கடிகங்காதரர் (எ) காவிபுரம் குடைவரை கோவில்

 கடிகங்காதரர் (எ) காவிபுரம் குடைவரை கோவில் (தரிசனம் 8.2.2025)


அமைவிடம்.

தெற்கு பெங்களுர் நகரப்பகுதியான காவிபுரம், என்ற இடத்தில் அமைந்துள்ளது. 

வரலாறு.






இந்த குடைவரை கோவிலில் கங்காதீஸ்வர் என்ற பெயருடனும், அம்பிகை பார்வதியுடன் ஈசன் மக்களுக்கு அருள்பாலிக்கிறார். கௌதமமுனிவர், மற்றும் பரத்வாஜ முனிவர்களால் வேதகாலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பின் 16 ஆம் நூற்றாண்டில்  பெங்களுர் நகரத்தை உருவாக்கிய கெம்பகௌடா என்பவரால் புனரமைக்கப்பட்டது. 

சிறப்பு 

மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில், அருகிலேயே அம்மன் சன்னதியும் உள்ளது. மலையை குடைந்து கட்டியதால் மேல்கூரை மிக தாழ்வாக உள்ளது. ஈசன் பார்வதி இவர்களின் சன்னதியை தொடர்ந்து உள்ள பிரகாரம் மிக சிறியதாக, குறுகியதாக, மிக குறைந்த உயரத்துடன் காணப்படுகிறது. பக்தர்கள் நன்கு இடுப்புவரை குனிந்து சென்றே இந்த உட்பிரகாரத்தை வலம் வர வேண்டும்.  இந்த உட் பிரகாரத்தில் சப்த கன்னிகைகளின் சிலகைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 







பாஸ்கராய அபிஷேக சிறப்பு.

சூரியனின் ஒளிக்கதிர் இறைவன் மீது விழுவதே பாஸ்கராய அபிஷேகம் என்று பெயர். இவ்வாறு வருடத்திற்கு ஒருமுறை சூரியனின் ஒளிக்கதிர் லிங்கருபமாக உள்ள இறைவன் மீது பட்டு பிரகாசிக்கிறது. நம்தமிழ்நாட்டில் பல கோவில்களில் இத்தகைய சிறப்புள்ளது. ஆனால் இந்த கோவில் இறைவன் குறைந்தபட்சம் எட்டு அடியாவது கீழே இருப்பார், கோவில் வாயிலில்ருந்து. இதனால் இந்த பாஸ்கராய அபிஷேகம் என்னை வியப்படைய செய்தது.





Big Bull Temple (நந்தி கோவில் பசவன்குடி)

 Big Bull Temple (நந்தி கோவில் பசவன்குடி, தரிசனம்-8.2.2025)


Dodda கணபதி.


நந்தி கோவில் நுழைவாயில் அருகில் இந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை, 18 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்டது. பெங்களுர் மக்களை மிகவும் கவர்ந்த கோவில் இதுவும் ஒன்றாகும்.

Big Bull Temple





அமைவிடம்

பெங்களுர் நகரத்தை உருவாக்கிய கெம்பகௌடா என்பவரால் கட்டப்பட்ட கோவிலாகும். பெங்களுர் நகரத்தின் தெற்கு பகுதியான பசவன்குடி என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.  Green Line National College Metro அருகில் அமைந்துள்ளது.









கோவில் சிறப்பு.

4.6 மீட்டர் உயரமும், 6.1 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய நந்தியை கொண்டதே இந்த கோவில். பக்தர்களையும், மற்றும் சுற்றுலா பயணிகளையும் மிகவும் கவர்ந்த கோவிலாகும். நந்தியின் பின்புறம், சிவபெருமானின் மிக சிறிய சன்னதியுள்ளது. எண்nணையும், வெண்ணையும் பக்தர்களால் சார்தப்படுவதால் இந்த நந்தி கருமையான தோற்றத்துடன் உள்ளது. 


கோவில் வரலாறு.

பசவன்குடி என்ற இடம் கடலை விளைய கூடிய நிலமாக இருந்தது. இங்கு விளைந்த கடலைகளை மாடு தின்று அழித்தது. இதன் காரணமாக இந்த பகுதி விவசாயிகள், நந்தி தேவனுக்கு  கோவில் அமைப்பதாக சிவபெருமானிடம் பிரார்த்தித்து கொண்டனர். இதன் காரணமாக உருவானதே இந்த கோவில். 1537 ஆம் ஆண்டு கெம்பகௌடா என்பவரால் உருவாக்கப்பட்டது.

Bull Rock Garden









இந்த பெரிய நந்தி கோவில் அருகில் ஒரு இயற்கை எழில் நிறைந்த அடர் தோட்டம் உள்ளது. மக்கள் இங்கு நடைபயிற்ச்சி செய்கின்றனர். மற்றும்  Meanual Jim  ஒன்றும் உள்ளது. கர்நாடகா மாநிலத்தின் புகழ் பெற்ற, கெம்பகௌடா, விஸ்வேஸ்வரையா, குட்டப்பா மற்றும்  மோக்ஷகுண்டம் போன்ற தலைவர்களின் சிலைகளும் உள்ளன.

