிகை,

3.ஜெய் மாதா கோவில்,

4.கண்ணாடி மாளிகை.

5.செயற்கை நீரூற்று,   என்று வகை படுத்தி கட்டப்பட்டுள்ளது. இராஜபுத்திர குல மன்னர்கள் குடும்பத்தினரின் வாழ்விடமாக விளங்கியது. 1550 முதல் 1674 வரை முதலாம் மாசிஸ் என்ற ராஜபுத்திரரால் ஆளப்பட்டது. அவர்களின் தலைநகரமாகவும் விளங்கியது. 2013 முதல் UNESCO  Heritage _   ஆக அறிவிக்கப்பட்டது.

ஜெய்கார்க் கோட்டை. (Jaigarh Fort)


இரண்டாம் சவாய் ஜெய்சிங், போர் வெற்றி சின்னமாக 1726-ல் கட்டப்பட்டது. வடக்கு தெற்கில் 3 கி.மீ. நீளமும் கிழக்க மேற்கில் 1 கி.மீ. நீளம் கொண்டதாக உள்ளது. 

இக்கோட்டையில் உள்ள பீரங்கி உலகில் உள்ள பீரங்கிகளில், பெரிய பீரங்கிகளில் ஒன்றாகும். லெஷ்மி, லலிதா, ராமர், காலபைரவர் கோவில்களும், அருங்காட்சியகமும் உள்ளது. 

நாகர்கர் கோட்டை. (Nahargark Fort).

நாகர்சிங் பொமியா என்ற மன்னர் பெயரால் கட்டப்பட்ட கோட்டை. 1857 சிப்பாய் கலகத்தின் போது ஆங்கிலேயர் குடும்பத்தினர், அவர்களை பாதுகாத்துக்கொள்ள இங்கு தங்கினராம்.  போக்கவரத்து நெரிசல் காரணமா நாங்கள் இந்த கோட்டையை சுற்றி பார்க இயலவில்லை. இந்த மூன்று கோட்டைகளும் ஆரவல்லி மலைதொடரிலேயே அமைந்துள்ளன.

ஜல்மகல். (Jal Mahal).


மேன் சாகர் ஏரியின் நடுவில் கட்டப்பட்ட அரண்மனை. 1699 கட்டப்பட்டு, இரண்டாம் ஜெய்சிங் மன்னரால் புதுபிக்ப்பட்டது. நீர்நிலை சரியான பராமரிப்பின்மை காரணமாக நீர்வரத்து குறைந்துவிட்டதாம். 5 அடுக்கு அரண்மனை மழை காலத்தில் நான்கு அடுக்கு மூழ்கிவிடுமாம். தற்பொழுதும் ஏரி அசுத்தமாகவே காணப்பட்டது. தற்பொழுது,  சுகாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, இங்கு பல ஆண்டுகாலமாக வாழும் எங்களின் உறவினர் தெரிவித்தார்.


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...