நிஜ டோலக்பூர்

Doctors and patients cartoon in front hospital Vector Image


நிஜ டோலக்பூர்

 என்னுடைய அப்பா அஞ்சல் அதிகாரியாக பணியாற்றிய பல ஊர்களில், நான் நிஜ டோலக்பூர் என்று சித்தரிக்கும் செங்கிப்பட்டி என்ற டி.பி.சானிடோரியம் பற்றியதே இந்த blog. டோலக்பூர் தெரியாதவர்கள்  குழந்தைகளிடம்  கேட்டு தெரிந்துக்கொள்ளவும். இந்த ஊர் அவ்வளவு ரம்யமாக இருக்கம் பாரப்பதற்க்கு. ஏனென்றால் மக்கள் தொகை மிகவும் குறைவு. காச நோய் மருத்துவமணையை அடிப்படையாக கொண்டதே இந்த ஊர். மருத்துவமனையே ஒரு சிறிய ஊர் போன்று தோற்றம் அளிக்கும். அலுவலக முகப்பில் நடுவில் காந்தி சிலையும், இரண்டுபக்கமும் நீரூற்று அலங்கரிக்கும். சிறப்பு வார்டு என்பதை ஒரு அழகான வீடு போன்றே உருவாக்கி இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்க்கும் குறைந்தது பத்தடியாவது இடைவெளி இருக்கும். நோயாளியின் உதவியாளர்கள் சமைத்து சாப்பிட தனி சமையல் அறை, ஒரு சோலையின் இடையில் விடுமுறை ரிசார்ட் போன்று கட்டியிருப்பார்கள். மருத்துவனையில் கலையரங்கம், உள்திரையரங்கம்,  , விளையாட்டு மைதானம் என்று கப்பலுக்குள் இருப்பது போன்று அனைத்து வசதிகளும் அமைத்து இருந்தது இந்த மருத்துவமனையில். நான் தினமும் பள்ளி முடிந்த உடன் மருத்துவமணையை ஒரு சுற்ற சுற்றி வந்த பிறகே வீடு திரும்புவேன். எப்படி இருக்கும் என்றால் திட்டமிட்ட நகரம் என்று சொல்வார்களே (நெய்வேலி,சண்டிகர்) போன்று திட்ட மிட்ட கிராமம். மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் என்று தனிதனியாக அழகான குடியிருப்பு கட்டியிருப்பார்கள். இதன் இடையில் தபால் அலுவலகத்துடன் கூடிய எங்களின் வீடும் அமைந்து இருந்தது. வீட்டைச்சுற்றி மனித,வாகன அரவமே இல்லாமல் மிக அமைதியாக இருந்தது நாங்கள் இருந்த வீடு; நல்ல காற்றோத்துடன் கூடிய மிக அருமையான வீடு. வாஷ் பேசின், சமையல் அறையில் சிங், அனைத்து இடத்திலும் தண்ணீருக்கு குழாய் என்று நாங்கள் மூன்று ஆண்டுகள் சுகமாக இருந்தோம். ஊரில் எங்கும் குப்பையே இருக்காது. அதுமட்டுமல்ல நாய், பன்றி, கோழி என்று எதுவுமே இருக்காது. இவைகள் மூலம் காச நோய் பரவும் என்பதால் இந்த மருத்துவமனையில் இவைகளை உடனே அகற்றுவதற்காக பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.  எங்களை தவிற மருத்துவமனைக்கு தொடர்பில்லாத (நேரடியாக) இரண்டு குடும்பம் இருந்தது. இருவருமே ஹோட்டல் வைத்து இருந்தவர்கள் தான். (சைவம் மற்றம் அசைவம்).  நோய் அச்சம் மற்றும் வசதிஇல்லாத சூழல் அவைகளை மட்டும் கருத்தில்கொள்ளாமல் சுத்தமான பராமரிப்பு இயற்க்கை சூழல் நிறைந்த இந்த இடத்தில் மிக இளவயதில் வாழ சந்தரப்;பம் அளித்த என்தந்தைக்கு மிக்க நன்றி. எட்டு வயதில் வாழ்ந்த ஊர் 45 வருடம் சென்ற பிறகும் என் மனதில் மிக பசுமையாக நிறைந்துள்ளது.   

