திருமூர்த்தி மலை கோவில், மற்றும் அணை

 


திருமூர்த்தி மலை கோவில், மற்றும் அணை. (பார்வையுற்ற நாள் 11.11.2021);.

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை சிறந்த சுற்றுலா இடமாகவும், ஆன்மீக தலமாகவும் அமைந்துள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு இரண்டு கி.மீ. முன் கரிவரதராஜப்பெருமாள் என்ற கோவிலை தரிசனம் செய்தோம். இந்த வனப்பகுதியில் அகத்தியர் தவமிருந்தார் எனவும், இறைவன் திருமணக்கோலத்தை பொதிகை மலையில் கண்டு களித்தது போன்று, மீண்டும் காண இறைவனை வேண்டியதை குறிப்பால் உணர்திய இடம், என்ற வரலாறு உள்ளது. இறைவன் அமணலிங்கேஸ்வரர். இங்கு அமைந்துள்ள எட்டுக்கால் மண்டபத்தில் அனுசியா தேவி மூன்று மூர்திகளையும் (பிரும்மா, விஷ்ணு, சிவன்) குழந்தையாக உருமாற்றி பாலூட்டிய இடம், இதனாலேயே  இந்த இடம் திருமூர்த்தி மலை என்று அழைக்கப்படுகிறது. 

திருமூர்த்தி அணை.

இந்த நீர் தேக்கம் ஆனைமலைத்தொடரின் வடக்கு சரிவில் ,உற்பத்தியாகும் பாலாறு நதியின் குறுக்கே கட்டப்பட்ட நீர்தேக்கம். (பாலாறு ஆழியாற்றின் கிளையாறு) 1967 ஆம் ஆண்டு விவசாய நீர் பாசனத்திற்காக கட்டப்பட்டது. இங்கு 2000 ஆம் ஆண்டு நுன் புனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. மின் விநியோகம் 2002ல்  துவக்கப்பட்டது. 1337 அடி நீர்தேக்க மட்டமும், 1935 மில்லியன் கன அடி கொள்திறனும் கொண்டது.  


            











குருந்தமலை முருகன், பாலமலை ரங்கநாதர். (தரிசன நாள் 10.12.2021)

கோயமுத்தூரில் இருந்து 28கி.மீ. தொலைவில், காரமடையில் இருந்து கிணத்துக்கிடவு செல்லும் பாதையில் 5கி.மி தொலைவில் குருந்த மலை அமைந்துள்ளது. பழனி மலை முருகன் போலவே மேற்கு திசை நோக்கி பால முருகனாக காட்சி தருகிறார். 125 படிகள் கொண்ட சிறிய மலைதான்.

தல வரலாறு.  

கொங்கு நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு  வணிகர் குலத்தவர்கள் மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை சேரநாட்டில் இருந்து வாங்கி, குருந்த மலைவழியாக சென்று, மைசூரில் விற்பனை செய்து வந்தனர். குருந்த மலையில் சிறுவன் ஒருவன் வியாபாரிகளிடம் இந்த மூட்டையில் என்ன இருக்கிறது? என்று கேட்க, வியாபாரிகள் தவிடு உள்ளது என்று சொல்கின்றனர். மறுநாள் மூட்டையை தூக்கும் போது கனம் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மூட்டையை பிரித்து பார்த்தால் தவிடாக இருந்தது. அதிர்ந்த வியாபாரிகள் குழந்தை வடிவில் வந்தது வேலாயுத கடவுள் என்பதை உனர்ந்து குழந்தை வேலாயுதனுக்கு ஒரு கோவில் கட்டினர் என்று, இக்கோவில் வரலாற்றை படகாட்சியாக கோவில் சுவற்றில் வரைந்துள்ளனர்.



பாலமலை ரங்கநாதர்.

 குருந்த மலையில் இருந்து பால மலைக்கு செல்லும் வழிதடத்தை தவிர்த்து, நாங்கள்  காரமடைக்கு வந்து எங்களுடைய காலை உணவை முடித்துக்கொண்டு பெரியநாயகன் பாளையம் வழியாக பாலமலையை அடைந்தோம்;. காரமடை ரெங்கநாதரை நாங்கள் ஏற்கனவே தரிசித்து இருந்ததால் பாலமலைக்கு முன்னுரிமை குடுத்தோம். பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து 11கி.மீ. தொலைவு இருந்தது. கோவனூர் என்ற இடத்தை கடந்தவுடன், எந்த அரவம் இல்லாமல் இருந்தது. நாங்கள்  இதே போன்று வாகன ஓட்டம், மனித நடமாட்டம் இல்லாத பல இடங்களுக்கு சென்றாலும் இந்த இடம் மலை பாதை என்று தெரிந்தவுடன், ஒரு வித அச்சத்தை எற்படுத்தியது. நாங்கள் மலை பாதையில் கார் 

ஓட்டிய அனுபவமும் கிடையாது.  என கணவர் எனக்கு தைரியம்கொடுத்து இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றார்;. மூன்றாவது வளைவு கடினமாக இருந்ததை பார்த்து எங்களுக்கு பயம் ஏற்பட்டது. இதையும் கடந்து சென்றவுடன் சாலை சற்று அகலமாக இருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். 500 மீட்டர் நடந்திருப்போம், எதிரில்Forest Police இருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர். எங்களை நாங்கள் எங்கு செல்கிறீர்கள்  என்று விசாரித்து விட்டு “இந்த வயதான காலத்தில் யானை அடித்து போட்டால் யார் சார் பார்கறது?” என்று கடிந்து கொண்டனர். நாங்கள் உடனே திரும்ப முயன்றோம். ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்த ஒரு அரசு அலுவலக வாகன பயணியர், எங்களை எங்களுடைய கார் வரை கூட்டி வந்தனர். நாங்கள் ரங்கநாதரை தரிசனம் செய்யாமலேயே திரும்பினோம். இந்த மலையில் மொத்தம் 6 கொண்டை ஊசி வளைவு இருக்கிறது, நாங்கள் 3 வளைவு கடந்து விட்டோம் என்பதையும், கோவனூரில் இருந்து தனியார் Jeep வசதி உள்ளது என்பதையும் பிறகு அறிந்துக்கொண்டோம்.  











