சாஸ்-பகு- (சகஸ்தரபகு) கோவில்.

 சாஸ்-பகு- (சகஸ்தரபகு) கோவில். (Visited on 18.12.2022)

அமைவிடம்.

ராஜஸ்தான் மாநிலம், உதயாபூர் என்ற நகரத்தில் இருந்து 23.கி.மீ. தொலைவில், ஏக்லிங்ஜி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

அமைப்பு. 

சிறிது சிறிதாக எட்டு முதல் பத்து கோவில்களை கொண்டது. பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி போன்ற தெய்வங்களுக்கு தனி சன்னதிகளாக இருக்கலாம். ஆனால் தற்சமயம் எந்த கடவுள் உருவங்களும் இங்கு இல்லை. அழியும் நிலையில் உள்ள பழம்பெறும் சின்னங்களாக உள்ளது. மிகவும் நுணுக்கமான அழகுநிறைந்த சிற்பங்கள் பார்பதற்;கு மகிழ்சியூட்டுகிறது. தொல்லியல் துறையின் கீழ் இயங்குகிறது.

மத்தியபிரதேச மாநிலத்தில், குவாலியர் என்ற இடத்திலும் சாஸ்-பகு என்ற இரட்டை கோவில் உள்ளதாம்.

நாங்கள் எடுத்த புகைப்பட்ம் மற்றும் காணொளி.














ஏக்லிங்ஜி கோவில்

 ஏக்லிங்ஜி கோவில். (தரிசனநாள்-18.12.2022)


அமைவிடம்.

ராஜஸ்தான் மாநிலம், உதயாபூர் மாவட்டம், கைலாஷ்புரி என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு.

நான்கு முகங்களை கொண்டு சிவபெருமான் அருள்புரிகிறார்.

வரலாறு.

கி.பி.734-ல் ஆட்சி செய்யப்பட்ட பப்பாராவால் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான் ஆட்சியின் போது பல இடிபாடுகளுக்குயுள்ளாகியது. 15 ஆம் நூற்றாண்டில், கியாத்ஷா என்ற சுல்தானால்  மீண்டும் தாக்குதலுக்கு உட்பட்டது. ராணாரைமல் என்பவர் இவரை தோற்கடித்து, இக்கோவிலை புனரமைப்பு செய்தார்.

இன்றைய நிலை.

இன்றளவும் இந்த கோவில் அரச குடும்பத்தினரிடமே உள்ளது. பிரதி திங்கட்கிழமை தோறும், இந்த அரச குடும்பத்தினர் வந்து வழிபாடு செய்கின்றனராம். கட்டுப்பாடு அதிகமாக உள்ளது. புகைபடங்கள் எடுக்க அனுமதிஇல்லை. சுகாதாரம் பேணப்படுகிறது. அதிகமான பக்தர்கள் இருந்த போதிலும் அமைதி காக்கப்படுகிறது.


ஜெகதீஷ் மந்திர்.

 ஜெகதீஷ் மந்திர். (தரிசனநாள்-16.12.2022)

அமைவிடம்.

ராஜஸ்தான் மாநிலம் உதயாபூர் என்ற நகரில், உதயாபூர் நகர அரண்மனை அருகில் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு.

மிக செங்குத்தான 32 பளிங்கு படிகளில் ஏறி செல்ல வேண்டும். குறைந்தது, 79அடி உயரத்தில், மிக செங்குத்தாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரதான கடவுளாக பெருமாள், ஜெகதீஷ் என்ற பெயரில் மக்களுக்கு அருள்புரிகிறார். நத்வாரா ஸ்ரீநாத் போன்றே (உருவஅமைப்பு) இறைவன் சுமார் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளார்.


பெருமாளுக்கு எதிரே பித்தளையில் உருவாக்கப்பட்ட கருடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் நான்கு மூலையிலும் விநாயகர், சூரியன், சிவன், அம்மன் ஆகியோருக்கு சிறியதாக சன்னதி அமைத்துள்ளனர். கோவில் புறப்பகுதியில், செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மிக நுணுக்கமாக நல்ல வடிவமைப்புடன் உள்ளது. 

