பாபநாசம் _நவகைலாயத்தின் முதல்கோவில் (1 min read)

 பாபநாசம் நவகைலாயத்தின் முதல்கோவில் (தரிசனநாள்-5.6.2022)


உலகம்மை உடனுறை பாபநாசநாதர் கோவில். (சூரியன் தலம்) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலும் பாபநாசம் என்ற பெயருடன் அமைந்த ராமரின் பாபங்களை (மனிதபிறவி பாவம்) தீர்த்த பாலைவனநாதர் கோவில் உள்ளது. 

ஊர் சிறப்பு.


பாபநாசநாதர் கோவில், எதிரில் தாமிரபரணியாறு, மலைக்கு சென்றால். வனம் (காடு), அருவி,  களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அகத்தியர் கோவில், சொரிமுத்துய்யனார் கோவில், எதிரேகண்கவர் ஆறு,  அணை, என்று இயற்கை எழிலும், பொழுதுபோக்கு பூங்கா,  இதன்வழியாகத்தான், புகழ்பெற்ற மாஞ்சோலை, குதிரை வெட்டி செல்லவேண்டும். இவ்வளவு சிறப்பு, சுற்றிப்பார்க்க ஒருநாள் போதுமானதாக இருக்காது.

ஆலைய வரலாறு.


கைலாயமலையில் நடைபெற்ற சிவபார்வதி திருமணத்தை காணமுடியாத அகத்தியர் இறைவனை வேண்ட, இறைவன் அகத்தியருக்கும் அவர் மனைவி லோபமுத்திரைக்கும் திருமணகோலத்துடன் காட்சி அளித்த இடம்.

கோவில் அமைப்பு.

7நிலை ராஜகோபுரம்,கருங்கல் சுற்றுச்சுவர். உலகம்மை மேற்கு நோக்யுள்ளாள். கருவறை சுற்றி விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, நவ கிரகம், துர்கை உள்ளனர். நடராஜர் ஆனந்ததாண்டவ கோலத்தில் உள்ளார். காலம் சரியாக கணக்கிட முடியவிலை என்று கூறப்படுகிறது. வீரப்பநாயகரால் (கி;பி; 1609 முதல் 1623) யாகசாலை, கொடிமரம், நடராஜமண்டபம், கட்டப்பட்டது.   இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

மலை பகுதி.


நாங்கள் ஜுன் மாதம் சென்றதால் வறட்சியாக காணப்பட்டது. 







நவகைலாயம் சேரன்மகாதேவி. (இரண்டாவது தலம்-தரிசனநாள்-5.6.2022)

நவகைலாயம் சேரன்மகாதேவி. (இரண்டாவது தலம்-தரிசனநாள்-5.6.2022)

உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒன்பது மலர்களை மிதக்கவிட்டு இவை ஒதுங்கும் கரைகளில் அமைக்கப்பட்ட கோவில்களே நவகைலாயம் எனப்படும். திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ.,தொலைவில் உள்ளது.

ஸ்ரீ அம்மைநாதர் வரலாறு.


நவகைலாயத்தில் இரண்டாவது தலம், (சந்திரன் தலம்) சேரன்மகாதேவியில் அமைந்துள்ள இந்த கோவிலாகும். சுயநலமில்லாத இரண்டு சகோதரிகள் அரிசி குத்தி பிழைத்துவந்தனர். கிடைத்த சொற்பவருமானத்தில் பலருக்கும் உணவு அளித்து வந்தனர். அதில் உணவு உன்ன வந்த ஒரு முதியவர் அவர்களின் விருப்பத்திற்கு உதவுவதாக சொன்னவுடன், அவர்கள் சிவபெருமானுக்கு (உரோசம முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்திற்கு) கோவில் கட்டும் விருப்பத்தை கூற அந்த முதியவர் அதற்கான பொருள் உதவியை வழங்கினார் என்பது வரலாறு. 


உலக்கையை வைத்து நெல் குத்துவது போன்ற உருவம் கோவில் தூணில் காட்சி அளிக்கிறது. 

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், கோசடையவர்மன், சுந்தர சோழன் இவற்களால் அந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டு, கட்டுமான பனியில் நன்கு வளச்சியடைந்தது. ஒவ்வொரு இடமும் சோழர்கால பாணியை பிரதிபலக்கிறது. 

