ஆறுமுகநாவலர்.

 ஆறுமுகநாவலர்.


எங்களின் ஆறுநாள் இலங்கைபயணத்தில், இவரின் சிலையை நான்குநாட்கள் ஏதாவது ஒரு இடத்தில் பார்த்திருப்பேன். தமிழிலும், சைவசமயத்திலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பது தெரியும். மேலும் அறிய அவல்  கொண்டேன். நேற்று வள்ளலார் பிறந்த தினம்., (5.10.23) ஆறுமுக நாவலர் வள்ளலார் மீது வழக்கு தொடுத்தார் என்பதும் நினைவிற்கு வந்து, காரணம் அறிய அவா ஏற்பட்டதே இந்த blog-கிற்கான காரணம்.

இளமைபருவம்.

இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் என்ற இடத்தில், கந்தசாமிபிள்ளை, சிவகாமி அம்மையாருக்கு 1822 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். சுப்பிரமணிய உபாத்தியாயர், சரவணமுத்து புலவர்,  சேனாதிராச முதலியார் போன்றவர்களிடம் கல்வி கற்றார்.

சிறப்பு 

உரைநடை வித்தகர், தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ்காவலர், சைவக்காவலர், என்று பல சிறப்பு  பெயர் பெற்றவர். இராமசாமி, நடுவன், சைவன், இரக்கம் என்று பல புனைப்பெயர்களை கொண்டவர். சைவ சமயசாரம்,  சிவாலய தரிசன விதி, கிருத்துவமத கண்டன நூல்கள், மருட்பா (அருட்பாரவை எதிர்த்து எழுதியது) என்று பல நூல்கள் எழுதியுள்ளார். 

குறிக்கோள்.

தமிழ், சைவம் இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டு, இவைஇரண்டும் தழைக்க திருமணவாழ்வையை துறந்தார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் என்ற கல்லூரியில் ஆங்கிலம் படித்து, ஆசிரியராகவும் பணியாற்றினார். அவர் ஆங்கில புலமையை கண்டு பெர்சிவல் என்ற பாதரியார் Bable-ளை தமிழில் மொழிபெயர்க்குமாறு பணித்தார்.

அச்சு பதிப்பு.

1851-ல் முதலில் “திருமுருகாற்றுப்படை”, மற்றும், திருக்குறள்- “பரிமேல்அழகர் உரை” அவற்றை பதித்தவரும் (Printing) இவரே.

சமூகஉணர்வு.

1874 –ல் “இலங்கை பூமிசரித்திரம்”; என்ற இதழில், வறுமை, துன்பம், பாவம், இந்த மூன்றிக்கும் காரணம் மதுபழக்கம் என்ற, உயர்ந்த சிந்தனையை சமூகத்தில் உண்டு செய்து. குடிபழக்கம் குறைய தொண்டு செய்தவர்.

அங்கிகாரங்கள். 

சென்னை பல்கலைகழகத்தின் முதல் பட்டதாரி. 1971. ஆக்டோபர் 29 ஆம் தேதி இலங்கை அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கூற்று- நற்குணத்தினால் சைவம் என்னும் பயிரை வளர்த்த எழிலன் . நீதியரசர்-சதாசிவஐயர் கூற்று- நாவலரை போன்று முன்னும் இன்னும் தமிழ் வித்வான் இல்லை. தமிழ், சைவம், ஒழுக்கம் மூன்றும் ஒருசேர விளைத்தவர்.

வள்ளலார் மீதான வழக்கு ஏன்? 

தொழுவூர் வேலாயுதம், என்ற வள்ளலாரின் மாணவர், 1867 ஆம் ஆண்டு, ஒரு நூல் வெளியிட்டார். அதில்-

ஆசிரியர்-திவருட்பிரகாசவள்ளலார்.

நூற்பெயர்-திருவருட்பா.

நூல்பதிப்புபெயர்-திருமுறை.

என்று குறிப்பிட்டிருந்தார். ஆறுமுக நாவலருக்கு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், உள்ளிட்ட 12  திருமுறைமுகள் மட்டுமே திருமுறை என்று, வள்ளலாரின் அருட்பாவை கருத்தை எதிர்த்தார். இதன்காரணமாகவே கடலூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட வழக்காகவும், வழக்கு நடந்தநேரம் மக்கள் குவிந்திருந்தனர் என்பதும் ஒரு பெரிய செய்தியானது. 

