கோனார்க்.(Konark)

 கோனார்க்.(Konark) 11.4.23


ஓடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர். உலக புகழ்மிக்க பாரம்பரியமான சூரியக் கோவில் இங்குள்ளது. சூரியனுக்கான கோவில் மிகக்குறைவு. குஜராத் மாநிலம், மோதேரா (Modhera) மற்றும் காஷ்மீர் மாநிலம் மார்டண்ட் (Martand) கோவிலை விட கோனார்க் (Konark) சூரிய கோவிலே முதன்மையானது.


1984 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ Heritage ஆக அறிவிக்கப்பட்டது. சூரியக் கடவுள் என்பதால் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. பிரதான வாயிலில் சூரியக்கதிர் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. “சூரியனின் தேர் பூட்டிய குதிரை” போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டுவரிசையாக 12 சக்கரங்கள் கொண்டு மொத்தம் 24 சக்கரங்கள் உள்ளன. அவை ஒரு நாளை குறிக்கிறது. 


பண்டைய வெளிநாட்டு மன்னர்கள் முதல் ஆங்கிலேய ஆதிக்கம் வரை பல வகையலும் இக் கோவில் சூறையாடப்பட்டது. அழிவின் வெளிப்பாடு நன்கு தெரிகிறது. நம் நாட்டின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.


 










பூரி ஜெகன்நாதர்.

 பூரி ஜெகன்நாதர்.


ஓடிசாமாநிலம் பூரி என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த ஜெகன்நாதர் கோவில். 10ஆம் நூற்றாண்டுக்கு முந்தயது என்று அனைவராலும் நம்பப்படுகிறது. 10ஆம் நூற்றாண்டுமுதல் புனரமைப்பு செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் ரதயாத்திரை தேர்திருவிழா உலகப்புகழ்பெற்றதாகும். ஜெகன்நாதர், பாலபத்ரா(பலராமர்), சுபத்ரா அவர்களே பிரதான கடவுளாகும். இறைவனுக்கு கால நேரத்திற்;கு ஏற்றவாறு அலங்காரம் செய்கின்றனர். 

இந்த பிரதான மூன்று இறைவனும், மரத்தினால் உருவாக்கப்பட்ட தெய்வங்களாகும். இதன் காரணமாக 12 அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறை பிரதான கடவுள்கள் மாற்றப்படுகின்றனர். 

-------------------------------------------------------------------------------------------------------------------------

கூடுதல் தகவல்;.

நம் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்;டத்தில் அமைந்துள்ள திருக்கோவிலூர், திருவிக்ரமபெருமாள் மரத்தினால் ஆனவர். என்னுடை தஞ்சாவூர் ஒவிய ஆசிரியர், பெருமாள் புனரமைப்புக்கு (வடிவமைப்பு செய்ய) சென்றிருந்தார். 

------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்கந்தபுராணம், பிரும்மபுராணம் இவைகளில் ஜெகன்நாதர் கோவில் பற்றிய குறிப்புள்ளது.

மற்ற சன்னதிகள்

விமலா (பிமலா).

இந்த விமலா தேவி சன்னதி முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் தொப்புள் விழுந்த இடம். மஹாளய அம்மாவாசைக்கு எட்டு நாட்கள் முன்பாகவே தொடங்கி, 16 நாட்களுக்கு சிறப்பு பூஜை நடை பெறுகிறது.

காஞ்சி விநாயகர்(உச்சிஷ்டகணபதி).

கஜபதி புருஷோத்தமன் என்ற மன்னர், காஞ்சி இளவரசி பத்மாவதியை மணமுடிக்கிறார். இதன் காரணமாக காஞ்சி இளவரசர் அளித்த அன்பளிப்பே இந்த விநாயகர்.  

முக்தி மண்டபம், சூரியா, சரஸ்வதி, புவனேஸ்வரி, நரசிம்மர், ராமர், ஹனுமான், ஈஷானேஸ்வரர் என்ற சன்னதிகளும் உள்ளது.

மஹாபிரசாதம்.


நாள் ஒன்றுக்கு, 6முறை பிரசாதம் செய்யப்படுகிறது. கங்கா, யமுனா என்ற பெயர் கொண்ட கிணற்றில் இருந்து, நீர் எடுத்து மகாலட்சுமி தேவியின் மேற்பார்வையில் உணவு சமைக்கப்படுகிறது. மதியம் வழங்கப்படும் பிரசாதம் சிறப்பானதாக கருதப்படுகிறது. 

பயண அனுபவம்.

கோவில் வாசலில் இருந்து பிரகாரம் முழுவதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்கின்றனர். மிக கவனமாக நடக்க வேண்டும். மதியம் தரப்படும் மகாபிரசாதம் மிக சிறப்பாக கூறுகின்றனர். மதியம் 12 மணிக்கு சாமிதரிசனம என்று நேரத்தை கணக்கிட்டு சென்றால், மகா பிரசாதம் சாப்பிட (கிடைக்க) நல்ல நேரமாக இருக்கும். கோவில் கோபுரத்தில் கொடி ஏற்றுவதும் மிக சிறப்பான நிகழ்வாகும் இதற்க்கு பூரியிலேயே நாம் தங்கவேண்டும். அப்பொழுதுதான் கொடியேற்றத்தை தரிசிக்க முடியும். 

புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வெளியில் எடுத்த புகைபடத்தை பகிர்கிறேன்.


சிருலி மகாவீர் ஆஞ்சநேயர், ரகுராஜ்பூர், சந்திரபாகா கடற்கறை, பிப்லி. (Pipili).

 ஓடிசா மாநில சுற்றுப்பயண தொடர்ச்சி. (நாள்- 11.4.2023).