நாடக மேடை


                                                       
                                                   

நாடக மேடை

ஆறாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு நான் என்னுடைய பெரியம்மாவீட்டிற்க்கு சென்றால் அங்கு என்னுடைய அக்கா இருவரும், அவர்களுடைய அத்தை வீட்டிற்க்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். உடனே நானும் அவர்களுடன் கிளம்பிவிட்டேன். ஆனால் அங்கு என்னால் மனம் ஒன்றி இருக்க முடியவில்லை. திருச்சிக்கு மிக அருகில் உள்ள பொன்மலைப்பட்டி என்ற கிராமம்தான் அவர்களின் அத்தை வீடு,  தண்ணீர் பஞ்சம் வேறு, புகைவண்டி நிலையத்தில், வண்டி நிற்க்கும் நேரத்தில் தண்ணீர் பிடிக்க வேண்டும் இவ்வாறு பல வழிகளில் சமாளித்து வந்தார் அவருடைய அத்தை தண்ணீர் பஞ்சத்தை. இந்நிலையில் நான் வீட்டில் இருக்க சங்கடப்பட்டுக்கொண்டு வெளியில் சென்றேன். அவர்கள் வீட்டிற்க்கு மிக அருகிலேயே ஒரு மாதாகோவில் இருந்தது. அங்கு ஏதோ விழா நடக்கப் போகிறது, அதனால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களுடன் நன்கு பழக ஆரம்பித்தேன். உடனே அந்த ஆசிரியை நீ நாடகத்தில் நடிக்கிறாயா? மாதா வேடம் உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றார். அவ்வளவுதான், எனக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. ஏன் என்றால் நான் பள்ளிக்கூடத்திற்க்கு போவதே, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறத்தான். உடனே சரி என்று சொல்லிவிட்டேன். அவர்கள் உடனே உனக்கு வசனம் ஒன்றுமே கிடையாது, “நான் இருக்கிறேன் மகனே உன் துயர் துடைக்க” என்று மட்டும் சொன்னால் போதும் என்றார். வேறு ஒருவர் வந்து என்னை யார்? எங்கிருக்கிறேன்,?என்ற விபரங்கனை கேட்டறிந்தார். நான் உடனே என்னுடைய அக்காவின் மாமா ,அத்தையின் பெயர் மற்றும் பிற விபரங்களை தெரிவித்தேன். அவர் உடனே வீட்டிற்க்கு சென்று என்னை நாடகத்தில் நடிக்க வைக்க அவர்களிடம் அனுமதி கேட்டார். உறவினர் தயங்கினாலும் நான் அவர்களை சம்மதிக்க வைத்துவிட்டேன். நாடகத்தில் ஒருவர் என்னிடம் வந்து அவருடைய துயரை சொல்லி அழுவார் நான் அப்பொழுதுதான். இந்த வசனத்தை சொல்ல வேண்டும். ஆனால் இந்த நாடகத்தில் நான் இடம் பெரும் காட்சி தான் இந்த Blog ன் உச்சம். மூன்றடி நீளம் உள்ள ஒரு பலகையில் நான்கு பக்கமும் ஒரு கயிறை கட்டி, பத்தடி உயரத்திற்க்கு என்னை தூக்குவார்கள், நான் கயிறை கூட பிடித்துக்கொள்ள முடியாது. ஏன் என்றால் ஒரு கையில் சிலுவையை வைத்துக்கொள்ள வேண்டும் மற்றொரு கையை அருள் செய்வது போல் காட்ட வேண்டும். ஒத்திகை நேரம் முழுவதும் அந்த பலகையில் என்னை நிற்க்கவைத்து என்னை மேலும் கீழுமாக கூறையின் மேல் நின்று என்னை இருவர் கயிறை கொண்டு தூக்குவார்கள். முதலில் பயமாக இருந்தாலும் பிறகு உற்ச்சாகம் கொண்டேன். மறுநாள் மாலை நிகழ்ச்சி ஆரம்பித்தது. எனக்கு முகச்சாயம், மற்றும் வெள்ளை நிறத்தில் ஒரு அங்கி, இடுப்பில் வெளிர் நீல நிறத்தில் ஒரு துணி கட்டப்பட்டது. தலையில் தங்க நிறத்தில் மினுமினுப்பாக ஒரு துணி அதன் மேல் கிரீடம் வைத்து, என்னை பலகையில் நிற்க்க வைத்து பத்தடி உயரத்தில் தூக்கிபிடித்து, பலவண்ண விளக்குகளை என் முகத்தில் ஒளிரவைத்து திரையை விலக்கியபின் பார்வையாளர்கள்  பயங்கர ஆரவார ஒலி எழுப்பினர். அவர்களுக்கு நான் அந்தரத்தில் நிற்பது போன்று தோன்றும். நாடகம் சிறப்பாக முடிவடைந்தது . தொடர்ந்து மூன்று நாட்கள் பொன்மலை பட்டியில் நான் இருந்தவரை “மாதா பொண்ணு” என்று ஒரே பிரபலம்தான்.  

