ஜனக்பூர் (ராமாயண தலங்கள் எண்-1)
ஜனக்பூர் என்ற இடம் ராமாயணகாவியத்தலைவி சீதா தேவி பிறந்த இடம். அவரின் தந்தை ஜனகர் ஆண்ட இடமாதலால் ஜனக்பூர் என்று அழைக்கப்படுகிறது. தற்பொழுது இந்த இடம் நேபாள நாட்டில் உள்ளது. காட்மாண்டுவில் இருந்து 225 கி.மீ. தொலைவில் உள்ளது. மிதிலை என்ற இடத்தின் அரசனான ஜனகரின் நினைவாக 18 நூற்றாண்டில் ஜனக்பூர் என்ற இந்த நகரம் உருவாக்கப்பட்டது. இந்நகரத்தின் வடமேற்கில் ராமர் முறித்த வில் கிடைத்ததாக தொல்லியல் துறை அதன் ஆய்வில் வெளியிட்டது. இந்த இடம் தற்பொழுது தனுஷ் என்று அழைக்கப்படுகிறது இந்த மாவட்டம் தனுஷ் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாவட்டத்தின் தலைநகரமே ஜனக்பூர். 1805 ஆம் ஆண்டு இந்த நகரின் மையப்பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் சீதை அரண்மனை (அல்லது) கோவில் கட்டப்பட்டது. கங்கா சாகர், தனுஷ் சாகர் என்ற பெயரில் குளங்கள் உள்ளன. (தரிசனநாள் -8.9.2022)
கூடுதல் தகவல்கள்.
8.9.2022 உடன் எங்களது, நேபாள பயணம் முடிவடைந்தது. நேபாள நாட்டிற்கு செல்ல Passport தேவையில்லை. அவர்கள் ரூபாயின் மதிப்பைவிட நமது நாட்டு ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நாம் வாங்கும் பொருட்கள் நமது ரூபாய் மதிப்பிற்க்கு கணக்கிட்டு வாங்கிக்கொள்கின்றனர். மிக சிறிய கடைகளில் நமது ரூபாய் வாங்க மறுக்கின்றனர். அங்கும் அவர்களின் பணத்தை rupee என்றே சொல்கின்றனர்.
PALACE VIDEO.
No comments:
Post a Comment