சுருட்டப்பள்ளி (தரிசன நாள் 19MARCH2022)

மரகதாம்பிகை உடனுறை பள்ளிகொண்டீஸ்வரர் என்ற இந்த தலம் ஆந்தரமாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வித்யாரண்யர் என்ற விஜயநகரபேரரசரால் கட்டப்பட்டது. 


                                                                   








தல வரலாறு.

துர்வாச மகரிஷி சாபத்தால் இந்திரலோக பதவியை இந்திரன் இழந்தான். அசுரரை வெற்றியடைய பாரக்கடலை கடைந்து அமுதம் உண்டு பலம் பெறவேண்டும் என்று தேவர்களின் குரு பிரகஸ்பதி கூறுகிறார். மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக கொண்டு பாற்கடலை கடைகின்றனர். பாம்பு வலிதாங்கமுடியாமல் நஞ்சை கக்குகிறது. தேவரும், அசுரரும் சிவபெருமானை வேண்ட, ஈஸ்வன் சுந்தரரை அனுப்ப அவர் அனைத்து விஷத்தையும் நாவல் பழம் போல் உருட்டி சிவனிடம் கொடுக்க, இந்த நஞ்சினால் உலக மக்களுக்கு கேடு விளையும் என்று சிவன் விஷாபகரண மூர்த்தியாகி  நஞ்சை விழுங்குகிறார். பார்வதி அம்மை பயந்து அவரது கழுத்தினை விட்டு இறங்காதவாறு தடுக்கிறார். இங்கிருந்து கைலாயம் செல்லும் வழியில் அம்பிகையின் மடியில் தலைவைத்து சற்று இளைப்பாறிய இடமே இந்த சுருட்டப்பள்ளி என்று ஸ்கந்தபுராணமும், சிவபுராணமும் கூறுகிறது.


ஆலைய சிறப்பு.

  • பள்ளிகொண்ட கோலம்.

 அம்பிகையின் மடியில் தலைவைத்து பள்ளி கொண்டகோலத்தில் சிவன் இருக்கும் ஒரேவொருதலம்.

  • தம்பதியர் தலம்.

விநாயகர் சித்தி, புத்தியுடனும், தர்மசாஸ்தா பூர்ண, புஷ்கலையுடனும், குபேரன் கௌரிதேவியுடனும், தட்சணாமூர்த்தி மனைவி தாராவுடன் தாம்பத்ய கோலத்திலும்,  அருள்பாலிக்கின்றனர்.

  • பிரதோஷ வழிபாடு துவங்கிய இடம்.

பிரதோஷவழிபாடு என்பது முதலில் இத்தலத்தில் துவங்கியது. இதைதொடர்ந்தே பிற சிவன் கோவில்களில் நடைமுறைபடுத்தப்பட்டது.

4. துவாரபாலகர்களுக்கு பதிலாக சங்கநிதியும், பதுமநிதியும் இருக்கின்றனர். அம்பிகை சன்னதிக்கு வெளியில் இருபுறமும் காமதேனுவும், கற்பகவிருட்ஷமும் உள்ளது.  







பிறந்தநாள் பரிசு.

 



இரவுநேரம் என்னுடைய 4மாத பேத்தி வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்ட நான், பேபி எங்கம்மா போன? என்று கேட்டதற்கு பாட்டி,  Babyhug  கடைக்கு, சென்றேன் என்று கூறிவிட்டு பாட்டி கடையில் புடவை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்றாள் . நான் மிவும் ஆச்சரியமாக என்ன புடவையா என்றேன், ஆமாம் பாட்டி கடையில் எனக்கு Dress, பக்கத்து வீட்டு ஷியாம் போடுவது போல் Dress மட்டும் தான் இருந்தது, நான் உடனே அழுதேனா கடையில் உள்ள அக்கா அழாதே நான் உன்னுடைய பாட்டிக்கு புடவை வாங்கி தருகிறேன் என்று சொல்லி உடனே வாங்கி கொடுத்தார் நன்றாக உள்ளதா? என்று என்னை கேட்டாள். ஆ… புடவை சூப்பர் என்று சொல்லி வாயைப்பிளந்து கொண்டு எழுந்த எனக்கு புரிந்தது இவை அனைத்தும் கனவுதான். நான்கு மாத குழந்தை எப்படி பேசும்? கடைக்கு செல்லும்? கொரோனா காலத்திற்க்கு முன்பு ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு கதை செல்லுவதற்காக, பிரத்யேகமாக கதை ஆசிரியராக நான் பணிஅமர்தப்பட்டிருந்தேன். அப்பொழுது அவர்களுக்காக பல புத்தகங்கள் படித்தேன். அதில் “ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன்” அவர்களின் கதைகள்  படித்தேன். இவரின் கதைகள் படித்து குழந்தைகளுக்கு சொல்லி அவர்களை கவர்வது எனக்கு கடினமாக இருந்த போதிலும்,   விலங்குகள், பறவைகள், பொருட்கள், போன்றவை பேசுவது போன்று எழுதபட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக குழந்தைகள் புத்தக தினம் ஆண்டர்சன் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு முதல். நான் தற்பொழுது என்னுடைய பேத்தியுடன் வசிப்பதாலும், ஆண்டர்சன் கதை நினைவாலும், உருவாகிய சிந்தனையே கனவாக வந்தது. அது மட்டும் அல்லாமல் இரவு என்னுடைய புடவையில் பேத்தி உச்சா வேறு போய்விட்டதால், எல்லாம் சேர்ந்தே எனது கனவுக்கு காரணம் என்று எனது அறிவு உணர்த்தியது. (17.3.2022) காலை எங்களின் அறை கதவை திறந்தால், கதவில் மாட்டியிருந்தது ஒரு பை. அதை திறந்தால் Happy Birthday  Patti Shrvya   என்று எழுதி அதில் எனக்கு பிடித்த Cotton Saree. என்னுடைய கனவு மெய்யானதை நினைத்து நான் 5 நாட்கள் ஆகியும் ஆச்சரியத்தில் திளைக்கிறேன்.




