நெய்வணை, திருவாமாத்தூர், திருநாவலூர்.

 நெய்வணை, திருவாமாத்தூர், திருநாவலூர்.

 எங்களின் 274 பாடல் பெற்ற தல யாத்திரையின் தொடர்ச்சியாக, (5.8.21) அன்று மீண்டும் எங்கள் தலயாத்திரையை தொடர்ந்தோம். திருநெய்வணை, திருநாவலூர், திருவாமாத்தூர், அரகண்டநல்லூர், இந்த நான்கு திருக்கோவிலுக்கு செல்வது என்று தொடங்கிய புனித பயணத்தில் 3 இடங்களுக்கே சென்று, இறைவனை வழிபட முடிந்தது.

1.நெய்வணை


விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அடுத்து சேலம் செல்லும் பாதையில், வலது புறம் நெய்வணை செல்வதற்காண சாலை பிரிகிறது.  நாங்கள் கூகுள் உதவியுடன் தான் சென்றோம். இறைவன் சொர்ணகடேஸ்வரர். இறைவி நீலமலர்கண்ணி (எ) பிரகன்நாயகி. திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம். சிவன் சுயம்புமூர்த்தி;. (நல்வெண்ணெய் விழுது பெய்தாடுதிர் -பதிகம்). வள்ளலார் சுவாமிகளாலும் பாடப்பெற்ற தலமாகும்.

2.திருநாவலூர்.


 நெய்வணையில் இருந்து, ரிஷிவந்தியம் -நெமிலி சாலை வழியாக கெடிலம் ஆற்று பாலம் அருகில் சென்று விழுப்பரம்- திருச்சி நெடுஞ்சாலை எதிர்புறம் சென்றால் திருநாவலூர் கோவிலை அடைந்து விடலாம். மணோன்மணி அம்பாள் உடனுறை ஸ்ரீபக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தனி சன்னதியே ஒன்று அமைந்துள்ளது. சுந்தரமூர்த்திநாயனார்  பதிகம் பாடிய கோவிலும், அவதரித்ததலம் என்ற பெருமையும் கொண்டது, திருநாவலூர். வரதராஜபெருமாளுக்கு தனி சன்னதியே உள்ளது. பெருமாள், அம்மன் சன்னதி இரண்டும் சோலை நடுவில் உள்ளது போல் சன்னதி சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.

3;. திருவாமாத்தூர்.


 திருநாவலூரில் இருந்து அரகண்டநல்லூரை விட திருவாமாத்தூர் அருகில் இருந்ததால் கோவில் நடை மூடுவதற்குள் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரை தரிசிக்க முடிவுசெய்து திருவாமாத்தூர் சென்றோம். விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்பரம் - திண்டிவனம் செல்லும் வழிதடத்தில் அமைந்துள்ளது. ராமர் வழிபட்டதலம்,ஆவினங்கள் (பசு) ஒன்றுகூடி இறைவனை வேண்டி, தன்னை தற்காத்துக்கொள்ள கொம்புகளை வரமாக பெற்ற இடம்,பிருங்கி முனிவர் அம்பிகையை வேண்டி சாபவிமோசனம் பெற்ற தலம். அம்பிகைக்கு தனி சன்னதி இல்லாமல், கோவிலுக்கு எதிரே தனி கோவில், என்று பல சிறப்புகளை பெற்றது திருவாமாத்தூர். திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார். இவர்களால் மட்டும் அல்லாமல் இரட்டை புலவர்கள், அருணகிரிநாதர், வள்ளலார், மகான் தண்டபாணி சுவாமிகள் என்ற போற்றதக்க பலரும் அழகியநாயகரை பாடியுள்ளனர். 




 திருச்சோபுரம் மற்றும் திருத்தினை நகர் என்ற தீர்த்தநகரி;. (2.8.21).