வியாசர் தீர்த கட்டம், திருவேணி சங்கமம், என்றும், இந்த ஆற்றங்கரை புனிதத்துவமும், சிறந்த மருத்துவ குணமும் கொண்டது, என்ற சிறப்பு பெற்றது.

40பேர் பணியாற்றிய இக்கோவிலில் தற்பொழுது நான் ஒருவன் மட்டுமே பணியாற்றுகிறேன் என்று அர்சகர் கூறினார். கோவில் பராமரிப்பு மிகவும் கவலையை அளிக்கிறது. 

 

     


சேரன்மகாதேவி- பக்தவச்சல பெருமாள், அப்பன் வெங்கடாஜலபதி, ராமசாமி, கோவில்கள். (தரிசனநாள்- 5.6.2022).

 சேரன்மகாதேவி- பக்தவச்சல பெருமாள், அப்பன் வெங்கடாஜலபதி, ராமசாமி, கோவில்கள். (தரிசனநாள்- 5.6.2022).

பக்தவச்சல பெருமாள்.


சேரன்மகாதேவியில் இருந்து 3.கி.மீ. தொலைவில் புராதனமான, கட்டிட கலையுடன், எழில்நிறைந்த, அற்புதமான கோவில். சிறந்த புராதன சின்னமாக கொண்டு, 1921 ஆம் ஆண்டு முதல் தொல் பொருள் ஆய்வத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் பராமரிப்பு மிக அற்புதமாக உள்ளது. இந்துஅறநிலைய துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழேயும் செயல்படுகிறது. இந்த கோவில் இரண்டு சன்னதிகளை(Shrines) கொண்டுள்ளது. சிறிய சன்னதியில் கிருஷ்ணரும், பெரிய சன்னதியில் பெருமாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் பக்தவச்சல பெருமாளாக காட்சி தருகிறார். அர்த மண்டபம், மஹாமண்டபம், வெளிமண்டபம் என்று மூன்று மண்டபங்களுடனும், தூண்கள், செதுக்கிய, அழகிய சிற்பங்களுடனும், உள்பிராக அமைப்பும் கண்கொள்ளாகாட்சியாக, அமைந்துள்ளது. கருடன் பெருமாளை நோக்கியும், பிரகாரத்தில் யோக நரசிம்மரும். காட்சி தருகின்றனர்.



அப்பன் வேங்கடாஜலபதி.


சேரன்மகாதேவி ராமசாமி கோவிலில் இருந்து வடக்கே 1கி.மீ தொலைவில் உள்ளது. வயல்வெளியின் இடையே வாழைத்தோப்பின் அருகில் மிக இயற்கை எழில் அமைந்த இடத்தில் இக் கோவில் அமைந்துள்ளது. மிக ஆர்வத்துடன் சென்ற எங்களக்கு மிகுந்த ஏமாற்றமே கிடைத்தது. நாங்கள் மாலை 6மணிக்கு சென்றோம். கோவில் திறப்பதற்கான, திறந்ததற்கான அறிகுறிகளே இல்லை. “அப்பா உனக்கே இன்னிலை எனில் நாங்கள் எம்மாத்திரம்” என்று மிகுந்த வேதனையுடன் கிளம்பினோம். நான் வீட்டிற்கு வந்து இணையதளத்தில் அப்பன் வேங்கடாஜலபதி பற்றி தேடி படித்த செய்திகளை உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்.

கோவில் பற்றிய செய்திகள்.

50 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடந்த இந்த கோவில் சமீபத்தில் (2017) திருப்பணி செய்யப்பட்டதாம். விஜயநகர காலத்தில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. தமிழிலும், சமிஸ்கிரதத்திலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு இணையானதாக கருதப்படுகிறது. சேரன் அரசனின் மகளுக்கு, இந்த கோவில் பெருமாளுக்கு நிவேதனம் செய்த மிளகு ரசம் அருந்தி தீராத வயிற்றுவலி தீர்ந்ததால், மிளகு ரசம் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகிறதாம். சேரன், பாண்டியன், விஜயநகர பேரரசர்கள் என்று பல மன்னர்களும் இந்த இறைவனுக்கு பல சொத்துகள் அளித்துள்ளதாக 60 கல்வெட்டுகள் தெரிவிக்கின்றனவாம்.

ராமசாமி கோவில்.


