திருமூர்த்தி மலை கோவில், மற்றும் அணை

 


திருமூர்த்தி மலை கோவில், மற்றும் அணை. (பார்வையுற்ற நாள் 11.11.2021);.

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை சிறந்த சுற்றுலா இடமாகவும், ஆன்மீக தலமாகவும் அமைந்துள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு இரண்டு கி.மீ. முன் கரிவரதராஜப்பெருமாள் என்ற கோவிலை தரிசனம் செய்தோம். இந்த வனப்பகுதியில் அகத்தியர் தவமிருந்தார் எனவும், இறைவன் திருமணக்கோலத்தை பொதிகை மலையில் கண்டு களித்தது போன்று, மீண்டும் காண இறைவனை வேண்டியதை குறிப்பால் உணர்திய இடம், என்ற வரலாறு உள்ளது. இறைவன் அமணலிங்கேஸ்வரர். இங்கு அமைந்துள்ள எட்டுக்கால் மண்டபத்தில் அனுசியா தேவி மூன்று மூர்திகளையும் (பிரும்மா, விஷ்ணு, சிவன்) குழந்தையாக உருமாற்றி பாலூட்டிய இடம், இதனாலேயே  இந்த இடம் திருமூர்த்தி மலை என்று அழைக்கப்படுகிறது. 

திருமூர்த்தி அணை.

இந்த நீர் தேக்கம் ஆனைமலைத்தொடரின் வடக்கு சரிவில் ,உற்பத்தியாகும் பாலாறு நதியின் குறுக்கே கட்டப்பட்ட நீர்தேக்கம். (பாலாறு ஆழியாற்றின் கிளையாறு) 1967 ஆம் ஆண்டு விவசாய நீர் பாசனத்திற்காக கட்டப்பட்டது. இங்கு 2000 ஆம் ஆண்டு நுன் புனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. மின் விநியோகம் 2002ல்  துவக்கப்பட்டது. 1337 அடி நீர்தேக்க மட்டமும், 1935 மில்லியன் கன அடி கொள்திறனும் கொண்டது.  


            











குருந்தமலை முருகன், பாலமலை ரங்கநாதர். (தரிசன நாள் 10.12.2021)

கோயமுத்தூரில் இருந்து 28கி.மீ. தொலைவில், காரமடையில் இருந்து கிணத்துக்கிடவு செல்லும் பாதையில் 5கி.மி தொலைவில் குருந்த மலை அமைந்துள்ளது. பழனி மலை முருகன் போலவே மேற்கு திசை நோக்கி பால முருகனாக காட்சி தருகிறார். 125 படிகள் கொண்ட சிறிய மலைதான்.

தல வரலாறு.  

கொங்கு நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு  வணிகர் குலத்தவர்கள் மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை சேரநாட்டில் இருந்து வாங்கி, குருந்த மலைவழியாக சென்று, மைசூரில் விற்பனை செய்து வந்தனர். குருந்த மலையில் சிறுவன் ஒருவன் வியாபாரிகளிடம் இந்த மூட்டையில் என்ன இருக்கிறது? என்று கேட்க, வியாபாரிகள் தவிடு உள்ளது என்று சொல்கின்றனர். மறுநாள் மூட்டையை தூக்கும் போது கனம் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மூட்டையை பிரித்து பார்த்தால் தவிடாக இருந்தது. அதிர்ந்த வியாபாரிகள் குழந்தை வடிவில் வந்தது வேலாயுத கடவுள் என்பதை உனர்ந்து குழந்தை வேலாயுதனுக்கு ஒரு கோவில் கட்டினர் என்று, இக்கோவில் வரலாற்றை படகாட்சியாக கோவில் சுவற்றில் வரைந்துள்ளனர்.



பாலமலை ரங்கநாதர்.

 குருந்த மலையில் இருந்து பால மலைக்கு செல்லும் வழிதடத்தை தவிர்த்து, நாங்கள்  காரமடைக்கு வந்து எங்களுடைய காலை உணவை முடித்துக்கொண்டு பெரியநாயகன் பாளையம் வழியாக பாலமலையை அடைந்தோம்;. காரமடை ரெங்கநாதரை நாங்கள் ஏற்கனவே தரிசித்து இருந்ததால் பாலமலைக்கு முன்னுரிமை குடுத்தோம். பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து 11கி.மீ. தொலைவு இருந்தது. கோவனூர் என்ற இடத்தை கடந்தவுடன், எந்த அரவம் இல்லாமல் இருந்தது. நாங்கள்  இதே போன்று வாகன ஓட்டம், மனித நடமாட்டம் இல்லாத பல இடங்களுக்கு சென்றாலும் இந்த இடம் மலை பாதை என்று தெரிந்தவுடன், ஒரு வித அச்சத்தை எற்படுத்தியது. நாங்கள் மலை பாதையில் கார் 