திருச்சோபுரம், கடலூர்-சிதம்பரம் செல்லம் வழியில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை அடுத்து, 1கி;;மீ. தொலைவில் இடதுபுறம், திருச்சோபுரம் என்ற பெயர் பலகையே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் திருச்சோபுரநாதர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீ சத்தியாயதாட்சி சமேத ஸ்ரீ மங்களபுரீஸ்வரர் (எ) அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை திருச்சோபுரநாதர்  தல வரலாறு. அகத்திய மாமுனிவர் கடல் மணலுடன் மூலிகைச்சாறு கலந்து, இறைவனை உருவாக்கி,  இறைவனின் திருமணக்கோல காட்சியை காண  வேண்டுகிறார். மூலிகை மணல் கலந்த லிங்க திருமேனியுடன் அருள்வதால், அபிஷேக திரவியங்கள் மருந்துவகுணம் கொண்டதாக நம்பப்படுகிறது. இங்கு வீற்றிருக்கம் தட்சிணாமூர்த்தி இசை கடவுளாக வணங்கப்படுகிறார். இவரது திருமேனியில் இருந்து ஸ்வரங்களின் ஓசை உண்டாகிறது. திருஞானசம்மந்தர்,சுந்தரர் இவர்களால் பாடல் பெற்ற தலமாகும். இராமலிங்க சுவாமிகளும் இத்தல  இறைவனை போற்றி பாடியுள்ளார். 11ஆம் நூற்றாண்டிற்கு பிறகு ஏற்பட்ட கடற்கோளினால் (கடலுக்க அடியில் ஏற்படும் நிலநடுக்கம்) கோவில் மணலால் மூடப்பட்டு, பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, மதுரை தம்பிரான்களால் மீட்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.




திருத்தினைநகர்(எ)தீர்த்தநகரி.

கடலூர்-சிதம்பரம் வழியில் ஆலப்பாக்கம் ரயில்வேகேட்டை தொடர்ந்து, வலதுபுறம் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 5கி.மீ. தொலைவிலேயே இந்த தலம் அமைந்துள்ளது.அருள்மிகு.கருத்தடங்கண்ணி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலையம் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்றதாகும். (நீறு தாங்கிய திருநுத லானை என்ற பதிகம்)   


புதன் தலமும் பூம்புகாரும்.

 புதன் தலமும் பூம்புகாரும். (24.7.2021)

எங்கள் வீட்டின் விருந்தினர் விருப்பதிர்கிணங்க திருவெண்காடு கிளம்பினோம்; எங்களின் (நான்,என்கணவர்) பாடல் பெற்ற தலயாத்திரையுமாக அமைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. சீர்காழியில் இருந்து 12 கி.மீ. தொலைவில்,  17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, 3குளங்களை உள்ளடக்கிய, பெரிய சுற்றுப்பிரகாரமும் கொண்ட, மிக எழில் நிறைந்த, இரண்டு வாயில்களை கொண்ட சிவன் கோயிலாகும்.

இக்கோவிலின் சிறப்பு


1. ஆகோரமூர்த்தி – 

சிவபெருமானின் அம்சங்களுள் ஒருவர்.  இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் அகோரமூர்த்தி சன்னதி கிடையாது. அருகிலேயே உற்சவமூர்த்தியும் உள்ளது. தட்சனின் யாகத்தை அழிக்க சிவபெருமான் நெற்றிக்கண்ணில் தோற்றுவிக்கப்பட்ட அகோரவீரபத்திரர்  வேறு. இந்த தலத்தில் அமைந்துள்ள அகோரமூர்த்தி வேறு.  மருத்துவாசுரன்,  பெற்ற வரம் காரணமாக தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமான் அருளியபடி திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்தனர். அசுரனை எதிர்கொள்ள வெண்காட்டீஸ்வரர்; நந்தியை  பணித்தார். நந்தியிடம் தோல்வி அடைந்த பின் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, சூலத்தை பெற்றான் அசுரன். நந்தியை சூலத்தால் தாக்கி காயத்தை ஏற்படுத்தினான். நந்திகேஸ்வரர் திருவெண்காட்டாரிடம் முறையிட, சிவபெருமான் உடனே அகோரமூர்தியாக உருகொண்டரர். மருத்துவாசுரன் உருவத்தை பார்த்த மாத்திரத்தில் சரணடைந்தான். மருத்துவாசுரனை சிவன் காலடியில் காணலாம். 

