ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் செம்மஞ்சேரி. (தரிசனநாள்-3.5.2022).

 ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் செம்மஞ்சேரி. (தரிசனநாள்-3.5.2022). 


கி.பி.15ஆம் நூற்றாண்டிற்க்கும் 16 ஆம் நூற்றாண்டிற்க்கும் இடைப்பட்ட இந்த கோவில் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள செம்மஞ்சேரி என்ற இடத்தில் உள்ளது. பல்லவர்களால் கட்டப்பட்டு பின்னர் நாயக்க மன்னர்களால் புதுபிக்கப்பட்டது. நரசிம்ம வர்ம பல்லவர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வறட்சியை இந்த பெருமாள் தீர்தார் என்ற செய்தியும் உள்ளது. 

தல புராணம்.

விஷ்ணுவின் பக்தரான ஸெளனக மகரிஷி திருக்கடல் மல்லை (மகாபலிபுரம்) செல்லும் வழியில், அழகிய நீரோடைகளும், வயல்வெளிகளும் நிறைந்த செருமணஞ்சேரியில் நித்ய பூஜைகளை முடித்து பெருமாள் கோவிலுக்கு செல்ல நினைத்து , இந்த ஊர் மக்களிடம் கோவில் எங்கே என்று கேட்டதற்கு, இவ்வூரில் பெருமாள் கோவில் கிடையாது என்பதை அறிந்து, பெருமாள் நோக்கி தவம் இருந்தார்.  இறைவன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீநிவாசனாக காட்சியளித்தார். ஸெளனக மகரிஷி மகாவிஷ்ணுவிடம், இந்த செருமணஞ்சேரியில் இருந்து மக்களை காக்குமாறு வேண்டினார்.

கோவில் பராமரிப்பு.

2007 ஆம் ஆண்டு வரை முற்றிலும் சிதிலம் அடைந்த நிலையில் இருந்த இந்த கோவில், ஸ்ரீஅலமேலுமங்கா சமேத, ஸ்ரீஸ்ரீநிவாசன் பெருமாள் டிரஸ்ட் திருவல்லிக்கேணி, செம்மஞ்சேரி மக்களுடன் இணைந்தும், தமிழக அரசின் அறநிலைதுறையின் அனுமதியுடனும், இக் கோவில் புதுபிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2009 ல் ராஜகோபுரம் அமைத்த பின்னர் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  


திருவலிதாயம். (தரிசன நாள்-23.4.2022).


 திருவலிதாயம். (தரிசன நாள்-23.4.2022).

ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் கோவில். சென்னையில் பாடி என்று அழைக்கப்படும் இடமே திருவலிதாயம் என்று அழைக்கப்பட்டது. ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள படவேட்டம்மன் கோவிலுக்கு நேர் எதிர் சாலையில் அமைந்துள்ளது இந்த கோவில்.

குருபகவான் தலம்.

நவகிரகங்களில் ஒன்றான வியாழன் என்று சொல்லப்படும் குருபகவான் தான் செய்யத பாவம் நீங்க, மார்கண்டேய மகரிஷி வழிகாட்டுதல் படி இந்த கோவில் தீர்தத்தில் நீராடி, இறைவனை வழிப்பட்டார். குருபகவான் வழிபட்ட தலம் ஆதலால் பிராகாரத்தில் ஈஸ்வரனை நோக்கியப்படி யானைவாகனத்தில் அமர்ந்தகோலத்தில் குருபகவானுக்கு தனிசன்னதியுள்ளது.

திருவல்லீஸ்வரர்.

பரத்வாஜர் வலியனாக பிறந்ததால் மிகவும் வருந்தினார். கொன்றைமரத்திற்கு அடியில் இருந்த லிங்கத்தை பூஜித்து வணங்கினார். திருவல்லீஸ்வரர் பறவைகளின் தலைவனாகும்படி அருள்செய்தார். இதனாலேயே திருவல்லீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

வலியன்.

வலியன் என்றால் பறவை என்று பொருள். வலியன் பறவை, இரட்டைவால் குருவி என்றும் கரிக்குருவி என்றும் வழக்கத்தில் அழைக்கப்படுகிறது. பறவை ஆராய்சியாளர்கள் வலியன் என்பதை பரத்வாஜ் என்றும் குறிப்பிடுவார்கள் என்ற குறிப்புள்ளது.

கோவில் அமைப்பு.


கோவில் வளாகத்தினுள் புறாக்கள் அதிகமாக உள்ளன. ஆன்மீக நூல்நிலையம் உள்ளது. நீர்நிலைகள் பாதுகாப்பின் தேவை பற்றிய பதாகைகள் உள்ளன. மிக தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. பசுமடம், மற்றும், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் தாங்கிய பலகைகள் என்று கூடுதல் சிறப்புடன் ஆலையம் காட்சி அளிக்கிறது. 

கமலி, வல்லி உடனுரை விநாயகர்.

பிரும்ம புத்திரிகளான கமலி, வல்லியை விநாயகர் இந்த தலத்தில் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் உற்சவமூர்த்தி சிலையை இங்கு காணலாம்.

தேவாரத்துடன்  திருபுகழ், திருவருட்பா பாடல்களும் பாடல் பெற்ற தலமாக திருவலிதாய ஆலையம் காட்சியளிக்கிறது.


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...