 திருமுருகன்பூண்டி (9.12.2001 தரிசனநாள்).

இறைவன் திருமுருகநாதர், இறைவி ஆவுடைநாயகி(எ)மங்களாம்பிகை. அவினாசி –திருப்பூர் சாலையில் அவினாசியில் இருந்து 6.5.கி.மி. தொலைவில் உள்ளது இந்த திருமுருகன்பூண்டி. பரிசு பொருளுடன் விநாயகர் கோவிலில் இரவை கழித்த சுந்தரரிடம், இறைவன் சிவபெருமான் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி பொருட்களை கொள்ளையடிக்க செய்தார். விநாயகரின் உதவியை நாடிய சுந்தரருக்கு சிவன் குடியிருக்கம் இந்த தலத்தை விநாயகர் காட்டினார்.  

“வேதமோதி வெண்ணீறு பூசி வெண்கோவணந் தற்றயலே ஓதமேவிய ஒற்றயூரையும் முத்தி நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்பூண்டி மாநகர்வாய் ஏதுகாரணம் ஏதுகாவல் கொண்டு எத்துக்கிங்கிருந்தீர் எம்பெருமானீரே”…  என்று சிவனை கடிந்து பாட அவரது பாடலில் மகிழ்ந்து சிவ பெருமான் பொருட்களை திருப்பி அளித்து ஆசி வழங்கினார், என்று மரபு வரலாறு கூறுகிறது. 

  முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலம் என்ற பெருமையையும் திருமுருகன்பூண்டி பெறுகிறது. இதன் காரணமாகவே சிவ பெருமான் முருகநாதேசுவரர் என்று அழைக்ப்படுகிறார். 

இத்தல திருப்புகழ். 

  “அவசியமுன் வேண்டிப் பலகாலும் அறிவிணுணர்ந்தாடுக் கொருநாளில தவசெபமுந் தீண்டிக் கனிவாகிச் சரணமதும் பூண்டற் கருள்வாயே சுவதமொருந் தாண்டித் தகரூர்வாய் சடுசமயங் காண்டற் கரியானே சிவகுமாரன் பிண்டிற் பெயரானே திருமுருகன்பூண்டிப்பெருமாளே”. என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார். 

ஸ்ரீ கந்த குரு கவசம் ஆசிரியர் சாந்தானந்த சுவாமிகள் கவசத்தில் திருமுருகன்பூண்டியிலே திவ்யஜோதியானாய் நீ என்று இத்தல சிறப்பை ஆசிரியர்குறிப்பிட்டுள்ளார்.

முருகன் கோவில் என்றே மக்கள் இந்த கோவிலை அழைக்கின்றனர்.  கோவில் அமைப்பு அனைத்து சிவன் கோவில் போன்றே உள்ளது. அவிநாசிஅவிநாசியப்பர் கோவிலும் எங்கள் அட்டவணையில் (இரண்டாம் முறை) இருந்தது. நாங்கள் மாலை நான்கு மணிக்கு கோவையிலிருந்து கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் மழை காரணமாக இறைவனை வழிபடமுடியாமல் திரும்பினோம்.

 அனுவாவி (7.12.2021 தரிசன நாள்) 

கோயமுத்தூர் மாவட்டம் கோயமுத்தூர் புறநகர் பகுதியான பெரிய தடாகம் (ஆனை கட்டி வழித்தடம்) என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. வள்ளி தெய்வானையுடன் சுயம்பு மூர்த்தியாக நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். சஞ்சீவிமலையை சுமந்து சென்ற போது அனுமனுக்கு தாகம் ஏற்பட இந்த மலை முருகனை வேண்டியதில் முருகனால் உருவாக்கப்பட்டது ஒரு ஊற்று. இந்த நீர் ஊற்று எங்கு உருவாகிறது என்பது இதுவரை யாராலும் அறியபடவில்லை. மலைஅடிவாரத்தில் இருந்து 500படிகள் கொண்டது கோவில். முன்மண்டபத்தில் விநாயகர், வீரபாகுவும், பத்து படி கட்டு உயரத்தில் அருணாச்சலேஸ்வரர் என்ற பெயரில் சிவ பெருமானும் நமக்கு அருள் பாலிக்கின்றனர். ஹனு என்பது அனுமனையும், வாவி(Bhavi)என்பது நீர்நிலையையும் குறிக்கும். இந்த கோவில் நேர் தென் புரத்தில் மருதமலை உள்ளது.

 





 



 திருவடிச்சூலம், வல்லம் குடைவரை கோவில். (25.10.21) 

திருஇடைச்சுரம் என்று அழைக்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்பொழுது திருவடிச்சூலம் என்று அழைக்ப்படுகிறது. செங்கல்பட்டு-திருப்போரூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு கோவர்தனாம்பிகை (எ) இமயமடக்குடிநாயகி சமேத ஞானபுரீஸ்வர் (எ) இடைச்சுரநாதர் என்ற பெயரில் நமக்கு சிவபெருமான் அருள்பாலிக்கிறார். திருஞானசம்மந்தரால் பாட பெற்ற தலமாகும்.தெற்க்கு முகமாக இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நுழைந்தஉடன் விநாயகரை தொடரந்து,  அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. அம்பாளை தரிசனம் செய்துகொண்டே கிழக்குமுகமாக திரும்பினால் இறைவனை தரிசிக்கலாம். சிவபெருமான் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். நேர்எதிரே நந்தி, மற்றும் பலிபீடம் அமைந்துள்ளது. 1989ல் திருமுருக கிருபானந்தவாரியாரால் கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரிகிறது. இயற்கை எழிலுடன் இந்த கோவில் காணப்படுகிறது என்பதை நுழைந்த உடன் வாணரசேனை வரவேற்பின் மூலம் அறிந்து கொண்டோம்.



