மகாசிவராத்திரி, பட்படேஸ்வர் மகாதேவ் மந்திர்

 மகாசிவராத்திரி, பட்படேஸ்வர் மகாதேவ் மந்திர் (8.3.2024).


இந்த ஆண்டு (2024) சிவராத்திரியன்று நாங்கள் உதைபூரில் இருந்தோம். கடந்த (ஆண்டு2022) முறை டிசம்பர் மாதம் உதைபூரில் இருந்த பொழுது ஆருத்ராதரிசனம், அனுமத்ஜெயந்தி, மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற புனித நாட்களில் கோவில் வழிபாடு எங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்த சிறப்பு நாட்களை பற்றி இந்த ராஜஸ்தான் மாநில மக்கள், அறியவில்லை. வைகுண்ட ஏகாதசியன்று நானும் என்கணவரும் ஒரு கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தோம். கோவிலில் எங்களை தவிர யாருமே இல்லை அர்ச்சகர் உள்பட. ஆருத்ராதரிசனம் அன்று காலை மிகுந்த குளிர்காரணமாக (பகல்12மணி வரை 6,7டிகிரிதான் இருக்கும்) நான் மதியம் 12 மணிக்குதான் களி மற்றும் கூட்டு செய்து சிவபெருமானுக்கு நிவேதனம் செய்தேன். 500 மீட்டருக்கு ஒருசிவன் கோவில் இருந்தாலும். (நம் தமிழ்நாட்டில் பிள்;ளையார் கோவில் போன்று அங்கு எங்கும் ஈஸ்வரன் கோவில் காணப்படும்) அன்றைய தினம் எந்த சிறப்பும் கோவிலில் இல்லை. (ஆருத்ராதரிசனம் பற்றி ராஜஸ்தான் மக்கள் அறிந்திருக்கவில்லை). 






ஆனால் இந்த ஆண்டு சிவராத்திரியன்று அனைத்துசிவன் கோவில்களிலும் கோலாகல கொண்டாட்டமாக ஒலியும்  ஒளியும் மிக சிறப்பாக இருந்தது. என்னுடைய மகளின் வீட்டு உரிமையாளர்கள் பரிந்துறையின் பேரில், எங்கள் வீட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவில் ஆரவல்லி மலைக்கருகில் அமைந்துள்ள “பட்படேஸ்வர் மகாதேவ்” இந்த கோவிலுக்கு நாங்கள் நடந்து சென்று வழிபட்டோம். 

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அமரேஸ்வர் கோவிலுக்கும் சென்று வட இந்தியர்களின் முறைப்படி நாங்களே எங்கள் கையால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பூ சாற்றி தீபம் காட்டி வழிபட்டோம். வட இந்தியாவில் நம்வூர் போன்று இறைவனுக்கும் நம்மைபோன்ற பக்தர்களுக்கும் இடையில் அர்சகர்கள் இருப்பது இல்லை. உதாரணமாக பண்டரிபுரத்தில்,  சுதாமா கிருஷ்ணரை கட்டி மகிழ்ந்தவாறு, நாமும் பெருமாள் பண்டரிநாதனை கட்டி மகிழலாம்.

 பட்படேஸ்வர் மகாதேவ் மந்திர்.




நாங்கள் தரிசனம் செய்த மற்ற சிறிய சிவாலயங்கள்.












பாத்திரம் துலக்கும் இயந்திரம். (Dishwasher)



 பாத்திரம் துலக்கும் இயந்திரம். (Dishwasher)

பல இயந்திரங்களை நான் வாழ்கையில்; பயன்படுத்தினாலும், புதிதாக பாத்திரம் துலக்கும் இயந்திரத்தை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். பயன்பாட்டின் அனுபவமே இந்த Blog. 

Usual Dialogue






எந்த இயந்திரத்தை நாம் பயன்படுத்தாரம்பித்தாலும், நாம் பயன் படுத்தும் பழய முறைதான் சிறந்தது என்ற எண்ணம் நம் அனைவரிடமும் உண்டு. 

உதாரணமாக வாஷிங்மிஷின்- கையால் துவைப்பதுதான் அருமை.

மிக்சி- அம்மி போல் சட்னி சுவையாக இல்லை. இவ்வாறு அனைத்து புதுமையையும் ஏற்க முடியாமல் குறைகூறுவதே வழக்கமாகி விட்டது நமக்கு. ஆனால் பயன்பாட்டில் குறைவைக்கமாட்டோம்.

முதலில் நிறையை பார்போம்.





எண்ணெய் பாத்திரங்கள். டீ வடிகட்டி, காய்சீவி, கத்தி, தோல்சீவி , கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள், இவைகள் துலக்க மிகவும் சிறந்தது. 

