மக்கள்தொகை – ஒரு பார்வை

 மக்கள்தொகை – ஒரு பார்வை


2027 ஆம் ஆண்டு உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகலாம், என்ற ஐ.நா. அமைப்பின் தகவலை அடிப்படையாக கொண்டதே இந்த வலைப் பதிவு.

ஒரு சமூகத்தின் உயர்வு, தாழ்வு, அனைத்துவகையான பிரச்சனைகளிலும், மக்கள்தொகை என்பது பெரும்பங்கை வகிக்கிறது. ஓவ்வொரு குடிமகனும் இதை சிந்திருத்தல் நாட்டு வளர்ச்சி,  மட்டுமல்லாது, சுயவளச்சிக்கும் இன்றியமையாதது என்பது நன்கு புரியும்.

மக்கள்தொகை பற்றிய கூடுதல் தகவல்கள்.

1. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படும்  என்பது அனைவரும் அறிந்ததே. 

2. உள்துறை அமைச்சகம் (Ministry of Internal Offers) இந்த பணியை செய்கிறது.

3. 1980 - கணக்கெடுப்பு முதல் பல புதுமுறைகள் பயன்படுத்தப்பட்டன.

4. 1981 - முதல் பலவகையான கூடுதல் முறைகள் செயல்படுத்தப்பட்டன.

5. தேசியவரைபடங்களுடன், கிராம மற்றும் நகர வரைபடங்கள் உள்ளடக்கிய வீட்டின் எண் மட்டுமல்லாமல், வீடு இல்லாதலர்களின்( வீடு இல்லாமல் பொது இடத்தில் வசிப்பவர்களின); விபரங்களுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. 

6. பாலினம், மொழி, அறிந்த பிற மொழிகள், சாதி, மதம், வயது, கல்வி தகுதி, தொழில், வருமானம், உறவுமுறை, சாதி, பிறந்த இடம் (நாடு உள்பட), வசிக்கும் ஊர், குடிபெயர்ந்த இடம், குடிபெயர்ச்சிக்கான காரணம், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, உயிருடன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, முன்பு வசித்த ஊர், வசித்த காலம் என்று மிகவும் ஆழமான புள்ளி விபரங்கள் கணெக்கெடுக்கப்படுகிறது.

மக்கள்தொகை கணிப்பின் வரலாறு.

1. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சுமேரியகள் வரி விதப்பிற்காக மக்கள் தொகை கணக்கெடுத்தனர். (சுமேரியர்களின் நாகரீகம் பற்றி நாம் நன்கு அறிந்திருப்போம்).

2. இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி காலத்தில், (கி.மு. 270 ஆம் ஆண்டில்  இருந்து, கி;.பி. 23 நூற்றாண்டுவரை) மக்கள்தொகை கணிக்கப்பட்டது.

3. கௌடில்யரின் அர்தசாஸ்தரத்தில், வரி நோக்கத்திற்காக புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டது என்பது அறியப்படுகிறது.

4. 16ஆம் நூற்றாண்டில் அக்பர் ஆட்சி காலத்தில் புள்ளி விபரம் கணக்கெடுக்கப்பட்டது.

5. 17,18 ஆம் நூற்றாண்டுகளில் முழுவடிவம் பெற்றது மக்கள்தொகை கணெக்கெடுப்பு.

மக்கள்தொகை அதிகரிக்க காரணமாக உள்ள காரணிகள் (உதாரணம்)


___________________________________________________________________________________உலகிலேயே நம் நாட்டில் தான் முதல் முதலாக 1952 ஆம் ஆண்டு, “தேசியகுடும்பகட்டுப்பாடு” என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.”

ூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூ

சாதி, மதம், பொருளாதரம், குடும்பதொழில், நாகரீக வளர்ச்சி  குறைவு, கல்லியறிவுயில்லாமை, திருமணவயது, என்று நீண்டுகொண்டே செல்கிறது.

மால்தஸ் கோட்பாடு. (Malthusian Theory)

உணவு உற்பத்தியானது கூட்டல் விகிதத்திலும்,( 2.4.6.8…) மக்கள்தொகை பெருக்கமானது பெருக்கல் விகிதத்திலும் (2,4,16,32….) அதிகரிக்கிறது. அதனால் மக்கள்தொகை பெருக்கம் என்பது சமுகத்தின் பெரும் பிரச்சனையாகும் என்பதே இவர் கோட்பாடு.

முந்தைய கருத்துக்கள். (மால்தஸ் கோட்பாடுக்கு முன்பு)

1. மக்கட்பெருக்கம் அரசருடைய வெற்றி – பைபிள்.

2. மக்கட்தொகை ராணுவ முன்னேற்றத்திற்க்கு அவசியம் - ஹேரோடோடஸ் (Herodotus)

3. மக்கள் தொகை பெருக்கம் நாட்டிற்க்கு ஆற்றலை அளிக்க கூடிய சொத்து.- மெக்தியாவாலே.(Machiavelle)

4. மக்கட்தொகை நாட்டின் ராணுவத்திற்க்கும், ஆற்றல், மற்றும் வளர்ச்சிக்கும் உதவுகிறது – முசொலிக்.( 

5. சிறுவயது திருமணம், 10 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு – பிரான்சின் கோல்பார்ட்.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில் - போன்றோர் மக்கள்தொகை பெருக்கம் வாழ்க்கை தரம் குறையும் என்று எச்சரித்தினர்.

நம்நாட்டின் முயற்ச்சி.

1 .குடும்பகட்டுப்பாட்டை மக்களிடையே கொண்டு சென்றது.

2. விளம்பரம் செய்து, சில வாசகங்கள் முலம் மக்களை விழிப்படைய செய்தது. “நாம் இருவர் நமக்கிருவர்” என்ற வாசகத்தை சில ஆண்டுகளுக்கு பிறகு “ஒன்று பெற்றால் ஒளிமயம்” என்று மாற்றியது. கட்டுக்குள் வராத நிலையில் “ஒன்று பெற்றால் ஒளிமயம்” அதற்க்கு மேல் “அல்லல்மயம்” என்று அச்சம் ஏற்படும் வகையில் அச்சுறுத்தியது.

3. அரசு அலுவலகங்களில், “குடும்பக்கட்டுப்பாடு” செய்து கொண்டவர்களுக்கு ஊக்கத்தொகை.

4.அரசுபள்ளியில் ஒற்றை பெண்குழந்தைகளுக்கு பல சிறப்பு அம்ச திட்டங்கள்.

5. அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டவர்களுக்கு சில பரிசுகளும் ஊக்கத்தொகையும்.

இவ்வாறு பல, முயற்சிகள் மேற்கொண்டும் நாம் அல்லல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

2035 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கம் குறைய வாய்பிருப்பதாக இதே ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. நாம் இந்த மக்கள்தொகை பெருக்கம் என்ற துயரில் இருந்து விடுபட முயற்ச்சிப்போம்.

தகவல்கள திரட்டு – 1. அண்ணாமலைப் பல்கலைக்கழகம். தொலைதூரகல்விஇயக்கம் – பாடபுத்தகங்கள். மற்றும் விக்கிபீடியா.



No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...