தீர்ப்பு

வழக்கிற்காக அருட்பிரகாசர் நீதிமற்றத்தில் நுழைந்ததும், நீதியரசரை தவிற ஏனைய மக்கள் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்துநின்றனர், ஆறுமுகநாவலர்உட்பட. இதை அடிப்படையாககொண்டே, திருவருட்பா திருமுறையாக ஏற்றுக்கொள்ள உகந்ததானது.   


பெண்தொழிலாளர்கள் சட்டம் அறிவோம்.

 பெண்தொழிலாளர்கள் சட்டம் அறிவோம்.

கருத்து தோற்றம்.

காலை நடைப்பயிற்சியின் போது, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற சுவரொட்டியை பார்த்தேன். ஆணுக்கு 8மணி நேர பணிக்கு  400ரூ என்றும் பெண்ணிற்கு 8மணிநேர பணிக்கு 250ரூ என்றும் பொது இடத்தில் வெளிப்படையாக விளம்பரபடுத்தியிருந்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 





சட்டம் அறிவோம்.

“சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை விளக்கக்குறிப்பு” 

என்பதை அரசு வெளிடுகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்ததை அடிப்படையாக கொண்டு, அடிப்படை உரிமையை நமக்கு விளக்குகிறது. இதன்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், சமமான பாதுகாப்பபு உறுதி செய்யப்படுகிறது. எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இதன் அடிப்படையில், பாகுபாடு காட்டுவதை தடுக்கிறது. 

சமஊதியம் வழங்கும்சட்டம் 1976-ல் இயற்றப்பட்டுள்ளது. 

இதை ஒவ்வொரு தொழிலாளர்களும் அறியச்செய்ய வேண்டியது, உரிமையாளரின் கடமை. தொழில் நடத்தும் உரியாளர்கள் கட்டாயம் இந்த சட்டதை அறிந்துஇருப்பார்கள். ????? 


அரசர் கோவில். (தரிசனநாள்-29.9.2023)

 அரசர் கோவில். (தரிசனநாள்-29.9.2023)

அமைவிடம்.


சென்னை –திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், படாளம் கூட்டுரோடில் இருந்து இடதுபக்கம் சுமார் 5கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஊரின்பெயரே அரசர் கோவில். 



மூவலர் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அதிகம் அறியப்படாத 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில். சாளகிராமத்தினால்ஆன பெருமாள்.




சுந்தரமகாலெஷ்மி.

இந்த ஆதிலெஷ்மி பத்மாசனத்தில் தாமரைமேல் வீற்றிருக்கிறார். பக்தர்கள் “சுந்தரமகாலெஷ்மி கோவில்” என்றே இந்த கோவிலை அழைக்கின்றனர். தாயாரின் “வலதுகாலில் ஆறுவிரல்கள்”; உள்ளன. அழகிய வேலைபாடுடன் கூடிய மண்டபத்துடன் தாயார் சன்னதி அமைந்துள்ளது. லெஷ்மிதேவி சிலாரூபமாக இருக்கிறார் என்றும், அங்கதில் 13 மேற்பட்ட மச்சங்கள் உள்ளதாக கோவில் அர்சகர் தெரிவித்தார். தீபாராதனையின் சமயத்தில், இடதுபக்க கண், மற்றும் மூக்கிற்கு அருகில் உள்ள மச்சத்தை சுட்டிகாட்டினார்.  பல்லவர்கள், மற்றும் சோழர்கள் பராமரிப்புபணி செய்துள்ளனர். சிதலம் அடைந்திருந்த கோவில், தற்பொழுது பராமரிப்பு பணிகள் நடைபெற்று புதுபொலிவுடன், காட்சியளிக்கிறது. 


இலங்கை பயணம் (எங்கள் கைபேசியில் பதிவாகிய இடங்கள்)

 இலங்கை பயணம் (எங்கள் கைபேசியில் பதிவாகிய இடங்கள்) 11.9.23 முதல்16.9.23 -வரை.