 இத்ததல பதிகம்.

வரிவள ரவிரொலி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வலனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக விரிவளர் தருபொழில் இனமயிலால வெண்ணிறத் தருவிகள்திண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

வல்லம் குடைவரை கோவில்.

செங்கல்பட்டு-திருப்போருர் வழித்தடத்தை கடந்து செங்கல்பட்டிற்கு வலதுபுறம் திரும்பி 500 மீட்டர் கடந்தவுடன் இடதுபுறம் தமிழ்நாடு சுற்றுலா துறை பெயர் பலகையுடன் இங்கு செல்ல வழிகிடைக்கிறது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் இங்கு 3 குடைவரை கோயில்கள் உள்ளன. ஆழ்வாரகள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகும். சிவக்கொழுந்து பாவலர் 111 பாடல்கள் வேதாந்தீஸ்வரர் மேல் புனைந்துள்ளார்.10,008 ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட மண்டபத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். முக்கண்ணனின், துணைவி முன்று கண்களுடன் காட்சி தருகிறார். ஞானாம்பிகை என்ற பெயருக்கு பொருத்தமாக ஞானத்தை நமக்கு  மூன்றாவது கண் மூலம் அருள்கிறார். 10 அடி தூரத்தில் கம்பி கதவு வழியாக இறைவனை நாங்கள் வழிபட்டோம.;

“எரித்தவன முப்புர எரியின மூழ்கி தரித்தவன் கங்கையை தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறு வேறு தெரிந்தவன் உறைவிடம் திருவல்லமே.  ஞானசம்மந்தர் அருளியது.



பொன்விளைந்த களத்தூர்.



 செங்கல்பட்டு நகருக்குள், நீதிமன்ற வளாக அருகில்,  பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர்பலகையை காணலாம். அங்கிருந்து ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தை கடந்து சென்றால்,  பொன்விளைந்த களத்தூர் என்ற கிராமத்தை அடையலாம். இங்கு அமைந்துள்ள சிவன் கோவில் மற்றும் நரசிம்மர், கோதண்டராமர், கோயில்களைப்பற்றியும், இந்த ஊர் பெயர்காரணத்திற்கான செய்திகளையும், அறிந்துக்கொள்வோம். 


அருள்மிகு மீனாட்சி உடனுறை முன்குடுமீஸ்வரர் ஆலையம்.

கி.பி. 750 ஆம் ஆண்டு பல்லவ மன்னரால்; கட்டப்பட்ட கோவில். 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் வணங்கிய இறைவன், புகழேந்தி புலவர், வீரராகவ முதலியார், படிகாசு புலவர் பிறந்த இடம் என்று பல பெருமைகளை கொண்டது, பொன்விளைந்த களத்தூர். 

    பல்லாண்டு காலமாக கோவிலில் இறைவனுக்கு சார்த்திய மாலையை மன்னரிடம்  சேர்த்து வந்தனர். அர்ச்சகரின் மனைவிக்கு அந்த மாலையை அணிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை மேலிட அதை அணிந்து அழகு பார்த்த நேரத்தில் அரண்மனையில் இருந்து மாலையை பெற சேவகர் வந்த உடன், உடனே களைந்து கொடுத்த அவசரத்தில் அதில் அர்ச்சகரின் மனைவியின் கூந்தல் முடி இருப்பதை கவனியாமல் கொடுத்து விடுகிறார். அரசன் கோபத்தில் முடிக்காண காரணத்தை வினவ, அர்ச்சகர் லிங்கத்தின் முன் குடுமியில் உள்ள முடி என்று பதிலளிக்கிறார். அரசன் இறைவனின் முடியை காண்பதற்கு விழைகிறார். அர்ச்சகரின் பக்திக்கு இறைவன் செவிசாய்த்து,  அரசன் தரிசிக்க வரும் தருணத்தில் முன் குடுமி  முடியுன் காட்சியளிக்கிறார். சுந்தரேசன் என்ற பெயரில் அருள்பாலித்த இறைவன்,  அன்றய தினம்  முதல் முன்குடிமீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீலெட்சுமி நரசிம்மர் கோவில்.

இறைவன் வைகுண்டவாசபெருமாள் தாயார் அஹோபில வல்லி தாயார். உற்சவர் லெஷ்மி நரசிம்மர்.  இந்த நரசிம்மர்,  மாமல்லபுரத்தில் (திருகடல்மலை) இருந்து கடல் பெருக்கு காரணமாக இந்த கிராமத்திற்கு கருடர் வாழிகாட்டுதலுடன் கொண்டுவரப்பட்டார், என்று புராணம் கூறுகிறது.






கோதண்டராமர் கோவில்.

இந்த கோவிலில் திருபுல்லாணி ராமருக்கு தனி சன்னதி உள்ளது. (தர்பை மேல் சயனித்த கோலம்) ராமேஸ்வரம் போன்றே அமைந்துள்ளது.

பெயர்  காரணம்.

