KADUGODI TREE PARK

 காடுகோடி ட்ரீ பார்க் (15.12.2024)



 அடிப்படை செய்தி.






  (While field)மெயின் ரோடு, காடுகோடி ட்ரீ பார்க் மெட்ரோ நிலையம். (Purple Line) அருகில் அமைந்துள்ளது.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவால்  Whitefield பகுதி மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.






சுமதுரா என்ற பொது அமைப்பால் பாராமரிக்கப்பட்டும், உருவாவதற்கும் அடிப்படையாகவுள்ளது.

 பூச்சி வகைகள், பறவைகள், வண்ண த்துபூச்சி வகைகள், 50 மேற்பட்ட வகை மரங்கள், இவற்றை பற்றிய அடிப்படை செய்திகளை பலகைகள் முலம் எழுத்துவடிவில் வெளியிட்டுள்ளனர்.





இந்த பூங்கா குழந்தைகளுக்கான விளையாட்டு இடம், காசிகோ (அமர்ந்து களிக்கக்கூடியஇடம்),  திறந்தவெளி உடற்பயிற்சிகூடம், வண்டு மற்றும் தேனிகளுக்கான கூடு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

சிறந்த நடைபயிற்சிக்கு  உதவியாகவும், மாசற்ற காற்று கிடைக்கும் இடமாகஉள்ளது.  (Entrance fee - 10 Rs.)


சுப்ரமணியசுவாமி கோவில் ஹலசூர்

 சுப்ரமணியசுவாமி கோவில் ஹலசூர் (தரிசனநாள். 8.12.2024)

அமைவிடம்.





கர்நாடகா மாநிலம் பெங்களுர் நகரப்பகுதியில் ஹலசூர் என்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. (Purple line)

தலவரலாறு.




மைசூர் மகாராஜா ஒருவர், அவரின் தாய்மாமாவிறக்கு கண் நோய் ஏற்பட, அவரை காண்பதற்காக சென்றுள்ளார். செல்லும் வழியில் ஒரு எறும்புபுற்றை கண்டவுடன், என் மாமாவிற்கு கண்நோய் குணமடைந்தால், நான் இந்த இடத்தில் ஒரு கோவில் கட்டுகிறேன் என்று இறைவனை வேண்டி கொண்டதன் அடிப்படையில் கட்டப்பட்டதே இந்த கோவிலாகும். 

அறுபடைவீடுகளில் ஒன்றான “திருத்தனி” போன்று முருகன் இங்கு வீற்றிருக்கிறார்.  மலேசியா நாட்டில் உள்ளது போல் இங்கும் உயரமான ஒரு முருகன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பலதோஷங்களுக்கு பரிகாரமாகவும், குறிப்பாக சர்பதோஷநிவர்தி (நாகதோஷம்) தலமாகவும் விளங்ககிறது. இரண்டு வாயில்களை கொண்ட இந்த கோவில் சோமேஷ்வர் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. கோவில் எதிரில் உள்ள குளத்தில் தெப்போற்சவம் ஆண்டு தோறும் நடை பெறுகிறது.

சோமேஸ்வர் கோவில்.


அமைவிடம்.

கர்நாடகா மாநிலம் பெங்களுர் நகரபகுதியில் ஹலசூர் என்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. (Purple line)




சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலாகும்.  பின் கெம்பகௌடா மற்றும் விஜயநகர அரசர்களால் கட்டுமானபணி  மேம்படுத்தப்பட்டன. பெங்களுரின் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இறைவன் காமாட்சி சமேத சோமேஸ்வர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் மகாகாலேஷ்வர் போன்று முக அமைப்பு மீசையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். கற்பகிரக சுற்று பரகாரத்தில், நாயன்மார்கள், மற்றும் கணபதி, முருகன், துர்கை சன்னதிகள் உள்ளன. வெளிபிரகாரத்தில், முதலில் கோவிலுக்குள் நுழைந்தவுடன், வலது பக்கத்தில் விநாயகர் சன்னதியும், இடது பக்கததில், ஈசன் பீமாசங்கர், சந்ரமௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர்,  என்ற பெயரில் தனிதனி சன்னதிகளில், அருள்பாலிக்கின்றனர். கர்நாடக மாநில சிவன் கோவில்களில் நந்திகள் அனைத்தும் மிக பிரம்மாண்டமாக காட்சி தருகின்றன.