2;. சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலம்.(தேவாரம்,திருவாசகம்)

3. சுயம்பு மூர்தியாக அருள்பாலிக்கிறார்.

4. சிவபெருமான் ஆனந்ததாண்டவம் புரிந்த இடம்.

5.108 சக்திபீடங்களில் ஒரு தலம்.

6. நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிப்பட்ட தலம். பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர்  அருள் கிடைக்கப்பெற்றோம.;





பூம்புகார்.

திருவெண்காட்டில் இருந்து 9 கி.மீ. தொலைவுதான் பூம்புகார். வுரலாற்று சிறப்புமிக்க இடம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தின் நகரம் இதுதான். சோழர்காலத்தில் பெரிய துறைமுகமாக இருந்த இடம். வரலாற்று பெயர் காவிரிபூம்பட்டிணம். தற்கால பெயர் பூம்புகார். சிறந்த சுற்றுலா இடம், சரியான பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்று அருவருப்பை ஏற்படுத்தியது. “சிலப்பதிகார கலைக்கூடம்” பராமரிப்பு பணி நடந்து கொண்டிருந்தது. கலைக்கூடத்தின் உள்ளே கோவலன், கண்ணகி, சிலைவடிவிலும், வெளிப்பகுதியில், சிலப்பதிகார காப்பியத்தை எழுதிய இளங்கோவடிகளுக்கு (இதில் பல கருத்து வேறுபாடுள்ளது) சிலையும் உள்ளது. சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் நீரூற்று அவற்றை உடனே பார்த்து ரசித்து இன்புர, யூ. டியுப் க்கு சென்று, காஞ்சி பட்டுடுத்தி என்று பாடலை தேடலில் தேர்வு செய்து பாட்டின் சரணத்தை (ஒரு பாடலின் நிறைவு பகுதி) பார்த்து மகிழ்ச்சிஅடையுங்கள் (பூம்புகாரின் நாயகியாம் என்று தொடங்கும்).       







விழுப்புரம் மாவட்டம் - பாடல் பெற்ற தலங்கள்.

விழுப்புரம் மாவட்டம் - பாடல் பெற்ற தலங்கள்.(20.7.2021)

  நானும் என் கணவரும், திருவாண்டார்கோவில், திருமுண்டீஸ்வரம், திருஇடையாறு, திருவெண்ணைநல்லூர் இந்த நான்கு பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வழிப்பட்டோம். 

1. திருவாண்டார் கோவில்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்,  நெடுஞ்சாலையின் வலது புறத்தில், நடக்கும் தூரத்திலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. இறைவன் பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரர், வடுகூர்நாதர், வடுகநாதர் என்றும், அம்பிகை வடுவகிறர்கண்ணி, திரிபுர சுந்தரி என்ற நாமத்தை கொண்டு நம்மை அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இயங்குகிறது. அருணகிநாதரால் ஒரு திருபுகழ் பாடல் எமுதப்பட்ட இடமும் ஆகும்.



2. திருமுண்டீச்சரம்.

இந்த பாடல் பெற்ற தலமும் திருவெண்ணைநல்லூரை தொடர்ந்து, அரசூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலம் தோன்றியதற்கான வரலாறு, படக்காட்சியாக கோவிலின் உட்பகுதியில் உள்ளது. சொக்கலிங்கம் என்ற அரசர் ஒரு அழகிய தாமரை பூவை குளத்தில் கண்டதாகவும், அதை கொய்ய வீரனை அனுப்புகையில், அந்த மலர் கைக்கு அகப்படாமல் அந்த வீரனை அலைக்கழித்த காரணத்தால், அரசர் மலர் மீது அம்பெய்துகிறார். உடனே பூவின் மேல் ஒரு லிங்கம் தோன்றியது மடடும் அல்லாமல், குளத்து நீர் சென்னிறமாக மாறுகிறது. அந்த குளக்கரையிலேயே மன்னன் சிவாலயம் எழுப்புகிறார். செல்வாம்பிகை சமேத ஸ்ரீ முண்டீசர் இக் கோவிலில் வீற்றிருந்து நம்மை அருள்பாலிக்கிறார். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும் இது. இந்த தேவார பாடல், பத்து பத்தியின் முடிவிலும், “திருமுண்டீசரத்து மேய சிவலோகன்காண் அவனென் சிந்தையானே.” என்று முடிக்கிறார் அதனால் சிவலோகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.. 




