விட்டலாபுரம். (கல்பாக்கம்)

 விட்டலாபுரம். (தரிசனம்- 20.9.2024).


இப்பெயர் கொண்டு தழிழ்நாட்டில் இரண்டு ஊர்கள் உள்ளன. இந்த இரண்டு இடத்திலுமே பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது.

1. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது.

2. சென்னை- பாண்டிச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் கல்பாக்கத்திற்கு அருகில் உள்ளது.









வாய்ப்பு.

எங்கள் குலதெய்வம் வெங்கடேச பெருமாளின் உரியடி உற்சவத்திற்;கு சென்ற இடத்தில், எங்கள் உறவினர் ஒருவர் இக்கோவில்பற்றி கூறினார். பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வருகைக்கு இந்தவழிதடத்தை பயன்படுத்தி, புரட்டாசி புண்ணிய மாதத்தில் இந்த பாண்டுரங்கனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். 

வரலாறு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபூர் போன்ற அமைப்பில் உள்ளது இந்த கோவில். விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் அரச பிரதிநிதி ஒருவர் இந்த கோவிலை 16 ஆம் நூற்றாண்டில் கட்டியுள்ளார். அர்த மண்டபம், முக மண்டபம், மகாமண்டபம் என்று மிக சிறப்பாக இக்கோவில் அமைந்துள்ளது.










கோவில் அமைப்பு.

பிரேமிக் விட்டல் தனது  இருகரங்களையும் இடுப்பில் வைத்தபடி  ருக்மிணி சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். தந்தான லெஷ்மி தாயாருக்கு தனி சன்னதியுள்ளது. கொடிமரம், பலிபீடம், கருடன் சன்னதி என்று மூன்றும் தொடர்ந்து அமைந்துள்ளது. முதல் சுற்றில் வரதராஜபெருமாள், ஸ்ரீநிவாசபெருமாள், இவர்களுக்கு தனி சன்னதிகளும், இதை தொடந்து ராமானுஜர் மற்றும், விஷ்வக்ஸேனருக்கு ஒரு சன்னதி என்று, தொடர்ந்து மூன்று சன்னதிகள் அமைந்துள்ளது. கோவிலுக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னதி ஒன்றும் அமைத்துள்ளனர்.


மிக பாழடைந்துதிருந்த கோவில், திரு.கிருஷ்ணபிரேமி மற்றும் திரு. முரளிதரசுவாமிகள் இவர்களின் பெரும் முயற்சியாலும் புத்துயிர் பெற்று விளங்குகிறது.  


பஞ்சலிங்கேஸ்வரா (எ) நாகேஷ்வரா

 பஞ்சலிங்கேஸ்வரா (எ) நாகேஷ்வரா (வழிபட்டநாள்-14.9.2024).

 அமைவிடம்.

கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள பொம்மனஹல்லிக்கு அருகில், 4 கி.மீ. தொலைவில் பேகூர் என்ற ஒரு சிறிய ஊரில் அமைந்துள்ளது. சில்க்போடு, மற்றும் எலக்ரானிக்சிட்டியில் இருந்து, பேகூருக்கு பேருந்துக்களும் உள்ளன.

வரலாறு.








1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த, நான்கு கோபுரங்களை கொண்ட, இக் கோவில், கங்கர்கள் என்ற அரசவம்சத்தினரால் கட்டப்பட்டது. இந்த கங்கர்கள் சைவம் மற்றும் சமணம் இரண்டையும் ஆதரித்து வந்தனர். இதன் காரணமாக அழிவுற்ற சமண படுக்கைகளும் இங்கு இருக்கின்றனவாம். முதலாம் ராஜேந்திர சோழனால் கங்கர்கள் தோற்கடிக்கப்பபட்டனர். 









இந்த கோவிலில் 1. நாகேஷ்வரா, 2. காளிகடமேஷ்வரா, 3.சோளேஷ்வரா. 4. நகரேஷ்வரா. 5. காரணேஷ்வரா என்று ஐந்து சிவ சன்னதிகளை கொண்டுள்ளது. இதில் இரண்டு சன்னதிகள், கங்கர்கள் காலத்திலும், மற்ற மூன்று சன்னதிகள் சோழர்கள் காலத்திலும் கட்டப்பட்டுள்ளது. தட்சிணாமூரத்தி, பார்வதி அம்மன் சன்னதி; என்ற பிற சன்னதிகளும் உள்ளன.







புராண வரலாறு.

இமயமலைக்கு சென்று இலங்கை திரும்பிய ராவணன், கொண்டுவந்த ஆத்மலிங்கத்தில் இதுவும் ஒன்று என்ற கல்வெட்டும் உள்ளதாம். கோகர்னா புராணாகதையே இங்கும் சொல்லப்படுகிறது என்று இங்கு இருந்த ஒரு தமிழ் அரச்சகர் தெரிவித்தார். (கோகர்னா புராணம் என்னுடைய கோகர்னா பக்கதில் உள்ளது).

நான் அறிந்த வரலாறு.