வரலாறு.

1651 ஆம் ஆண்டு, மன்னர் மகாராணா ஜகத்சிங் என்பவரால் கட்டப்பட்டது. ரூபாய் மதிப்பில் 1.5 மில்லியன் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாங்கள் எடுத்த புகைப்படம் மற்றும் காணொளி.








திருவிடைக்கழி

 திருவிடைக்கழி. (தரிசனநாள்-29.10.2022).


தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில். மயிலாடுதுறை மாவட்ட தேவர பாடல் பெற்ற தலங்களுக்கு சென்றுகொண்டடிருக்கும் போது எங்களின் ஓட்டுநர் இந்த கோவிலை பரிந்துறைத்து எங்களை இங்கு அழைத்து சென்றார். இரவு எட்டுமணிக்கு நடைசார்த்தும் நேரத்தில் மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு சென்றோம்.

அமைவிடம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பொனார் கோவில் ஊராட்சிஒன்றியத்தில் உள்ளது.

தலவரலாறு.


;சூரபத்மனின் மகன் இரண்யாசுரன் முருகபெருமானுக்கு பயந்து தரங்கம்பாடியருகில் கடலுக்குள் ஒளிந்துகொண்டான். சிவபக்தனான இரண்யாசுரனை முருகபெருமான் வதம்செய்தார். இதன் காரணமாக ஏற்பட்ட பாவத்தை போக்க இத்தல சிவபெருமானை வணங்கினார். பாவம் நீங்க பெற்று, அவர் தந்தை ஈசனின் சொல்படி இத்தலத்திலேயே இருந்து மக்களுக்கு அருள்புரிகிறார் ஆறுமுக கடவுள். 

பெயர்காரணம்.

திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை இறைவனை விடை கேட்டதாலும், இரண்யாசுரணை கொன்ற பாவம் கழிந்த இடமானதாலும் விடைகழி என்ற பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு. 


மூலஸ்தானத்தில் பிரதானமூர்த்தியாக சுப்ரமணியசுவாமியும், (திருச்செந்தூர் முருகனின் இரட்டைபிறவி போன்றுள்ளது). சற்றுஉள்ளடங்கிய சிவலிங்கமூர்தியும் உள்ளனர். அம்பாளுக்கு சன்னதி கிடையாது. அம்மன் தரங்கம்பாடி சென்றுள்ளார் என்று ஒரு நம்பிக்கை. தெய்வானைக்கு ஒரு தனி சன்னதியுள்ளது. ஏழுநிலை ராஜகோபுரம் கொண்ட கோவில்.   

கோவில்சிறப்பு.


1;. தலவிருட்சம்- குமாரமரம். மலைகளில் மட்டுமே இருக்ககூடிய இந்த மரம், நிலத்தில் வளர்வது ஒரு சிறப்பு.  

2. நவகிரகம் இல்லாத இந்த கோவிலில் முருகப்பெருமானை வழிபாடுசெய்தாலே அனைத்து தோஷங்களும் நீங்குமாம்.

3. பிரதோஷநாயகர் ,சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் சன்னதியில் உள்ள, சிவ சண்டிகேஸ்வரர், குகசண்டிகேஸ்வரர், கொடிமரத்தில் உள்ள விநாயகர் என்று அனைவரும் கையில் வேலேந்தியே உள்ளனர்.

4. முருகபெருமானுக்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனம்.

5. திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.

சேந்தனார் முக்தியடைந்த தலம்.