இந்த கோவில் நீண்ட மதில் சுவற்றை பார்த்து அதிசயித்து இறைவனை வணங்க சென்றால், கோவில் வாயிற் கதவு திறந்து இருந்தது, அர்சகர் நின்றுகொண்டடிருந்தார். எங்களை பார்தவுடன் அறைமணி நேரம் ஆகும் என்றார். நாங்கள் கோவிலுக்குள் சென்றோம். அனைத்து  சன்னதிகளும் பூட்டி இருந்தன. பிராகாரம் முழுவதும், புதர் மண்டி கிடந்தது, தற்போதைய நிலையை நன்கு உணர முடிந்தது.   அரை மணி நேரம்தான் சென்றது. அர்சகர்????? மாடக் கோவில் பாணியில் அமைந்திருந்தது. இணையதளம் மூலம் அறிந்த செய்தியை பகிர்கிறேன். மூலவர் ராமர். “ நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலம்” என்பது புராதன பெயராகும். “நிகரிலி சோழ விண்ணகர உடையார்” என்பது  மூலவர் ராமரின் பெயர். மூவேந்தர்களும் நாயக்க மன்னரும் இந்த கோவில் சிறக்க பல வேலைகள் செய்துள்ளனர். 

2021, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு, மதுரை மாவட்ட முன்னாள்  தொல்லியல் அலுவலருக்கு கூடுதல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

சிறிய வேண்டுகோள்.

பக்தவச்சல பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் இங்கு சென்றாலே இக்கோவில்கள் வளம்பெறும். இணையதளசெய்தி, இவ்வாறு பராமரிப்பு இல்லாமல் 10 மேற்பட்ட கோவில்கள் உள்ளனவாம்.











குன்னத்தூர். ராகுதலம். (தரிசனநாள்-5.6.2022).

 குன்னத்தூர். ராகுதலம். (தரிசனநாள்-5.6.2022).


நவகைலாயத்தில் நான்காவது இடமான இந்த குன்னத்தூர், திருநெல்வேலியில் இருந்து 10கி.மீ. தொலைவில் உள்ள கீழ் வேங்கடநாதபுரம் என்னும் கிராமத்திற்கு  மிக அருகில் அமைந்துள்ளது. இறைவன் ஸ்ரீகோதபரமேஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன், என்ற பெயரில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார் ஈசன். 

கோவில் உருவான வரலாறு.


நவகைலாயத்தை உருவாக்கியவர் உரோச மகரிஷி. இவர் அகத்திய முனிவரின் முதல் சீடரும், பிரம்மனின் பேரனும் ஆவார். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து இருந்த இந்த கோவில், இயற்கை சீற்றத்தால் அழிந்தது. இந்த இடம் சங்கானி என்று அழைக்கப்பட்டது. குன்னத்தூரை ஆண்ட குறுநில மன்னர், சங்கானி என்ற இடத்திற்கு அருகில் இருந்த பொத்தையில், (பொத்தை பொருள்- சிறுமலை, கற்பாறை, கரிகாடு.) ஒரு அரிய வகை மரத்தை வளர்த்து வந்தார். இந்த மரத்தில் ஒரே ஒரு பூ தான்பூக்கும். இந்த பூ காயாகி பின் கனி கொடுக்கும் இதை சாப்பிட்டால், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கம் என்பதால், மன்னர் இந்த மரத்தை மிக கவனமாக பாதுகாத்து வந்தார். இந்த இடம் வழியாக குடத்தில் நீருடன் சென்ற பெண்னின் குடத்தில், இந்த அரியவகை மரத்தின் பழம் விழுந்து விட்டது. அந்த பெண்னும் அது தெரியாமல், வீட்டில் குடத்தை வைத்து விட்டார். அரண்மனை ஆட்கள் இந்த பெண் வீட்டில் பழம் இருந்ததை கண்டு பிடிக்க, அந்தபெண் தான் பழத்தை திருடவில்லை என்று கூறியும், அவள் கற்பவதி என்ற தெரிந்தும் மரணதண்டனை அளித்தமையால், அந்த பெண் இந்த ஊரில் பெண் மற்றும் பசுவை தவிற வேறு யாரும் உயிர் வாழக்கூடாது என்று சாபமிட்டமையால், பசுக்கள் மட்டுமே இருந்தன. உரோச முனிவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தின் மேல் இந்த பசுக்கள் பால்  சொரிந்ததை அறிந்த பாண்டிய அரசன், இந்த கோவிலை கட்டினார்.