குளிர் பிரதேசத்தில் வசிப்பர்களுக்கும், டிட்டர்ஜெண்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கும் வரப்பிரசாதம். பெரிய அளவில் ஒரே மாதிரியான பொருட்கள் துலக்க சிறந்தது. (குறிப்பாக உணவகம், தங்கும்விடுதி, கோவில் தர்மசாலா இவைகளுக்கு).

பாத்திரம் அடுக்கும் முறை.



பாத்திரங்களை வகையாக பிரித்து அடுக்க வேண்டும். இயந்திரத்திலேயே தனி தனி இடங்களாக அமைத்திருப்பார்கள். பாத்திரம் அடுக்க மிகவும் பொறுமை அவசியம். பால் பாத்திரம், டீபோட்ட பாத்திரம், இவ்வாறு கடினமாக சமைத்த பாத்திரங்களை சுத்தம் செய்ய இயந்திரம் மிகவும் கஷ்டப்படும். எல்லாபாத்திங்களுக்கும் ஒரே அளவு திறனைதான்  அதனால்  கொடுக்கமுடியும். ஆழ்ந்து சமைத்த பாத்திரங்கள், மற்றும்  சில பாத்திரங்களை சற்று கையால் கிளீன் செய்த பிறகு தான் மஷினில் போட வேண்டும். சற்று கவனம் செலுத்தி போட்டால் தான் நன்றாக துலக்கி கொடுக்கும். மிக சிறிய பாத்திரங்கள் அடுக்குவதும் கடினம் தான்.  இயந்திரத்தில் இரண்டு தளம் அமைத்திருப்பார்கள். இவற்றிற்கு கீழே விசிறி இருக்கும். நாம் அடுக்கும் பாத்திரங்கள், விசிறியில் அடிபடாதவாறு அடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து பாத்திரங்களும் தலைகீழாக கவிழ்த்துதான் அடுக்க வேண்டும். ஒன்றுக்குள் ஒன்றும் அடுக்ககூடாது. கரண்டியைகூட கவிழ்த்துதான் வைக்க வேண்டும்.

எப்படி துலக்குகிறது. (நான்  புரிந்துகொண்டது)

தண்ணீரை நன்கு சூடுபடுத்தி உள்ளிருக்கும் விசிறியை பயன்படுத்தி அனைத்து பாத்திரங்களையும் சுத்தப்படுத்துகிறது. இதற்கு மூன்றுவகையாக துலக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1. ஓவ்வொருமுறையும் பயன் டுத்தும் டிட்டர்ஜென்ட் பௌடர். 2. பத்துமுறை பயன்; பாட்டிற்க்ஒருமுறை, Rinse aid , மற்றும் Rocksalt. என்று பயன்படுத்த வேண்டும். Washing Mechine போன்றே, சீக்கிரம் துலக்க, ஆழ்ந்து துலக்க, கடினமாக துலக்க என்று பல விருப்பதேர்வு (option) உள்ளது. நாம் பாத்திரங்களின் தேவை மற்றும், நேரத்திற்கு ஏற்றார் போல் நம் விருப்பபடி துலக்கும் முறையை தேர்வுசெய்து கொள்ளலாம். 

என் பாட்டியின் ஆலோசனை எனக்கு எப்படி உதவியது? 

பால் மற்றும் தயிர் பாத்திரங்களை அப்படியே தேய்க போடகூடாது என்று எப்பொழுதும் கூறுவார். அவர் சொல்லும் காரணம் உணவு தெய்வம் போன்றது (உணவுக்கு மதிப்பளிக்க வேண்டும்) இந்த சிறிய அளவு உணவு கூட வீணடிப்பு  செய்ய கூடாது என்பதே இதன் நோக்கம். அதனால் இந்த பாத்திரங்களின் அடியில் சற்று நீர் ஊற்றி அதை குழப்பி மோருடன் கலக்கும் பழக்கத்தை கட்டாயப்பாடமாக கொண்டிருந்தேன். இது எனக்கு Dishwasher பயன்படுத்தும் சமயம் உதவுகிறது. இதே போன்று பொரியல் செய்யும் கடாய், குழம்பு சாம்பார் வைக்கும் கடாய், கூட்டு பாத்திரம் இவற்றில் சற்று சாதம் சேர்த்து அதை சாப்பிடும் பழக்கமும் என்னிடம் இருந்தது. இந்தபழக்கத்தால் பாராட்டும் பெற்றிருக்கிறேன், கேலிக்கும் ஆளாகியுள்ளேன்.  ஆனால் இந்த பழக்கம் இப்பொழுது எனக்கே உதவியாக உள்ளது. 