விறகுவெட்டியான சேந்தனார், சிறந்த சிவபக்கதர். தினமும் சிவனடியார் ஒருவருக்காவது உணவு அளித்தபிறகுதான் இவர் உணவருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். அரிசியாக கொடுக்கமுடியாமல், கிடைத்த அரிசியை களியாக கிண்டி சிவனடியாருக்கு பரிமாரினார். அன்றைய தினம் தில்லை நடராசரே சிவனடியார் உருவில் வந்து களி உட்கொண்டார். இதுவே மார்கழிமாத “திருவாதிரை”. அவரின் பக்தி உலகுக்கு எடுத்துகாட்ட, அன்றைய தேரோட்டத்தில் தேர் நகராமல் இருந்த நேரத்தில் அசரீயாக ஈசன் வாக்கு கேட்டு சேந்தனார் திருப்பல்லாண்டு பாடினார். இந்த சிறந்த சிவபக்தர் முக்திஅடைந்த தலம், இந்த திருவிடைக்கழியாகும்.

இத்தகைய சிறப்பு எதுவும் தெரியாமல் இறைவனைவணங்கி வந்த எங்களை மீண்டும் தரிசனம் செய்ய அருள்புரியுமாறு முருகப்பெருமானை பிரார்திக்கிறேன்.


மயிலாடுதுறைமாவட்ட தேவாரதிருத்தலங்கள். பகுதி-2 (5Temples)

 மயிலாடுதுறைமாவட்ட தேவாரதிருத்தலங்கள்.  பகுதி-2. (தரிசனநாள்-29.அக்டோ.2022)

1.திருவிளநகர்.


மயிலாடுதுறையில் இருந்து 10.கி.மீ. தொலைவில் உள்ளது.


திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம்.


வேடன் வடிவத்தில் வந்து சம்மந்தருக்கு உதவினார் என்பது இத்தல பெருமை.

வேயுறுதோளியம்மை சமேத உச்சிவனேஸ்வரர் (எ), உசிரவனேஸ்வரர்(எ), துறைகாட்டும் வள்ளல் என்ற பெயரில் இறைவன் வீற்றிருக்கிறார்.

2.கீழ்பரசலூர்.


திருபறியலூர் என்பது புராணபெயர்.

அஷ்ட(எட்டு) வீரதலங்களுள் ஒன்று.


தருமையாதினத்திற்க்கு கீழ் இக்கோவில் இயங்குகிறது.


இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர்.

3.செம்பொனார் கோவில்.


மருவார்குழலி சமேத சுவர்ணபுரீஸ்வரர்.

திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் இவர்களால பாடல் பெற்ற தலம்.


மாடக்கோவில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

4. திருஆக்கூர்.


வாள்நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில்.

திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், கபிலதேவநாயனார் இவர்களால் பாடபெற்ற தலம்.

மாடக்கோவில் அமைப்பில் கட்டப்பட்ட தலம். 


சிறப்பொலிநாயனார் அவதரித்ததலம்.

ஆயிரத்தில் ஒருவர் என்று இத்தல ஈசன் ஏன் அழைக்கப்படுகிறார்?

சிறப்பொலிநாயனார் 1000 சிவனடியார்களுக்கு விருந்துஅளிக்க விருப்பபட்டு, இதற்கான செயலில் இறங்கினார். ஆனால் அன்றைய தினம் 999 அடியார்கள் மட்டுமே வந்திருந்தனர். நாயனார் ஈசனை வேண்ட சிவபெருமானே வயதான அடியாருவில் வந்து உணவு அருந்தியதால் இத்தல ஈசன் ஆயிரத்தல் ஒருவர் என்றும் அழைக்கப்படுகிறார். 

5.திருக்கடையூர் மயானம்.


திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவில் கிழக்கு கோபுரவாயிலில் இருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்று மூவராரும் பாட பெற்ற தலம். 

நம்முடையபாவம் மற்றும் வினைதீர்க்கும் தலம் என்று தேவாரத்தில் குறிப்பிடபட்டுள்ளது. 

5தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகிறது.


அ. காசி மயானம்.

ஆ. கச்சி மயானம். (காஞ்சிபுரம்)

இ. காழி மயானம். (சீர்காழி)

ஈ. நாலூர் மயானம் (நாலூர்)

உ.கடவூர் மயானம். (திருக்கடையூர்) 

தலசிறப்பு.


