பீகார் மாநில சீதாமாரி.
பீகார்மாநிலத்தில் நேபாளத்திற்கு அருகிலேயே இந்த இடம் அமைந்துள்ளது. ஜனகர் என்ற அரசருக்கு நிலத்தை உழும் சமயத்தில் நிலத்தில் ஒரு குழந்தை கிடைத்தது. அதுவே சீதை என்று நாம் ராமாயணகாவியத்தின் மூலம் அறிகிறோம். சீதை கிடைத்த இடமே இந்த சீதாமாரி. இந்த இடத்தில் ராமர்சீதைக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ளமக்கள் பலர் திரளாக இங்கு வந்து வணங்குகின்றனர்.
உத்ரபிரதேச சீதாமரி.
இந்த இடம், சீதாதேவி, அவரின் தாய் பூமாதேவியுடன், சென்ற இடம். (பூமிக்குள் சென்ற இடம்) வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதாதேவி ,அவரின் இரண்டு மகன்களுடன் இங்கு இருந்த காட்டில் வசித்துவந்தார். ராவணனை கொன்ற வெற்றியுடன் அஸ்வமேத யாகம் செய்தார் ராமர். யாகத்தில் பயன்படுத்திய குதிரை எந்த பகுதி எல்லாம் கடந்து செல்கிறதோ, அந்த இடம் அனைத்தும், யாகம் செய்து குதிரையை அனுப்பும் மன்னருக்கு சொந்தம் என்று அந்த கால கட்டத்தில் ஒரு வழக்கம் இருந்தது. அதன் படி ராமரின் குதிரை சென்றது. வால்மீகி முனிவர் ஆசிரமத்தை கடக்க முயற்சித்த சமயம், ராமரின் இரண்டு புதல்வரக்ளும்,
அந்த குதிரையை வால்மிகி ஆசிரமத்தில் கட்டிபோட்டனர். இதன் காரணமாக ராமருக்கும், அவரின் புதல்வர்கள் லவ,குசனுக்கும் சண்டை மூண்டது. சீதை அங்கு சென்று ராமர்தான் அவர்களின தந்தை என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து, மகன்கள் இருவரையும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, அவரது தாய் பூமா தேவியுடன. பூமிக்கடியில் சென்று விடுகிறார் என்று, காவியம் கூறுகிறது. லவனும், குசனும், தந்தையாகிய ராமனுடன், அயோத்திக்கு சென்றுவிடுகின்றனர். இலக்குமியின் அவதாரமாகிய சீதையின் அவதார காலம் இதனுடன் முடிவடைகிறது. சீதாதேவி, பூமாதேவியுடன் சேர்ந்த இடமே இந்த சீதாமாரி.
Idol of SeethaDevi.
No comments:
Post a Comment