வால்மீகி ஆசிரம மகாசமஸ்தான திகுரு பீடம்




இங்கு ஆஞ்சநேயர், சிவன், ராமர் மற்றும் அம்மனுக்கு சிறியதாகவும், தனி தனியாகவும் கோவில்கள் அமைத்திருந்தனர். 


லேபாக்ஷி மற்றும் பெனுகொன்டா கோட்டை

 லேபாக்ஷி மற்றும் பெனுகொன்டா கோட்டை. (25.1.2025)


லேபாக்ஷி








அமைவிடம்

ஆந்திரமாநிலம், சத்யசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில்.  இறைவன் வீரபத்திரராக மக்களுக்கு அருள்பாலிக்கிறார். பெங்களுரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 












லேபாக்ஷி ஊர் பெயர் காரணம்.

ராமாயணகாவியத்தில் ராவணன் சீதையை கவர்ந்து இலங்கைக்கு செல்லும் நேரத்தில் ஜடாயு என்ற கழுகு ராவணனிடம் இருந்து சீதையைகாக்க ராவணனிடம் போர் செய்தது. ராவணன் இந்த பறவையின் இறக்கையை வெட்டிவிட்டு சென்றுவிட்டான். இந்த ஜடாயுதான்  ராமனுக்கு, ராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்டாள் என்ற செய்தி தெரிவித்து, பின் இறந்து விட்டது. ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர்நடந்த இடமே இந்த  லேபாக்ஷி என்ற இடம். லே என்றால் பெரிய, பக்ஷி என்றால் பறவை. இதன் காரணமாகவே இந்த ஊர் லேபாக்ஷி என்று அழைக்கப்படுகிறது. இதே போன்ற வரலாற்று கதை கேரள மாநிலத்திலும் உள்ளது. அந்த இடத்தில் கட்டப்பட்டதே ஜடாயு பூங்கா.













வீரபத்ரசுவாமி கோவில்  

1530 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசு காலத்தில் அமைச்சராக இருந்த விருபுன்னநாயகா மற்றும் வீரன்னா என்பவர்களால் கட்டப்பட்டது. கொடிமரம் பலிபீடம், முன்மண்டபம், சுற்று பிரகாரம் அனைத்தும் ஒரு சாராதண கோவில் போன்று மேலோட்டமாக இருந்தாலும். மலையை குடைந்து கட்டிய பெரிய கோவிலாகும். ஒவ்வொரு தூண் சிற்பங்களும் மிக கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது.

   

 






உட்பிரகாரம்.

வீரபத்ரசாமி நன்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, விளக்கேற்றி அர்சகர்களால் அர்ச்சிப்பட்டு நல்ல வழிபாட்டு தலமாகவே விளங்குகிறது. சிறியதாக உள்ள உட்பிரகாரத்தில், லிங்கதிருமேனியுடன் சிவபெருமானின் இரண்டு சன்னதிகளும், மற்றும் அம்மன் சன்னதி, பெருமாள் சன்னதிகளும் உள்ளது. இங்குவருபவர்களில் பெரும்பாலானோர் இந்த இடத்தை சுற்றுலாதமாகவே என்னி பார்வையிட வருகின்றனர். இந்த சன்னதிக்குள் சொற்பமான மக்களே வந்து வழிபாடு செய்கின்றனர்.

 சிறப்பு.

ஆதாரம் இல்லாத தூண்.




நாகம் குடைபிடித்த லிங்கம்.



இங்கு பார்க்க வேண்டியது.

1. வீரபத்ரசாமி கோவில்

2. கழுகு சிலை

   




கழுகுசிலை அருகில் ராவணன் பாதம்


3. பெரிய நந்தி



இவை மூன்றும் ஒரு கி.மீ. தொலைவைவிட மிக குறைவான இடைவெளியில் அமைந்துள்ளது. 

கழுகுசிலை அருகில் ராவணன் பாதம்.

பெனுகொண்டா கோட்டை. 









அமைவிடம்

ஆந்திரமாநிலம் அனந்தபூரில் இருந்து, 70கி.மீ. தொலைவில் உள்ளது. லேபாக்ஷியில் இருந்து 50கி.மீ. தொலைவில் உள்ளது.



மிக சிதிலம் அடைந்த நிலையில் உள்ள மிக சாதாரணமான கோட்டை. இந்த இடம், ஹொசால்யர், சாலுக்கியர், விஜயநகர அரசு, மராட்டியர், திப்புசுல்தான், நிஜாம், நவாப் என்று அனைவராலும் ஆட்சிசெய்யப்பட்ட இடம். மிக சிதிலம் அடைந்த ஒரு நரசிம்மர் கோவில் இருந்ததாக தெரிகிறது. இளைஞர்கள் அதிகமாக  Bike raiding  செய்ய இங்கு வருகின்றனர்.




சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...