இறைவன், பிரம்மனுக்கு தலைகனம் ஏறிவிட்டதால், பிரம்மனை எரித்துவிட்டார்.  தேவர்கள் பிரும்மனுக்கு உயிருட்ட இறைவனை வேண்டிய தலம்.

கங்கை தீர்தம். இக்கோவில் குளம் கங்கையாகவே கருதப்படுகிறது. ஈசனுக்கு இந்த நீரை கொண்டே அபிஷேகம் செய்கின்றனர். 

சிவஞானத்தை போதித்த இடம் என்பதால் “திருமெய்ஞானம்” என்று அழைக்கப்படுகிறது.

சிங்காரவேலர் சன்னதி மிகவும் சிறப்பாக உள்ளது. (சிக்கல் தலத்தை தரிசனம் செய்த சிறப்பு உண்டாம்.) அன்றைய தினம் கந்தசஷ்டி பெருவிழாவில் வேல் பெற்ற நாளில் எங்கள் தரிசனம் சிறப்புற்றது. 









Again worshiped on 25.5.2024 (morning 6.30 a,m,)

மயிலாடுதுறை மாவட்ட தேவாரபாடல்பெற்ற தலங்கள். பகுதி-1.

 மயிலாடுதுறை மாவட்ட தேவாரபாடல்பெற்ற தலங்கள். பகுதி-1.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றானது மயிலாடுதுறை. 

துலாஸ்நானம் செய்துவிட்டு எங்களுடைய ஆலயவழிபாட்டை துவங்கினோம்.

துலாஸ்நானம். 

துலாமாதம் என்பது ஐப்பசி மாதமாகும். பகல் மற்றும் இரவு நேரம் சமமாக இருப்பதால் (தராசு போன்று) துலாமாதம் என்ற பெயர்பெற்றது. ஸ்நானம் என்றால் நீராடுவது என்று பொருள். ஐப்பசி மாதத்தில் அனைத்து நதிகளும் காவிரியில் கலப்பதால் இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது மிகவும் புனிதமானதாகவும், சிறப்பானதுமாக கருதப்படுகிறது.

முடமுழுக்கு.

ஐப்பசி மாதம்  மாற்றுத்திறனாளி ஒருவர் மைலாடுதுறை காவியாற்றில் நீராட விருப்பமுற்று கிளம்பினார். அக்காலகட்த்தில் போக்குவரத்துவசதியின்மை காரணமாக நடந்தே சென்றதால் மாதம் நிறைவுபெற்றது. அன்று இரவு கோவில் மண்டபத்தில் தங்கி இறைவனிடம் அவரின் இயலாமையை கூறி வருந்தினார். இறைவன் கனவில் தோன்றி வருந்தாதே கார்திகை மாதம் ஒன்றாம் தேதியாகிய நாளையும் காவிரியில் நீராடினாலும் உனக்கு ஐப்பசிமாதம் நீராடிய பலன் கிடைக்கும் என்று கூறினார். இந்த முடவனின் பக்தியால் நாமும் நீராட ஒருநாள் அதிகமாக கிடைக்கப்பெற்றோம். கார்திகை ஒன்று நீராடுதலே முடவன் முழுக்கு என்றாகியது.

சோழீச்சுவரர்.






துலாஸ்நானம் செய்துவிட்டு,  குற்றாலம் உக்தவேதீச்சுவரர் கோவிலுக்கு கிளம்பினோம். எங்களது ஓட்டுனர் சோழீச்சுவரர் கோவில் வாசலில் நிறுத்தி இதுதான் நீங்கள் குறிப்பிட்ட கோவில் என்று கூறி எங்களுக்கு சோழீச்சுவரர் அருள்கிடைக்க உதவினார்.

இந்த சிவன் “சொன்னவாறு அறிவார்” என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இத்தல அம்மன் பரிமளசுகந்தநாயகி என்ற சௌந்தரநாயகி. 

சுயம்பு சனீச்சுவரர்.