மல்லேஷ்வரம்

 மல்லேஷ்வரம் (தரிசனம்- 8.12.2024).



ஸ்ரீதட்ஷிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்ரம்.







அமைவிடம்.
கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற பெங்களுர் நகரப்பகுதியில் அமைந்துள்ளது.


வரலாறு
பூமியில் புதையுண்டு இருந்த இந்த கோவில் 1997 ஆம் ஆண்டு மீட்டு எடுக்கப்பட்டது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ததாக கருதப்படுகிறது. 
கோவில் சிறப்பு.
நந்தியின் வாயில் இருந்து தொடர்ந்து விழும் நீரானது, கீழே இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் இயற்கையாக அமைந்துள்ளது. லிங்கத்தின் மீது விழும் அபிஷேக நீரானது,அதன் கீழ் இருக்கும் தெப்பக்குளத்தில் சேர்க்கப்படுகிறது. இதைதவிர விநாயகர், முருகன், நவகிரகங்கள் என்று மூன்று சன்னதிகள் உள்ளன. மிக இயற்கையான சூழலில் அமைந்துள்ளது இந்த தெய்வீகம் நிறைந்த இடம்.
காடு மல்லேஸ்வரர் கோவில்.






அமைவிடம்.
கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற பெங்களுர் நகரப்பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு


வெங்கோஜி என்ற அரசரால்,17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், காட்டு பகுதியில் அமையப்பெற்றதால், காடு மல்லேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இந்த அரசர் வெங்கோஜிராவ் தஞ்ஜாவூரையும் ஆட்சி செய்த காரணத்தால், இந்த கோவில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. தற்காலத்திலும் ஒரு நல்ல சூழலில் அமைந்துள்ளது மகிழ்சியளிக்கறது.
மேற்கண்ட இந்த இரண்டு கோவில்களையும் தேடி சென்று வழிபட்டபோது, கீழே குறிப்பிட்ட இந்த இரண்டு கோவில்களையும் தரிசனம் செய்யும் வாய்ப்புபெற்றோம்.
ஸ்ரீ கங்காதேவி கோவில்;


ஸ்ரீதட்ஷிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்ரம் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது.
கங்கம்மா என்பது கங்கை நதியாகவும், கங்கா என்ற அம்மனாகவும் மக்களால் வழிபடப்படுகிறது.
ஸ்ரீலெஷ்மி நரசிம்மர் கோவில்.


இந்த கோவிலும் கங்காமாதா கோவிலை தொடந்து இருந்தது. இந்த ஆலயம் 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாம். பெங்களுர் நகர மக்கள் தரிசனம் செய்யும் கோவில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.


கார்திகை மாத நரசிம்மர் தரிசனம். Part - 1

 கார்திகை மாத நரசிம்மர் தரிசனம். Part - 1 (தரிசனநாள் - 24.11.2024)


முன்னுரை 

பாலாறு வடகரை தென்கரை தலங்கள் சென்ற போது, சக பயணியர் ஒருவர் மூலம் 42 நரசிம்ம தலங்களை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த அனைத்து தலங்களும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அமைந்துள்ள கோவில்கள். இதில் அகோபிலமும் ஒன்று. இந்தகோவில்பற்றி அனைவரும் நன்கு அறிவர். ( “அகோபிலம்” -  என்றுடைய தரிசன பிளாகும் உள்ளது). நாங்கள் இக்கோவில்களை தேடி சென்று தரிசனம் செய்ய முடிவெடுத்து முதல் கட்டமாக ஓசூரில் உள்ள நான்கு தலங்களை நேற்று தரிசனம் செய்தோம். மிகவும் புகழ் அடையாத சிறய கோவில்கள், தேடி சென்று தரிசனம் செய்வது சற்று கடினமாகதான் இருந்தது.(இருக்கும் என்பதும்  நாங்கள் அறிந்ததே)

 கார்திகை மாதம் நரசிம்மர் தரிசனத்திற்கு மிகவும் உகந்த மாதம். இதன் காரணமாக இன்று தொடங்கிய (24.11.2024),எங்களனின் நரசிங்கபெருமாள் தரிசனம், என்று முடிவடையும் என்பது எங்களுக்கே தெரியாது.