கோவிலின் சிறப்பு.


அபிஷேக நேரத்தில் சிவலிங்கத்தில் ஒரு நாகம் இருப்பது போன்று காட்சி தெரிகிறது. பசுமையாக இயற்கை எழிலுடன் கோவில் உள்ளது. பிராகாரத்தில் எடுத்த இரண்டு புகைப்படத்தை இணைத்துள்ளேன். 


மேல்வேங்கடநாதபுரம், கீழ் வேங்கடநாதபுரம், (தரிசன நாள் -ஜுன்-5.2022).

 மேல்வேங்கடநாதபுரம், கீழ் வேங்கடநாதபுரம், (தரிசன நாள் -ஜுன்-5.2022).

ங்கடநாதபுரம்.


திருநெல்வேலியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பெயர் மேல வேங்கடநாதபுரம்.. இந்த தலம் தென் திருப்பதி என்றும், திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்குவதற்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிய நேர்தியை (வேண்டுதல்) இந்த பெருமாளுக்கு செய்கின்றனர்.

தலவரலாறு.


மகரிஷி வியாசர் தாமிரபரணி ஆற்றங்கரையில் தவம் மேற்கொண்டார். ஒரு கோடி மலர்களால் பூஜித்த இடம். இந்த ஸ்ரீநிவாச தீர்த்த கட்டத்தில் , ஸ்ரீநிவாசர், ஸ்ரீதேவி,பூதேவியுடன் மகரிஷிக்கு காட்சி அளித்த இடம். மகாவிஷ்ணு, இவரின் தவத்தில், மகிழ்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இவ்விடத்தில் இருந்து மக்களுக்கு அருள்பாலிப்பதாக கூறினார். 700 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடப்ப நாயகர் என்ற மன்னரால் கட்டப்பட்டது, இந்த கோவில். இந்த மன்னருக்கு குழந்தை வரம் தந்தமையால், திருவோணம் அன்று பால்பாயசம் செய்து நிவேதனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 

கீழ் வேங்கடநாதபுரம்.


இந்த கோவில் ஸ்ரீநிவாசர் கோவிலுக்கு  மிக அருகிலேயே அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள், பிருகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். வலக்கரத்தில் சக்கரமும், தனரேகையுடனும், இடக்கரத்தில், சங்குடனும், கதாயுதத்துடனும் நமக்கு அருள் பாலிக்கிறார். வாழவைக்கும் பெருமாள் என்றும், பக்தர்களால் போற்றப்படுகிறார். கீழ் திருப்பதி என்றும், தென் காஞ்சி என்றும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.


கூழமந்தல் (தரிசனநாள் 28.5.2022).

 கூழமந்தல் (தரிசனநாள் 28.5.2022).   அமைவிடம்.



காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் வந்தவாசியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. கூழமந்தலில் இருந்து சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பழையாறை,(கும்பகோணத்தில் இருந்து 3 கி.மீ) கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர் மாவட்டம்) செல்ல, முதலாம் ராஜேந்திரன் காலத்தில் நெடுஞ்சாலை இருந்தது.  



கங்கைகொண்ட சோழீஸ்வரர்.



சோழன், ஆசார்யர் சர்வசிவ பண்டிதர் ஆணையால் கூழமந்தலில் அற்புத கற்றலி(ஒற்றைகல் கோவில்-(Monolithic Architecture) ஒன்று உருவாக்கினார்.. கோவில் தெப்பக்குளத்தில் மிதப்பது போன்று கருங்கற்களால் இழைத்து கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீவிசாலாச்சி சமேத ஸ்ரீஉத்திர கங்கை கொண்டசோழீஸ்வரர், மேல் கூறை அல்லாத தூண்கள் கொண்ட, மண்டபம் முன் உள்ள, மிக அற்புதமானா நந்தியை பார்த்தவண்ணம் அருள்பாலிக்கிறார். கோவில் வெளி சுவற்றில் விநாயகர், துர்கை, போன்ற வேறுசில இறைவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. விமானம், அர்த்த மண்டபம், முகமண்டபம், இவற்றடன் கோவில் கட்டப்பட்டுள்ளது.1966 ஆண்டு முதல் புராதனச்சின்னமாக கருதி, தொல்லியல் துறை கட்டுப்பட்டின்கீழ் இயங்குகிறது.