சிருலி மகாவீர் ஆஞ்சநேயர்.




ஓடிசா மாநிலம், பூரியிலிருந்து, வடகிழக்கே 33 கி.மீ. தொலைவில் உள்ளது. பூரி மாவட்டத்தின்  ஆன்மீகச்சுற்று பயணத்தில் ஒரு சிறந்த இடத்தை சிருலி பிடிக்கிறது. ஒரே கல்லினால்லான, 10அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயர் உடல் முழுவதும், செந்தூரம் பூசிக்கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 


அஞ்சநேயருடைய முகம் சற்று சாய்ந்தது போல் உள்ளது.  இடதுபக்க கண் பூரி ஜெகநாதரையும், வலது கண் இலங்கையையும் பார்பதாக மகள் கருதுகின்றனர். சங்கராந்தி, ராமநவமி, தோலோ பூர்ணிமா போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

ரகுராஜ்பூர்.




ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த கிராமம். "பட்டசித்ரா” என்ற ஒவியம் வரையும், கலைஞர்கள் வாழும் இடமாகும்.


இந்த பட்டசித்ரா ஒவியம் கி;மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கலையாகும்.


ஓடிசா மாநிலத்தின், பாரம்பரிய நடனமான ஒடிசியின் முன்னோடி நடன கலையான “கோட்டிபுவா” என்ற நடனத்திற்காக பத்மபூஷன் விருதுவாங்கிய கலைஞர் இந்த கிராமத்தை சேர்ந்தவர்.

இங்கு நடன பயிற்ச்சி பட்டரையும் உள்ளது.


பூரி ஜெகநாதர் தேரோட்ட விழாவின் தேரோட்டத்தில், “பட்டாஸ்” என்ற பாரம்பரிய அலங்காரம் இந்த ஊர் மக்களால் செய்யப்படுகிறது என்பது ஒரு கூடுதல் சிறப்பு.


சந்திரபாகா கடற்கறை.


ஓடிசாமாநிலம், பூரி மாவட்டம், கோனார்க் சூரிய கோவிலுக்கு மிக அருகில் உள்ளது. நீலக்கொடி சான்றிதழ் (சுற்றுசூழலுக்கு உகந்த தூய்மையான கடற்கரை) பெற்ற, இந்தியாவின் முதல் இடத்தை பிடித்த கடற்கரையாகும்.

பிப்லி. (Pipili) 

பூரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம், அப்லிக் (Applique Handicrafts) என்ற கைவினை பொருளுக்கு மிகவும் புகழ்பெற்றதாகும்.


இவ்வகையான கைவினையை நம் தமிழ் நாட்டில் தேரில் தொங்கவிடும் அலங்கார பொருளான “தொம்பை” என்று கூறுகிறோம். கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சன்னதி தெருவில் தையல் கலைஞர்கள் செய்து கொண்டிருப்பார்கள்.

இந்த தொம்பையை ( Hanging Decorations) தற்காலத்தில்  விமானநிலையம், மற்றும் பணம் படைத்தவர்கள் வீடுகளில் அலங்காரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

 





சிலிகா ஏரி (Chilika Lake)



 சிலிகா ஏரி. (பார்வையுற்றநாள்-9,10.4.2023).

ஓடிசா மாநிலத்தில், 64.3கி.மீ. நீளம் கொண்ட உப்பு நீர் ஏரி.  வங்காளவிரிகுடாவை ஒட்டி உள்ளது இந்த ஏரி. பூரி, கஞ்சாம், கோர்த்தா என்ற மூன்று மாவட்டங்களில் இந்த ஏரி விரிந்துள்ளது. இதன்காரணமாக நான்கு வழிகளில் இந்த ஏரியை கண்டுகளிக்கலாம். 

ஏரியின் சிறப்புகள்.

பறவைகள் சரணாலயம், கோவில், காலைஉணவு தீவு போன்றவை. 

கலிங்கர்கள் காலத்தில் சிறந்த வணிக மையமாக விளங்கியது இந்த இடம். 

205 வகையான பறவைகள் பிற நாடுகளில் இருந்தும், 97 வகை பறவைகள் பிற கண்டங்களில் இருந்தும் வருகின்றன. 

சப்படா, பளுகோன், ரம்பா, பர்குல் என்ற இடங்களில் இருந்து இந்த ஏரிக்கு மக்கள் செல்கின்றனர்.

இந்தியாவின் முக்கிய பத்து ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். 

எங்கள் பயண அனுபவம்.

நாங்கள் புபனேஸ்வரில் இருந்து ரம்பா என்ற இடத்திற்;கு இரயிலில் பயணித்தோம். இரண்டுமணிநேர பயணம், இந்த வழிதடம் எரியின் கரையோரத்தில் அமைந்துள்ளதால், ஏரியின் அழகை கண்டு இன்புற இந்த வழியை தேர்ந்தெடுத்தோம். இரண்டு மணிநேர பயணம் என்றாலும் A/C Chair Car Book செய்திருந்தோம். ஆனால் புகைவண்டி மிக அசுத்தமாக காணப்பட்டது, ஜன்னல் கண்ணாடிகள், துடைக்கபடால் இருந்தது எங்களுக்கு மிகுந்த ஏமறாற்றத்தை கொடுத்தது.


ரம்பா ரயில்நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார் போல் நடைமேடை மிகவும் தாழ்வாக இருந்தது. ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒடிசாமாநிலத்தின் O.T.D.C.  யில் தங்கி படகு சவாரி செய்தோம். (தங்கும்அறை, உணவு, படகுசவாரி ஆன்லைன் புக்கிங் வசதி இவைகளுக்கு ஒடிடிசி உதவுகிறது.)

 நாங்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்.

   













சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...