மச்சபுரீஸ்வரர் ஆலயம்.


கும்பகோணத்தை அடுத்துள்ள பண்டாரவாடை என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சாதாரணமாக, கோவில்கள் அனைத்தும் எதாவது ஒரு சிறப்பை கொண்டிருக்கும். ஆனால் இந்த தலத்தில் அமைந்துள்ள அனைத்து இறைவனும் ஒவ்வொரு சிறப்பை கொண்டு நமக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றனர். அடிப்படையில் இது  ஒரு சிவாலயம். நான்கு வேதங்களையும் அசுரர்கள் அபகரித்து சென்றுவிடுவதால் பிரம்மா, காக்கும் தொழிலை கொண்ட திருமாலிடம் முறையிடுகிறார். திருமால், அந்த அசுரர்களை அழிப்பதற்காக மச்சாவதாரம்( மீன் வடிவம்) எடுக்கிறார். வேதங்களை கவர்ந்துகொண்டு சென்ற அசுரர்கள் பூமிக்கடியில் சென்றுவிடுவதால், அவர்களை எளிதில் சென்றடைய நீருக்கடியில் செல்ல மச்சஅவதாரம் எடுத்து அசுரர்களை அழித்து, வேதங்களை பிரம்மாவிடம் ஒப்படைக்கிறார்.அழிக்கும் தொழிலை கொண்ட சிவபெருமானின் பணியை திருமால் செய்ய நேர்ந்ததால், அவருக்கு உண்டான தோஷத்தை நிவர்த்தி செய்ய சிவபெருமானை நோக்கி தவம் செய்ததால், சிவலிங்கத்துடன் ஒட்டினால் போன்று ஒரு மீன் உள்ளது. சிவனும் திருமாலும் ஒருசேர அமைந்துள்ளதால், இத்தலத்தில் பெருமாள் கோவில் போன்று சொர்கவாசல் திறந்து, வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

மச்சாவதாரம் எடுத்து அசுரனை வதைசெய்யும் காலத்தில், உலகை காக்க, முருகன், இவரிடமிருந்து சங்கு மற்றும் சக்கரத்தை பெற்றுக்கொண்டதால், இத்தலத்தில் முருகப்பொருமான் சங்கு சக்கரத்துடன் வள்ளி தெய்வானை ஒரு சேர காட்சி தருகிறார். திருப்புகழில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமாளே என்றே முடியும், முருகப்பெருமான் சில காலங்கள் பெருமாளாக, காக்கும் பணியாற்றியமையால்தான் திருப்புகழில் பெருமாளே என்று முடிவடைகிறது என்று அந்த அர்சகர் சொன்ன விளக்கம் மிக பொருத்தமாக உள்ளதை நானும் உணர்ந்தேன். பல ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கொடுத்த விளக்கத்தை காட்டிலும் இந்த அர்சகரின் விளக்கம் மிகப்பொருத்தமாக(apt) இருந்தது.    

      வேதங்களை அபகரித்து சென்ற நேரத்தில் பூமியில் பிறக்கும் குழந்தைகள்  அசுரகுணத்துடன் இருக்கின்றனர். இவர்களுக்கு நல்ல குருவாக இருக்க, தட்சிணாமூர்த்தி வடிவத்தில் இருக்கும் சிவபெருமானின் சன்னதியில் பூதகணங்கள் தட்சிணாமூர்த்தியின் பாதத்தில்  இல்லாமல் இறைவனின் சிரசில் பூதகணங்கள் இருப்பது போன்று அமைந்துள்ளது, தட்சிணாமூர்தி சன்னதி. 

   திருமாலின் முதல் அவதாரமான மச்சாவதாரத்திலேயே அவர் இங்கு வந்து தவம் செய்தமையால் பல சித்தர்கள் ஆதிகாலத்திலேயே,  சிவனடியை வேண்டி, இங்கு வந்து  தவம் செய்ய ஆரம்பித்தனர். இதற்க்கு அச்சாரம் இட்டார் போல் பாபா சித்தரின் சன்னதியும்  இந்த ஆலையத்தில் உள்ளது.(ரஜினிகாந் பாபா பட சித்தர்) 

 அம்பிகை, காஞ்சி காமாட்சி போன்று  காமாட்சியாகவே, ஸ்ரீ சக்கரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். அம்பிகை, பாலா திரிபுரசுந்தரி போன்று குழந்தையின் மன மகிழ்ச்சியுடன்  இருக்கிறாளாம்.  மகிழ்வுடன் இருப்பதால் நித்திய அலங்கரத்துடன் காட்சி தருகிறாள். 13 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடுகிறார்கள். அம்பிகைக்கு நேரெதிரில்  உள்ள காளிக்கும் இவரின் மகிழ்ச்சி தொற்றிகொண்டதால். துர்கை அம்மனும் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கிறார். 