ஜார்கன்ட் மாநிலம் (Deoghar) பைத்யநாதீஷ்வரர் (Baidyanatheswar) என்ற புகழ் பெற்றசிவன் கோவிலும் இதே வரலாறு கொண்டுள்ளது. இவ்வாறு ராவணனால் கொண்டு செல்லப்பட்ட ஆத்மலிங்க சிவன் கோவில்கள் பல உள்ளன. நான் இக்கோவில்களை தேடிக்கொண்டிருக்கின்றேன். இக்கோவில் (பேகூர்) 18 ஆவது கோவில் என்ற குறிப்புள்ளதாக (கல்வெட்டில்) அர்ச்சகர் தெரிவித்தார்.


ஓம்காரேஸ்வரர் மலைக் கோவில்

 ஓம்காரேஸ்வரர் மலைக் கோவில்( வழிபட்ட நாள்-31.8.2024)

அமைவிடம்.


பெங்களுர், ராஜராஜேஸ்வரி நகரில், கடல் மட்டத்திலிருந்து, 2800 அடி உயரத்தில் “துவாதச (12)ஜோதிர்லிங்க ஆலயம்” மற்றும், “மச்சநாராயண ஆலயம்”; என்ற இரண்டு கோவில்கள் அமைந்துள்ளது.

வாய்ப்பு

எங்களுடைய மகனின் திருமணநாள் வழிபாட்டிற்காக, எங்களின் மருமகளால் பரிந்துரைக்கப்பட்ட கோவில் இது.

வரலாறு. 

சத்குரு ஸ்ரீசிவபுரி மஹாஸ்வாமி அவர்களால் நிறுவப்பட்டதே இந்த கோவில். 2002 ஆம் ஆண்டு கட்டுமானப்பணி தொடங்கியது. 2007 ஆம் ஆண்டு இந்த சுவாமிகள் சமாதி நிலை அடைந்தார். இதனை தொடர்ந்து, இவரின் மாணவர் மதுசூதனாந்தபுரி அவர்களால், 2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி 16 தேதி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.



 கோவில் அமைப்பு.

நர்மதை நதிகரையில் உள்ள ஜோதிர்லிங்க ஓம்காரேஷ்வரர் 6அடி உயரத்தில் லிங்க வடிவமாக மையமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மற்ற 11 ஜோதிர்லிங்கங்கள் இந்த ஓம்காரேஷ்வரரை சுற்றி தனித்தனி சன்னதிகளாக அமைத்துள்ளனர்.  ஓம்காரேஷ்வரர் ஸ்படிகத்தால்லான ஸ்ரீயந்ரம் மீதும், பிற லிங்கங்கள், பஞ்சலோக ஸ்ரீயந்திரத்தின் மீதும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.




ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுணர், மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமியின் கோபுரங்கள் தென்னிந்திய பாணியிலும். ஏனைய சன்னதிகளின் விமானம் வடஇந்திய பாணியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

நர்மதை ஆற்றின் பாணலிங்கம்.

நர்மதை ஆற்றில் இருக்கும் கல், பாணலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. 1008 நர்மதேஸ்வர பாணலிங்கம் ஒவ்வொரு ஜோதிர்லிங்க சிவன் பிரதிஷ்டைக்கு அடியிலும், நர்மதை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும், ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கத்திற்கு மட்டும் 2008 நர்மதேஸ்வர பாணலிங்கத்தின் மீது பிரதிஷ்டை செய்துள்ளனர். நாங்கள் கடந்த  மார்ச் மாதம் (2004ல்) தான் நர்மதா பரிக்ரமா செய்தோம். இந்த பரிக்ரமா காலங்களில் நர்மதேஷ்வர பாணலிங்கத்தை வைத்து, நர்மதாபுரம்,(இரண்டுமுறை) மஹராஜ்பூர், பரூஜ், ப்ரகாசா, நீமாவர், பார்வனி, ஓம்கார், ஜபல்பூர், மகேஷ்வர், அமர்கண்டக், போன்ற இடங்களின் நர்மதையாற்று படித்துறைகளில் பூஜை செய்த பாக்கியம் பெற்றோம்.

ஜோதிர்லிங்கங்களை சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சென்று வழிபட்டு மனநிறைவடையலாம். நாங்கள் ஜோதிலிங்க தரிசனம் வேண்டி இறைவனை பிரார்தனை செய்தோம்.

மச்சநாராயணர் ஆலையம்.

ஸ்ரீமன் நாராயணனின் முதல் அவதாரமான மச்சாவதார கோவில் ஒன்று இங்கு உள்ளது. நாங்கள் பெருமாளையும் வழிபட்டு திரும்பினோம்.


இக்கோவிலுக்கு எதிரில் அனைத்து மதங்களின் குருமார்களும்,  அந்த மதங்களின் புனித நூல்களும் உருவங்களாக  அமைத்துள்ளனர். 

அருகில் இருந்த ராஜராஜேஸ்வரி கோவிலையும் வழிபட்டு திரும்பினோம்.




சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...