JOTTER PEN


                                                        Parker Jotter Stainless Steel Fountain Pen | Pen Store | Pen Place

JOTTER PEN
     இந்த பேனாவை நான் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி இருப்பேன். நல்ல கரும்பச்சை வண்ணத்தில் இருக்கும். மூடி மற்றும் பேனா நிப் பொருத்தும் இடம் கரும்பச்சைவண்ணத்திலும், இங்க் போடும் இடம்  வெளிப்படையாக  கண்ணாடி  போன்று இருக்கம். சற்று விலை உயர்ந்த பேனா. அதன் மேல் எனக்கு ரொம்ப ஆசை. ஞாயிற்றுக்கிழமை தவறினாலும் தவறும். நான் பேனா சுத்தம் செய்வது தவறாது. சுடு தண்ணீரில் பேனாவை ஊறவைத்து நன்கு உலர்ந்த துணி போட்டு துடைத்து  இவ்வாறு பராமரிப்பு மிகவும் பலமாக இருக்கும். தேர்வு என்றால் பாடத்தை தயார் செய்வது இரண்டாம் வேலைதான் பேனா மிக அருமையாக தயாராகிவிடும். அப்பொழுதுதான் நிப் ஆராய்ச்சி எல்லாம் மிக தீவிரமாக நடக்கும். உடற்பயிற்ச்சி, சங்கீத வகுப்புக்கு சென்று வந்தால் உடனே என்னுடைய பையில் உள்ள பென்சில் டப்பாலை திறந்து  பேனாவின் இருப்பை உறுதி செய்துவிடுவேன். சாப்பாட்டு நேரத்தில் நான்  டிபன் டப்பாவை மறந்து    பென்சில் டப்பாவை மட்டும் வெளியில் எடுத்து போனதுதான் அதிகம்.இவ்வாறு என்அன்பான பேனாவுடன் நான் வாழ்ந்து கொண்டருந்த நேரத்தில் வந்தது ஒரு சோதனை, எங்கள் வீட்டின் எதிரில் ஒரு பெரிய நில உரிமையாளர்  இருந்தார். அவர்கள் வீட்டில் அப்பொழுதே இரண்டு கார்கள்; இருக்கும். அவருடைய மகள் திருமணம் ஆனவர் 30 வயதிருக்கலாம். அவர் வந்து எழுதுவதற்க்கு என்னிடம் இருந்து பேனா வாங்கி போனார். ஒருநாள்,இரண்டுநாள், இப்படி போய்கொண்டே இருந்ததால், என்மனதில்  தாங்கமுடியாத துக்கம் ஏற்பட்டது. வீட்டிற்க்கு போய் கேட்டால் ,என்ன சுந்தரி, நான் எங்கு போக போகிறேன், “எதிர் வீட்டிலதானே உள்ளேன்” என்பார். மற்ற சமயம் அவரின் அப்பா, என்ன பாப்பா வேண்டும், அக்காவ பார்கனுமா தூங்கராங்க என்பார்.ூ  ஒருவாரம் கழிந்தது. என் பொருமையை இழந்தேன். அவர்கள் வீட்டிற்க்கு போனேன். அந்த பெரியவரிடம் உங்கள் மகள் என்னிடம் பேனா வாங்கி கொண்டுபோய் 10 நாட்கள் ஆகிறது. எப்பொழுதுதான் தருவீர்;கள் என்று சற்று கடுமையாக கேட்டேன். சற்று பொருமையாக நிதானமாக இந்தா உன் பேனா என்று கொடுத்தார்கள். நான் மிகவும் நேசிக்கும் பொருளை யாரிடமும் கொடுப்பதில்லை என்ற உறுதி எடுத்துக்கொண்டேன். 