LakshmiNarayanar Temple







Chennai International Airport.





Arumuganavalar






Kerosene slot at petrolbunk


Colombu Beach resort.



Tea Factory







Night Time Resort View



Thriukonamalai Fort





Thrikonamali Stay Home





Kandy traffic Police



Kathikamam stay place


Sigiriya 







Railway Station







Yazhpanam Beach





Sub Post Office, Thiruketheswaram Temple. 





Platform shops




LTTE Memorial Place.





Pancha muga Anjanayar Koil.





Colombo Main Street-Mosque.



Colombo -street view



Mademba- Beautiful Scenery.





Srilanka Tourist Places.

 காலிகோட்டை   (Galle fort). (பயணநாள் 15.9.23)


இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில் டச்சுகாரர்களால் கட்டப்பட்டது. 430 ஆண்டுகளுக்கு பிறகும், வரலாறு, மற்றும் கட்டிடகலை தொல்பொருள் சின்னமாக விளங்கிவருகிறது. தொல்பொருள் துறையினரால் மெருகூட்டப்பட்டு சிறப்பாக காட்சியளிக்கிறது. சுற்றுலாவை இலங்கை மையமாக கொண்டுள்ளதால், சிறப்பு கூடுகிறது. இந்த இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு இன்றளவும், டச்சுகாரர்களும், இலங்கையினரும் உரிமையாளர்களாக உள்ளனர்.  கட்டிடங்கள், தெருக்கள், ரயில்நிலையம் என்று பல இடத்திற்;கும் “காலி”  என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது இதன் முக்கியத்தை உணரமுடிகிறது.


















கன்யா வெண்ணீருற்று  Kanya Hot Springs (பயணநாள் 13.9.23)

தரிகோணமலையில் அமைந்துள்ளது. சதுர வடிவில் ஏழுகிணறுகள் உள்ளன.இந்த ஊற்று ராவணனால் உருவாக்கப்பட்டதாகவும், கூறுகின்றனர். ராவணன் அவரின் பெற்றோர்களுக்கு ஈமக்கிரியை செய்யும் நேரத்தில், நீராடுவதற்காக உருவாக்கினான், என்றும், இலங்கை பாரம்பரிய புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இதைதொடர்ந்து இடிந்த நிலையில் புத்தமடாலயம் ஒன்று உள்ளது. இந்தநீருற்று புத்த பிச்சுகளின் பயன் பாட்டிற்காக உள்ளதாக கூறப்பட்டு வநத்து. 1955-ல் வெளியிட்ட கையேட்டில், இந்த 7 நீர்ஊற்றுகள் இந்து, பௌத்தம், இஸ்லாமியர்கள் இவர்களின் புனிதமான இடமாக குறிப்பிட்டுள்ளது.









சுதந்தர நினைவு மண்டபம். Independence Squere Colombo. (பயணநாள் 16.9.23)

கொழும்பு, இலவங்கப்பட்டை தோட்டத்தில் சுதந்திர சதுக்கத்தில் இந்த இடம் அடைந்துள்ளது. 1955-ல் இந்த கட்டிடம் நிறைவுப்பெற்றது. 10.000 சதுரஅடி நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்து. மாண்புமிகு ஸ்டீபன்சேனநாயகா என்ற இலங்கையின் முதல் பிரதமர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தேசிய கொண்டாட்ட இடமாக உள்ளது.











யாழ்ப்பாண நூலகம். Yazhpanam Library

1983 - இனக்கலவரத்தில் தீக்கிறையானது. தற்பொழுது மீண்டும் புனரமைக்கப்பபட்டுவருகிறது.



கொழும்பு தாமரை கோபுரம். Colombo Lotus Tower.

கொழும்பில் அமைந்துள்ள 1,153 அடி கோபுரம். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, தெற்காசியாவின் மிக உயரமான சுய ஆதரவு கோபுரம். இதன் மதிப்பு, டாலர் கணக்குப்படி 113 மில்லியன் டாலர்கள். தகவல் தொடர்பு, மற்றும் கண்காணிப்பிற்கு பயன் படுத்தப்படுகிறது.










Old Parliament Building, Colombo.





Colombo Municipal Council


Srilanka Currency





சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...