 தேவர்களும், மகரிஷிகளும் இறைவனை வழிபட வந்த போது, சனீஸ்வரன் அமிர்தகலசத்துடன், பூமியில் இருந்து தோன்றியதால், பாதாளசனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சனி தோஷத்தால் பாதித்த நளன் இங்குவந்து சனீஸ்வரனை வழிப்பட்டு, பின் இவரின் அறிவுரைபடியே திருநள்ளாறு சென்றதாக வரலாறு கூறுகிறது. திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குத்தாலம் என்ற இடத்திலேயே இந்த கோவில் அமைந்துள்ளது.

2. திருத்துருத்தி உக்கதவேதீஸ்வரர். (தற்காலபெயர்-குத்தாலம்)





திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாட பெற்றதலமாகும். சுந்தரரின் நோய் அக்கோவில் குளத்தில் நீராடி நீங்கப்பெற்றதாம். 



1000 வருடங்களுக்கு பழமையான இந்த கோவில் சோழமன்னர்களால் புனரமைப்பு செய்யப்பட்டது. உத்தாலமரம் தலவிருட்சமாகும். உத்தாலம் என்பது மருவி குத்தாலம் ஆனது.

3. திருவேள்விக்குடி. 


திருஞானசம்மந்தர், சுந்தரர் அவர்களால் பாடபெற்ற தலம். பரிமளசுகந்தநாயகி சமேத கல்யாணசுந்தரேஸ்வரர். குத்தாலத்தில் இருந்து 2.கி.மீ. தொலைவில் உள்ளது.



கோவில் எதிரே உள்ள மிகரம்யமான குளம்.

4.திருஎதிர்கொள்பாடி.


மலர்குழல்நாயகி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம். சுந்தரரால் பாடபெற்ற தலம். 


திருவேள்வக்குடியில் இருந்து 4.கி.மீ.தொலைவில்உள்ளது.

பெயர்காரணம்.

பரதமுனிவருக்கு மகளாக வளர்ந்த பார்வதி, திருமணபருவத்தை அடைந்த உடன் மகேசனை நினைத்து தியானிக்க தொடங்கினார். திருமணம் செய்துகொள்வதர்காக வந்த ஈசனை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்ததால் எதிர்கொள்பாடி என்ற பெயர் பெற்றது. திருமணஞ்சேரியில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை பலரும் அறியவில்லை. மேல திருமணஞ்சேரி என்றும் அழைக்கப்படுகிறது. இறைவனுக்கு விளக்கேற்ற எண்ணெய் கூட இல்லாத நிலையில் இக்கோவில் உள்ளது.

5.திருமணஞ்சேரி. 


திருஞானசம்மந்தர், அப்பரால் பாடப்பெற்ற தலம். கோகிலாம்பிகை  சமேத உத்வாகநாதர் திருக்கோவில். 

கீழதிருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

கல்யாணசுந்தரராகவந்து கோகிலாம்பிகையை திருமணம்செய்து கொண்ட இடம்.

திருமணதடை நீங்க இறைவனை வேண்டி பக்தர்கள் குவிகின்றனர்.

திருவேள்விகுடியில் இருந்து 4கி.மீ. தொலைவில் உள்ளது.

6. பந்தநல்லூர்.


ஞானசம்மந்தர் மற்றும் அப்பரால் பாடபெற்ற தலம்.

திருமணஞ்சேரியில் இருந்து 9கி.மீ. தொலைவில் உள்ளது.

தலவரலாறு.

பார்வதி பந்து விளையாட்டில் மும்மரமாக இருந்ததால் சூரியன் மறைய காலதாமதமாக்கினார். முனிவர்கள் மாலை சூரியவந்தனம் செய்ய கால தாமதம் ஏற்பட்டது. ஈசனிடம் சென்று முறையிட்டனர். ஈசன் அழைத்தும் உலகநாயகி விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால். பூமியில் பசுவாக பிறக்குமாறு கூறுகிறார். புற்றின்உள் இருக்கும் லிங்கத்தின் மீது பசு பால்சுரந்தஉடன்,  இருவரும் இறைஉருவை பெற்றனர்.

பந்தணைநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 














சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...