தோழி பாத்திமா

4,000+ Friendship Pictures & Images [HD] - Pixabay


தோழி பாத்திமா
  புனித கபிரியேல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் என்னுடைய சக மாணவி பாத்திமா. காலாண்டிற்க்கு பிறகு தான் என்னுடைய தோழியாகிறாள். என்வகுப்பில் அனைவருமே பாத்திமாவை அக்கா என்று தான் அழைப்பார்கள். காரணம் பாத்திமாவின் படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்தி விட்டனர். அவருடைய தங்கை பூப்பெய்திய பிறகும் படிப்பை தொடர்ந்தார். உடனே பாத்திமா நானும் என்னுடைய படிப்பை தொடர்கிறேன் என்று சொல்லி மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகளை விட மூன்று ஆண்டுகள் வயதில் பெரியவர் என்பதால் அவைரும் அவரை அக்கா என்று அழைத்தனர் என்பதை நான் பிறகு அறிந்துக்கொண்டேன்.(அப்பாவின் பணிமாற்றம் காரணமாக  அந்த ஆண்டுதான் அந்த பள்ளியில் சேர்ந்தேன்) மிகவும் எளிமையா அமைதியான அன்பான பாத்திமா அனைவரிடமும் சகோதரியாகவே பழகினாள.; நான் மட்டும் பெயர் சொல்லி ஒருமையில் அழைக்க ஆரம்பித்தேன். வகுப்பில் மற்ற மாணவிகள் எனக்கு மரியாதை தெரியவில்லை என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் நான் இப்படி அழைப்பது என்னுடன் நெருக்கத்தையும் ஒரு விருப்பத்தையும்; பாத்திமாவுக்கு உண்டு செய்ததை உணர்ந்தேன். இந்த ஒரு சிறிய மாறுபட்ட செயல் எனக்கு ஒரு சிறந்த தோழியையும்  ஒரு நல்ல வாழ்க்கை அனுபவத்தையும் ஏற்படுத்திதந்தது.  இந் நிலையில் ஆங்கிலத்தில் ஒரு ஒப்பிவித்தல் போட்டியை பள்ளி அறிவித்தது. அதில் கலந்து கொள்ளும் என்னுடைய ஆர்வத்தை நான் பாத்திமாவிடம் தெரிவித்தேன். ஏன்என்றால் நான் படித்து அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற கூட தகுதி இல்லாதவள் என்பது என் பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளின் எண்ணம். ஆனால் பாத்திமா கவிக்குயில் சரோஐpனி நாயுடுவின் "How beautiful is the Rain" என்ற ஆங்கில கவிதையை நல்ல உச்சரிப்பு மற்றும் செய்கையுடன் சொல்லிக் கொடுத்ததில் நான் முதல் பரிசும் பெற்றறேன். பாத்திமாவே,  நான் பள்ளி மற்றும் கல்லூயில் சிறந்த பேச்சாளராகவும், விசுவின் மக்கள் அரங்கத்தில் இரண்டுமுறை பேசும்வாய்ப்பும.;; இன்றளவில் பல பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது நிகழச்சிகளில் நான்  பேசி கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கு அடித்தளமாக இருந்தார். 

சந்ரா டீச்சர்

Teacher Student Drawing Stock Illustrations – 8,523 Teacher ...

சந்ரா டீச்சர்

 திருக்காட்டுப்பள்ளி சர்.சிவசாமிஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். டீச்சரும் நானும்; பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஓரே தெருவில் வசித்து வந்தோம். ஆனால் டீச்சர் எனக்கு வகுப்பு எடுக்க வில்லை.டீச்சரின் மகளும் நானும் நல்ல தோழிகள். எனக்கு பள்ளி விடுமுறை என்றால் நான் டீச்சர் வீட்டுக்கு குடிபெயர்ந்து விடுவேன். என் தோழி மிகவும் நன்றாக பாடுவாள். கேட்டு நன்கு ரசிப்பேன்.டீச்சரும் அவருடைய கணவர்   இருவருமே பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாட்டு வண்டியில்; தான் தினமும் பள்ளிக்கு பயணிப்பார்கள். சில நேரங்களில் மாலையில் நான் வீடு திரும்பும்போது என்னை பார்த்தால் வண்டியில் ஏற்றிக்கொள்வர். மழைக்காக பள்ளி விடுமுறை என்றால் பியூன் சைக்களில் வந்து தெரிவித்து விட்டு சுற்றறிக்கையில் கையெழுத்து வாங்கி போவார். அந்த பகுதி மாணவர்கள் ஆசிரிய தம்பதி மூலமே விடுமுறையை அறிவர். நான் மிக அருகில் இருந்ததாலும் அவர்களின் நட்பாலும் எனக்கு உடனே செய்தி தெரிவதை  மிகவும் பெருமையாக நினைப்பேன். ஒருநாள் மாலை டீச்சர் வீட்டுக்கு சென்ற போது சலவை செய்து வந்த துணியை தரையில் வைத்திருந்தனர். டீச்சர் வீட்டில் ஊஞ்சல் இருந்தாலும் நான் எப்பொழுதும் தரையிதான் உட்காருவேன்(மரியாதை) சலவை துணியருகில்; ஒரு இங் பாட்டில் இருந்ததை நான் கவனிக்காமல் பாட்டிலை தட்டிவிட்டுவிட்டேன். சலவை துணி அனைத்தும்; இங்ஆல் நனைந்து விட்டது. ஒரு நொடிப்பொழுதில் எனக்கு நல்ல நட்பை இழுந்துவிடுவேனோ என்ற பயம் கவனக்குறைவால் உண்டான  சங்கடம் இதை எப்படி வெளிபடுத்துவது என்ற தயக்கம். இதன் இடையில் “ கவலை  படாத சுந்தரி “மீண்டும் தோய்துக்கொண்டால் போகிறது என்று டீச்சரின் குரல் வந்த திசையை நோக்கி தயக்கம் பயம் இல்லாமல் மிக அன்புடன் சாரி டீச்சர் என்றேன். இன்றளவும் இந்த பெயரை கேட்டாலே டீச்சரின் தாயுள்ளம்தான் நினைவுக்கு வரும். 