History of Tanjore Painting

தஞ்ஜாவூர் ஓவிய வரலாறு


தஞ்சாவூரை ஆண்ட  தஞ்சன் என்ற மகாராஜா, அவருடைய மக்கள் அனைவரும் பல செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும்  ஆசைப்பட்டார். ஆனால் அக்காலத்தில் கல்வி என்பது அனைத்துதரப்பு  மக்களுக்கும் எளிமையாக கிடைத்து விடவில்லை. அதனால் பல நல்ல பயனுள்ள செய்திகளை சுவரில் ஒவியங்களாக வரைந்து அதனை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தார். இதுவே சுவர் ஒவியத்திற்க்கு அடிப்படையானது. பின்னர் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதல் சரபோஜி மன்னர்,மற்ற மன்னர்களின் எண்ணங்களில் இருந்து மாறுபட்டிருந்தார். படை எடுப்பு பிற நாடுகள் ஆக்கரமிப்பு என்றில்லாமல், கலைஞர்ளை ஆதரித்து கலையை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார் அவரை தொடர்ந்து வந்த இரண்டாம் சரபோஜி மன்னர்,அவருடைய மூதாதையர்களின் உருவத்தை தர்பாரில் இருப்பது போன்ற வடிவத்துடன் சுவரில் வரைய முற்பட்டு அதற்கான புதிய முயற்ச்சியாக உருவத்தை சொதை (embossing) உருவில் செய்ய முற்பட்டார். இந்த உப்பல் வேலைக்கு,குண்டுமணி, புளியம்கொட்டை, பாகு, முட்டை வெள்ளைகரு என பல பொருட்களை பயன்படுத்தினர்.





 பிறகு வடமாநிலம் மற்றும் தென் மாநிலங்கள் இணைந்ததில் மராட்டியர்கள் பட்டு போன்ற உயர்தரமான துணிகளை பயன்படுத்தி அலங்காரம் செய்தல் மற்றம் ஓவியம் என்று பலவகையான கலைகளில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நாயக்க மன்னர்கள் தஞ்சையை ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்றியதாலும் ,மகாவிஷ்ணு அலங்கார பிரியர் என்பதாலும் ,இந்த வகையான ஓவியங்களில் கிருஷ்ணர் கிருஷ்ணலீலைகள் இவற்றை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டன.


  ஆங்கிலேயரின் படைஎடுப்புகாரணமாக கலைஞர்களுக்கு ஏற்பட்ட நலிந்த நிலையை மேம்படுத்தும் “கைவினை கலைஞர்கள் அபிவிருத்தி திட்டம்” என்ற திட்டத்தை அரசு கொண்டுவந்ததால் பல மாற்றங்கள் இந்த ஒவியத்தில் ஏற்பட்டது. பால் ஊறும் தன்மை கொண்ட பலா மர பலகையில் செய்ய ஆரம்பித்து ,இப்பொழுது தண்ணீர் உறிஞ்சாத பிளைஉட்டில் செய்கின்றனர். தங்க ரேக் பயன்படுத்துவதால் ஒவியத்தின் விலை அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் நிலைத்திருக்ககூடியதாக உள்ளது. மற்ற வகையான ஓவியங்கள் போல் அல்லாமல் காலம் கடந்தும் பழமையானது(antique) என்ற பெருமையை பெறுகிறது. இந்த வகையான ஒவியங்கள் மூன்று வகைப்படுகிறது. அவையாவன ஸ்ரீரங்கம் உறையூர் மைசூர் என்று பெயர் கொண்டு ஒவியங்கள் செய்யப்படுகின்றன. விலை உயர்ந்த ஓவியமாக இருப்பதால் வீட்டில் வைத்துக்கொள்வதை மிகவும் கௌரவமாக மக்கள் கருதுகின்றனர்.