எமதண்டீஸ்வரர் ஆலகிராமம். (தரிசனநாள் 11.3.2022)

 

இருப்பிடம்.

பாண்டிச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் தென்கோடிப்பாக்கம் என்ற இடத்தில் வலதுபுறம் திரும்பி சென்றாலும்; ஆ லகிராமத்தை  அடையலாம். நாங்கள் திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வழியா சென்று கூட்டேரிப்பட்டு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 4 கிலோமீட்டர் தொலைவு சென்று ஆலகிராமத்தை சென்றடைந்தோம். 

தல வரலாறு.

மார்கண்டேயன் மீது வீசப்பட்ட பாசக்கயிறு சிவன் மேலும் விழுந்தமையால் உண்டான பாவம் காரணமாக தர்மத்தை செய்யவிடாமல் துன்பத்தில் தவித்த எமதர்மராஜன் பல தலங்களுக்கு சென்று சிவனை வழிப்பட்டார். ஆலகிராமத்திற்க்கு வந்து சிவனை வணங்கி தவம் இருக்கலானார். சிவன் யமனுக்கு காட்சி கொடுத்து, கோவிலுக்கு எதிரே உள்ள குளத்திலேயே கங்கையை வர செய்து அதில் எமனை நீராட செய்து அவரின் பாவம் நீக்கினார். அதனாலேயே எமதண்டீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

கோவில் சிறப்பு.

1. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தலம் 2015 ஆண்டு திருப்பனி செய்த போது விநாயகர், முருகன், விஷ்ணு, லகுலீசுவரர், ஆகிய தெய்வ திருமேனிகள் கிடைத்தன. விநாயகர் 75 செ.மீ., உயரம், 40 செ.மீ., அகலம் கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகரை விட பழமைவாய்ந்தவர் என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிள்ளையார்பட்டி விநாயகர் 6ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும், இவர் 4 முதல் 6ஆம் நூற்றாண்டிற்க்கு உட்பட்டவர் என்று தெரிவிக்கிறார்கள். அதனால் இவர் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

2. லகுலீசுவரர். 

சிவனின் 28வது நாமமே லகுலீசவரர் என்பதாகும். அகோரிகளே இந்த வடிவத்தை வணங்குவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். 

3. திரிபுரசுந்தரி அம்மன்.

6அடி உயரத்தில் நீலோத்பலம் மற்றும் தாமரை கொண்டும், வலதுகரம் அபயம் அளித்தும், இடதுகரம் வரம் அருளும்படியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வாரத்தின் ஏழு நாட்களும் அம்மனின் முகபாவம் மாறுபட்டுகொண்டே இருக்குமாம். 

4. பிரதோஷநந்தி.



பிரதோஷம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.. பிரதோஷ நேரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது, சுவாசிப்பதை நன்கு உணரமுடியும் என்று அர்சகர் கூறினார்.

5.காஞ்சி மகாபெரியவர்.

காஞ்சி மகாபெரியவர் அவரின் யாத்திரை காலங்களில் 1943, 52, 66, 69, 72, என்று 5முறை எமதண்டீஸ்வரரை தரிசனம் செய்துள்ளார் என்று இங்குள்ள அவரின் படம் நமக்கு எடுத்து காட்டுகிறது.







பெசன்ட் நகர் அஷ்டலெஷ்மி கோவிலும், அறுபடைவீடு என்ற அரிய ஆலயமும். (தரிசன நாள்.27.2.22).


 

அஷ்டலெஷ்மி கோவில்.

ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் விருப்பத்தின் பேரில், முக்கூர் ஸ்ரீவரதாச்சாரியாரை, கோவிலை உருவாக்க, கருவியாக கொண்டு, 1974 ஆம் ஆண்டு இக்கோவிலுக்கு அடித்தளம் இடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு அகோபிலமட 44வது குருவான வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகன் அவர்களின் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கோவில் அமைப்பு.