    நான் பார்த்த சிறப்பு இந்த கோவில் அர்சகரும் அம்பிகை போன்றே மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். அர்சகர் எனக்கு இந்த புராண கதையை கூற ஆசை, ஆனால் வரும் பக்தர்களில் பலரும் 1மணி நேரத்தில் நான் 3 கோவில்கள் முதல் 5 கோவில்கள் வரை பார்க்க  வேண்டும் என்று கூறுகின்றனர் என்று சொல்லி,  உங்களுக்கு விருப்பமா? என்று கேட்ட பின்னரே, புராணகதையை மிக உற்சாகத்துடன் எங்களுக்கு கூறினார். நானும் என் கணவரும் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் இந்த ஆலயத்தை வழிபட்டு இன்புற்றோம். 


நான் படித்த பள்ளிகள்

     முதல் வகுப்பு

    திருப்பூந்துருத்தி என்ற ஊரில் (தஞ்சாவூரில் இருந்து 20 கி;மி.இருக்கும்) என்னுடை அப்பா போஸ்ட் மாஸ்டராக இருந்த போது நான் அங்கேயே பிறந்து, முதல் வகுப்பம் படிக்கும் வரை இருந்தோம். முகமதியர் நடத்தி வந்த ஒரு தனியார் பள்ளி இது. வார விடுமுறை வெள்ளிக்கிழமை. மற்ற நாட்கள் பள்ளி உண்டு. இதை தவிர எனக்க வேறு எதுவும் நினைவில்லை.

இரண்டு முதல் நான்காம் வகுப்பு வரை

  T.B.Sanitorium  என்று அழைக்கப்பட்ட செங்கிப்பட்டிக்கு அப்பா பணிமாற்றம் செய்யப்பட்டு அரசினர் நடுநிலைப்பள்ளியில் படித்தேன். (நிஜ டோலக்பூர் என்ற பெயரில் இந்த ஊரைப்பற்றி ஒரு blog  போட்டுள்ளேன்) பெரிய கூடம்தான் முழு பள்ளியின் அளவே. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வெளியூரில் இருந்துதான் வருவார்கள். . எனக்கு அந்தோனிசாமி என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவருடைய மகன்கள் பெயர் சுதந்திரம் மற்றும் குடியரசு, பெயர்கள் வித்தியாசமாக வைத்ததால் நன்றாக நினைவருக்கிறது.பள்ளி வாசலில் மிக பெரிய கொடுக்காபுள்ளி மரம் இருக்கும். அருளாநந்தம் என்ற ஆசிரியர்  பாடல்கள் பாடி எங்களை ஊக்குவிப்பார். கேட்க அற்புதமாக இருக்கும்,ஆனால் அவர் இசை ஆசிரியர் கிடையாது பாடம் எடுப்பவர். நான் நன்றாக ஊர் சுற்றுவேன். புத்தகத்தை வைத்து படித்ததோ அல்லது ஆசிரியர்கள் நடத்திய பாடங்களோ என்நினைவுக்கு வரவில்லை.

ஐந்தாம் வகுப்பு.

  அப்பா இப்பொழுது திருக்காட்டுப்பள்ளி  தலைமை அஞ்சலகத்தில் clerk அதனால் நாங்கள் அருகில் உள்ள விஷ்ணம்பேட்டை என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அந்த கிராமத்தில் இருந்த பஞ்சாயத் யூனியன் தொடக்கப்பள்ளியில் படித்தேன். எனது வகுப்பு ஆசிரியரும் பள்ளியின் தலமை ஆசிரியருமான திரு.கோதண்டராமன் அவர்கள் இப்பொழுது கண்ணை மூடினாலும் எதிரே நிற்க்கும் அளவுக்க மனதில் படிந்தது மட்டுமல்லாமல் படிப்பை பற்றி என்னை யோசிக்க செய்தவரும் அவரே. 5ஆம் வகுப்பில் தான் எழுத படிக்க ஆரம்பித்தேன். ஆறாம் வகுப்பிற்க்கு அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமிஐயர்  உயர்நிலைப்பள்ளியில்தான் சேர வேண்டும். இந்த பள்ளியில் படித்து விட்டு சென்றவர்களில் ஒருவர்  கூட உயர்நிலைப்பள்ளியில் அதாவது ஆறாம் வகுப்பில் தோல்வி அடைந்ததே கிடையாது. நான் தோல்லி அடைந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் கடினமாக முயன்று. எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார்.  அங்கேயே படித்த மாணவர்கள் அனைவருமே என் அளவு மக்கு கிடையாது. 

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை.