 முழுஇறை சிந்தனையுடன் செய்யப்படுவதால் வீட்டில் வைத்து வணங்கும் போது நல்ல அதிர்வலைகளை உருவாகிறது. எனது தஞ்ஜாவூர் ஓவிய ஆசிரியர் திரு. ஜே.வி.கணேசன் என்ற தேவநாதராமானுஜதாசர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

direction less

திக்கு திசை தெரியாமல்.
      
      1984 செப்டம்பர்;, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் நான் சேர்ந்துஇருந்தேன்.அக்டோபர் 31 ஆம் தேதி எப்பொழுதும் போல் மாலை 3.30 மணிக்கு கல்லூரி நேரம் முடிந்து நான் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்க்கு வந்தால், அப்பொழுது; ஒரு பெண்மணி என்னிடம் வந்து, “ சீக்கிரம் வீட்டுக்கு போமா” மாண்புமிகு  பிரதமர் இந்திராகாந்தி அம்மாவை சுட்டுடாங்களாம் என்றார். பயம், கவலை என்னை சூழ்ந்தது. பூண்டியில் இருக்கும் என்னுடைய வீட்டிற்க்கு செல்ல இரண்டு பேருந்துக்களில் பயணிக்க வேண்டும்.மீண்டும் கல்லூரிக்கே செல்ல முயன்றேன். ஆனால் அங்கு யாரும் இல்லை என்றால் என்ன செய்வது என்ற தயக்கம் ஏற்பட்டது.  பேருந்து நிலையத்திற்க்கு நடக்க ஆரம்பித்தேன். அனைத்து கடைகளும் மிகவும் வேகமாக மூடிக்கொண்டிருந்தார்கள். தெருவில் ஒரு பெண்மணிக்கூடஇல்லை. பயம் கடுமையாக பற்றிக்கொண்டது. பேருந்து நிலையம் அருகில் பெரியம்மாவின் வீடு உள்ளது.(அம்மாவின் சித்தி பெண்) எனக்கு அவ்வளவு பழக்கம் கிடையாது அவர்களிடம். இருந்தாலும் அவர்வீட்டிற்க்N;க சென்று விட்டேன். பெரியப்பா தஞ்சை தலமை தபால் நிலையத்தில் பணி புரிந்ததால். என் அப்பாவிற்க்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிப்பது ஒன்றும் கடினமாக இல்லை. மறுநாள் உடுத்திக்கொள்ள உடை கூட கிடையாது. பிறர் ஆடையை பகிர்ந்து கொள்வதில் விருப்பம் இல்லை. தூக்கம் சரியாக இல்லை ,சாப்பிடபிடிக்கவில்லை, குளிக்காமல் இருந்ததால் அருவருப்பு உணர்ச்சிவேறு. மறுநாள் காலையில்;  ஊருக்கு பேருந்து செல்கிறதா என்று பார்க்க சென்றேன். என் நல்ல நேரம் ஒரு நீடாமங்கலம் பேருந்து நின்று கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்தால் என்னை போன்ற  மாணவிகள் இருந்தனர். நான் இருக்கும் மார்கத்தில் இருந்து இவ்வளவு பெண்கள் படிக்க வருவது எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னார்குடியில் இருந்து அப்பா  பணிமாற்றம் காரணமாக பூண்டிக்கு வந்ததால்  எனக்கு வசிக்கும் ஊர், படிக்கும் இடம் இரண்டுமே புதிதானது. நான் உடனே பெரியம்மாவிடம்  சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன். பிறகுதான் சக மாணவிகள்  மூலம் தெரிந்தது கல்லூரி முதல்வர், வெளியூர் மாணவிகளை கல்லூரி விடுதியில்; தங்க வைத்து, அனைத்து வழிதடங்களுக்கும் பேருந்து மூலம் வீட்டிற்க்கு பாதுபாப்பாக மாணவிகளை அனுப்பஎடுத்துக்கொண்ட முயற்ச்சியை அறிந்தேன். மனமார நன்றியை தெரிவித்துவிட்டு  அறிவுபூர்வமாண முடிவு எடுக்கதெரிந்துகொண்டு பயணித்தேன்.    
.    

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...