வாட்ஸ்ஆப் செயலி ஒரு வரப்பிரசாதம்

வாட்ஸ்ஆப் செயலி ஒரு வரப்பிரசாதம்
        

 நானும் அனைவரை போன்று ஆன்டிராய்டு கைபேசி வாங்கி வாட்ஸ்ஆப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறேன். எனக்கு இது ஒன்றும் பெரிய செயலாக தெரியவில்லை. என்னடைய மகள் மூன்றாண்டுகளுக்கு முன்பு பயணக்கட்டுரை எழுதுவதற்காக செக் ரிபப்ளிக், ஸ்லோவேக்யா, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றாள். தினமும்  என்னுடன் பேசுவாள். நான் மிக சாதரணமாக வீட்டில் உட்கார்ந்து பேசுவேன். அப்பொழுதுதான் 1970,80களில் வெளி நாடுகளில் வசிப்பவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு  கொள்வது எவ்வளவு கடினம் என்று எண்ணிய போது ,வாட்ஸ்ஆப்பின் மகத்துவம் எனக்கு புரிந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் உள்ளவர்களிடம், தொலைபேசியில் பேசுவது எவ்வளவு கடினமானது என்பதை நேரிடையாக சந்தித்தவள் நான். என்னடைய அப்பா அஞ்சல் அதிகாரியாக பணி செய்த ஊர்களில் வெளிநாட்டில் வசித்தவரிகளின் எண்ணிக்கை சில ஊர்களில் மிக அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் பணி செய்யும்  உறவினர்களுக்கு  தொலைபேசி அழைப்பை பதிவு செய்து விட்டு நாட்கணக்கில் கூட காத்திருப்பார்கள். அப்படி காத்திருந்து தொடர்பு கிடைத்தாலும் அவர்களால் தொடர்பில் தொந்தரவு இல்லாமலும், மற்றம் தொடர்ந்தும் பேசவும் முடியாது. அவர்கள் பேசினாலும் ஹலோ ஹலோ என்ற சொல்லைத்தான் அதிகமாக பயன் படுத்தும் நிலை இருக்கும். மக்களின் நிலை இது என்றால் என்னுடைய அப்பாவின் நிலை மிக பரிதாபமக இருக்கம். என்னுடைய அப்பா வெளிநாடுகளுக்கு அழைப்பை பதிவு செய்து விட்டு உறவினர்களின் பெயர், இவரகளுக்கும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் என்ன உறவு, என்ன காரணத்திற்காக  அழைப்பு பதிவு செய்யப்பட்டது, என்ற அடிப்படை காரணத்தை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பு தான், தொலை பேசி அழைப்பை பதிவு செய்வார். பதிவு செய்த அழைப்பு எப்பொழுது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பல நேரங்களில் சாப்பிடுவதற்க்கும்,  கழிவறைசெல்வதற்க்கும் கூட முடியாமல் போகும். இரவு முழுவதும் கண்விழித்து இருக்க நேரிடும். இதை தொடர்ந்து மறுநாள் அதிகாலை 6 மணிக்கே தபால் பை  வந்து விடும். அன்றைய நாள் பணியை, எந்த வித ஓய்வில்லாமல் செயல்படுத்த நேரிடும். நான் இவ்வாறாக இரண்டுபக்க நபர்களின் இடர்பாடுகளையும், இவர்களை இணைக்கும் அஞ்சல் அதிகாரியின் பணி சுமையையும் நன்கு அறிந்து இருந்ததால். வாட்ஸ்ஆப்பின்  மகத்துவத்தை  என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே வாட்ஸ்அப் ஒரு வரப்பிரசாதம் என்று இந்த  blog க்கு  தலைப்பிட்டேன்.

No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...