அதிக பெண்குழந்தைகளை உடைய அர்ச்சகருக்கு அரசன் கொடுத்த நிலத்தில் நெல் மணிகள் இறைவன் அருளால் பொன்னாக விளைந்ததால் பொன்விளைந்த களத்தூர் என்று சைவமும், வேதாந்த தேசிகர் மேற்கொண்ட யாத்திரையில் தோன்றிய வெள்ளை நிற குதிரை, வாய்பட்ட இடங்களில் நெல் கதிர்கள் பொன்னாக மாறியதாக வைணவமும் கூறுகிறது. செழிப்பாக  விளையும் பூமியை பொன்விளையும் பூமி என்றும் வழக்கில் நாம் கூறுவதுண்டு.


சிஸ்டர் ஜோஸ்பின்

புனித கேப்ரியேல் உயர் நிலை பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பின் போது பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இவர் சிறந்த ஆசிரியர், இனிமை மற்றும்  அன்பாக பழகுவது, பன்முக திறமையாளர் என்று பல வகையில் என்னை மிகவும் கவர்ந்தவர். தலமை ஆசிரியர் என்ற பந்தா இல்லாமல், மிக எளிமையாக எங்களுடன் பழகுவார்.  சிறிய இடைவேளை மற்றும் உணவு இடைவேளைகளில் மாணவிகள் விளையாட்டு ஆர்வத்தில் அவர் மீது வேகமாக ஓடி மோதியுள்ளனர். அதை மகிழ்சியாக ஏற்று எங்களின் குதுகலத்திலும் பங்குகொண்டுள்ளார். பல முறை நானும் அவரும்  பள்ளி வளாகத்தில் பேசி கொண்டே சென்று இருக்கிறோம்;. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட பெருமையும் மகிழ்ச்சியும் இன்றளவும் அசை போடக்கூடிய இனிமையான  தருணங்கள். மாதத்தில் ஒரு நாள் சட்டப்பேரவை போன்ற அமைப்பை கூட்டி, சபாநாயகர், துறை மந்திரிகளை நியமித்து அதன் மூலம் எங்களின் விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்து, மாணவர்களுக்கு அரசியல் அமைப்பு பற்றிய அடிப்படை அறிவை பயிற்றுவித்தார்.  பள்ளி வளாகத்தில் கிடக்கும்; குப்பைகளை எந்த மாணவிகளையும் குறிப்பிட்டு அழைத்து எடுக்க சொல்லாமல் போகிற போக்கில் அவரே குனிந்து எடுத்து குப்பையை தொட்டியில் சேர்ப்பார்.  பள்ளியில் படிப்பு மட்டும் இன்றி விளையாட்டு, தையல், கைவினை என்று பல துறைகளிலும் மாணவிகளின் வளர்ச்சியை தூண்டியவர். பத்தாம்வகுப்பு மாணவிகள் வகுப்பறையில் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலையில், வெளிப்புறத்தில் காற்றோட்டமாக, இடைவெளி விட்டு அமரச்செய்து, நன்கு படிக்கும் சூழலை ஏற்படுத்தி கொடுப்பார்.  மாலை நேரத்தில் சில நாட்கள் எங்களுக்கு சிற்றுண்டியாக பஜ்ஜி போட Apron  அணிந்து சமையல் கூடத்திற்க்கு கிளம்பி விடுவார். மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டுநாட்கள் மாணவிகளின் விடுதியில் உள்ள உணவு கூடத்தில் சினிமா படம் காண்பிப்பார் எங்களுக்காக. அவரே திரை கட்டி, Projector  இயக்குவது  film roll  மாற்றுவது, என்று அனைத்து வேலைகளையும் கற்று வைத்திருந்தார். எனக்கு நினைவில் உள்ள படங்கள் ருத்ரதாண்டவம், குழந்தையும் தெய்வமும். மாணவிகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தார். கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், எந்த செயலை செய்ய நினைத்தாலும் பிறரை எதிர்பார்காமல் செய்ய  எனக்கு கற்றுக்கொடுத்தவர், எனது ஆசிரியை சிஸ்டர் ஜோஸ்பின் அவர்கள். 


நெய்வணை, திருவாமாத்தூர், திருநாவலூர்.

 நெய்வணை, திருவாமாத்தூர், திருநாவலூர்.

 எங்களின் 274 பாடல் பெற்ற தல யாத்திரையின் தொடர்ச்சியாக, (5.8.21) அன்று மீண்டும் எங்கள் தலயாத்திரையை தொடர்ந்தோம். திருநெய்வணை, திருநாவலூர், திருவாமாத்தூர், அரகண்டநல்லூர், இந்த நான்கு திருக்கோவிலுக்கு செல்வது என்று தொடங்கிய புனித பயணத்தில் 3 இடங்களுக்கே சென்று, இறைவனை வழிபட முடிந்தது.

1.நெய்வணை


விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அடுத்து சேலம் செல்லும் பாதையில், வலது புறம் நெய்வணை செல்வதற்காண சாலை பிரிகிறது.  நாங்கள் கூகுள் உதவியுடன் தான் சென்றோம். இறைவன் சொர்ணகடேஸ்வரர். இறைவி நீலமலர்கண்ணி (எ) பிரகன்நாயகி. திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம். சிவன் சுயம்புமூர்த்தி;. (நல்வெண்ணெய் விழுது பெய்தாடுதிர் -பதிகம்). வள்ளலார் சுவாமிகளாலும் பாடப்பெற்ற தலமாகும்.

2.திருநாவலூர்.


 நெய்வணையில் இருந்து, ரிஷிவந்தியம் -நெமிலி சாலை வழியாக கெடிலம் ஆற்று பாலம் அருகில் சென்று விழுப்பரம்- திருச்சி நெடுஞ்சாலை எதிர்புறம் சென்றால் திருநாவலூர் கோவிலை அடைந்து விடலாம். மணோன்மணி அம்பாள் உடனுறை ஸ்ரீபக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தனி சன்னதியே ஒன்று அமைந்துள்ளது. சுந்தரமூர்த்திநாயனார்  பதிகம் பாடிய கோவிலும், அவதரித்ததலம் என்ற பெருமையும் கொண்டது, திருநாவலூர். வரதராஜபெருமாளுக்கு தனி சன்னதியே உள்ளது. பெருமாள், அம்மன் சன்னதி இரண்டும் சோலை நடுவில் உள்ளது போல் சன்னதி சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.