பேசும் பெருமாள் கோவில்.



ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேசும் பெருமாள் 12 அடி உயரத்தில், கருணையுடன், நம்முடன் பேசுவது போன்று, அருள்பாலிக்கிறார். இரண்டு கைகளில், சங்கு சக்கரமும், வலக்கையில் அருள்பாலிக்கும் வரதஸ்ம், இடக்கை தொடையில் பதித்தது போன்று காட்சி தருகிறார். இரண்டு தாயார்கள் கையில் தாமரை மலர் இருப்பது, சிறப்பாக உள்ளது. பெருமாளின் மகுடம், தாயாரின் அணிகலன்கள் என்று அழகிய வேலைபாட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ விஜயகண்ட கோபாலன் என்ற சோழ அரசன், நெல்லூரையும், காஞ்சிபுரத்தையும் தலைநகரமாக கொண்டு ஆண்ட காலத்தில் இந்த பெருமாளுடன் பேசியதற்க்கு ஆதாரமாக வாயிற்படி நிலைக்காலில் கல்வெட்டு பொறித்துள்ளார். காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்ற இந்த மன்னன், இந்த கோவிலுக்கு, பொருளும் நெல்லும் வழங்கியதாகவும், இந்த கோவில் பட்டாச்சாரியார், சூரியனும், சந்திரனும் உள்ளவரை(இவ்வுலகம் உள்ளவரை) நான் பெருமாளுக்கு விளக்கு ஏற்றுவேன் என்று கூறி அரசனிடம் பணம் பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது. முடிகாணிக்கை கொடுக்கும் வழக்கமும் அதற்கான இடமும் கோவில் அருகிலேயே உள்ளது.   



வடபழனி பழனியாண்டவர் கோவில். (தரிசன நாள் 11.5.2022)

 வடபழனி பழனியாண்டவர் கோவில். (தரிசன நாள் 11.5.2022).



சென்னை மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையம், 1920-ல் புதுபிக்கப்பட்டு, ராஐகோபுரம் கட்டப்பட்டது. கோடம்பாக்கம் அருகில் உள்ளதால் திரைப்பட துறையினரின் வருகையும் ஆதரவும் அதிகம் உள்ளது. அதிகப்படியான திருமணங்கள் நடக்ககூடிய கோவிலாகவும் திகழ்கிறது.

வரலாறு.

அண்ணாச்சாமி நாயக்கர் என்பவர் பழனி முருகனின் படத்தை வைத்து கூரை கொட்டகையுடன் 1890 ஆம் ஆண்டு மிக எளிமையாக கோவில் கட்டினார். அவருக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக திருத்தணி, திருப்பேரூர் முருகனை வழிப்பட்டு வந்தார்.  முருகனுக்கு காணிக்கையாக அவருடைய நாக்கை அறுத்து அற்பணித்தார். இத்தகைய நிகழ்வுக்கு “பாவாடம்” என்று பெயர். தெய்வீக சக்தி பெருகி மக்களுக்கு “அருள்வாக்கு” கூறலானார். இவரின் காலத்திற்க்கு பிறகு ரத்தினசாமி தம்பிரான் என்பவரின் கனவில் தோன்றி  “பாவாடம்”; செய்துகொண்டு மக்களுக்கு அருள்வாக்கு அருளுமாறு பணித்தார். ரத்தினசாமி தம்பிரானின் சீடர், செங்குந்தர் தம்பிரான். இவர்காலகட்டத்தில் தான் இக்கோவில் கர்பக்கிரஹம், உட்பிரகாரம், கருங்கல் மண்டபம் போன்றவை கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் நெற்குன்றம் போகும் வழியில் இந்த 3 சித்தர்களுக்கும் ஆலையம் உள்ளது. 

கோவிலின் அமைப்பு.

மூலவர் பழனி முருகன் நின்ற கோலம், வரசித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சண்முகர், சொக்கநாதர், மீனாட்சி, அருணகிரிநாதர், இவர்களுக்கு தனி சன்னதியும். 40.8 மீட்டர் உயர கோபுரத்துடன் திகழ்கிறது. 

கும்பாபிஷேகம்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்க்கு, பிறகு, 2020-ல் “பாலாலயம`'"; செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, 24.1.2022 அன்று மிக சிறப்பாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.  


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...