யார் விரும்புவர் (என் கனிப்பு)

அலுவலகம், வீடு, வியாபாரம் என்று, மிகவும் பரபரப்பாக உள்ளவர்கள். தற்கால பெண்கள். 20, 30 ஆண்டுகள் முழுநேரம் வீட்டைமட்டுமே பராமரிப்பவர்கள் இதை விரும்பமாட்டார்கள். சில பெண்களுக்கு பாத்திரம் துலக்கபிடிக்காது, அருவருப்பு படுபவர்களாககூட இருப்பார்கள். இப்படி பட்டவர்கள் எத்தனைவயதினரானாலும் இதை விரும்பலாம். ஆனால் உணவு கழிவு இல்லாமல்தான் இயந்திரத்தில் போடவேண்டும். சிங் சுத்தம் செய்வது எப்படி இருந்தாலும்  மாறாது.


சரியாக துலக்காத டீ பாத்திரம்

Government Hospital Of Thoracic Medicine (Tambaram Sanatorium)

 தாம்பரம் சாணிடோரியம்  காசநோய் மருத்துவமனை (அ) நெஞ்சகநோய் மருத்துவமனை. (24.4.2024)







வரலாறு

1928 ஆம் ஆண்டு ஆரோன் சவரி முத்து என்ற இங்கிலாந்து மருத்துவர் 250 ஏக்கர் நிலப்பரப்பில் 12 படுக்கைகளுடன் காசநோய் மருத்துவ மனையை உருவாக்கினார்.



இவர் மகாத்மா காந்தியுடன் நல்ல நட்பில் இருந்தார். அதன் காரணமாக 1920 முதல் இந்தியாவில் அதிக காலம் தங்கி பணிசெய்து வந்தார்.  காசநோயாளிகளுக்கு ஒரு சுகாதார நிலையமும் ஏற்படுத்தினார். மீண்டும் இங்கிலாந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், 1937 மார்ச் மாதம் சென்னை அரசுக்கு இந்த மருத்துவமனையை விற்றுவிட்டார். கணிதமேதை ராமானுஜம் இந்த மருத்துவமனையில், காசநோய் நோயாளியாக இருந்து சிகிச்சை எடுத்து கொண்டார் என்பது கூடுதல் தகவல்.







1947 ஆம் ஆண்டு விடுதலைக்கு பிறகு நோயாளிகளுக்கு ஒரு புனர்வாழ்வு குடியிருப்பும் 17.14 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டது. 1980 ஆம் ஆண்டு முதல் காசநோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது காரணமாக, 1986 முதல் நெஞ்சகநோய் மருத்துவமனைணாக உருவாகியது. 1993 ஆம் ஆண்டுமுதல் எச்.ஐ.வி.,எய்ட்ஸ், காசநோய் ஆராய்சி மையமாகவும் மேம்படுத்தப்பட்டது. 

நான் இங்கு சென்றதன் காரணம்.

நானும் என் கணவரும் இந்த ஆண்டு (2024) அமர்நாத் யாத்திரை செல்ல, முடிவெடுத்து, மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக இந்த மருத்துவமணையை அனுகிணோம்.  அரசு மருத்துவ அதிகாரியிடம் மட்டுமே சான்றிதழ் பெற வேண்டும், என்பதற்காகவும், எங்கள் வீட்டிற்கு மிக அருகாமையில் இருந்தமையாலும் இங்கு சென்றோம். மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சென்று, பல  பரிதோனைகளுக்கு பிறகு சான்றிதழ் பெற்று திரும்பினோம்.

இன்றைய தேவை






நிலைய மருத்துவரிடம் இருந்து சான்றிதழில் கையொப்பம் பெரும் சமயம் அவரிடம் நாங்கள் மருத்துவ சோதனையின் சமயம் எதிகொண்ட சிக்கல்களை தெரிவித்தோம். (2022 ஆம் ஆண்டுமுதல் அமர்நாத் யாத்திரிகர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது) அவரும் நடைமுறை சவால்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். 15 ஆண்டுகளாக பணிதேவையாளர்கள் நிரப்பபடாமல் உள்ளதாகவும். தற்காலிக (அ) பகுதி நேர பணியாளர்களை கொண்டு வேலைகள் நடை பெறுவதாகவும், மருத்துவமனைக்கு பல தேவைகள் உள்ளது என்றும் கொடையாளர்கள் இருந்தால் தெரிவிக்கவும் என்று தெரிவித்தார். இந்த அரசு மருத்துவமனைக்கு கொடை குடுக்க விருப்பம்உள்ளவர்கள், Google இவரின் கைபேசி என்னை பெற்று  Whatsapp-ல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு பின் அவரை தொடர்பு கொண்டு, வழங்கலாம் என்றும் எங்களிடம் தெரிவித்தார். 

 இந்த மூன்று நாட்களும் நான் மருத்துவமனையில் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து, மருத்துவமனைபற்றிய அடிப்படை செய்திகளுடன் இந்த  blog-வடிவமைத்துள்ளேன்.


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...