சர் சிவசாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி திருக்காட்டுப்பள்ளியில் படித்தேன். below average  மாணவியாகவே  படித்து முடித்தேன். தையல் வகுப்பு எனக்கு மிகவும் புடிக்கும். எம்பிராய்டரி மற்றும் பல கைவேலைகளை இந்த நேரத்தில் கற்றுக்கொண்டேன்.  என்னுடைய ஆர்வம் எனக்கு புரிந்தது. மங்களம் என்ற இசை ஆசிரியை, பாட்டு வகுப்பில் சில நேரங்களில் கதை சொல்வார்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இது என்னுடைய கற்பனை வளத்தை அதிகரித்தது. பின் நாளில் நானும் கற்பனையாக பல கதைகளை சொல்வதில் திறமையும் ஆர்வமும் கொண்டேன்.  தற்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் மாணவர்களுக்கு என்னுடைய கற்பனையில் கதைகளை சிறப்பாக சொல்வதற்க்கு அடித்தளம் இட்டவர் இந்த ஆசிரியைதான். பெரிய பள்ளி ஆதனால் பலரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு.

 அப்பா இப்பொழுது பணி மாற்றம் காரணமாக அய்யம்பேட்டையில்  போஸ்ட் மாஸ்டராக பணியாற்றினார். புனித கேப்ரியேல் பெண்கள்  உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். பட்ட மேற்படிப்பு படித்து இருக்கிறேன் என்றால் அதற்க்கு இந்த பள்ளி தான் காரணம். Sister மோட்சராகினி என்னுடைய வகுப்பு மற்றும் ஆங்கில ஆசிரியை  என்னால் மறக்க முடியாத ஆசிரியை. என்வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு ஒளி ஏற்றியவர். பல நாடகங்களில் பங்கு கொண்டேன். என்னிடம் பேச்சு திறமை உள்ளது என்பதை உணர்ந்தேன். செஞ்சுலுவை சங்கத்தின் முலம் பல சமூக பணி செய்தேன். சமூக சிந்தனை வளர்ந்தது. எனது பல சமுக செயல்பாட்டுக்கு அடித்தளம் ஆனது. இன்று புதுச்சேரியில் சமூக செயல்பாட்டாளர் என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறேன். சமூக நலத்துறை முலம் பல கல்லூரி, பள்ளி நிகழ்ச்சிகளில் விழிப்புணர்வு பற்றி உரையாற்றுகிறேன்.

மேல் நிலை வகுப்புகள்.

 மன்னார்குடி அருகில் உள்ள திருமக்கோட்டையில் அப்பா போஸ்ட் மாஸ்டராக பொறுப்பேற்றார். திருமக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். மாணவரகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதுவும் எங்கள் வகுப்பில் 4 பெண்கள் மட்டுமே படித்தோம். ஊர் மிகவும் சிறியது. ஆனைத்து ஆசிரியர்களும் வெளியூரில் இருந்தே வருவர். Bus Break Down அல்லது வேறு பிரச்சனை என்றால் ஒருவருமே வரமாட்டார்கள். எப்படியோ பிளஸ் 2 முடித்தேன்.

பி.ஏ.பொருளாதாரம்.

தஞ்சாவூர் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் படித்தேன். அப்பா அருகில் உள்ள பூண்டி என்ற ஊரில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றியதால் நான் தினமும் பேருந்தில் பயணித்து கல்லூரிக்கு செல்வேன். கல்லூரியில் பல அனுபவங்கள் எனது பொது அறிவையும் சமூக பழக்க வழக்கங்கனையும் பெற்று தந்தது. எனது மேடைப் பேச்சு நன்கு வளர்ந்தது. கல்லூரி வருட மலரில் சிறந்த பேச்சாளர் மற்றும் பல பரிசுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்று புகைப்படத்துடன் வெளியிட்டு, என்னை கௌரவித்தனர்..  1987 –ல் பி;ஏ. பொருளாதாரம் முடித்தேன்.30 ஆண்டுகள் கழித்து பட்ட மேற்படிப்பை (சமூகவியல்) அண்ணாமலை பல்லலை கழகத்தில் தொலை தூர கல்வி மூலம் படித்துமுடித்தேன். 


தமிழ் தட்டச்சுப்பயிற்ச்சி.

 தமிழ் தட்டச்சுப்பயிற்ச்சி.

