திருக்கச்சிநம்பி, வரதராஜபெருமாள் கோவில் -பூந்தமல்லி.

 திருக்கச்சிநம்பி, வரதராஜபெருமாள் கோவில் -பூந்தமல்லி. (தரிசனநாள்-18.6.23)


திருக்கச்சிநம்பி.

இவர் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்( சிறந்த பெருமாள் பக்தர்). பிறந்த ஊர் இந்த பூவிருந்தவல்லி. காலப்போக்கில் பூந்தமல்லி என்றானது. இறைவனுக்கு விசிறி வீசியும் (ஆலவட்டம் வீசி)பூக்கள் பறித்து மாலை தொடுத்து இறைவனுக்கு சூட்டுவதையே சிறந்த இறைத்தொண்டாக செய்து வந்தார். இறைவனிடம் பேசும் வல்லமை படைத்தவர். ராமானுஜரின் குருநாதரும் ஆவார்.

அமைவிடம்.


திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாம்பரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த ஆலையம். 

தலவரலாறு. 


காஞ்சி வரதராஜபெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்ட திருக்கச்சி நம்பி அவர்கள், பூக்களை பறித்து மாலையாக தொடுத்து தினமும் பூந்தமல்லியில் இருந்து காஞ்சிக்கு நடந்துசென்று வரதராஜபெருமாளுக்கு சூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல் சுகமின்மை காரணமாக ஒருநாள் நடக்கமுடியாமல் போய்விடுகிறது. வரதராஜனையே நினைத்திருந்ததால், மறுநாள் காலை சூரியோதையத்தின் போது, பூந்தமல்லிக்கே வந்து திருக்கச்சிநம்பிக்கு காட்சி கொடுத்து மாலையை ஏற்றுக்கொள்கிறார். 

திருக்கச்சிநம்பிகள்  சன்னதி.


வரதராஜர் சன்னதிக்கு பட்டாச்சாரியார் சென்று சுத்தம் செய்து பூ சாற்றி விளக்கேற்றியபிறகு, திக்கச்சிநம்பிசன்னதிக்கு வந்து ஆராதனை செய்கிறார், முதல் ஆராதரன நம்பி அவர்களுக்கு அதுவரை (நாங்களும்) பக்தர்களும் திருக்கச்சிநம்பி சன்னதியில் காத்திருந்தோம். 

ரெங்கநாதர் சன்னதி.


ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் திருச்சிநம்பிக்கு காட்சி கொடுத்து இங்கேயே அருள்பாலிக்கிறார். இரண்டாவதாக, ஆராதனை இவருக்கு.

வரதராஜபெருமாள்.


மூன்றாவதாக இவருக்கு ஆராதனை, நின்ற கோலத்தில் பின் தலையில் சூரியஒளிவட்டத்துடன் அருள்பாலிக்கிறார், காஞ்சி வரதராஜர் பூந்தமல்லியில்.

ஸ்ரீநிவாசர்.

திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாசர் சன்னதி வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அடுத்த ஆராதணை இவருக்கு. ஸ்ரீநிவாசரும் இந்த அடியாருக்காக இக்கோவிலில் எழுந்தருளியுள்ளார்.

பூவிருந்தவல்லி தாயார்.


இத்தலபூவில் அமர்ந்திருப்பதாள் பூவிருந்தவல்லி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். ஐந்தாவதாக இவருக்கு ஆராதனை. 

ஆளவந்தாருக்கு தனி சன்னதியுள்ளது. 

நாங்கள், காலை ஏழு மணிக்கே சென்றதாள், இந்த தரிசனம் கிடைத்தது, சொற்பமான பக்தர்கள் இருந்தனர்.

       


தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் திருக்கோவில். பூந்தமல்லி

 தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் திருக்கோவில். பூந்தமல்லி தரிசனநாள்.(18.6.2023).

அமைவிடம்.


சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து, ஒரு கி.மீ.தொலைவில் உள்ளது.

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவ ஸ்தலமாகும். ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது. “அங்காரகன்” என்று சொல்லக்கூடிய நவகிரக “செவ்வாய் ஸ்தலமாகும்.” மாசி மாதம் 21 முதல் 25 வரை (ஐந்து நாட்களுக்கு) கதிரவனின் கிரகணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. (இதற்கு பாஸ்கராய அபிஷேகம் என்று பெயர் இவ்வாறு தென் மாவட்டங்களில் மாசி மற்றும் பங்குனி மாதத்தில் அபிஷேகம் பல கோவில்களில் நடை பெறுகிறது).


தலவரலாறு
.

இந்திரன் பெருவியாதியால் (குஷ்டரோகம்) துன்பபட்டான். உடல் உபாதை உள்ளவர்கள் ஆட்சியில் அமரக்கூடாது என்ற விதி உள்ளது. இதன் காரணமாக தேவேந்திரன் செவ்வாய் கிரகத்திடம், தன்னைவிட்டு சீக்கிரம் செல்லுமாறு வேண்டினான். அங்காரகனும் செவிசாய்தான். இதை அறிந்த மகாதேவர் தர்மநெறி தவறிய செவ்வாய் கிரகத்துக்கு பெருவியாதியை கொடுத்து தண்டித்தார். சிவனார் பாதங்களை வணங்கி இந்த இடத்தில் சிவலிங்கம் நிறுவி வழிப்பட்டு சாப விமோசனம் பெற்றார் அங்காரகன், என்பது வரலாறு.  


ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் என்ற சிங்கப்பெருமாள் கோவில்

 ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் என்ற சிங்கப்பெருமாள் கோவில். (தரிசனநாள்-27.5.2023).


அமைவிடம்.

சென்னை, செங்கல்பட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.


ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர், அகோபிலவல்லி தாயாருடன் 1200 ஆண்டுகளுக்கு மேல் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

கோவில்அமைப்பு.


மலையை குடைந்து பிருமாண்டமாக நரசிம்மர் சிலை வடித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் நரசிம்மர். மூன்று கண்களுடன் காட்சி கொடுக்கும் நரசிம்மரை, பட்டாச்சாரியார் தீப ஆராதரனயின் சமயத்தில் மட்டும் தரிசிக்கமுடியும். நெற்றியில் உள்ள நாமத்தை தூக்கி தீபாராதனை காட்டும் நேரத்தில் பட்டாச்சாரியார் பக்தர்கள் தரினத்திற்காக இக்காட்சியை விளக்குகிறார். ரதசப்தமியன்று சூரிய கதிர் இறைவன் பாதத்தில் விழுகிறது.



புராணம்.


நரசிம்ம அவதாரகாலத்தில் இந்த இடத்தில் ஜாபாலி என்ற முனிவர் கடும் தவம் செய்துவந்தார். ஒருநாள் அந்தி பொழுது பிரதோஷகாலத்தில் நரசிம்மர் முனிவருக்கு காட்சி கொடுக்கிறார். முனிவர் இத்தலத்திலேயே இருந்து மக்களுக்கு அருள்புரிய இறைவனிடம் வேண்டுகிறார். அன்று முதல் ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மராக இங்கு வீற்றிருக்கிறார். ஊர் சிங்கபெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. (நரசிம்மர் என்பதின் தமிழாக்கமே சிங்கப்பெருமாள்).


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...