3;. திருவாமாத்தூர்.


 திருநாவலூரில் இருந்து அரகண்டநல்லூரை விட திருவாமாத்தூர் அருகில் இருந்ததால் கோவில் நடை மூடுவதற்குள் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரை தரிசிக்க முடிவுசெய்து திருவாமாத்தூர் சென்றோம். விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்பரம் - திண்டிவனம் செல்லும் வழிதடத்தில் அமைந்துள்ளது. ராமர் வழிபட்டதலம்,ஆவினங்கள் (பசு) ஒன்றுகூடி இறைவனை வேண்டி, தன்னை தற்காத்துக்கொள்ள கொம்புகளை வரமாக பெற்ற இடம்,பிருங்கி முனிவர் அம்பிகையை வேண்டி சாபவிமோசனம் பெற்ற தலம். அம்பிகைக்கு தனி சன்னதி இல்லாமல், கோவிலுக்கு எதிரே தனி கோவில், என்று பல சிறப்புகளை பெற்றது திருவாமாத்தூர். திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார். இவர்களால் மட்டும் அல்லாமல் இரட்டை புலவர்கள், அருணகிரிநாதர், வள்ளலார், மகான் தண்டபாணி சுவாமிகள் என்ற போற்றதக்க பலரும் அழகியநாயகரை பாடியுள்ளனர். 




 திருச்சோபுரம் மற்றும் திருத்தினை நகர் என்ற தீர்த்தநகரி;. (2.8.21).

திருச்சோபுரம், கடலூர்-சிதம்பரம் செல்லம் வழியில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை அடுத்து, 1கி;;மீ. தொலைவில் இடதுபுறம், திருச்சோபுரம் என்ற பெயர் பலகையே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் திருச்சோபுரநாதர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீ சத்தியாயதாட்சி சமேத ஸ்ரீ மங்களபுரீஸ்வரர் (எ) அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை திருச்சோபுரநாதர்  தல வரலாறு. அகத்திய மாமுனிவர் கடல் மணலுடன் மூலிகைச்சாறு கலந்து, இறைவனை உருவாக்கி,  இறைவனின் திருமணக்கோல காட்சியை காண  வேண்டுகிறார். மூலிகை மணல் கலந்த லிங்க திருமேனியுடன் அருள்வதால், அபிஷேக திரவியங்கள் மருந்துவகுணம் கொண்டதாக நம்பப்படுகிறது. இங்கு வீற்றிருக்கம் தட்சிணாமூர்த்தி இசை கடவுளாக வணங்கப்படுகிறார். இவரது திருமேனியில் இருந்து ஸ்வரங்களின் ஓசை உண்டாகிறது. திருஞானசம்மந்தர்,சுந்தரர் இவர்களால் பாடல் பெற்ற தலமாகும். இராமலிங்க சுவாமிகளும் இத்தல  இறைவனை போற்றி பாடியுள்ளார். 11ஆம் நூற்றாண்டிற்கு பிறகு ஏற்பட்ட கடற்கோளினால் (கடலுக்க அடியில் ஏற்படும் நிலநடுக்கம்) கோவில் மணலால் மூடப்பட்டு, பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, மதுரை தம்பிரான்களால் மீட்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.




திருத்தினைநகர்(எ)தீர்த்தநகரி.

கடலூர்-சிதம்பரம் வழியில் ஆலப்பாக்கம் ரயில்வேகேட்டை தொடர்ந்து, வலதுபுறம் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 5கி.மீ. தொலைவிலேயே இந்த தலம் அமைந்துள்ளது.அருள்மிகு.கருத்தடங்கண்ணி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலையம் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்றதாகும். (நீறு தாங்கிய திருநுத லானை என்ற பதிகம்)   


புதன் தலமும் பூம்புகாரும்.

 புதன் தலமும் பூம்புகாரும். (24.7.2021)

எங்கள் வீட்டின் விருந்தினர் விருப்பதிர்கிணங்க திருவெண்காடு கிளம்பினோம்; எங்களின் (நான்,என்கணவர்) பாடல் பெற்ற தலயாத்திரையுமாக அமைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. சீர்காழியில் இருந்து 12 கி.மீ. தொலைவில்,  17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, 3குளங்களை உள்ளடக்கிய, பெரிய சுற்றுப்பிரகாரமும் கொண்ட, மிக எழில் நிறைந்த, இரண்டு வாயில்களை கொண்ட சிவன் கோயிலாகும்.

இக்கோவிலின் சிறப்பு


1. ஆகோரமூர்த்தி – 

சிவபெருமானின் அம்சங்களுள் ஒருவர்.  இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் அகோரமூர்த்தி சன்னதி கிடையாது. அருகிலேயே உற்சவமூர்த்தியும் உள்ளது. தட்சனின் யாகத்தை அழிக்க சிவபெருமான் நெற்றிக்கண்ணில் தோற்றுவிக்கப்பட்ட அகோரவீரபத்திரர்  வேறு. இந்த தலத்தில் அமைந்துள்ள அகோரமூர்த்தி வேறு.  மருத்துவாசுரன்,  பெற்ற வரம் காரணமாக தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமான் அருளியபடி திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்தனர். அசுரனை எதிர்கொள்ள வெண்காட்டீஸ்வரர்; நந்தியை  பணித்தார். நந்தியிடம் தோல்வி அடைந்த பின் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, சூலத்தை பெற்றான் அசுரன். நந்தியை சூலத்தால் தாக்கி காயத்தை ஏற்படுத்தினான். நந்திகேஸ்வரர் திருவெண்காட்டாரிடம் முறையிட, சிவபெருமான் உடனே அகோரமூர்தியாக உருகொண்டரர். மருத்துவாசுரன் உருவத்தை பார்த்த மாத்திரத்தில் சரணடைந்தான். மருத்துவாசுரனை சிவன் காலடியில் காணலாம். 

