சித்ரகூடம். (ராமாயணகாவிய தலம்-5)
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பந்தல்கண்ட் என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது இந்த இடம். சித்ரகூடம், உத்ரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. வரலாறு, மற்றும் தொல்லியல் துறை சிறப்புவாய்ந்த பகுதியாக உள்ளதால் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்கிறது. இந்த 2022 ஆம் ஆண்டிலேயே சிறந்த வனப்பகுதியாக திகழ்கின்ற இந்த வனப்பகுதி , திரேதாயுக நிலையை யோசிக்கும் போது ஆர்வமும், அச்சத்தையும் உண்டு செய்கிறது. உலக காலத்தை 4 யுகங்களாக பிரிக்கின்றனர். ராமாயணம் இரண்டாவது யுகமான திரேதாயுகத்தில் நடைபெற்றது என்று ஆன்மீகவாதிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படுகிறது. தற்சமயம் 4வது யுகமான கலியுகம் நடைபெறுகிறது.
இராமரின் 14 ஆண்டுகால கானகவாழ்வில், 10 ஆண்டுகளுக்கு மேல் சித்ரகூட காட்டில் அனுசியா, அத்ரி, மார்கண்டேயர் போன்ற முனிவர்களுடன் தங்கி, இங்கு தவம் செய்ததாக ராமாயணத்தில் கூறப்படுகிறது.
நாங்கள் பிரயாக்ராஜ்-ல் தங்கி ஒரு நாள் சுற்றுலாவாக சித்ரகூடம் சென்றதால் சில இடங்களுக்கு மட்டுமே செல்லமுடிந்தது. சென்ற இடங்களில் படங்களும், videoகளும்.
ஆஞ்சநேயர் கோவில்.
அனுசியாதேவி ஆசிரமம்.
ராமாயணபடக்காட்சி காட்சியகம்.
குப்த்கோதாவரி (குகை).
பெருமாள் கோவில்.
காக்காசுரன். அசுரன் காகம் வடிவில் வந்து சீதாதேவியை துன்புறுத்திய இடம்.
Manthagini River at Chitrakoot.