கல்லூரி நாட்களில் என்னுடன் பயின்றவர்களில் சிலபேர் தட்டச்சு பயிற்சி மற்றும் ;சுருக்கெழுத்து பயிற்சிக்கு சென்றனர். நானும் தஞ்சாவூர் வீனஸ் தட்டச்சுப்பயிலத்தில் ஆங்கில தட்டச்சும், சுருக்கெழுத்தும் சேர்ந்தேன.;  சுருக்கெழுத்தில் 25 பாடம் எழுதி எனக்கு ஆர்வம் இல்லாமல் பயிற்ச்சியை கைவிட்டேன். ஆங்கில தட்டச்சில் கீழ்நிலைமுடித்து, மேல்நிலை தொடர்ந்தவுடன் தமிழ் தட்டச்சுப்பயிற்ச்சியையும். தொடர்ந்தேன். தட்டச்சில் ஆங்கிலத்தில் மேல்நிலையும், தமிழில் கீழ் நிலையும் ஒரே நேரத்தில் தேர்வெழுதி இரண்டிலும். தேர்ச்சிபெறவில்லை. கல்லூரி படிப்பு முடிந்ததால் என்னால் பயிற்ச்சியை தொடர முடியவில்லை. திருமணத்திற்க்கு பிறகு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மாம்பலம் டெக்னிக்கள் பயிலகத்தில் ஆங்கில மேல்நிலையை முடித்து என்னடைய மாமனாரிடமே பணியாற்றலாம் என்று நினைத்த நிலையில், என்னுடைய மாமியாரின் கடும் எதிர்ப்பு காரணமாக என்னடைய எண்ணத்தை கைவிட்டேன். என்னுடைய மாமனார் ஒரு அலுவலகம் (Tax and Investment Consultancy ) நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அல்லாத அவசர நிலையில் 4 கடிதம் அடித்துக்கொடுத்திருக்கிறேன். இவ்வளவுதான, என்னுடைய தட்டச்சு அனுபவம். புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பொழுது, அங்கு இருந்த ஒரு செய்தி தட்டச்சு செய்யும் பணியாளர் என்னிடம் உங்களை போன்று செய்தி வாசிப்பாளர்கள் வர வில்லை என்றால் R.J(Radio Jockey) வாசித்துவிடுவார்கள். நாங்கள் வரவில்லலை என்றால் தான் கடினம் என்றார். மறுநாளே என்வீட்டின் அருகில் உள்ள தட்டச்சு பயிலகத்தில் என்னடைய தமிழ் தட்டச்சு பயிற்ச்சியை தொடர்ந்தேன்,  இரண்டு மாதத்திற்க்கு மட்டும் சுமார் ஒரு மணிநேரம் பயிற்ச்சிசெய்து என்னால் முடியும் என்ற நிலைக்கு வந்தவுடன் அதே வடிவில் உள்ள சங்கம் என்ற மென்பொருளை பதிவறக்கம் செய்ய முயற்ச்சித்தேன். என் நண்பர்கள் மத்தியில், மென் பொருள் பதிவிறக்கம் செய்து தருவார் என்று கூறி  ஒருவரை பரிந்துரைத்தனர். அவரை பல முறை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் இதோ வருகிறேன் என்பார் அவ்வளவுதான்.  இவ்வாறு பல முறை தொடர்பு கொண்டு  வெறுத்துப்போய் இந்த முயற்ச்சியை கை விட்டேன். சமூக நல துறையில் நான் ஓர் ஆண்டு காலம், அங்கு வரும் பெண்களுக்கு  மனஆறுதல் கூறியும், குடும்ப வன்முறை சட்டத்தின் உட்பிரிவுகளை தெரிந்து கொண்டு, அவர்களின் வழக்கை பதிவு  செய்ய அறிக்கையை எழுதியும் கொடுத்துக்கொண்டிருந்தேன்.  இன்நிலையில் அங்கு சந்தித்த ஒரு பெண், பாமினி என்ற மென் பொருளை பயன்படுத்துவதாக சொல்லி, அதனை எனக்கு மின் அஞ்சலும் செய்தார்.  குடும்ப நண்பரின் உதவியுடன் அதை வீட்டு கணிணியில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயிற்ச்சி செய்து. மாதாந்திர மற்றம் வாராந்திர பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் மற்றம் வாசகர்களின் கருத்துக்களை எழுதி மின்அஞ்சல் மூலம் அனுப்பினால் அந்த எழுத்துக்களை எல்லா கணினியும் ஏற்காது என்பதை தெரிந்து கொண்டு, பின் என்னுடைய மகனின் உதவியுடன் Bamini Unicode ல் Convert செய்து அனுப்ப கற்றுக்கொண்டேன். தற்சமயம் என்னடைய சிறிய மற்றம் சுவையான அனுபவங்களை  Blogகாக போட என்னுடைய தட்டச்சு பயிற்ச்சி பயன்படுகிறது. (இந்த தட்டச்சு பயிற்ச்சிக்கு உதவிய என்னுடைய தோழிகள் விஐயா மற்றும் கலைவாணிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.)


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...