2;. சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலம்.(தேவாரம்,திருவாசகம்)

3. சுயம்பு மூர்தியாக அருள்பாலிக்கிறார்.

4. சிவபெருமான் ஆனந்ததாண்டவம் புரிந்த இடம்.

5.108 சக்திபீடங்களில் ஒரு தலம்.

6. நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிப்பட்ட தலம். பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர்  அருள் கிடைக்கப்பெற்றோம.;





பூம்புகார்.

திருவெண்காட்டில் இருந்து 9 கி.மீ. தொலைவுதான் பூம்புகார். வுரலாற்று சிறப்புமிக்க இடம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தின் நகரம் இதுதான். சோழர்காலத்தில் பெரிய துறைமுகமாக இருந்த இடம். வரலாற்று பெயர் காவிரிபூம்பட்டிணம். தற்கால பெயர் பூம்புகார். சிறந்த சுற்றுலா இடம், சரியான பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்று அருவருப்பை ஏற்படுத்தியது. “சிலப்பதிகார கலைக்கூடம்” பராமரிப்பு பணி நடந்து கொண்டிருந்தது. கலைக்கூடத்தின் உள்ளே கோவலன், கண்ணகி, சிலைவடிவிலும், வெளிப்பகுதியில், சிலப்பதிகார காப்பியத்தை எழுதிய இளங்கோவடிகளுக்கு (இதில் பல கருத்து வேறுபாடுள்ளது) சிலையும் உள்ளது. சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் நீரூற்று அவற்றை உடனே பார்த்து ரசித்து இன்புர, யூ. டியுப் க்கு சென்று, காஞ்சி பட்டுடுத்தி என்று பாடலை தேடலில் தேர்வு செய்து பாட்டின் சரணத்தை (ஒரு பாடலின் நிறைவு பகுதி) பார்த்து மகிழ்ச்சிஅடையுங்கள் (பூம்புகாரின் நாயகியாம் என்று தொடங்கும்).       







விழுப்புரம் மாவட்டம் - பாடல் பெற்ற தலங்கள்.

விழுப்புரம் மாவட்டம் - பாடல் பெற்ற தலங்கள்.(20.7.2021)

  நானும் என் கணவரும், திருவாண்டார்கோவில், திருமுண்டீஸ்வரம், திருஇடையாறு, திருவெண்ணைநல்லூர் இந்த நான்கு பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வழிப்பட்டோம். 

1. திருவாண்டார் கோவில்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்,  நெடுஞ்சாலையின் வலது புறத்தில், நடக்கும் தூரத்திலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. இறைவன் பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரர், வடுகூர்நாதர், வடுகநாதர் என்றும், அம்பிகை வடுவகிறர்கண்ணி, திரிபுர சுந்தரி என்ற நாமத்தை கொண்டு நம்மை அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இயங்குகிறது. அருணகிநாதரால் ஒரு திருபுகழ் பாடல் எமுதப்பட்ட இடமும் ஆகும்.



2. திருமுண்டீச்சரம்.

இந்த பாடல் பெற்ற தலமும் திருவெண்ணைநல்லூரை தொடர்ந்து, அரசூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலம் தோன்றியதற்கான வரலாறு, படக்காட்சியாக கோவிலின் உட்பகுதியில் உள்ளது. சொக்கலிங்கம் என்ற அரசர் ஒரு அழகிய தாமரை பூவை குளத்தில் கண்டதாகவும், அதை கொய்ய வீரனை அனுப்புகையில், அந்த மலர் கைக்கு அகப்படாமல் அந்த வீரனை அலைக்கழித்த காரணத்தால், அரசர் மலர் மீது அம்பெய்துகிறார். உடனே பூவின் மேல் ஒரு லிங்கம் தோன்றியது மடடும் அல்லாமல், குளத்து நீர் சென்னிறமாக மாறுகிறது. அந்த குளக்கரையிலேயே மன்னன் சிவாலயம் எழுப்புகிறார். செல்வாம்பிகை சமேத ஸ்ரீ முண்டீசர் இக் கோவிலில் வீற்றிருந்து நம்மை அருள்பாலிக்கிறார். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும் இது. இந்த தேவார பாடல், பத்து பத்தியின் முடிவிலும், “திருமுண்டீசரத்து மேய சிவலோகன்காண் அவனென் சிந்தையானே.” என்று முடிக்கிறார் அதனால் சிவலோகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.. 




3. திருஇடையாறு.

 இந்த தலமும் இதே வழித்தடத்தை தொடந்து அமைந்துள்ளது. கோவிலின் சுற்றுபகுதி நல்ல பசுமையாக இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயன்மாரால் பாடல் பெற்றதலமாகும்;. “முந்தை  ஊர் முதுகுன்றம்” என்று தொடங்கும் இந்த திருப்பதிகத்தில் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் பல ஊர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.


4. திருவெண்ணைநல்லூர்.