ஸ்கூல் பாக்ஸ்


ஸ்கூல் பாக்ஸ்

           
Aluminum school box...used to have this in school...for a brief ...



1970 களில் பள்ளிக்கு அலுமினியபெட்டி கொண்டு வருவது என்பது மிகவும் பெருமைக்குரிய செயலாக இருந்தது. இப்பொழுது முதுகில் மாட்டிக்கொள்ளும் பை  வழக்கத்தில் உள்ளது போன்று  அப்பொழுது சற்று வசதியானவர்கள் இந்த அலுமினிய பெட்டியை குழந்தைகளுக்கு வாங்கி தருவார்கள். பெட்டி மிக அழகாக இருக்கும். மூடியின் உள் பகுதியில் ஒரு பௌச் இருக்கும் பேனா பென்சில் வைத்துக்கொள்ள. எனக்கு எப்படியோ அந்த பெட்டியின் மீது ஆசை வந்து விட்டது. தீராத காதல் என்று கூட சொல்லலாம். அப்பாவிடம் கேட்டு பயன் இல்லாமல் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன்.  அப்பா வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு.  வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் எப்படியாவது பேசி கடைசியில் அந்த பெட்டியில் முடிப்பேன். அவர் எனக்கு தந்தையல்லவா? சளைக்காமல் சாக்கு போக்கு சொல்லி மிக அருமையாக என்னை சமாளிப்பார். ஒரு அருமையான வாய்ப்பு  கிடைத்தது எனக்கு. என்னடைய பெரியப்பாவின் பெண் கல்யாணம் மதுரையில் ஊருக்செல்லும் நேரத்தில் நான் என்அப்பாவின் அருகில் அமர்ந்து பயணித்தேன். சதா பெட்டி புராணம் தான். பெரியப்பா அவர் பெண் கல்யாணத்திற்க்கு ஆடை வாங்கி கொள்ள பணம் கொடுத்தார். அவ்வளவுதான். அப்பா என்னிடம் வகையாக மாட்டிக்கொண்டார். வேறு வழியில்லாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் வாங்கி கொடுத்துவிட்டார்.  இன்றளவும் என்னுடைய அப்பா அந்த பெட்டியை பயன் படுத்தி வருகிறார். இந்த அளவுக்கு தரமான பொருட்கள் இப்பொழுது கிடைக்குமா?  அல்லது இப்பொழுது நம்மால் இவ்வளவு காலம் ஓரே  பொருளை பயன்படுத்ததான் முடியுமா?


COMPLAN பாட்டி

                                                         
COMPLAN  பாட்டி 

Pin by Pakchira on 4 ladies | Cartoon people, Old lady cartoon, Cartoon pics

நாங்கள் குடிஇருந்த வீட்டின் உரிமையளர் பெயர் எனக்கு தெரியவில்லை.  ஆனால் நான் அவரை Complan பாட்டி என்று தான் கூப்பிடுவேன். அவருக்கு பிரதான உணவே காம்பிளான் தான். வீடு முழுவதும் நாங்கள் தான் பயன்படுத்திக்கொள்வோம். உரிமையளர் பாட்டி இரண்டு பெட்டிகளை கூடத்தின் ஒரு ஓரத்தில் தடுப்பாக கொண்டு அந்த இடத்தை மட்டும் பயன் படுத்திக்கொள்வார். ஒரு பெட்டியில் வீணை மற்றொண்டில் பாத்திரம் மற்றும் ஆடை என்று மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே இருக்கும். பாட்டி உடம்பில் எலும்பு மற்றும் தோல் மட்டுமே இருக்கும் அவ்வளவு ஒல்லியாக இருப்பார். நாங்கள் குடிஇருந்தவரை உறவு நட்பு என்று எவருமே பாட்டியை பார்க்க வந்ததில்லை. மிகவும் அபூர்வமாக வீணை வாசிப்பார். பாடடிக்கு பலகலைகள் தெரியும் என்று  நினைக்கிறேன் . ஒரு முறை காம்பிளான் பாட்டி அவர் தேவைக்கான ரவிக்கையை அவரே தைத்துக்கொண்டார். தைத்துக்கொள்வது அதிசியமன்று தைத்த முறை என்னை ஆச்சரியமடைய செய்தது என்னிடம் பென்சில் வாங்கி அளவை குறித்துக்கொண்டு ;அரிவாள் மணையில் வெட்டி புத்தகம் தைக்கும் ஊசியை பயன் படுத்தி தைத்து முடித்துவிட்டார்.  மிகவும் அபூர்வாக என் அம்மாவிடம் சாதம் வாங்கி சாப்பிடுவார். ஒரு நாள் பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் இறந்துவிட்டார். அருகில் இருந்த அனைவரும் துக்கத்துக்கு சென்று வந்தனர். ஆனால் காம்பிளான் பாட்டி மட்டும் செல்லவில்லை. பக்கத்து வீட்டு ஆண்டி என் அம்மா எதிர் வீட்டு  அண்டி அனைவரும் பேசிக் கொண்டனர் கூடபிறந்த தங்கையை இறந்த பிறகாவது பார்க்க கூடாதா? என்று. கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…. 