ஓட்டிய அனுபவமும் கிடையாது.  என கணவர் எனக்கு தைரியம்கொடுத்து இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றார்;. மூன்றாவது வளைவு கடினமாக இருந்ததை பார்த்து எங்களுக்கு பயம் ஏற்பட்டது. இதையும் கடந்து சென்றவுடன் சாலை சற்று அகலமாக இருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். 500 மீட்டர் நடந்திருப்போம், எதிரில்Forest Police இருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர். எங்களை நாங்கள் எங்கு செல்கிறீர்கள்  என்று விசாரித்து விட்டு “இந்த வயதான காலத்தில் யானை அடித்து போட்டால் யார் சார் பார்கறது?” என்று கடிந்து கொண்டனர். நாங்கள் உடனே திரும்ப முயன்றோம். ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்த ஒரு அரசு அலுவலக வாகன பயணியர், எங்களை எங்களுடைய கார் வரை கூட்டி வந்தனர். நாங்கள் ரங்கநாதரை தரிசனம் செய்யாமலேயே திரும்பினோம். இந்த மலையில் மொத்தம் 6 கொண்டை ஊசி வளைவு இருக்கிறது, நாங்கள் 3 வளைவு கடந்து விட்டோம் என்பதையும், கோவனூரில் இருந்து தனியார் Jeep வசதி உள்ளது என்பதையும் பிறகு அறிந்துக்கொண்டோம்.  











 திருமுருகன்பூண்டி (9.12.2001 தரிசனநாள்).

இறைவன் திருமுருகநாதர், இறைவி ஆவுடைநாயகி(எ)மங்களாம்பிகை. அவினாசி –திருப்பூர் சாலையில் அவினாசியில் இருந்து 6.5.கி.மி. தொலைவில் உள்ளது இந்த திருமுருகன்பூண்டி. பரிசு பொருளுடன் விநாயகர் கோவிலில் இரவை கழித்த சுந்தரரிடம், இறைவன் சிவபெருமான் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி பொருட்களை கொள்ளையடிக்க செய்தார். விநாயகரின் உதவியை நாடிய சுந்தரருக்கு சிவன் குடியிருக்கம் இந்த தலத்தை விநாயகர் காட்டினார்.  

“வேதமோதி வெண்ணீறு பூசி வெண்கோவணந் தற்றயலே ஓதமேவிய ஒற்றயூரையும் முத்தி நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்பூண்டி மாநகர்வாய் ஏதுகாரணம் ஏதுகாவல் கொண்டு எத்துக்கிங்கிருந்தீர் எம்பெருமானீரே”…  என்று சிவனை கடிந்து பாட அவரது பாடலில் மகிழ்ந்து சிவ பெருமான் பொருட்களை திருப்பி அளித்து ஆசி வழங்கினார், என்று மரபு வரலாறு கூறுகிறது. 

  முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலம் என்ற பெருமையையும் திருமுருகன்பூண்டி பெறுகிறது. இதன் காரணமாகவே சிவ பெருமான் முருகநாதேசுவரர் என்று அழைக்ப்படுகிறார். 

இத்தல திருப்புகழ். 

  “அவசியமுன் வேண்டிப் பலகாலும் அறிவிணுணர்ந்தாடுக் கொருநாளில தவசெபமுந் தீண்டிக் கனிவாகிச் சரணமதும் பூண்டற் கருள்வாயே சுவதமொருந் தாண்டித் தகரூர்வாய் சடுசமயங் காண்டற் கரியானே சிவகுமாரன் பிண்டிற் பெயரானே திருமுருகன்பூண்டிப்பெருமாளே”. என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார். 

ஸ்ரீ கந்த குரு கவசம் ஆசிரியர் சாந்தானந்த சுவாமிகள் கவசத்தில் திருமுருகன்பூண்டியிலே திவ்யஜோதியானாய் நீ என்று இத்தல சிறப்பை ஆசிரியர்குறிப்பிட்டுள்ளார்.

முருகன் கோவில் என்றே மக்கள் இந்த கோவிலை அழைக்கின்றனர்.  கோவில் அமைப்பு அனைத்து சிவன் கோவில் போன்றே உள்ளது. அவிநாசிஅவிநாசியப்பர் கோவிலும் எங்கள் அட்டவணையில் (இரண்டாம் முறை) இருந்தது. நாங்கள் மாலை நான்கு மணிக்கு கோவையிலிருந்து கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் மழை காரணமாக இறைவனை வழிபடமுடியாமல் திரும்பினோம்.

 அனுவாவி (7.12.2021 தரிசன நாள்) 

கோயமுத்தூர் மாவட்டம் கோயமுத்தூர் புறநகர் பகுதியான பெரிய தடாகம் (ஆனை கட்டி வழித்தடம்) என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. வள்ளி தெய்வானையுடன் சுயம்பு மூர்த்தியாக நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். சஞ்சீவிமலையை சுமந்து சென்ற போது அனுமனுக்கு தாகம் ஏற்பட இந்த மலை முருகனை வேண்டியதில் முருகனால் உருவாக்கப்பட்டது ஒரு ஊற்று. இந்த நீர் ஊற்று எங்கு உருவாகிறது என்பது இதுவரை யாராலும் அறியபடவில்லை. மலைஅடிவாரத்தில் இருந்து 500படிகள் கொண்டது கோவில். முன்மண்டபத்தில் விநாயகர், வீரபாகுவும், பத்து படி கட்டு உயரத்தில் அருணாச்சலேஸ்வரர் என்ற பெயரில் சிவ பெருமானும் நமக்கு அருள் பாலிக்கின்றனர். ஹனு என்பது அனுமனையும், வாவி(Bhavi)என்பது நீர்நிலையையும் குறிக்கும். இந்த கோவில் நேர் தென் புரத்தில் மருதமலை உள்ளது.

 





 


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...