வடஸ்ரீரங்கம் என்ற தேவதானம்.

 வடஸ்ரீரங்கம் என்ற தேவதானம்.  (தரிசனநாள்-18.2.2023).


வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், பெருமாள் ரங்கநாதர் என்ற பெயரிலும், தாயார் ரங்கநாயகி என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். வாட்ஸ்ஆப் செயலியில் வந்த பதிவின் மூலம் இந்த கோவிலை அறிந்து கொண்டேன்.


அமைவிடம்.

சென்னை அருகே உள்ள பொன்னேரி என்ற ஊரில் இருந்து, ஏழு கி;.மீ. தொலைவில் உள்ளது. பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, செல்ல ஆட்டோ வசதி மட்டுமே உள்ளது. காரில் சென்றால், திருவொற்றியூர் ஹை ரோடில் செல்ல வேண்டும்.

தலபுராணம்.


தேவர்களால் தானம் செய்யபட்ட இடம் என்பதால் தேவதானம் என்று அழைக்கப்படுகிறது. சாளுக்கிய மன்னன் தென்னிந்தியாவில் படை எடுத்த போது. திருச்சியில் காவிரிக்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதரை கண்டு சொக்கி மயங்கி போனான். எங்கு சென்றாலும் ரங்கநாதரின் அழகுமட்டும் மனதை விட்டு நீங்காதிருந்தது. பொன்னேரிவழியாக செல்லும் போது இந்த இடமும், ஸ்ரீரங்கம் போன்று எங்கும் நெல் நிறைந்து பசுமையாகவே காட்சியளித்தது. அந்த இடத்தில் ஒரு விவசாயி நெல்மணிகளை மரக்காலால் அளந்து கொண்டிருந்தார், மன்னன் அருகில் செல்லவும் விவசாயியை காணவில்லை. பார்தால் நெல் அளக்கும் மரக்காலை தலைக்கு வைத்துகொண்டு அந்த விவசாயி உறங்கிவிட்டார். மன்னன் அருகில் சென்று பார்தால் ஸ்ரீரெங்கம் ரங்கநாதர் தலையில் மரக்காலை வைத்து கொண்டு சயனித்திருப்பது போன்ற காட்சியை கண்டவுடன், இந்த இடத்திலேயே கோவில் கட்ட முடிவு செய்தார் மன்னர்.

சிலைசெய்ய  நேபாளநாட்டில் கிடைத்த ஒரு பெரிய கல்லை கொண்டுவரும்பொழுது அந்த கல் கங்கைநீரில் விழுந்து மிதந்தது, இந்த அதிசயத்தை கண்ட சாளுக்கிய மன்னன், அந்த கல் சாளக்கிராமம் என்பதை அறிந்து கொண்டார். சாளக்கிராமகல்லில் 1000 வருடங்களுக்கு  முன்பு, 18 அடி நிளத்தில் ரங்கநாதர் செதுக்கப்பட்டார். என்பதே இக்கோவிலின் புராணம். 


 


திருக்கச்சூர். (தேவாரபாடல் பெற்ற தலம்.)

 திருக்கச்சூர். (தரிசனநாள்-6.2.2023). தேவாரபாடல் பெற்ற தலம்.



அமைவிடம்.

காஞ்சிபுர மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் உள்ளது. சென்னையில் இருந்து சிங்கபெருமாள் கோவிலுக்கு முன்பு இடதுபறம், திருக்கச்சூர் அமைந்துள்ளது. 

சிறப்பு.


1.சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகும். திருஇடைச்சுரம், திருக்கழுக்குன்றம், இறைவனை வழிபட்டுவிட்டு, சுந்தரர் திருகச்சூர் வந்தடைகிறார். பசியுடன் களைப்படைந்து சுந்தரர் காணப்பட்டார், என்றும், சிவபெருமான் வீடுகளில் உணவை இரந்து, சுந்தருக்கு அளித்தார் என்பதும், இத்தல வரலாறு.


2.ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் தரிசனம் செய்து கச்சபேஸ்வரரை பாடியுள்ளார்.



3.திருமால் கச்சப்ப(ஆமை) வடிவில் வந்து அமுதம் கிடைக்க வழிபட்ட தலம்.


4. கஜபிருஷ்ட விமானம் அமைப்பை (ஆனை(யானை)யின் முதுகு போல்)  கொண்டதால் ஆலக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.


5. மூலிகை நிறைந்த மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால், ஈசன் மருந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.


தற்சமயம் ஆலையம் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...