நெல்லிக்காய்


                                                  

எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் என்னுடைய அப்பா டி.பி.சானிடோரியம் என்ற செங்கிப்பட்டியில் அஞ்சல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். சிறிய ஊர் என்பதால் போஸ்ட் மாஸ்டர் வீட்டு பெண் என்று ஒரு நல்ல போர் இருந்தது எனக்கு. அந்த ஊரில் இருந்த ஒருவர் வீட்டில் பெரிய நெல்லிக்காய் மரம் இருந்தது எனக்கு நெல்லிக்காய் சாப்பிட ஆசை வந்து அவர்கள் வீட்டற்க்குப்போய் எங்க அப்பா நெல்லிக்காய் கேட்டார் என்று சொன்னேன் அவ்வளவு தான். அவர்கள் வீட்டில் என்னை உள்ளே அழைத்து ஒரு பெரிய மரக்காவில்(நாலு படி ஒரு மரக்கா இளைய சமுகத்திற்காக) ஒரு மரக்கா கொடுத்தார்கள். ஒரு சிறிய கிராமத்தில் மிக சாதாரண வுpட்டில் பை எங்கு இருக்கும்(1973-74ல்) என் பாவாடையில் அப்படியே வாங்கி கொண்டேன். 10 அல்லது 15 அடி பள்ளத்தில் நடந்து ரோடுக்கு  மேலே வரவேண்டும். சற்று வந்த உடன் ஆசை போய்  பயம் வந்து விட்டது. என்னால் எப்படி இவ்வளவு நெல்லிக்காயை சாப்பிட முடியும் என்ற பயம் வந்துது. நான் இவர்கள் வீட்டிற்க்கு திரும்பி சென்று எங்கப்பா மருந்துக்காகதான் கேட்டாங்க அதனால கொஞ்சமா போதும் என்று சொல்லி அவர்களிடம் திருப்பி கொடுத்து விட்டு 10 நெல்லிக்காய் மட்டும் பெற்று கொண்டேன். எனக்கு நெல்லிக்காய் எவ்வளவு சாப்பிட படிக்குமோ அந்த அளவிற்க்கு  சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க பிடிக்கும். இப்பொழுது வாயில் ஏற்படும் இனிப்பு சுவைக்கு ஈடு வேறு சுவை கிடையாது. ஆனால் என்னால் இந்த திருட்டு நெல்லிக்காயால் எந்த சுவையையும் அனுபவிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஓருசேர என்னால் அந்த 10 நெல்லிக்காவையும் சாப்பிட முடியவில்லை. எப்படியோ நான் செய்யத தவறு (சிறுபிள்ளை தனம்) முடிந்து வீட்டுக்க வந்து விட்டேன். மறுநாள் அப்பா அலுவலகத்தில் போஸ்ட. மாஸ்டர் என்பதால் கவுண்டரில் அமர்ந்து இருந்தபோது அலுவலகத்துக்கு வந்த அந்த நெல்லிக்காய் ஆசாமி சும்மா இல்லாமல் சார் வீட்டில் யாருக்கு உடம்பு சுகம் இல்ல பாப்பா நேற்று எங்க வீட்டுக்கு வந்து மருந்துக்கு நெல்லிக்காய் வேண்டும் என்று கேட்டு வாங்கி போனார்களே என்றார். அவ்வளவு தான் நான் வீட்டில் இருந்து ESCAPE. எவ்வளவு நேரம் வீட்டிற்க்கு வராமல் இருக்க முடியும். மெதுவாக வந்து சத்தம் இல்லாமல்  அமர்ந்து விட்டேன். ஏனோ அப்பா அவர் அலுவலக வேலை காரணமாக மறந்து விட்டார். 

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...