இறைவன்- கிருபாபுரீஸ்வரர். இறைவி-வேற்கண்ணியம்மை, (எ)  மங்களாம்பிகை. கைலாயத்தில் சிறந்த தொண்டனாக மலர் கொண்டு இறைவனை பூஜித்துவந்த நிலையில் சுந்தரர் பார்வதி தேவியின் பணி பெண்ணை பார்த்து மயங்கியமைக்காக, பூமியில் பிறந்து  இல்லாழ்கையில் ஈடுபட இறைவனால் கட்டளையிடப்படுகிறார். அப்பொழுது சுந்தரர் இறைவனிடம் நான் மானுடபிறவியில் மயங்கும் பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார். அதனால் சுந்தரரின் திருமணதருவாயில் வந்து “நீ என் அடிமை”  என்று வழக்கு தொடுத்து சுந்தரரை கோயில் வாசல் வரை அழைத்து வந்து கைலாய கோலத்தில் காட்சி தருகிறார். தன் மேல் பாடல் இயற்றி பக்தி கொள்ளுமாறு பணிக்கிறார். நான் எவ்வாறு பாடவேன் என்று கேட்டதற்;கு, “நீ என் அடிமை என்று”, நான் உன் மேல் வழக்கு தொடுத்தமையால் நீ “உனக்கு என்ன பித்தா” என்று கேட்டாய்யல்லவா அதனால் “பித்தா”  என்று பாடலை தொடங்குமாறு சிவ பெருமான் பணிக்கிறார். (பித்தா பிறை சூடி-தேவாரம்) மகிஷனை வதம் செய்ய பார்வதி கோர உருவம் எடுத்து, இந்த உருவம் மறைய வெண்ணைகோட்டைகட்டி அதில் தவம் செய்தமையால் இந்த ஊர் திருவெண்ணைநல்லூர் எனவும் இறைவி மங்களாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர். முருகபெருமான் மயில் மீது நடனமாடி அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்தபின் திருபுகழ் ஒன்றும் இந்த தலத்திலேயே உருவாகியுள்ளது. சடையப்ப வள்ளல் வாழ்ந்து மறைந்த தலம், மெய்கண்டார் முக்கி அடைந்த தலம் என்று பல சிறப்களை கொண்டது இந்த திருவெண்ணைநல்லூர். தற்சமயம் புணரமைப்பு பணி நடக்கிறபடியால், குடமுழுக்கு முடிந்த  பிறகு சென்று அனைத்து தெய்வங்களையும் தரிசனம் செய்யுங்கள். கிருபாபுரீஸ்வரர் சன்னதி தவிற மற்ற இடங்கள் தரிசிக்க அனுமதி இல்லை. ஆடி மாதம் என்பதால் மங்களாம்பிகை தரிசனமும் எங்களுக்கு கிடைத்தது.  







ஸ்தல சயன பெருமாள். (மகாபலிபுரம்)

ஸ்தல சயன பெருமாள். (மகாபலிபுரம்) (15.7.2021





 ஸ்தல சயன பெருமாள்.

  நாங்கள் இந்த முறை சென்னயில் இருந்து வரும் பொழுது  கிழக்கு கடற்கறை சாலை வழியாக வந்ததால் மகாபலிபுரம் சென்றோம். பல்லவர் காலத்து சிற்பக்கங்கள் அனைவரும் அறிந்ததே.  மகாபலிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில்  பற்றியதே இந்த blog.  108 திவ்ய தேசங்களில் 63 வது தேசமாகவும், 12 ஆழ்வார்களில் ஒருவாரன பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்றும், திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார்களால் மங்களா சாசனம்  செய்யப்பெற்றது என்ற பல சிறப்புகளை கொண்டது இந்த தலம்.

புன்டரீக மகரிஷி

 இந்த கோவிலை நமக்கு அளித்த  புன்டரீக மகரிஷி பற்றி அறிந்துக்கொள்வோம். 1008 தாமரை மலரை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு திருப்பாற்கடல் பெருமாளுக்கு சமர்பிக்கிறேன் என்று சொல்லி கடலில் இறங்கி செல்கிறார். கடலின் ஆழமும், அலைகளின் இடையூறு காரணமாக அவரால் தொடர்ந்து செல்ல முடியாமல் கடல் நீரை இறைக்கிறார். இவ்வாறு பல ஆண்டுகள் செல்கின்றன. மகாவிஷ்ணு இவர்மேல் இரக்கம் கொண்டு முதியவர் வேடம் தரித்து வந்து கடல் நீரை இறைக்க முடியுமா? வேறு வேலை எதாவது பாரும் என்று சொல்கிறார். ஆனால் மகரிஷி அவர் வேலையில் மிகவும் பிடிவாதமாக இருந்ததால், முதியவர் வேடம் தரித்து வந்த பெருமாள், எனக்கு பசிக்கிறது உணவு கொண்டுவாரும் முதலில், என்று பணிக்கிறார். அதற்கு மகரிஷி உங்களுக்கு உணவு கொடுத்து விட்டு நான் மீண்டும் பெருமாளுக்கு தாமலை மலர் அர்பணிக்க கடலில் இறங்கி செல்வேன் என்று கூறி செல்லிறார்.  உணவுடன் வந்த மகரிஷி, பூமியில் கிடந்த கோலத்தில் அனைத்து தாமரை மலருடன் காட்சியளிக்கிறார், திருப்பார்கடல் பரந்தாமன். இறைவனை கண்டு களிப்புற்று தரிசித்த மகரிஷி நான் எப்பொழுதும் உங்களின் திருவடியிலேயே இருக்க வேண்டும் என்று வரம் கேட்கிறார். இங்கு பெருமாள் ஆதசேஷன் மேல் சயனிக்காமல் பூமியில் சயனித்துள்ளார். இவர் பொற்பாதங்களில் தாமரை பூ உள்ளது. திருவடியின் அருகிலேயே மகரிஷி கைகூப்பி நின்றநிலையில் உள்ளார். தாயார் நில மங்கை தாமரை மீது அமராமல் பூமியிலேயே அமர்ந்துள்ளார். 


மந்ராலயம் மற்றும், ஹம்பி.