கோவில் அமைப்பு உத்திரமேரூர் சுந்தரராஜபெருமாள் கோவில் போன்றே மூன்று நிலையில் கட்டப்பட்டுள்ளது. கீழ் நிலையில் பெருமாளும் தாயாரும் வீற்றிருக்கின்றனர். ஆதிலெஷ்மி, தான்யலெஷ்மி, தைரியலெஷ்மி, ஒருநிலையிலும், சந்தானலெஷ்மி, விஜயலெஷ்மி, வித்யாலெஷ்மி, ஒரு நிலையிலும், தனலெஷ்மி தனியாகவும். அருள்பாலிக்கின்றனர். திருகோஷ்டியூர் பெருமாள் கோவிலும் இதே அமைப்பில் இருக்குமாம். (திருகோஷ்டியூர் பெருமாளை தரிசனம் செய்யும் பாக்கியம் இதுவரை நான் கிடைக்கப்பெறவில்லை.) 65 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட இக்கோவில், 2012 ஆம் ஆண்டு, 7மில்லியன் ரூபாய் செலவில் புதுபிக்கப்பட்டது. புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை லெஷ்மிக்கு மாவிளக்கு இடும் வழக்கம் மிகவும், சிறப்பாக நடைபெறுகிறது.



அறுபடைவீடு.

காஞ்சி பரமாச்சாரியாரின் வருப்பத்திற்கு இணங்க, 1985ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களால் தழிழக அரசு சார்பாக, இக்கோவில் திருப்பணிக்காக நிலம் வழங்கப்பட்டது. டாக்டர் அழகப்ப அழகப்பன் என்பவர் காஞ்சி பரமாச்சாரியாரின் ஆணையை ஏற்று இக்கோவிலை தோற்றுவித்தார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டது.

1. 1995- சுவாமிமலை சன்னிதி.

2;. 1998- ஸ்ரீ மகாவல்லபகணபதி, பழனி, திருத்தணி சன்னதிகள்.

3. 2002- திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை சன்னதிகளும் கட்டப்பட்டது. அறுபடைவீடு சன்னதிகளில் அந்த அந்த தலத்திற்கான திருப்புகழும், விநாயகர் சன்னதியில் “உம்பர்தருத் தேநுமணிக்” என்ற  விநாயகர் துதி திருப்புகழும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. பைரவர், நவக்கிரஹம், இடும்பன் என்று ஏனைய சன்னதிகளையும் உள்ளடக்கிய இந்த கருங்கல் கோவில் மிக அற்புதமாக மன்னர்கள் கட்டிய கோவிலுக்கு இனையாக உள்ளது.   








 


திருவான்மியூர் மருந்தீஸ்வரர் (தரிசன நாள் 27.2.2022).

 



அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத மருந்தீஸ்வரர். இறைவன் மேற்கு முகமாகவும், அம்மன் தெற்கு முகமாகவும், விநாயகர், முருகன் கிழக்கு முகமாகவும் வீற்றிருக்கின்றனர். 7நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு வாயில்களை கொண்டுள்ளது, இக்கோவில். 

பெயர் காரணம். 

அகத்தியருக்கு இறைவன் மருந்து மூலிகைகள் பற்றி உபதேசம் செய்ததால் மருந்தீஸ்வரர் என்ற பெயர் கொண்டார். தென்திசை நோக்கி பயணித்த வால்மிகி முனிவருக்கு கிழக்கு கடற்கரையோரத்தில் வன்னி மரத்தடியில், ஈசன், “உமையுடன் நான் இங்கிருக்கிறேன்” என்று அசரீரி முலம்  முனிவருக்கு உணர்த்தி, காட்சி அளித்தமையால் திருவான்மியூர் என்று பெயர் பெற்றது. 





தீர்த்தம்.

இறைவன் தலையில் உள்ள கங்கையில் இருந்து விழுந்த 5 துளிகள் 5 தீர்த்தங்களாகின.  ஜன்மநாசினி, காமநாசினி, பாபநாசினி, ஞானதாயினி, மோட்சதாயினி என்ற இந்த 5 தீர்தங்களில், கிழக்கு கோபுர எதிரில் தெப்பகுளமாக பாபநாசினியும், கோவில் உட் பகுதியில் ஜன்மநாசினி என்ற இரண்டு குளங்கள் மட்டுமே உள்ளன்.

தலமகிமை. 

வால்மீகி முனிவர் மூலம் பிரம்மனால் அமைக்கப்பட்ட கோவில். 11 நாட்கள் பங்குனி பிரம்மோற்சவத்தை பிரம்மனே ஏற்படுத்தி இறைவனை வழிப்பட்டார் என்று தல புராணம் கூறுகிறது.

காமதேனு.

காஸ்சிப முனிவரால் சாபம் பெற்ற காமதேனு மருந்தீஸ்வரர் திருமேனியில் பால் சுரந்து சாபம் நீங்கப்பெற்றது. இதனால் ஈஸ்வரன் பால் வண்ணநாதர் என்றும், அருள் செய்கிறார். திருப்பாற்கடலில் கடைந்த அமுதத்தால் பிரதிஷ்டை செய்ததால் அமுதீஸ்வரர் என்றும் வணங்குகிறோம். நான்கு வேதங்களும் பூஜித்ததால் வேதபுரீஸ்வரர்ஆக காட்சி தருகிறார். திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தரால் தேவார பாடலும், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றுள்ளது.


  


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...