1. ராயக்கோட்டா லெஷ்மி நரசிம்மர்.




இந்த ஆலயம் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் சிறிய கோவில். இங்கு வீபூதி பிரசாதம் கொடுத்தது என்னை வியப்பில் ஆழ்தியது. 

2. லெஷ்மி நரசிம்மர்.





ராயக்கோட்டா கோவிலில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள், நேதாஜி நகர் ராமர் கோவில் என்று கேட்டு செல்லவேண்டும். இந்த ராமர் கோவிலில், நரசிம்மர் ஒரு சன்னதியில்; நமக்கு அருள் பாலிக்கிறாரர். இக்கோவில் பட்டாச்சாரியார் பிற கோவில்களுக்குசெல்ல  எங்களுக்கு வழிகாட்டினார்.

3. வராகநரசிம்மர்.





 ஓசூர் டி.வி.எஸ். நகர் ஆஞ்சநேயர் கோவில் என்று கேட்டு செல்ல வேண்டும்,  இந்த நரசிம்மரை தரிசனம்செய்ய. இக்கோவிலில், ஆஞ்சநேயர்,  நரசிம்மர்  சக்கரத்தாழ்வார் இவர்களுக்கு தனி தனி சன்னதிகள் இருந்தன.

4. மடிவாலம் நரசிம்மர்.




ஓசூரில் இருந்து 22கி.மீ. தொலைவில் மடிவாலநல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். மிகவும் சிறிய கிராமத்தில் இயற்கைசூழலில் அமைந்துள்ளது. நாங்கள் காலை 10.30 மணிக்கு சென்றதால் கோவில் மூடப்பட்டிருந்தது. 10 மணிக்கே நடை சாற்றிவிடுவார்கள் என்று கிராமத்துமக்கள் தெரிவித்து, பட்டாசாரியாரின் கைபேசி எண்ணையும் எங்களுக்கு கொடுத்தனர். மாலை 5மணிக்குதான் கோவில் திறப்பதாக அவர் தெரிவித்தார். “படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே” என்று 5, 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நாங்கள், எங்கள் சூழ்நிலை காரணமாக உடனே வீடு திரும்பினோம். மீண்டும் மடிவாலம் நரசிம்மரில் இருந்து துவங்குவோம் எங்களின் நரசிம்ம ஆலய தரிசனத்தை.


(

( 2019 Bhahavathamela Malattur,  Pragalatha Charithram Drama Cheracters  1. Bhatha Prahallathan, 2. .Hiranyakasubu )

முடிவுரை.

1.தெலுங்கானா, மட்டப்பள்ளி, யோகநரசிம்மர்

2. தெலுங்கானா, வடபள்ளி, ஸ்ரீலெஷ்மி நரசிம்மர்.

3. ஆந்திரா, கேதாவரம், ஸ்ரீவஜ்ரநரசிம்மர்

4.ஆந்திரா, வேதாத்ரி ஸ்ரீயோகானந்தநரசிம்மர்

5.ஆந்திரா மங்களகிரி, ஸ்ரீபனகாலநரசிம்மர்.

இந்த பஞ்ச ஷேத்ரங்களும், கிருஷ்ணா நதிகரையோர மலை காடுகளில் அமைந்துள்ள, சுயம்பு நரசிம்ம ஷேத்ரங்கள். இவை நான் மேலே குறிப்பிட்டுள்ள 42 நரசிம்ம ஷேத்திரத்தில் கிடையாது. ( தமிழ்நாட்டில் நாங்கள் தரிசனம் செய்த பல நரசிம்மர் கோவில்கள்கூட, இந்த அட்டவணையில் இல்லை).  நாங்கள் அகோபிலம் சென்ற போது இந்த பஞ்சநரசிம்ம ஷேத்ரங்களை, அறிந்தோம். 2023 டிசம்பர் மாதம் தரிசனத்திற்காக, இறைவனிடம் போட்ட விண்ணப்பம், இன்றுவரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...