 50ரூ நோட்டின் பின் பகுதியில் இந்த கல் ரதம் அச்சிட்டிருக்கும்.


மந்ராலயம்



                           
    கடந்த மார்ச் 24 ஆம் தேதி நானும் என்கணவரும் பெங்களுரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு அன்று இரவே புகைவண்டியில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள மந்ராலயம் கிளம்பினோம். 25ஆம் தேதி  வியாழக்கிழமை குரு வழிபாடு சிறந்தது. எங்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறிய மன நிறைவுடன், அதிகாலை மந்திராலயம் ரோடு ரயில் நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து பேருந்து, பகிர்ந்து செல்லும் ஆட்டோ, வாடகை கார் என்று பல –வசதிகள் உள்ளன மந்ராலயம் செல்ல.. ரயில் நிலையத்தில் இருந்து 10K.M.  தொலைவில் உள்ளது. நாங்கள் மடத்திலேயே தங்குவதற்கு அறை முன்பதிவு செய்திருந்தோம். மடத்தின் தங்கும் இடம் பிருந்தாவனத்திலேயே அமைந்துள்ளது. நான் 1978 ல் முதன்முதலில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிருந்தாவனத்திற்கு சென்று குரு ராகவேந்திரர் என்பவரை பற்றி அறிந்துக்கொண்டேன். 1985-ல் ரஜினிகாந் நடித்த “குரு ராகவேந்திரர் என்ற திரைபடத்தின்  மூலமே தமிழக மக்கள் இந்த மகானைப்பற்றி நன்கு அறிந்தனர். இவர் பிறந்த ஊரான புவனகிரி தமிழ்நாட்டில், சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது.  இங்கு அமைந்திருக்கும் மடத்திற்கு சென்று பலரும் வழி படுகின்றனர்.


16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த மகான், பக்த பிரகலாதனின்; அவதாரம், என்றும். தவத்தின் பயனாக ராம பக்த ஹனுமனை நேரில் தரிசித்தவர் என்று கூறப்படுகிறது. இவரின் ஜீவ சமாதியே மந்ராலயம். கோவிலில் அதிகம் கூட்டம் இல்லை. நோய் தொற்று காரணமாக கூட இருக்கலாம். நம்வீட்டிற்கு மிக அருகில் உள்ள சிறிய கோவிலை வணங்குவது போன்று மிக அமைதியாக, நிம்மதியாக தரிசனம் செய்தோம். மதியம் 3மணிக்கு ஹொசபேட் என்ற இடத்திற்கு பேருந்தில் பயணித்தோம். ஹம்பி செல்வதற்காக.
 
ஹம்பி


       நாம் வரலாற்றில் படித்த விஜயநகர பேரரசே தற்காலத்தில் ஹம்பி என்று அழைக்கப்படுகிறது. இன்றைய நம் இந்தியாவின்,கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா, தமிழ்நாடு,கேரளா மாநிலத்தின் பெரும் பகுதியே விஜயநகர பேரரசு என்று அழைக்கப்பட்டது. கிருஷ்ணதேவராயரே மிகவும் புகழ் பெற்ற அரசராக விளங்கினார். விஜயநகரத்தை தலைநகரமாக கொண்டமையால், இதன் பேரிலேயே விஜயநகர பேரரசு என்று அழைக்கப்பட்டது. இது தற்பொமுது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹம்பி என்ற ஊரை மையமாக கொண்டே அமைந்துள்ளது.

பெல்லாரி மாவட்டமாக இருந்த இந்த இடம், தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் 31 வது புதிய மாவட்டமாக விஜயநகரம் என்று அறிவிக்கப்பட்டது. (பிப்ரவரி2021) இந்த ஹம்பியை பார்பதற்க்கு குறைந்தது 5 நாட்கள் வேண்டும். அனைத்தும் கோவிலாக இருந்தாலும், தொல்பொருள் மற்றும் கட்டிடக்கலை மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே கண்டு களிப்புற முடியும். நாங்கள் பார்த்த வெகு சில இடங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
 1. விருபாக்ஷா  கோவில் - சிவன் கோவில்
 2.உக்ர நரசிம்மர் - 
3. படவலிங்கா (இரண்டும் அருகருகே உள்ளது.
4. ஹசாரா ராமர் கோவில் (ராமர் .இலக்குவர். சீதை) மிக அற்புதமாக இருந்தனர். துங்கபத்ரா நதிக்கரைநதிக்கரையில் அமைந்திருந்தது, இக்கோவில். அக்கரையில் , அஞ்சநாத்ரி என்ற ஆஞ்சநேயர் கோவில் இருந்தது.

அஞ்சநாத்ரி ஆஞ்சநேயர் கோவில்

 நாம் பரிசில் மூலமாகவும் செல்லலாம். ஆனால் நாங்கள் சாலைவழியாகவே இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றோம்.  ஆஞ்சநேயரை பார்க படி ஏறி செல்லும் போது அந்த இடம் சோளிங்கர் கோவிலை நினைவு படுத்தியது.

 5. விட்டலா என்ற பெருமாள் கோவில் ,


6. கல்லினால் செய்யப்பட்ட ரதம். 
இது நமது 50ரூ நோட்டின் பின் பகுதியில் இந்த கல் ரதம் அச்சிட்டிருக்கும்.

 7. Queens Bath 
இவைகளை பார்பதற்கே எங்களுக்கு 9மணிநேரம் தேவைபட்டது. இடையில் மதிய உணவிற்காக அரை மணி நேரம் செலவிட்டிருப்போம். மறுநாள் ஹொசபெட்டில் இருந்து Hubballi  வந்து, Hubballiயில் இருந்து பாண்டிச்சேரிக்கு புகைவண்டியில் திரும்பினோம். 


















சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...