3. திருஇடையாறு.

 இந்த தலமும் இதே வழித்தடத்தை தொடந்து அமைந்துள்ளது. கோவிலின் சுற்றுபகுதி நல்ல பசுமையாக இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயன்மாரால் பாடல் பெற்றதலமாகும்;. “முந்தை  ஊர் முதுகுன்றம்” என்று தொடங்கும் இந்த திருப்பதிகத்தில் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் பல ஊர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.


4. திருவெண்ணைநல்லூர்.

இறைவன்- கிருபாபுரீஸ்வரர். இறைவி-வேற்கண்ணியம்மை, (எ)  மங்களாம்பிகை. கைலாயத்தில் சிறந்த தொண்டனாக மலர் கொண்டு இறைவனை பூஜித்துவந்த நிலையில் சுந்தரர் பார்வதி தேவியின் பணி பெண்ணை பார்த்து மயங்கியமைக்காக, பூமியில் பிறந்து  இல்லாழ்கையில் ஈடுபட இறைவனால் கட்டளையிடப்படுகிறார். அப்பொழுது சுந்தரர் இறைவனிடம் நான் மானுடபிறவியில் மயங்கும் பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார். அதனால் சுந்தரரின் திருமணதருவாயில் வந்து “நீ என் அடிமை”  என்று வழக்கு தொடுத்து சுந்தரரை கோயில் வாசல் வரை அழைத்து வந்து கைலாய கோலத்தில் காட்சி தருகிறார். தன் மேல் பாடல் இயற்றி பக்தி கொள்ளுமாறு பணிக்கிறார். நான் எவ்வாறு பாடவேன் என்று கேட்டதற்;கு, “நீ என் அடிமை என்று”, நான் உன் மேல் வழக்கு தொடுத்தமையால் நீ “உனக்கு என்ன பித்தா” என்று கேட்டாய்யல்லவா அதனால் “பித்தா”  என்று பாடலை தொடங்குமாறு சிவ பெருமான் பணிக்கிறார். (பித்தா பிறை சூடி-தேவாரம்) மகிஷனை வதம் செய்ய பார்வதி கோர உருவம் எடுத்து, இந்த உருவம் மறைய வெண்ணைகோட்டைகட்டி அதில் தவம் செய்தமையால் இந்த ஊர் திருவெண்ணைநல்லூர் எனவும் இறைவி மங்களாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர். முருகபெருமான் மயில் மீது நடனமாடி அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்தபின் திருபுகழ் ஒன்றும் இந்த தலத்திலேயே உருவாகியுள்ளது. சடையப்ப வள்ளல் வாழ்ந்து மறைந்த தலம், மெய்கண்டார் முக்கி அடைந்த தலம் என்று பல சிறப்களை கொண்டது இந்த திருவெண்ணைநல்லூர். தற்சமயம் புணரமைப்பு பணி நடக்கிறபடியால், குடமுழுக்கு முடிந்த  பிறகு சென்று அனைத்து தெய்வங்களையும் தரிசனம் செய்யுங்கள். கிருபாபுரீஸ்வரர் சன்னதி தவிற மற்ற இடங்கள் தரிசிக்க அனுமதி இல்லை. ஆடி மாதம் என்பதால் மங்களாம்பிகை தரிசனமும் எங்களுக்கு கிடைத்தது.  







சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...